Showing posts with label tamil story. Show all posts
Showing posts with label tamil story. Show all posts

Thursday, January 26, 2017

திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா

திருஸ்வாதித்திருநாள் மஹாராஜாவிற்கு ஒரு சமயம் உடல் நோய் வந்தது அது
என்னவென்று ஒரு வைத்தியராலும் கண்டுப்பிடிக்கமுடியவில்லை .அவரிடம் ஒரு
பெரியவர் ஆலப்புழையில் இருக்கும் மருத்தோர்வட்டம் என்ற ஊரில் இருக்கும்
தன்வந்திரி பகவானைப்பார்த்து அருள் பெறச்சொன்னார் ,
மகராஜாவும் அங்குச்சென்றார் அங்கு தன்வந்திரி பகவான் சங்கு
சக்ரதாரியாக கருணைக்கண்களுடன் மிக அழகாக நின்று
கொண்டிருந்தார் அவர் கையில் அமிருதகலசம் இருந்தது .அங்கு தயாரிக்கும்
பிரசாதம் அவர் உடல் நிலை சரியாக அவருக்கு வழங்கப்பட்டது அந்தப்பிரசாதம்
கறிகாய்களுடன் தயாரிக்கும் ஒரு கறி .அதற்குப்பெயர் "தாள்கறி"
இந்தத்தாள்கறியில் சேப்பங்கிழங்க்கின் இலைத்தண்டுகளைச்சேகரித்து பின்
இன்னும் சில கறிகாய்களைச்சேர்ப்பார்களாம் வேறு என்ன பொருடகள் என்று
அறிய ஆவல் தான் ஆனால் எனக்கு விடை கிடைக்கவில்லை.
இந்தப்பிரசாதம் ரத்தச்சம்பந்தமான நோயைச் சரிசெய்து விடுகிறது இதை மிக
பக்தியோடும் நம்பிக்கையோடும் உண்ண வேண்டும் இந்தத் தாள்கறி பிரசாதம்
ஆதிகாலத்திலிருந்தே
தரப்பட்டு வருகிறதாம் தவிர ஆடி அமாவாசையன்று இங்கு மிக
விசேஷமாகப்பூஜையும் மிகவும் அதிக அளவில் இந்தப்பிரசாதமும்
செய்யப்படுகிறது ஏன் என்றால் இந்தப்பிரசாதத்தை வாங்க கூட்டம் அலை
மோதுகிறது
வைத்தீஸ்வரன் கோயில் மண் உருண்டப்போல் இதுவும் நோய் தீர்க்கும்
பிரசாதமாகவும் நோய்த்தீர்க்கும் கோயிலாகவும் இருக்கிறது ,

Bookmark and Share


Follow me on Twitter

Add to: BlinkListBlinkList, del.icio.usdel.icio.us, DiggDigg, FurlFurl, ma.gnoliama.gnolia, redditreddit, SimpySimpy, SpurlSpurl

Monday, November 9, 2009

மாற்றி அமைக்க வந்த *மாமருந்து...

> மகப்பேறு மருத்துவமனை
> அவசரச் சிகிச்சைப் பிரிவு
> அறுவை மருத்துவப் பகுதி
>
> கண்கள் உறக்கம்கேட்டு கெஞ்சிநிற்க
> உடல் சோர்ந்துபோய் ஓய்வுகேட்க
> உள்ளம் ஏங்கிப்போய் செய்திக்காக
> அரங்கவாசலில் வாசலில் தவமிருக்கிறது
>
> பதட்டத்தோடு வருகிறார் மருத்துவர்
> படபடப்போடு அதிர அழைத்து
> அவசரமாய் ஏதோ பெயரெழுதி
> அவன் கையில் திணிக்கிறார்
>
> **
> *"காலம் கடந்து விட்டது; ஆனாலும்
> கடைசியாய் ஒரு முயற்சி ..
> கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
> கருணை அவன் வைத்துவிட்டால்
> இரண்டில் ஒன்றாவது பிழைக்கும்" *
>
> மருத்துவமனையில் இல்லாத
> மிக முக்கியமான மருந்தாம் !
> தொலைவில் தான் கிடைக்குமாம் !!
> தலை தெறிக்க ஓடுகிறான் ....
>
> இருச்சக்கர வாகனம் எடுத்து
> நூறுமைல் வேகம் கொடுத்துப் விரைகிறான்
> நினைவுகள் அவனைப் புறம் தள்ளி
> நிலைகொள்ளாமல் பின்னோக்கிப் பறக்கிறது
>
> பத்து வருடக் கனவு
> பாதியிலேயே கலைந்து விடுமா?
> கூடும் இடத்தில் ஏளனம்...
> குடும்பத்திற்குள்ளும் அவமானம்...
> *மலடி* என்ற மறைமுகப் பேச்சையும்;
> *முடியாதவன்* என்ற மனம் வேகும் ஏச்சையும்;
> மாற்றி அமைக்க வந்த *மாமருந்து...*
> முகம் பார்க்காமலேயே மறைந்துவிடுமா?
>
> திடீர் குறுக்கீட்டால்
> தொடர்பு தடைபட்டு
> தடாலென நிறுத்துகிறான்..
> நடுசாலையில் உள்ளங்கை வியர்க்க
> நடுங்கிப்போய் நிற்கிறான்..
>
> மிரண்ட பார்வையோடு
> மேலும் தொடர வழி தெரியாமல்
> குட்டிப் பூனை ஒன்று
> குறுக்கே நின்றுகொண்டிருக்கிறது
>
> ஒரு நொடியில் போக்குவரத்து நெரிசல்
> இரண்டு பக்கமும் நீண்டுவிடுகிறது..
>
> *"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?!"
> "சாவுறதுக்கு என் வண்டியா கெடச்சது!"
> "உன் அப்பன் ஊட்டு ரோடா இது !"
> "பெரிய கடவுள்னுதான் நெனப்பு!" *
>
> ஏச்சுகளும் பேச்சுகளும் தொடர்ந்தாலும்
> எதுவும் அவன் காதில் விழவில்லை
> **
> *'அங்கீகரிக்க அவசியமில்லை
> ஆதரவுதர தேவையும் இல்லை-ஆனாலும்
> அவமானப்படுத்தாமல் இருக்கலாமே' *
>
> வேதனையைத் தாங்கிக்கொண்டு
> பூனையையும் தூக்கிக்கொண்டு
> மன வருத்தத்தோடு அங்கிருந்து
> மருந்து வாங்கக் கிளம்புகிறான்
>
> அதே நேரம் *அங்கீகாரம் *
> அவனுக்கு *அங்கே* கிடைத்துவிட்டது !
> **
> *தலை தப்பிய சுகப்பிரசவம் ..
> தாயும் சேயும் நலம்....*
>



Bookmark and Share

Monday, November 2, 2009

உணர்வாய் மனிதா உண்மையை

முகவரியில்லாத அநாதி இறைவன் படைத்த
அனாதைக் குழந்தை இந்த உலகம் ......
முதலும் முடிவும் இல்லாதவன்
எனினும் எங்கும் முழுமையாய் நிறைந்திருப்பவன்

வெறும்பையன் (nothingness) படைத்ததினால்
கிடைத்த பெரும் பயன் உலகில் உயிர்கள் ....
அவனே ஒன்றுமில்லாதபோது
மனிதன் எம்மாத்திரம் .....
இதை அறியாத சில மனிதர்கள்
பணம், பதவ,ி அதிகார ஆணவத்தால்
தன்னை உயர்வாக (somebody)
எண்ணிக்கொள்கிறான் ...

எல்லா உயிர்களுக்கும் பிரதானமாயிருக்கும்
பிராண வாயு தன்னை விளம்பரம் செய்வதில்லை ...
நீர் நிலைகள் நிறைந்திருக்க நிலைத்திருக்கும்
உலகம், இருந்தாலும் இது தனக்கு
வீதிக்கொரு விளம்பரப் பலகை வைப்பதில்லை ...
பெரும் நெருப்பில் பிறந்த உலகம்
சிறு நெருப்பாய் இருக்கும் உயிர்களுக்குள்
இருந்தாலும் இவை
தனைக்கொரு கட்சி அமைப்பதில்லை ...
நிலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்க
வாடகை வசூலிப்பதில்லை பூமி ...
விரிந்து பரந்த ஆகாயம் தன்னை
பெரிதாக எண்ணுவதில்லை ....

ஒன்றுமில்லாமல் வெடித்துப் பிறந்த உலகம்
ஓர் நாள் வெடித்து மறையும் ஒன்றுமில்லாமல் ....

உணர்வாய் மனிதா உண்மையை - உணர்ந்து
உயர்வாய் வாழ்ந்திடு ........



TO READ *"புத்திகெட்ட மனுசனுக்கு
எத்தனை சொன்னாலும் புரியாது
" * CLICK HERE..




Bookmark and Share

Wednesday, October 28, 2009

என்ன செய்தாய் என்னை...

"நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி"

"உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி "

"சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி "

"நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்"

"உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன"

"கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!



Bookmark and Share

Wednesday, October 7, 2009

உள்ளுக்குள் எதுவும் விசேசமா ???

இன்று அவளின் மெளனம் - அதனால்
ஆனதென் மனம் ஊனம்

ஒலி இல்லாமல் -
பேசும் மொழி இல்லாமல்

அவளின் மெளனம் -
அது ஆயிரம் வழியில் பேசும்
**
*ஆம்........*

அணைப்பில் சம்மதம் சொல்லும்
அரவணைப்பில் என்மனம் வெல்லும்

மகிழ்வில் மனம்கொள்ளை கொள்ளும்
இகழ்வில் தினம்என்னைக் கொல்லும்

கோபத்தில் கொடுவாளை எடுக்கும்
தாபத்தில் விடியலைத் தடுக்கும்

பழக்கத்தில் சாமரம் வீசும்
குழப்பத்தில் சமரசம் பேசும்

கொஞ்சுகையில் வீணையே கெஞ்சும்
மிஞ்சுகையில் நானே தஞ்சம்

மஞ்சத்தில் எனைத் தகிக்கும்
தஞ்சத்தில் எனையேத் துதிக்கும்

ஒட்டிவந்தால் வாடையாய் வீசும்
எட்டிநின்றால் சாடையில் பேசும்

*ஆனாலும்......*

அவளின் மெளனம்....
இன்றவளின் மெளனம்........

*அது..........*

வீழ்த்தும் விசமா ? வெறும் வேசமா ??
உள்ளுக்குள் எதுவும் விசேசமா ???

அர்த்தமென்ன இதுவரை! தெரியவில்லை - அதன்
ஆழமும் எதுவரை? புரியவில்லை

--



Bookmark and Share

Tuesday, September 15, 2009

ப்ரத்யோதாவின் கலக்கம்!

ப்ரலம்பன் இறந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. கம்சன் இந்த மூன்று
நாட்களும் தூங்கவே இல்லை. பகலும், இரவும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றாகவே
இருந்தது. தன்னந்தனியாகத் தன் அறையில் அமர்ந்து யாருடனும் பேசாமல்
யோசித்தவண்ணமே பொழுதைக் கழித்தான். யோசனை என்றால் சாமானியமான யோசனையா அது?
வசுதேவனின் மகன் அதுவும் எட்டாவது மகன் உயிருடன் இருக்கின்றானா? அதுவும்
அப்படியா? அவனைச் சும்மாவிடுவதா? விடுவதா?? ஹாஹ்ஹாஹா! வாசுதேவ கிருஷ்ணா, நீ
எனக்கு எமனா? நான் உனக்கு எமனா? பார்த்துவிடுவோம். அவன் அழிந்தே ஆகவேண்டும்.
இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்றாராமே வேத வியாசமுனி?? யார் உய்விக்கப்
போகின்றார்கள் பார்க்கலாம். உயிருடன் இருந்தால் தானே உலகை உய்விக்க முடியும்?
என்னால் இறக்கப் போகின்றான், அவனை மட்டுமின்றி அவனுடன் சேர்த்து இந்த யாதவத்
தலைவர்கள் அனைவரையும் கூட அழித்தால் நல்லதுதான். அனைவருக்கும் பனிரண்டு
ஆண்டுகள் நான் இல்லாமல் துளிர்த்துவிட்டது. கம்சன் ஒரு முடிவுக்கு
வந்துவிட்டான்.

CONTINUE ... READING....




Bookmark and Share

Monday, September 14, 2009

இடிவந்து தாக்கியது போல....

கோவில்முரட்டுக் காளைபோல நான்
காதல் சொல்ல வந்துநிற்கிறேன்

*’’மறுத்துவிடாதே என்கண்ணே !*
*மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!*

மற்றவன் பார்வைக்கு எப்போதும்நீ
அரைக்கிழவியாய் இருந்தாலும்

உற்றவன் எனக்கு இப்போதும்நீ
பேரழகியாகத்தான் தெரிகிறாய் !

*மறுத்துவிடாதே என்கண்ணே !*
*மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!*

ஏதோ ஒருகணத்தில் மட்டும்நீ
ராட்சசியாகத் தெரிந்தாலும்

Continue .. Reading Here..




Bookmark and Share

Thursday, August 27, 2009

ஒருநாள் நானாவேன்..

நீருக்கு ஏற்ப வளைந்துபின்
நிமிர்ந்து நிற்கும் நாணலே...

*உன்னைப்போல நானல்ல !*

வளைவதாலேயே நானிங்கு
வீழ்ந்து போகிறேன் நாணலே...

*உன்னைப்போல நானல்ல !*

விறைத்து நிற்பாய் நானென்றே
வில்லில் பூட்டிய நாணே...

*உன்னைப்போல நானல்ல !*

நிமிர்ந்து நின்றால் தானே - இன்று
உதிர்ந்து மறைவேன் நானே...

TO CONTINUE READING...CLICK HERE




Bookmark and Share

Friday, August 14, 2009

துகாராம் தான் என் வாழ்க்கை

மஹாராஷ்ட்ராவில் ஸ்வாமி துக்காராம் சிவாஜி மஹாராஜின்
சமகாலத்துவர் . ஸ்ந்த் துகாராமுக்கு சில சிஷ்யர்கள் இருந்தனர் அவர்களில்
முக்கிய சிஷ்யர்கள் துகாராமின் தம்பி கான்ஹோபா
சாந்தாஜி தேலி கங்காஜி மாவல் ஷிவ்ஜி .இவர்கள் துகாராமுடன் பஜன்
கீர்த்தனுக்கு அவருடனே இருந்து பாடுவர்கள்
ஷிவ்ஜி வீட்டிலேயே இருக்காமல் அவருடனேயே சுற்றிக்கொண்டு
இருப்பது கண்டு அவள் மனவி வருந்தினாள்.
" ஏன் இப்படி வீட்டை மறந்து விட்டு அவருடன் சுற்றுகிறீர்கள் ? நம்
குடும்பம் இருப்பது தெரியவில்லையா ?' என்று ஒரு நாள் குரலை
எழுப்பிக்கேட்டாள் .
அவர் அதைப் பொருட்படுத்தவில்லை "துகாராம் தான் என் வாழ்க்கை ?என்று
சொல்லியபடியே போய்விட்டார் ஷிவ்ஜியின்
இப்போது கோபமும் வந்தது இந்தத்துகாராம் தான் எல்லாவற்றுக்கும் காரணம்
அவருக்கு எதாவது செய்யவேண்டும் என்று தன் கணவர் மூலமாக ஸ்ந்த துகாராமை
விருந்துக்கு அழைத்தாள் , அவரைக்காலையிலேயே அழைத்து அவரை
ஸ்னானம் செய்யச்சொல்லி அதற்கு வென்னீர் தயாரித்தாள்
அந்த வென்னீர் கொதிக்கும் நிலையில் இருந்தது .அதைவிட்டுக்
குளித்தால் அவ்வளவுதான் உடம்பெல்லாம் வெந்துவிடும்
ஆனால் அந்த விட்டல் ஜகத்ரக்ஷ்கனாயிற்றே துகாராமிற்கு இந்தக்
கஷ்டம் கொடுப்பானா ?அந்த வென்னீரைக்குளிர வைத்து விட்டான்
பார்த்தாள் ஷிவஜியின் மனவி ,,,,,சரி அடுத்ததாகச் சாப்பாடு ,,,
அதில் விஷத்தைக்கலக்கலாம் என்று விஷத்தைக்கலந்து
வைத்தாள் விட்டல் விஷத்தை எல்லாம் முறியடித்து நல்ல அறுசுவை சமையல்
ஆக்கினார் துகாராம் விடைப்பெற்றுக்கொண்டு போனவுடன் அவளுக்குக்குஷ்ட நோய்
வந்து அவளை அழவைத்தது
தன் தவறை உணர்ந்து கதறினாள் பின் ராமேஸ்வர் பட் என்ற
சிஷ்யரை அழைத்து ஷிவ்ஜி தன் மனைவியின் இந்த வியாதியைக் குணப்படுத்த
முடியுமா என்று கேடக அவர் சொன்னார் "துகாராம் மிதித்த மண்ணை எடுத்து
வந்து அவள்
மீது தேய்த்துவிடு நோய் நீங்கிவிடும் என்றார்
அதே போல் துகாராம் மிதித்த மண்ணை எடுத்து வந்து தினமும் தேய்க்க அவளது
குஷ்ட நோய் நீங்கியது.



Bookmark and Share

Wednesday, August 12, 2009

*கிணற்று மனசு......*

*யாருமேஇல்லாத இதயவீடுக்குள்ளே.....*
*இறைவன் இருக்கக் கண்டேன்.....*
*இறைவனை இருத்திய இதயத்துள்ளே....*
*யாதொரு நினைவும் நழுவக் கண்டேன்.....*
*நித்தம் நித்தம் நான் மட்டும் நுழைந்து....*
*நுழைந்ததும் தொலையும் என்னை நானே...*
*அங்கே...... அடிக்கடி..... தேடக் கண்டேன்......*
*ஜென்ம ஜென்மமாய்.....ஒட்டடை படிந்த ஆன்மா....*
*தேடுதலில்......நிர்மலமாய்..........விஸ்தாரமாய்....*
*நான்முகனிடம் நான் வாங்கிய வரம்....*
*நான்கும்.......அருள்....பொருள்....இன்பம்...வீடென.....*
*இறைவனே...உன்னோடு வாழும் போது தான் தெரிகிறது...*
*வெளியுகம்...எத்தனை சிறிதென்று....!!!!*
*பொதி சுமக்கும் கழுதை மனசை.......*
*கழட்டி வைக்கத் தெரியாத மனிதனுக்கு.....*
*கண்டுகொள்ளக் கற்றுக்கொடு.......*
*அவர் தமக்குள் ஊறும்...*
*கிணற்று மனசை......!!!!*



Bookmark and Share

Wednesday, August 5, 2009

நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது

நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது என்பதனாலேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்குப் பல அறிஞர்கள் எழுதிய நீதிகளையும் அத்தகைய உத்தமர்கள் வாழ்க்கை வரலாறுகளையும் போதிக்கின்றனர் ஆசிரியப் பெருமக்கள். கல்வி கற்றுத் தேர்ந்த பின்னர் அக்கல்வித் தகுதியைக் கொண்டு பொருளீட்டுவது ஒன்றையே நோக்காகக் கொண்டு தாம் கற்ற நீதிகளையும் பிற நன்னெறி புகட்டும் செய்திகளையும் காற்றில் பறக்கவிட்டு வாழ்வோர் வாழ்க்கை முழுமையடையாது. ஒருவர் உலகில் அனைவராலும் மதிக்கப்பட வேண்டுமெனில் அவர் நற்பண்புகளின் உறைவிடமாக விளங்குதல் அவசியம்.

நற்பண்புகளில் முக்கியமானது பிறரது நம்பிக்கையில் குறுக்கிடாமை. ஒருவர் தமக்குப் பிடித்த மதத்தைத் தழுவுதலும், தமக்குப் பிடித்த கடவுளரை வணங்குதலும், கடவுள் நம்பிக்கை இல்லாதிருப்பதும், சோதிடத்தில் நம்பிக்கை வைப்பதும், சோதிடம் மூடநம்பிக்கை எனக் கொள்வதும் அவரது தனி உரிமை. இதில் பிறர் குறுக்கிடுவது அநாகரீகமாகக் கருதப்படும்.

தாம் நம்புவதையே பிறரு்ம் நம்ப வேண்டும் என யாரும் யாரையும் கட்டாயப்படுத்துதல் ஜனநாயக மரபன்று. நம்மில் மூத்தோரிடம் பணிவாக நடந்து கொள்தலும், பிறர் மனம் புண்படும் படி ஏதும் கூறாதிருத்தலும், அனைவரிடமும் இன்சொல் பேசிப் பழகுதலும் குறிப்பிடத்தக்க அவசியமான நற்பண்புகளாகும்.
#
#

Bookmark and Share


Follow me on Twitter

Add to: BlinkListBlinkList, del.icio.usdel.icio.us, DiggDigg, FurlFurl, ma.gnoliama.gnolia, redditreddit, SimpySimpy, SpurlSpurl

Friday, July 31, 2009

சிரம் புறம் சாய்ந்ததே

ஓடும் வண்டியில்
ஓடி ஏறியபின்
உள்ளே செல்ல
மனமில்லையே
பொக்கை வாய்க்
கிழவ னங்கே
போதித்தாலும்
பேதையின் பார்வையில்
போதை யேறி
பேதளித்ததே மனம்
உள்ளே செல்ல
ஆங்கே வந்த மேக நீர்
வேகமாக எனை உள்ளே
செல்லத் தூண்டியதே
பொக்கையும் கெகேவென
எனைக் கண்டு சிரித்ததே
என் சிரம் புறம் சாய்ந்ததே

Bookmark and Share


Follow me on Twitter

Add to: BlinkListBlinkList, del.icio.usdel.icio.us, DiggDigg, FurlFurl, ma.gnoliama.gnolia, redditreddit, SimpySimpy, SpurlSpurl

Thursday, July 30, 2009

திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா

திருஸ்வாதித்திருநாள் மஹாராஜாவிற்கு ஒரு சமயம் உடல் நோய் வந்தது அது
என்னவென்று ஒரு வைத்தியராலும் கண்டுப்பிடிக்கமுடியவில்லை .அவரிடம் ஒரு
பெரியவர் ஆலப்புழையில் இருக்கும் மருத்தோர்வட்டம் என்ற ஊரில் இருக்கும்
தன்வந்திரி பகவானைப்பார்த்து அருள் பெறச்சொன்னார் ,
மகராஜாவும் அங்குச்சென்றார் அங்கு தன்வந்திரி பகவான் சங்கு
சக்ரதாரியாக கருணைக்கண்களுடன் மிக அழகாக நின்று
கொண்டிருந்தார் அவர் கையில் அமிருதகலசம் இருந்தது .அங்கு தயாரிக்கும்
பிரசாதம் அவர் உடல் நிலை சரியாக அவருக்கு வழங்கப்பட்டது அந்தப்பிரசாதம்
கறிகாய்களுடன் தயாரிக்கும் ஒரு கறி .அதற்குப்பெயர் "தாள்கறி"
இந்தத்தாள்கறியில் சேப்பங்கிழங்க்கின் இலைத்தண்டுகளைச்சேகரித்து பின்
இன்னும் சில கறிகாய்களைச்சேர்ப்பார்களாம் வேறு என்ன பொருடகள் என்று
அறிய ஆவல் தான் ஆனால் எனக்கு விடை கிடைக்கவில்லை.
இந்தப்பிரசாதம் ரத்தச்சம்பந்தமான நோயைச் சரிசெய்து விடுகிறது இதை மிக
பக்தியோடும் நம்பிக்கையோடும் உண்ண வேண்டும் இந்தத் தாள்கறி பிரசாதம்
ஆதிகாலத்திலிருந்தே
தரப்பட்டு வருகிறதாம் தவிர ஆடி அமாவாசையன்று இங்கு மிக
விசேஷமாகப்பூஜையும் மிகவும் அதிக அளவில் இந்தப்பிரசாதமும்
செய்யப்படுகிறது ஏன் என்றால் இந்தப்பிரசாதத்தை வாங்க கூட்டம் அலை
மோதுகிறது
வைத்தீஸ்வரன் கோயில் மண் உருண்டப்போல் இதுவும் நோய் தீர்க்கும்
பிரசாதமாகவும் நோய்த்தீர்க்கும் கோயிலாகவும் இருக்கிறது ,

Bookmark and Share


Follow me on Twitter

Add to: BlinkListBlinkList, del.icio.usdel.icio.us, DiggDigg, FurlFurl, ma.gnoliama.gnolia, redditreddit, SimpySimpy, SpurlSpurl

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)