Wednesday, October 28, 2009

ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்

>
> ஊரடங்கும் சாமத்தில் தூங்காமல் நானிருக்க
> ஊரெல்லை யில்என(து) உள்ளம் தவமிருக்கு
> ஆழத்துள் மூழ்கிவிட்ட அம்மிக் குழவியாய்
> ஆழ்மனதுள் உன்நினைப் பு
>
> கருவேல முள்ளொடிச்சுக் கள்ளிச் செடியில்
> ஒருசேர நம்பேர ஒண்ணா எழுதிவச்சு
> ஊரவிட்டுப் போகையில காத்திருன்னு சொன்னஉன்
> வார்த்தையிலென் மூச்சிருக் கு
>
> ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
> ஊருணிப் பாறையில் ஒருத்தியாத் தானிருக்கேன்
> ஊரெல்லாம் சாடைக்கு ஓரணியில் சேர்ந்திருக்கு
> யாரென் நிலைசொல்வா ருனக்கு
>
> சொத்தைப்பல் லுன்னுசொல்லி சும்மாப் புடுங்கியே
> செத்தைக்குள் வீசுனியே சிங்கப்பல் ஒன்றையே
> சொத்தைப்போல் எடுத்தெனது சட்டையில் சுத்தியே
> மெத்தைக்குள் வச்சிருக் கேன்
>
> ஊருவந்து தடுத்தாலும் உள்ளேநீ தானிருப்பாய்
> யாருவந்து பிரிச்சாலும் என்னுள்நீ வாழ்ந்திருப்பாய்
> உன்மூச்சுக் காற்றிலென் மூச்சுவாங் கும்வரைக்
> கன்னியிருப் பாளிங்கேக் காத்து
>
> என்றும் மறையாத என்மனச் சூரியனே
> இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
> காப்பாய் வடக்கைக் கரையாய் ; உனக்காகக்
> காத்திருப்பேன் நான்கரையா மல்
>
> கலங்காதே காத்திருக்குக் காலம் நமக்கு
> துலங்காதே நீயில்லா(து) ஒன்றும் எனக்கு
> காத்திருப்பாய் எல்லையை சாமியாய் நீயங்கு
> காத்திருப்பேன் உன்னைநான் இங்கு
>
> [ அமைப்பு : வெண்பா - இன்னிசை
> நன்றி : ILLAM GROUP ]
>
>



Bookmark and Share

உண்மையின் நெருடல்

> ஒட்டு மொத்த குடும்பமும்
> ஒரு தோளின் மேல் தாங்கிப் பிடிக்கும் நடுகல்லாய்த்
> தலைமகன் நான்.
>
> சன்னல் கதவுக்கு ஒன்று
> வாசல் காலுக்கு இரண்டென
> வீட்டுக்கே மூச்சுத் திணறும்
> கூட்டமாய்க் கூட்டுக் குடும்பம்
>
> மணம் முடித்த அவளுடன்
> மனம் விடுத்துப் பேசவே...
> வந்தவளுடன் தனிமையில்
> தொந்தரவின்றிப் பேசவே...
> வாரம் ஒன்று முழுதாய் ஆனது
>
> மண வாழ்வைத் தெடங்கவே
> மாதம் மூன்றுக்கும் மேலானது
>
> இயந்திர உலகில் கரையேற
> இயந்திரம் போல் இயக்கம்..........
>
> தங்கைகளின் சடங்கு , சீர் செனத்தி ,
> திருமணம் , புகுந்தவீடு பயணம்........
>
> தம்பிகளின் படிப்பு , வேலைவாய்ப்பு ,
> தனி வீடு , வெளிஊர்ப் பயணம்.........
>
> பெற்றோரின் நலம் , மருத்துவம் ,
> பராமரிப்பு , கடைசிப் பயணம்...........
>
> குழந்தைகளின் பள்ளி ,கல்லூரிப்படிப்பு
> திருமணம் ,வெளிநாடுப் பயணம்........................
>
>
> பயணம்,பயணம்,பயணம்............
> பயணத்தைத் தொடர்ந்து
> பயணிக்க வைக்க எனக்கும்
> சயனம் இல்லாத பயணம்.........
>
> எல்லாம் ஓயும்போது - இலவசமாய்
> வந்துசேர்ந்தது பணி ஓய்வும்
>
> இதோ.....
>
> சுற்றியிருந்த உறவெல்லாம்
> விட்டுச் சென்ற பிறகு நான்...
> தலையணை தேடும் மனதுடன் !
> தனிமையில் தொடரும் அவளுடன் !!
>
> கடந்ததை அசை போட்டுக்கொண்டு ..
> நடப்பதை எடை போட்டுக்கொண்டு..
> அலையும் மனதை அழுத்திக்கொண்டு..
> அசையும் காலியில் சயனித்துக்கொண்டு..
>
> அடடா,,,, !!!!!!!!!!
>
> உண்மையது எனக்கு அப்போதுதான்
> உறைக்கத் தொடங்கியது .....!
>
> உதறிச் சென்றொருக்கெல்லாம்
> விரட்டித் தேடி செய்தேனே !
> எனை நம்பி வந்தவளை
> நினைக்க மறந்தே போனேனே !!
>
> என்னவளின் எண்ணங்களை
> எள்ளளவும் எனக்குள் வாங்கவில்லையே
> கடமையின் நெரிசலில் அவளின்
> ஆசைகள் எதையும் அறியவியில்லையே
>
> குற்றஉணர்வில் உள்ளம் குறுகுறுக்க
> குனிந்த படியே இருக்கிறேன்....
> நேருக்கு நேராக அவளை
> நிமிர்ந்து பார்க்க முடியாமல் .....
>
> என்முகத்தை தனக்குள் அணைத்து
> தன்மூச்சை எனக்குள் அழுத்தி
>
> இச்சென முத்தம் ஒன்றை
> உச்சந்தலையில் வைத்துவிட்டு ,
> மெதுவாய் கையிலிருந்த உணவை
> ஒருவாய் எனக்கு ஊட்டிவிட்டு ,
>
> மெல்லத் திரும்பி நடக்கிறாள்
> மெளனமாய் சிரித்து விட்டு !
> *’ நானிருக்கிறேன் ‘* என்ற சேதியை
> நெஞ்சுக்குள் இறக்கிவிட்டு !!
>
> ஐந்தில் அன்னையோடு மங்கிமறைந்தது
> அறுபதில் அருவியாய் பொங்கிவருகிறது !
>
> என்றோ தொடங்கிய மணவாழ்க்கை
> எங்கோ முடியப் போகும் தருணத்தில்
> இங்கே இதோ ஆரம்பமாகிறது இனிதாய் !
> எங்களின் *மன* வாழ்க்கை புதிதாய் !!
>
>



Bookmark and Share

என்ன செய்தாய் என்னை...

"நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி"

"உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி "

"சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி "

"நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்"

"உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன"

"கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!



Bookmark and Share

Wednesday, October 7, 2009

உள்ளுக்குள் எதுவும் விசேசமா ???

இன்று அவளின் மெளனம் - அதனால்
ஆனதென் மனம் ஊனம்

ஒலி இல்லாமல் -
பேசும் மொழி இல்லாமல்

அவளின் மெளனம் -
அது ஆயிரம் வழியில் பேசும்
**
*ஆம்........*

அணைப்பில் சம்மதம் சொல்லும்
அரவணைப்பில் என்மனம் வெல்லும்

மகிழ்வில் மனம்கொள்ளை கொள்ளும்
இகழ்வில் தினம்என்னைக் கொல்லும்

கோபத்தில் கொடுவாளை எடுக்கும்
தாபத்தில் விடியலைத் தடுக்கும்

பழக்கத்தில் சாமரம் வீசும்
குழப்பத்தில் சமரசம் பேசும்

கொஞ்சுகையில் வீணையே கெஞ்சும்
மிஞ்சுகையில் நானே தஞ்சம்

மஞ்சத்தில் எனைத் தகிக்கும்
தஞ்சத்தில் எனையேத் துதிக்கும்

ஒட்டிவந்தால் வாடையாய் வீசும்
எட்டிநின்றால் சாடையில் பேசும்

*ஆனாலும்......*

அவளின் மெளனம்....
இன்றவளின் மெளனம்........

*அது..........*

வீழ்த்தும் விசமா ? வெறும் வேசமா ??
உள்ளுக்குள் எதுவும் விசேசமா ???

அர்த்தமென்ன இதுவரை! தெரியவில்லை - அதன்
ஆழமும் எதுவரை? புரியவில்லை

--



Bookmark and Share

முயற்சித் திருவினையாக்கும்

>> *தோல்வியின் விளிம்பில்
>> தொட்டதெல்லாம்
>> துளிரவில்லையென
>> **துவளுகின்றாயே *
>> *முகமெல்லாம் வாட்டம்
>> முடிவில்லாப் பயணம்
>> முடியுமாவென
>> கலங்குகின்றாயே
>> முகவாட்டம் களை
>> எறும்பைப் பார்
>> எங்கிருந்து வந்தது
>> எதையும் தாண்டும்
>> எதிர்ப்பாற்றலதற்கு
>> சிறிய தோல்விக்கே
>> சிதறிவிடாதே
>> சிறிய நம்பிக்கைப் பூவினை
>> சித்தத்தில் சேர்த்துவிடு
>> திரும்பிப் பார்
>> உனக்கு ஒப்பார்
>> ஒருவர் இருப்பார்
>> எனத் தெரியவில்லை
>> எனதருமை நண்பா
>> முன்னே பார்
>> முடியாதது ஏதுமில்லை
>> முடியும் உன்னால் மட்டுமே
>> முடிவுடன் தொடங்கிவிடு
>> முதலிடு நம்பிக்கையை
>> முழு உழைப்பையும் சிந்திவிடு
>> முடிவில் அறுவடை செய்வாய்
>> முதல் வெற்றியை
>> முன்னேறும் வழிதனை
>> முக்கிய செய்தியாய்
>> முழங்கிட்டேன்
>> முயன்றுப் பார்
>> முயற்சித் திருவினையாக்கும் *




Bookmark and Share

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)