Thursday, May 28, 2009

சிந்தனைகள்

சிந்தனைகள்
  • ஒரு மேலாளர், அஞ்சாமையில் சிங்கமாகவும், உழைப்பில் கழுதையாகவும், நன்றியில் தாயாகவும், வாய்ப்புக்காகக் காத்திருப்பதில் கொக்காகவும், தூரப் பார்வையில் கழுகாகவும், ஞாபக சக்தியில் யானையாகவும் இருக்க வேண்டும்.
  • வேலை ஒரு விளையாட்டாக மாறிவிடும் போது, வாழ்க்கையே ஒரு திருவிழாவாக மாறிவிடும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது.
  • மற்றவர்களைப் பேச விடுங்கள். இதில் அவர் பரம திருப்தி அடைவார். உங்களை மதிப்பார். அப்புறம் நீங்கள் சொல்வதை அவர் கேட்ப்பார்.
  • தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!

ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount

Tuesday, May 26, 2009

கல்விச் சேவை

கல்விச் சேவை

என்றும் செய்வதிலே சிறந்த சேவை கல்விச் சேவை..
சேர்ந்தே செய்திட இப்போ கரங்கள் தேவை..

வாரி வழங்கிட வள்ளல் கரங்கள் தேவை..
தேராய் அறிவை இழுத்திட திறன் தோள்கள் தேவை..

தோணிகளாய் கல்விக் கடலில் கரை சேர்த்திட நீங்கள் தேவை..
ஏணிகளாய் ஏற்றம் கொண்டோர் எம்மிடம் இணையத் தேவை..

படிக்காதவர் இருக்கலாகாது என்றோர் சட்டம் தேவை..
இடித்துச் சொல்லி நிறைவேற்றிட மெத்தப் படித்தவர் தேவை..

கல்விப் பணிகள் செய்திட இன்னும் கற்றோர்கள் தேவை..
வெல்லும் படிப்பாக வேதனைகள் தீர்ந்திடத் தேவை..

கல்தேய்ந்திடும் எறும்பனைய கற்றவர் கூட்டம் தேவை..
சொல்லும் உயிர்ச் சொல்லாக தமிழன் உயர்ந்திடத் தேவை..

இராதாகிருட்டினக் கல்விக்கூடம் இன்னும் மலர்ந்திடத் தேவை..
இரங்கும் மனங்கள் இன்னும் அள்ளிக் கொடுத்திடத் தேவை..
இறைவனின் ஆணை என நீங்கள் இணைந்திடத் தேவை..
இன்பத் தமிழனை எங்கும் உயர்த்திட நீங்கள் என்றும் தேவை!

வாருங்கள்.. இணையுங்கள்.. கல்வி கற்பிப்போம்.. உதவுங்கள்.. என்று அனைவருக்கும் அறைகூவல் இடவும்.. அன்புத்தோழரே.. ஆனந்தரே..

************

அன்புள்ளத்திலிருந்து ஊற்றெடுத்து வந்த இந்தக் கவிதையை உங்களுடன் பகிர்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை எழாதென்பதால் கடல் கடந்த தூரத்தில் இருந்து கொண்டே நமது தினம் ஒரு தகவலின் மூலம் அவர் கைகளை என்னோடு இணைத்து தங்கத்தமிழில் இசை பாடி ஓசை எழுப்பியுள்ளார் முனைவர் பாலு, அறிவியல் விஞ்ஞானி மற்றும் சிட்னி தமிழ் மன்றச் செயலாளர் ஐயா அவர்கள, ஆஸ்திரேலியா.

ஓசையின் இனிமையோடு உங்க‌ள் அனைவ‌ரையும் இன்று ச‌ந்திப்ப‌தில் மிக்க‌ ம‌கிழ்ச்சியடைகிறேன். ந‌ம்மால் முடியும் ந‌ம்மை சுற்றி உள்ள‌வ‌ர்க‌ளை க‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ மாற்றிட. வாருங்கள்.. இணையுங்கள்.. கல்வி கற்பிப்போம்.. உதவுங்கள்..


ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount

Tuesday, May 19, 2009

எங்கள் அண்ணன் பிரபாகரனே..

வேலுப்பிள்ளை அவர்களின்
விடிவெள்ளி... எங்கள் அண்ணன் பிரபாகரனே...
உன்னொருவனின் வீர மரணத்துக்கும்...
உன்னோடு சகலங்களிலும் உடனிருந்து உயிர் துறந்த...
என்னுடைய பச்சை தமிழ் ரத்தங்களே...
உங்களுக்கு இந்த கையாலகாத கடன்கார
தமிழனின் கடைசி வணக்கங்கள்...
எனக்கு தெரியும்...
கண்டிப்பாக இதை நீ ஏற்றுக்கொள்ள மாட்டாய் என்று...
ஏனெனில்...
இலவசங்களுக்கு விலை போன நான்...
எவ்வாறு உங்கள் வீரமரணத்துக்கு
கண்ணீர் அஞ்சலி செலுத்த முடியும்...
அளிக்கும் வாக்குக்கு கூட லஞ்சம்
வாங்கும் நான்....
எவ்வாறு வாய் விட்டு அழ முடியும்...
அந்நிய தேசத்தாளை ''அன்னை'' என்று அழைக்கும் நான்...
உன்னை என் அண்ணனாக நினைக்க மறந்து விட்டேனே...
p>தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள்...
ஆனால்...
அண்ணா நீ போர்க்களத்தில் லட்சிய போர் செய்யும் போது...
நான் இங்கு IPL20 மட்டை பந்து பார்த்து கொண்டு அல்லவா இருந்து விட்டேன்...
மட்டை பந்தில் இந்தியா தோற்றால் மானம் போய்விட்டதாக
சொல்லும் நான்...
உன்னொருவனின் தலைமையில் நடத்தும் உரிமை போராட்டம்...
சிங்கள ஓநாய்களால் சிதிலம் செய்தப்போது சீற மறந்து விட்டேனே...
இனிமேல்....
நான்
பதங்கமாகும் கற்பூரத்தில் மட்டும்....
பக்தியை தேடி என்ன பயன்....
இரவின் பாலங்களில் மட்டும்....
உறவினை தேடி என்ன பயன்....
நான் இனி தமிழனும் இல்லை...
உன் தம்பியாகும் தகுதியும் இல்லை....
மெல்ல தமிழ் இனி சாகும்....
தமிழனும் மெல்ல இனி சாவான்....

ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount

Monday, May 4, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

வேஷ்டியையும், பணத்தையும் பார்த்து ஒரு கணம் திகைத்தாலும், மனதிற்குள் ஏதோ
ஒன்று உத்தரவிட அவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் வேங்கடராமன்.
பார்த்தால், அந்தி மயங்க ஆரம்பித்திருந்தது. சூரியன் மறையப் போகின்றான். ஆஹா,
போச்சே! அப்பா சிராத்தம் செய்து வைக்க அல்லவோ நம்மை அனுப்பி வைத்தார்? இப்போப்
பொழுது சாய்ந்துவிட்டதே. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள். நாமோ
அவருக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டோமே. நாம் வரலைனு அங்கே காத்திருப்பாங்களே?
மதியமானாலும் பரவாயில்லை. இந்த மாலையில் சிராத்தம் செய்ய முடியாதே? காலம்
கடந்து போச்சே! நம்மால் ஒருத்தர் வீட்டு முக்கியமான காரியத்துக்கு பங்கம்
நேரிட்டு விட்டதே? மனக்கலக்கத்துடன் யோசித்த ஸ்வாமிகள் இனிமேல் சிராத்தம்
நடக்கும் வீட்டிற்குப் போவதை விடத் தந்தையைப் போய்ப் பார்த்து நடந்ததைச் சொல்லி
விடவேண்டியதே முறை என நினைத்தார்.

அவ்வாறே மணஞ்சேரியில் இருந்து திருவிசநல்லூருக்குத் தன் வீடு திரும்பிய அவர்
தந்தையிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டு, தாம் ஆஞ்சநேயர் கோயிலில் தியான ஜபம்
செய்ததையும், அங்கே பலிபீடத்தில் இந்த ஜோடி வேஷ்டியும், ஐந்து ரூபாய் பணமும்
இருந்ததையும் சொல்லிவிட்டுத் தாம் சிராத்தம் செய்து வைக்காமல் கோயிலிலேயே நாம
ஜபத்தில் ஈடுபட்டதையும் சொல்லி வருந்தினார் ஸ்வாமிகள். தந்தை என்ன தண்டனை
கொடுத்தாலும் ஏற்பது என்ற மன உறுதியுடனும் காத்திருந்தார். வேங்கட சுப்ரமணிய
ஐயருக்கோ இதைக் கேட்டதும், முகம் வாடிவிட்டது. மனம் வருந்திப் போன அவர், தாமே
போய் சிராத்தத்தை நிறைவேற்றி இருக்காமல் போனதற்கும் மனம் நொந்து போனார். அந்த
அந்தணரும் சிராத்தம் நடத்தி வைக்க யாரும் வராமல் போனதுக்கு நம்மைக் கடிந்து
கொள்ளப் போகின்றாரே என்றும் மன வருத்தம் ஏற்பட்டது அவருக்கு. ஒரு கணம் யோசித்த
அவர் தாமே நேரில் மணஞ்சேரிக்கே சென்று அந்த அந்தணரிடமே நடந்ததைக் கூறி
மன்னிப்பும் கேட்டுவிடலாம் என நினைத்துக் கொண்டு தெருவில் இறங்கினார். வேகமாய்
நடைபோட்டு மணஞ்சேரிக்குள் நுழைந்தார். இருட்ட ஆரம்பித்துவிட்டது. சிராத்தம்
நடந்திருக்க வேண்டிய வீட்டை அடைந்தார். தயக்கமும், பயமும் முட்டித் தள்ள
கொஞ்சம் கலக்கத்துடனேயே அந்த வீட்டை அடைந்தார் வேங்கடசுப்ரமணிய ஐயர் அவர்கள்.

உள்ளே நுழையும் வேங்கட சுப்ரமணிய ஐயரைப் பார்த்ததுமே அந்த அந்தணரோ ஓடோடியும்
வந்து வரவேற்றார். அகமும், முகமும் மலர்ந்து இருந்த அவரைக் கண்ட
வேங்கடசுப்ரமணிய ஐயர் தயக்கத்துடன் அவரைப் பார்த்து, “ இன்னிக்குக் காலையிலே
என் பையன் இங்கே வந்து,” என்று மெதுவாய் ஆரம்பித்தார். அவரோ மிக மிக
சந்தோஷத்துடனேயே , “ இருங்க, இருங்க, நான் சொல்றேனே!” என்று ரொம்பக்
கண்டிப்பாயும், நிச்சயமாயும் சொல்ல ஆரம்பிக்க வேங்கடசுப்ரமணிய ஐயர் கலங்கியே
போனார். என்ன சொல்லப் போகிறாரோ எனக் கதிகலக்கத்துடன் அவர் இருக்க, அந்த
அந்தணரோ, “ சொன்ன நேரத்துக்குத் தப்பாமல் உங்க பிள்ளை வந்து சேர்ந்தான்.
சிராத்தத்தை ரொம்பவும் திருப்தியா நன்னாவும் செய்து வைத்தான். எனக்கும்
மனசுக்குத் திருப்தியாவே அமைந்தது. ஒரு ஜோடி வேஷ்டியும், ஐந்து ரூபாய் பணமும்
தட்சணையாக் கொடுத்தேனே? கொண்டு வந்து கொடுத்தானா? சொல்றேனேனு தப்பா
நினைக்காதீங்க. நீங்க கூட இவ்வளவு திருப்தியா சிராத்தம் செய்து வைத்ததில்லை.
உங்க பிள்ளை உங்களை மிஞ்சிவிட்டான். ரொம்ப நன்றி.” என்று இரு கரமும் கூப்பி
வணங்கினார் அவர். வேங்கட சுப்ரமணிய ஐயருக்கோ ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்வது
என்று புரியாமல் திகைத்துப் போனார். அப்படியே திருவிசநல்லூருக்குத்
திரும்பினார்.

வீட்டுக்கு வந்ததும் பையனைப் பார்த்து, “நீ தான் மணஞ்சேரி போய் சிராத்தம்
செய்து வைத்தாய்னு அவர் சொல்றாரே? தட்சணையாக் கூட ஐந்து ரூபாயும், ஒரு ஜோடி
வேஷ்டியும் கொடுத்தாராமே?” என்று மகனிடம் கேட்க, மகனோ, அதிர்ந்து போய்
நின்றார். “என்ன நானா? அங்கே போனேனா? சிராத்தம் செய்து வைத்தேனா? ஆஞ்சநேயர்
கோயிலில் உட்கார்ந்து கொண்டு அனுமன் சந்நிதியில் ராமநாமத்தை அல்லவோ ஜபித்துக்
கொண்டிருந்தேன். அப்போ, அப்போ, அப்போ எனக்காக அந்த ஸ்ரீராமனே போய் சிராத்தம்
செய்து வைச்சிருக்கானா?” என்று விதிர்விதிர்த்துப் போய் நின்றார் ஸ்வாமிகள்.
ஆஹா, அந்த ராமனே போய் சிராத்தம் பண்ணி வச்சதோடல்லாமல் சம்பாவனையாய்க் கிடைத்த
வேஷ்டியையும், பணத்தையுமே தம்மிடமே கொண்டும் சேர்த்துவிட்டானே? என்று உருகிப்
போனார் ஸ்வாமிகள். செய்தி ஊரெங்கும் பரவ ஊரே வியந்தது இந்த அற்புதத்தைக் கண்டு.


GET YOUR FREE DOWNLOADABLE ARTICLES
ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
http://picasaweb.google.com/BALAatCount

Friday, May 1, 2009

ஆதியின் நிழல்

யாருமறியாத
கருக்கலில்
முகமிழந்த நாம்,
சொல்லப்படாத
வார்த்தைகளுக்காய்
மெளனம் பகிர்ந்தோம்.
அடைபட்ட துயிலின்
முற்றங்களில்
நிலாவின் ஒளியருந்தி,
உன்னில் நானும்
என்னில் நீயும்
மொட்டவிழ்ந்த
அன்பின் நீர் தழும்பலில்,
கண்களில் பூத்தது
ஒளியின் பிரவாகம்.

நம் கனவுகளின்
ஏகாந்த பிரதிமைகளை
ஏற்காத உதிரச்சாயல்களின்
மனச்சுழிவுகளில்,
சோபையிழந்து
நீரின் எதிரெதிர்க் கரைகளில்
வேரறுந்தோம்.

உன் விவாதங்களின்
பொய்பிம்பகுகைகளில்
ஆதிகால மனுஷியாய்,
மொழியடங்கய
மெளனத்தின் குரல்வளை
நீண்டு மெலிந்ததண்டுகளாய்.

என்றேனும்
நீ உணரக் கூடும்
நம் சாயலில் ஒளிரும்
பூவின் இதழ் தொட்டு
பிரகாசிக்கும்
நிலாத்துண்டங்களை!


--
GET YOUR FREE DOWNLOADABLE ARTICLES
ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
http://picasaweb.google.com/BALAatCount

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)