Sunday, July 21, 2013

என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

றோமா? எங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன். ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு. ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. அதைப் போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை) எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன. அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன. அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம். அடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம். அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க. பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள். அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர், காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன். கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா? ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை. இதை எல்லாம் தவிர்க்கலாம். இம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும். அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார். வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க. சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம். கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும். இப்போது எப்படினு தெரியலை. கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்னு சொல்வாங்க.இரண்டுமே பண்ணியாச்சு. கல்யாணம் ஒன்றில்லை. நிறையக் கல்யாணங்கள். அதிலே நாங்களே (நானும் என் மறுபாதியும்) கல்யாண வேலைகளில் பங்கெடுத்துக் கொண்ட கல்யாணங்கள் எங்க கல்யாணம் தவிர ஏழு அல்லது எட்டு இருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்சு நல்லா அனுபவிச்ச கல்யாணம்னு சொல்லணும்னா என்னோட சித்தி கல்யாணம் தான். அசோகமித்திரனின் மனைவியான இவங்க கல்யாணமே நான் விபரம் தெரிஞ்சு பத்துப் பதினோரு வயசிலே அனுபவிச்ச முதல் கல்யாணம். அப்போல்லாம் கல்யாணம்னா ஏதோ நாம ஜாலியா இருக்கிறதுக்கு மத்தவங்க பண்ணிக்கிறாங்க என்ற அளவில் மட்டுமே நினைப்பு இருக்கும். சொந்தக்காரங்க கூடுவதும், பக்ஷணங்கள் பண்ணுவதும், ஒரே கொண்டாட்டமாய் இருப்பதும், எல்லாத்துக்கும் மேல் பள்ளிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு வீட்டில் இருப்பதும் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுத்தது. என் கல்யாணமே எனக்குக் கொஞ்சம் விளையாட்டாகவே சில சமயம் தோணி இருக்கு. இதன் தாத்பரியத்தை நான் புரிஞ்சுக்கச் சில வருஷங்கள் தேவைப்பட்டன என்று சொல்வதில் வெட்கம் ஏதும் இல்லை. போகப்போகத் தான் புரிய ஆரம்பித்தது. கல்யாணத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களையும், ஒவ்வொருத்தர் கல்யாணத்திலும் நடக்கும் கலாட்டாக்களையும், வெவ்வேறு சம்பிரதாயங்களையும் நன்கு கவனிக்க ஆரம்பித்தேன். எது எப்படி இருந்தாலும் கல்யாணம் என்பதன் அடிப்படைத் தத்துவம் எதுவும் மாறவில்லை. சடங்குகள், சம்பிரதாயங்களில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும் மற்ற வைதிக காரியங்களில் மாற்றம் இல்லை. கல்யாணம் என்றால் என்ன? ஏன்? எதுக்கு? எப்படி? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தான் சரியா என்பதை எல்லாம் இங்கே வரும் நாட்களில் அலசுவோம். அவரவர் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். மறுபடி கொஞ்சம் உடல்நலக்குறைவு என்பதாலும், வேலைகள் இருப்பதாலும் அடுத்த பதிவுக்கு ஓரிரு நாட்கள் ஆகலாம். 'கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம், தங்கத் தாலி கட்டுற கல்யாணம், என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்," இன்றைய முதலமைச்சர் கதாநாயகியாய் நடிச்ச ஏதோ ஒரு படத்தில் வரும் பாடல். (சந்திரோதயம்?) கதாநாயகி வளர்ந்தும் குழந்தையாக இருப்பாளாம். அவள் கேட்கும் கேள்விதான் இது. சும்மாவானும் மேளம் கொட்டித் தாலி கட்டறதோடு கல்யாணம்ங்கறது முடியறதில்லை. அதோடு தாலி மட்டும் கட்டிக் கொண்டு நடைபெறும் கல்யாணங்கள் இந்துத் திருமணச் சட்டப்படி செல்லாத திருமணங்கள் ஆகும். இந்துத் திருமணங்களில் அது எந்த ஜாதியினரானாலும் சரி, சப்தபதி என்ற ஒன்று நடந்த பின்னரே திருமணம் பூர்த்தியானதாய்க் கருதப்படும். அது வரைக்கும் என்னதான் தாலி கட்டிக் கொண்டாலும், அந்தத் தாலியின் புனிதம் குறித்துப் பல சினிமாக்களில், பல நெடுந்தொடர்களில் பக்கம் பக்கமாய் வசனம் பேசினாலும் திருமணம் ஆனதாய்க் கருத முடியாது. அப்படின்னா, கோயில்லே வைச்சுத் தாலி கட்டிக்கிற கல்யாணங்கள்? அவையும் செல்லாதவையே. அங்கேயும் ஹோமம் வளர்த்து அக்னிசாட்சியாய் சப்தபதி நடந்தாலே திருமணங்கள் செல்லும். காதல் ஜோடி அவசரமாய் மாலை மாற்றிக் கொண்டு தாலிகட்டிக்கொள்ளும் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லைனா அவனோ, அவளோ நடுவில் பிரிந்து போனால் கூட என்னனு கேட்டுக்க முடியாது. இப்போதெல்லாம் சப்தபதியோடு நடக்கும் திருமணங்களே பதிவும் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் பெண்களோ, பிள்ளைகளோ அதிகம் வெளிநாடுகள் செல்கின்றனர். அங்கெல்லாம் திருமணப்பதிவுச் சான்றிதழ் அவசியம் தேவை. ஆகையால் திருமணம் பதிவு செய்யப்படுகிறது. ஆகவே திருமணம் என்பது சாதாரணமான ஒரு விஷயமே இல்லை. காலம் பூராவும் அவனும், அவளும் நிலைத்து நின்று இல்வாழ்க்கை வாழ வேண்டும். இதைத் தான் ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். ஏனெனில் அவன் மூலமும், அவள் மூலமுமே அந்த வம்சம் விருத்தியாகிறது. அப்போ திருமணம் வம்ச விருத்திக்கு மட்டுமா? "எனக்கொரு மகன் பிறப்பான்; அவன் என்னைப் போலவே இருப்பான்" எனப் பாடி ஆடுவதற்கா? அல்லது பெண்ணைப் பெற்றுக் கொண்டு, "அன்புள்ள அப்பா, அப்பப்பா"னு தெய்வத்திருமகள்களைப் பெறுவதற்கா? வம்ச விருத்தி முக்கியம் தான். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பூர்வ கர்மாக்கள் இருக்கின்றன. அதைக் கழித்தாக வேண்டும், அதற்கு அநேக ஜீவர்கள் பிறந்தாக வேண்டும். இதற்குத் தாம்பத்தியமும் அவசியமே. ஆனால் அதே சமயம் வெறும் வம்ச விருத்தி மட்டுமே திருமணத்தின் காரணம் இல்லை. திருமணம் என்பது ஒரு பிரமசாரியை கிரஹஸ்தாசிரமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டி நடைபெறும் ஒரு முக்கியமான சம்ஸ்காரம். அதோடு கூட அந்தப் பெண் அவனோடு கூடி இருந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல் அற வழியில் இல்லறத்தை நடத்திக்காட்ட வேண்டும். இதற்கானதொரு அதி அற்புதமான சேர்க்கையே கல்யாணமும், அதை ஒட்டிய இல்லற வாழ்க்கையும். பிரமசாரி ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? பி.கு. ரொம்பவே தத்துவார்த்தமாக இருக்காது என இப்போதே சொல்லிவிடுகிறேன். கொஞ்சம் சரளமாக, ஜனரஞ்சகமாகவே எழுத எண்ணம். எவ்வளவு தூரம் என்னால் முடியும் என்பது தெரியாது. பார்க்கலாம். "மணமகளே மருமகளே வா, வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா, வா, குணமிருக்கும் குலமகளே வா, வா, தமிழ்க் கோயில் வாசல் திறந்து வைப்போம் வா, வா." மணமகளை புகுந்த வீட்டுக்கு அழைக்கும் இந்தப் பாடல் ஒலிக்காத திருமண தினங்களே இல்லை ஒரு காலத்தில். மணமகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அவள் குணத்தையும், அதனால் வீடு, வாசல் செழிக்கப் போவதையும் எடுத்துச் சொல்லும் பாடல் இது. வரப்போகும் பெண்ணை சாக்ஷாத் மஹாலக்ஷ்மியாகவே மதித்துப் போற்றிய காலம் ஒன்று உண்டு. திருமணம் என்பது இரு குடும்பங்கள் இணையும் ஒரு பந்தம். அதில் உள்ள ஒவ்வொரு சடங்கும் அர்த்தம் பொதிந்தது. அவற்றையும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் போகிறோம். ஒரு காலத்தில் இப்படி எல்லாம் இருந்த நம் கல்யாணக் காலங்கள் நாளா வட்டத்தில் மறைந்து போய் விட்டன. அதோடு இல்லாமல், பெண்ணே தன் காதலனைப் பார்த்து, "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? .. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா'?" என்று கேட்பதாகப் பாடல்கள் எழுதப் பட்டு அவை தமிழ்நாட்டின் தேசிய கீதமாகவே விளங்கின. இது காலத்தின் கோலம் தான். திருமணத்தை இவ்வளவு மோசமாக நாம் நினைக்கும் அளவுக்கு மாறியது திருமணம் என்பதன் உண்மையான அர்த்தம் புரியாமல் வெறும் உடல் இன்பத்துக்காகவே திருமணம் என்று மாறிப் போக ஆரம்பித்தது தான் காரணம். உண்மையில் திருமணம் என்பது கணவனோடு கூடி இருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதோடு அவன் காரியங்கள் அனைத்திலும் அவனுக்குத் துணை நிற்பதற்கே என்பதைப் போன பதிவிலேயே பார்த்தோம். அப்படி இருந்த கல்யாணங்களின் பொருள் மாறிப் போய் வியாபாரம் ஆனது எப்போது? ஒரு காலத்தில் குருகுலம் முடித்த பிரமசாரிகள் வீடு வீடாக பிக்ஷை எடுத்து வருகையில், பெண்ணை வைத்திருப்பவர்கள் அந்த பிரமசாரியின் அபிப்பிராயத்தைக் கேட்டுக் கொண்டு தங்கள் வீட்டுப் பெண்ணை தானமாய்க் கொடுப்பது உண்டு எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். என் அப்பா வீட்டிலேயே இப்படி நடந்ததாக அப்பா சொல்லி இருக்கிறார். அதற்கும் பின்னர் பிள்ளை வீட்டுக்காரர்களே பிரமசாரிப் பையருக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனத் தேடிச் சென்று பெண் கேட்டுத் திருமணம் செய்து வைப்பதாகவும் கேட்டிருக்கிறேன். இப்படிப் பெண்ணைத் தேடிப் பிள்ளை வீட்டினரே சென்றிருக்கின்றனர். ஆனால் மாப்பிள்ளையைத் தேடிப் பெண் வீட்டுக்காரர்கள் வர ஆரம்பித்தது ஆங்கிலேய ஆதிக்கத்தின் பின்னரே. ஆங்கிலேயர்கள் நம்மை ஆள ஆரம்பித்த பின்னரே, குருகுலப் படிப்புக்கு மூட்டை கட்டிவிட்டு நம் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் படிப்பும், அதன் காரணமாக மடிப்புக்கலையாமல் உத்தியோக வாழ்க்கையும் ஏற்பட ஆரம்பித்த பின்னருமே நம் கல்யாணங்கள் அனைத்தும் வியாபாரக் கல்யாணங்களாக மாற ஆரம்பித்தன. அதற்கு முன்னர் வரை குருகுல வாசம் முடிந்து வரும் பிரமசாரிக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனப் பிள்ளை வீட்டுக்காரர்களே தேடிச் செல்வார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் படிப்பும் உத்தியோகமும் ஏற்பட்டு அதன் மூலம் கெளரவம் அதிகம் ஆனதாக ஏற்பட்ட உடனே பெண் வீட்டுக்காரர்கள் போட்டிபோட்டுக் கொண்டு பெண்களுக்கு வரதக்ஷணை கொடுத்துப் பையனைத் தேடும் நிலைமைக்கும் ஆளானார்கள். இதற்கு அப்போது பெண்களின் விகிதாசாரம் அதிகமாகவும், ஆண்களின் விகிதாசாரம் குறைவாகவும் இருந்ததும் ஒரு காரணம்.
Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)