Thursday, February 26, 2009

கரடி, சிறுத்தைகள், புலி

திருமங்கை
ஆழ்வார் காலத்திலே இருந்தே இந்தச் சிங்கவேள் குன்றம் என்னும் அஹோபிலம் செல்ல
முடியாத ஓர் இடமாகவே இருந்து வந்துள்ளது.

*அங்கண்ஞாலமஞ்ச அங்கோரளரியாய் அவுணன்
பொங்க வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.
*
*அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்களரியாய், அவுணன்
கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
மலைத்த செல் சாத்தறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்ப,
சிலைக்கை வேடர்த்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே.
*

இப்போதும் கரடி, சிறுத்தைகள், புலி போன்ற துஷ்ட மிருகங்கள் காட்டினுள் மறைந்து
இருப்பதாகவே சொல்கின்றனர்

கருணை இல்லம்

கருணை இல்லத்தின் முகப்பு காட்டப்படுகிறது. பெயர்ப்பலகையில் "எய்ட்ஸ்
நோயால் கைவிடப்பட்டவர்களுக்கான கடைசி புகலிடம்"-என எழுதப்பட்டிருக்கிறது.
அந்த எழுத்துகோர்வைக்கு இடையே எட்டு வயது சிறுவன் ஒருவன் சிரிப்பது போன்ற
படம் வரையப்பட்டுள்ளது.

-cut-

காட்சி:1A கருணை இல்லத்தின்
விழா அரங்கம்/ பகல்/

பெருவாரியான மக்கள் கூட்டம் கைத்தட்டுவதிலிருந்து காட்சி துவங்குகிறது.
அவர்களை காட்டிக்கொண்டேவர- அவர்களின் மீது மேடையிலிருந்து பேசும்
ஒருவரின் உரை எதிரொலிக்கிறது.

குரல்: அன்பானவர்களே..நொடிந்துபோனவர்களை காக்கும் இந்த அரிய முயற்சியை
மேற்கொண்டிருக்கும் அருட்தந்தை.பால் ஆர்தர் அவர்களின் சேவையை பாராட்டி
நம் அமைப்பின் சார்பாக வசூலிக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்க்கான
காசோலையை,அருட்தந்தை அவர்கள் பெற்றுக்கொள்ள அவரை உங்கள் ஒவ்வொருவரின்
சார்பாக அன்போடு மேடைக்கு அழைக்கிறோம்.

கூட்டம் மீண்டும் கைத்தட்டுகிறது - தள்ளாடும் நடையோடு நடந்துவருகிறார்
பால் ஆர்தர்.
கூட்டத்தில் கூடியிருக்கும் குழந்தைகள் அவர் வருவதை பார்த்து மகிழ்வோடு
கைதட்டுகின்றனர்.
பால் ஆர்தர் அவர்களைப்பார்த்து கை அசைக்கிறார்.

மேடையில் தரப்படும் காசோலையை அவர் வாங்கிக்கொள்ள - மீண்டும் அரங்கத்தின்
உற்சாகம்.
பின்னணி குரல்: இப்போது அருட்தந்தை அவர்கள் நம்மிடம் சில வார்த்தைகள்
பேசுவார்கள்.

பால் ஆர்தர் போடியத்தில் நின்ற படி : உயிர்கொல்லி நோய் இந்த பிஞ்சுகளை
உண்ணுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஓடி விளயாட வேண்டிய வயதில் யாரோ செய்த
தவறுகளுக்காக தம் வாழ்வையே இழந்து தவிப்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத
இந்த பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றுவதை என் வாழ்வின் பணியாக செய்கிறேன்.
நீங்கள் தோள் தருகிறீர்கள். இதிலிருந்து வெளியேற இன்னும் அதிக
விழிப்பும்., வலியை துடைக்க இன்னும் பொருளும் தேவைப் படுகிறது. உதவிய
உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.

கலங்கிய கண்களோடு அவர் பேசுவது ஒலி இல்லாமல் தொடர்கிறது-
பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் பல்வேறு காட்சிகளைக்காட்டி
கொண்டேவந்து....

-cut-


காட்சி :2 வெளியிடம்/பூங்கா/ பகல்/

தெளிந்த நீலவானத்தைக் காட்டிகொண்டே வந்து..-மரங்கள் அட்ர்ந்த பூங்காவின்
பசுமையோடு அத்தனை அழகையும் காடியபடியே காமிரா வல்து புறமாய் திரும்ப -
பால் ஆர்தர் நடந்துவருகிறார்.
அங்கு ஏற்கனவே தயாராக நின்றிருக்கும் பெண் நிருபர் அவரை நெருங்கி..

நிருபர்: ஃபாதர் உங்கக்கிட்ட இன்னொரு கேள்வி...

பால் ஆர்தர் புன்னகைகிறார்.

நிருபர்: இப்படியொரு அமைப்பை துவங்க உங்களுக்கு தூண்டுகோலாக அமைந்த
நிகழ்ச்சி எது..? அதை எங்களோட பகிர்ந்துக்க முடியுமா..ஃபாதர்..?

பால் ஆர்தர் மீண்டும் சிரித்தபடியே - கையில் வைத்த்ருக்கும் பைபிள்
புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள - அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு.

தேவாலயமணி ஒலிக்க - கைகளை விரித்த ஏசுவின் விரித்த கைகளுடன் கூடிய சிலை.
தேவாலய கோபுரம் - சிறகடித்து பறக்கும் பறவைகள் - எரியும் மெழுகு வர்த்தி-
போன்றவைகள் அடுத்தடுத்து காட்டப்பட்டு- கருணை இல்லத்தின் முகப்பு பெயர்
பலகையும் -அதில் உள்ள சிறுவனின் முகம்.
காமரா அந்த சிறுவனின் முகத்தை நெருங்கி அவன் சிரிப்பை மிகவும்
அருகாமையில் காட்டுகிறது.

-cut-


காட்சி:3 flashback
வெளியிடம்/ மருதுவமனையின் முகப்பு/சாலை

அந்த சிறுவனின் முகத்திலிருந்தே காட்சி விரிகிறது- காட்சி பின்னோக்கிவர
அவன் நின்றிருக்கும் இடம் போக்குவரத்து மிகுந்த சாலையின் ஒரு பகுதி-
தாம்பரம் நெஞ்சகனோய் மருத்துவமனையின் முகப்பு எதிரில் தெரிகிறது. மக்கள்
போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறார்கள் - சாலையில் வாகனங்கள் சீறி
பாய்கின்றன.அவை எழுப்பும் ஹாரன் சத்தம் சிறுவனின் முகத்தில்
எதிரொலிக்கிறது.

பின்னணியில் பால் ஆர்தரின் குரல்:
பாபுவை முதன்முதலா நான் அங்கதான் சந்திச்சேன். அந்த சந்திப்புதான் என்
வாழ்க்கையையே மாத்துச்சி. எனக்கு திருமணம் முடிக்கறதுக்காக எனக்கு
பார்த்து நிச்சயமான மேரியோட வீடு அங்கதான் இருந்துச்சி. ஒவ்வொரு வாரமும்
ஞாயிற்று கிழமைகள்ல அவங்க வீட்டுக்கு போவேன்...அப்படியொரு நாள்
போனப்பதான்...

என்ற பால் ஆர்தரின் குரல் ஒலிக்கையில்-
அதன் காட்சி விரிவாய்- பாபு ஒரு புறம் திரும்பி பார்க்க- அங்கே ஒரு
ஓட்டலில் தோசைக்கல்லின் மேல் முட்டை உடைத்து ஊற்றப்படுகிறது. பாபு
பார்க்கிறான். சாலையோரம் ஒரு மாடு- வாழைப்பழத் தோலை சுவைக்கிறது -
பரோட்டா மாஸ்டர் ஆவி பறக்கும் பரோட்டாவை இரண்டு கைகளில் கொத்தாய் எடுத்து
தட்டுகிறான்.
ஓட்டலுக்கு வெளியே கிடக்கும் எச்சிலைகளை சுற்றி நாய்கள்
தின்றுகொண்டிருக்கின்றன. பாபு பார்த்தவண்ணம் அங்கிருந்து நகர்ந்து - ஒரு
பெட்டி கடையில் தனக்கு முதுகு காட்டி நின்றிருக்கும் ஒருவரை பின்பக்கமாய்
நெருங்கி- அவரது கீழ் முதுகில் தன் கைவிரல்களால் தொட்டு அழைக்கிறான்.

இருபத்தைந்து வயது உருவத்தில் பால் ஆர்தர் திரும்பி பார்க்கிறார்.
பாபுவைப் பார்த்து - விழிகளை உயர்த்தி "என்ன"- என்பது போல் கேட்கிறார்.
பாபு பெட்டி கடையின் திசையில் கையை காடுகிறான். அவன் காட்டிய திசையில் -
முறுக்குகளால் நிரம்பிய பாட்டில் தெரிகிறது.
பால் ஆர்தர் புன்னகைக்கிறார். அவரது புன்னகையை சட்டென
எதிர்கொள்ளத்தெரியாத பாபுவும் சற்று யோசித்து பின் சிரிக்கிறான்.

கடைக்காரன் நான்கு முறுக்குகளை எடுத்து தர - பால் ஆர்தர் வாங்கி
சிறுவனிடம் தர- பாபு அதை வாங்கிக் கொண்டு - குதிரையில் போகும் இளவரசனைப்
போல் -குதித்து ஓடுகிறான்.
பால் ஆர்தர் அவன் ஓடுவதை ரசிக்கிறார்.

-cut to-


காட்சி:3A
பூங்கா

ஃபாதர் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்க -அருகில் நிருபர்.

பால் ஆர்தர்: அவன் அன்னிக்கு ஓடின ஓட்டம் இன்னும் கண்ணுலியே இருக்கு.
அதுக்கு அடுத்த வாரமும் என் வருங்கால மனைவி மேரி வீட்டுக்கு
போயிருந்தேன்.

-cut to-

காட்சி:4 வெளியிடம்/ சாலை/ காட்சி 3 நடந்த அதே
இடம்/

சாலையோர மைல்கல்லின் மீது தன் கன்னங்களில் கைகளை முட்டுக் கொடுத்து பாபு
எங்கோ வெறித்து பார்த்து க்கொண்டிருக்கிறான். அவனது தலை
கலைந்திருக்கிறது. ஆடை முன்பைவிட அழுக்காகி இருக்கிறது.
வாகனங்கள் வலதும் இடதுமாய் செலவதற்கேற்ப அவனது முகமும் - ஒத்திசைந்து
-வலதிடதாய் அசைகிறது- ஒரு நிலையில் அவன் இடது புறம் முழுமையாய் திரும்ப -
பாபுவின் முகத்தில் மலர்ச்சி. அங்கே யாரோ ஒருவரோடு பேசிக்கொண்டு பால்
ஆர்தர் வந்துகொண்டிருக்கிறார்.

பாபு குதிரைபோல் ஓடிவந்து- அவரது கையை பற்றுகிறான் - புன்னகைக்கிறான்
-பால் ஆர்தரும் புன்னகிக்கிறார்.
கூட வந்திருப்பவ்ரின் முகத்தில் குழப்பம்.
மருத்துவமனை முகப்பு சாலையில் வாகனங்கள் இரைச்சலோடு சீறுகின்றன.
மீண்டும் பால் ஆர்தரின் புன்னகைத்த முகம்- அவரது point of view ல்
பாபுவின் குதிரைஓட்டம் கையில் முறுக்கு.

-cut to-

காட்சி: 4A
பூங்கா/ வெளியிடம்/

நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டத்தின் நடைபாதையில் - பால் ஆர்தரும்
நிருபரும் மௌனமாய் நடந்து வருகிறார்கள்.
அருகாமையில் புல்வெளியில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைளில் சிலர் -
"குட் மார்னிங்க் ஃபாதர்.."என்கிறார்கள்.
"வெரி குட்மார்னிங்க்..."என பதில் சொல்லும் பால் ஆர்தர்- நிருபரின்
பக்கம் திரும்பி-

பால் ஆர்தர்: இதே மாதிரி மூனு நாலு முறை தொடர்ந்து நாங்க
சந்திச்சிக்கிட்டோம். அத்த்னை முறையும் முறுக்குதான்...ஆனா ஒரு விஷயம்
பாபுவொட நிலையில் மாற்றம் திடீர்னு ஒரு நாள் சட்டை இல்லாம வெறும் உடம்போட
பார்த்தப்பதான் எனக்கு ஏதோ விபரீதம்னு தோணுச்சி. அவனை தெளிவா நிறுத்தி
வச்சி கேட்டேன்.

-cut to-

காட்சி:5 தனியிடம்

பாபு கடுக்கு முடுக்கென்று முறுக்கை கடித்து திங்கிறான்.
பால் ஆர்தர்: உன் பேர் என்ன..
பாபு: பாபு...
பால்: சரி உங்க வீடு எங்க இருக்கு..?
பாபு: ரொம்ப தூரத்துல இருக்கு..
பால்:தூரத்துலன்னா...
பாபு: மலைக்கு அந்த பக்கம்...
பால் ஆர்தரின் முகத்தில் குழப்பம்- பின்னாலிருந்து குரல் வருகிறது.

பரோட்டா மாஸ்டர்:சார்..யார் கேட்டாலும் இத்தையேதான்
சொல்றான்...ஆசுபத்திரிக்கு வந்த யாரோ விட்டுட்டு போயிட்டாங்க போல...
அந்த ஆள் தன் பணியில் மும்முரமாக- அவனையே பார்த்துக்கொண்டிருந்த பால்
ஆர்தர் பாபுவின் பக்கம் திரும்பி
பால் : உன் அப்பா அம்மா எங்க..?
பாபு : முறுக்கு வேணும்னு கேட்டேன்...இங்கியே இரு வாங்கியாரேன்னு
போனாங்க...இன்னும் வரல...
சொல்லி முறுக்கு வைத்திருந்த கைகளை உதறிக் கொள்கிறான்.
பால் ஆர்தர் சாலையை வெறிக்கிறார்- வாகனங்கள் விரைகின்றன- கடந்துபோகும்
ஒரு காரில் - ஒரு அழகான நாய் குட்டி தெரிகிறது.
பாபு அந்த நாயை பால் ஆர்தருக்கு காட்டி சிரிக்கிறான்.

-cut to -


காட்சி :5A
பூங்கா/ வெளியிடம்/ half-way opening

பால் ஆர்தர் : அதுக்கப்புறம் பாபுவை அங்கவிட என் மனசு கேக்கல..
நிருபர் : என்ன செய்தீங்க ஃபாதர்...போலிஸ்ஸ்டேஷன் கூட்டிட்டு போயிட்டீங்களா..?
பால் ஆர்தர் சிரிக்கிறார்.

-cut to -

காட்சி :6 பால் ஆர்தர் வீடு/ உள்ளே/ இரவு
half-way opening


சமையலறையில் -எரியும் அடுப்பின் மீது தொப்பென்று ஓசை எழும்ப பால்
ஆர்தரின் அம்மா -ஒரு பாத்திரத்தை வைக்கிறார்.
தனல்விட்டு எரியும் அடுப்பின் நெருப்பை -காட்சி நெருங்கி காட்டுகிறது
பின்னணியில் அம்மாவின் குரல் ; சின்ன வயசுல
ஸ்கூலுக்கு போயிட்டு திரும்பி வர்றப்ப ரோட்ல கிடந்த நாயை கொண்டுவந்தான்
வச்சுக்கிட்டோம். இப்ப இவனுக்கு கல்யாணம் பேசிமுடிவு
செஞ்சிருக்கோம்...இந்த நேரத்துல தெருவுல கிடந்த யாரோ ஒரு தருதலைய
வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்...நாயும் மனுஷனும் ஒன்னா...
எரியும் நெருப்பிலிருந்து காட்சி சற்று உயர்ந்து பாத்திரத்தின் மேல்
காட்ட- உலையில் ஏதோ ஒன்று தகதகவென கொதிக்கிறது.

-cut to-

காட்சி :6A
பூங்கா/ வெளியிடம்

நிருபர் : ஓ...பாபுவை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டீங்க....
பால் : யெஸ்...அவனை ஒரு அன்னியனா என்னால பார்க்க முடியல கர்த்தர் போட்ட
உத்தரவா நெனச்சி அதை செய்தேன்னு சொல்றதைவிட நான் நானா இருக்கணும்னு
ஆசைப்பட்டேன்...தொடர்ந்து நிறைய பிரச்சினைகள்..
நிருபர் : கல்யாணம் என்ன ஃபாதர் ஆச்சு..?

-cut to -

காட்சி ;7 பால் ஆர்தர் வீடு / மொட்டைமாடி /பகல்
half-way opening

பால் ஆர்தரின் அம்மா : ம்ம்...நின்னு போச்சு..இருபத்தஞ்சு பவுன் நகை,
மோட்டர் சைக்கிள்., எல்லாம் போச்சு.
வீட்டுக்கு வந்த கழிசடையால...மருமக வர்றது
நின்னுப்போச்சு...டேய்...மரியாதையா சொல்றேன் அந்த அனாதையை எங்கியாச்சும்
கொண்டு போயி விட்டுடு...
பால் ஆர்தர் : என்னால முடியாதும்மா..பாபுவையும் ஏத்துக்கிட்டு எனக்கு
பொண்ணு தர்ற்வங்க யாராச்சும் இருந்தா
பாரு..இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்....
கோபமாக சொல்லிவிட்டு பால் ஆர்தர் அங்கிருந்து கீழே போகிறான் -அம்மா
கத்துவது கேட்கிறது..
அம்மா : வயிறு எரிஞ்சி சொல்றேன்..நீயும் நல்லா இருக்க மாட்ட...நீ
கூட்டினு வந்திருக்கியே ஒரு சனியன்..அதுவும் நல்லா இருக்காது நாசமா
போயிடும்...
பால் ஆர்தர் பாபு இருக்கும் அறைக்குள் வருகிறான்- அதிர்ச்சி- பாபு வாயில்
ரத்தம் வழிய -துடித்துக்கொண்டிருக்கிறான்.

(silence) பால்- பாபுவை மடியில் ஏந்தி- அவனை உலுக்கி- துடிக்கிறான்.
முகத்தில் தண்ணீர் தெளிக்கிறான்- அணைத்துக்கொண்டு அழுகிறான்.
பின்னணியில் பால் ஆர்தரின் குரல் ; யாரோ எயிட்ஸ் வந்தவங்க இவனை வளர்க்க
முடியாம் விட்டுட்டுப் பொயிட்டாங்கன்னு நெனச்சது தப்புன்னு தோணுச்சு.
பாபுவுக்கே எதாவது இருக்குமோன்னு...ஆஸ்பிடலுக்கு தூக்கிட்டு ஓடினேன்....

-cut to-

காட்சி :7 மருத்துவமனை/உட்புறம்/பகல்
half-way opening


டாக்டர் : you are right mr.pal. பாபு ஒரு மாதத்துக்கு முன்னால இங்க வந்த
பேஷண்ட்தான். திடீர்னு காணோம்..
போலி முகவரிய குடுத்துட்டு parents ஓடி போயிட்டாங்க...பாபு இப்போ ரொம்ப
முத்தின நிலையில இருக்கான்..

-cut to-

காட்சி :8 பூங்கா/வெளியிடம்/பகல்

பால் ஆர்தர் : பாபு ரொம்ப நாள் எங்கூட இல்ல. மருந்து மாத்திரை எதுவும்
வேலை செய்யாம என் மடியிலயே..ஒரு நாள்...

-cut to-
காட்சி :9 பால் ஆர்தர் வீடு / மாலை

பால் ஆர்தரின் கைகளில் பாபு துடிதுடித்து அடங்குகிறான்.
அம்மா கோபமாய் -முகத்தை சுளித்துக்கொண்டு -உள்ளறைக்குள் போகிறாள்-
பாபுவை இரு கைகளிலும் ஏந்தியபடி- வீட்டு வாயில் படியிலிருந்து இறங்கி-
தெருவில் நடக்கிறான்.
சிவந்த வான பின்னணியில்- நிழல் உருவமாய்- பாபுவை பிணமாய் ஏந்தியபடி பால்
ஆர்தர் நடக்கிறான்.

-mix to-

காட்சி :10 பூங்கா/ வெளியிடம்

நிருபரை வணங்கி - ஃபாதர் பால் ஆர்தர்-எழுந்து செல்ல
சற்றுதூரம் நடந்ததும்- ஒரு மரத்தின் பின்னாலிருந்து பாபு ஓடி வருகிறான்-
ஃபாதரை நெருங்கி அவரது கையை பற்றுகிறான்.
ஃபாதர் தனது அங்கியின் சைட் பாக்கெட்டிலிருந்து முறுக்கை எடுத்து நீட்டுகிறார்.
வாங்கிக்கொள்வதுபோல் வந்து- பாபு சட்டென - stop block ல்- மறைகிறான்.

the end

பயம் கண்டு ஓடுபவர்க்கோ

வாழ்க்கை!
ஒவ்வொருவர்க்கும் ஓர் விதமாய் தென்படும்!.

பலகணி வழியே பார்ப்பவர்க்கோ அது
சிதறிக்கிடக்கும் ஒளிச் சில்லாய்!
இருளின் ஊடே உற்றுப்பார்ப்பவர்க்கோ
பயம் காட்டும் நீள் நெடும் நிழலாய்!
பயம் கண்டு ஓடுபவர்க்கோ
பின் தொடரும் நிழலாய்!
உப்பரிகையில் நின்று காண்பவர்க்கோ
அனைத்தும் சிறு பொம்மையாய்!
அண்ணாந்து ஏங்கி பார்ப்பவர்க்கோ
அனைத்துமே தோன்றும் பிரம்மாண்டமாய்!
நடந்து செல்பவர்க்கோ தன்னுடன்
நடை பயிலும் நல்ல நட்பாய்!
புறக்கண் கொண்டு பார்ப்பவர்க்கு
புரியாத புதிராய்த் தென்படும்!
அகக்கண் கொண்டு பார்ப்பவரே
அறியக்கூடும் அந்த ரகசியம்!
யதோ திருஷ்டி ததோ மன
யதோ மன ததோ பாவ
யதோ பாவ ததோ வாழ்க்கை.
பாகம்பிரியாள்.

ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது

ஜப்பானின் மின்னணு பொருட்களின் மகத்துவம் தெரிந்த நமக்கு அவர்களின் தேசியகீதம்
> பற்றியும் அதன் பின்னணி பற்றியும் தெரிய வாய்ப்பில்லை என்பதால் இதை எழுதத்
> தலைப்படுகிறேன்.
> உலக் நாடுகளிலேயே மிக சிறியதாய் அறியப்பட்ட நாடு ஜப்பான். அதன் தேசியகீதமும்
> மிகச்சிறியதே.
>
> ஏழே வார்த்தைகளால் ஆனது அவர்களின் தேசியகீதம். மிக
> எளிமையும்,உணர்வும்,நேர்த்தியும் அதில் நிறைந்திருக்கிறது. உண்மையில் அது ஒரு
> கவிஞன் எழுதிய கவியதை.
> அந்த தேசிய கீதத்தின் தமிழாக்கம்.
>
> திங்கள்
> திங்கள்
> செவாய்
> புதன்
> வியாழன்
> வெள்ளி
> சனி
>
> இதுதான் அவர்களின் தேசியகீதம். வியப்பாய் உள்ளது அல்லவா..?
> தேசியகீதத்தின் பின்னணி. இந்த ஏழு வார்த்தைகளும் ஒருவாரத்தின் அனைத்து
> கிழமைகளை( ஞாயிறு நீங்கலாக) குறிப்பிடுகிறது.
> ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது..?சரித்திரமும்..அது சார்ந்து நிகழ்ந்த
> சோகமும்தான் காரணம்.
> அமெரிக்கா ஜப்பான் தேசத்தின்மீது குண்டுப்போட்டது அனைவருக்கும் தெரியும்..ஆனால்
> அவர்கள் குண்டுபோட தேர்ந்தெடுத்த நாள் ஞாயிறு.கிறிஸ்துவமதத்தை பின்பற்றும்
> அவர்களுக்கு அன்று ஓய்வுநாள்.
>
> "உனக்கான ஓய்வு நாளில் என் தேசத்தில் நீண்டநெடும் நாளுக்கு புல் பூண்டுகூட
> விளயாவண்ணம் குண்டுபோட்ட ஏகாதிபத்தியமே..நாங்கள் நிமிர்வோம்,உழைப்போம்,எங்கள்
> அறிவால் ஜெயிப்போம், அதுவரை எங்களுக்கும், எங்களின் நாட்க்காட்டிக்கும் ஞாயிறு
> என்கிற கிழமையே வேண்டாம்.."என ஒரு கவிஞன் வெகுண்டெழுந்து எழுதிய
> கவிதைதான்.."திங்கள் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி.."
> இனி அந்த ஞாயிற்றுக்கிழமையும் எங்களுக்கு உழைப்புக்குரிய திங்கட்கிழமையே
> ஆகும்.நிமிரும் வரை ஓய்வில்லை.
> சொன்னமாதிரி மட்டுமல்ல..அதற்கும் மேல் செய்துகாட்டிவிட்டார்கள் ஜப்பானியர்கள்.
> இதை நிரூபிக்க ரொம்ப பெரிதாய் உதாரணங்களைத் தேடவேண்டாம்.
>
> தொலைக்காட்சியில் ஒரு விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்ககூடும். ஒரு
> சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான்.அதில் இசையொலிக்க யாரோ நடனம்
> ஆடுவார்கள்..அந்த் அறையின் ஜன்னல் வழியாய் அமெரிக்க தேசத்தின் சுதந்திர
> சிலையும் நடனமாடும். ரிமோட்டை உபயோகித்து அந்த சிறுவன் தொலைகாட்சியை நிறுத்த,
> சிலையும் தன் நடனத்தை நிறுத்திவிடும். மீண்டும் தொலைக்காட்சியை
> முடுக்க-இசை-நடனம். சிலையும் மீண்டும் நடனமாடும் ."சிலையும் நடனமிடும்
> துல்லியமான ஒலி." என ஒரு தொலைக்காட்சி பெட்டியின் நிறுவன பெயரைக்காட்டி
> விளம்பரம் முடியும்.

ஜப்பானிய தேசீய கீதம்

ஜப்பானிய தேசீய கீதம்
ஒரு தொழிற்சாலையில் சம்பள உயர்வோ சலுகைகளோ பெறவேண்டுமெனில் ஜப்பனியர்
வேலை நிறுத்தம் செய்வதில்லையாம். அதிக நேரம் வேலை செய்து உற்பத்தியைப்
பெருக்குவார்களாம். இது முதலாளிகளின் கவனத்தை ஈர்த்து அவர்களது
கோரிக்கைகள் தன்னாலேயே கவனிக்கப்பட்டு விடுமாம். இப்படி ஒரு தகவலைக்
கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஒரு காலத்தில் ஜெர்மனி தயாரிக்கும் எந்த ஒரு பொருளையும் வாங்கி அதைப்
பிரித்துப் பார்த்து அதே மாதிரி மலிவான விலையில் தயாரித்து விற்பது
ஜப்பானியர் வழக்கமாக இருந்தது உலக மஹா யுத்தத்துக்கு முன். (Reverse
engineering)

ஆனால் அணுகுண்டால் முற்றிலும் அழிக்கப் பட்ட ஜப்பான் மீண்டும் எழுந்த
போதோ உலகிலேயெ தரமான பொருள் என்று சொல்லப் படுபவைகளைத் தயாரிப்பதில்
முன்னிலையில் நிற்கும் நாடாகி விட்டது. காரணம் அதன் கடும் உழைப்பே.

இந்தக் கடும் உழைப்பிற்குப் பின்னே அவர்களது தேசீய கீதம் இருப்பதை வெளிக்
கொணர்ந்ததற்கு மிக்க நன்றி.

இப்படி ஜப்பானிய தேசீய கீதம் போல எதையும் எதிர் பார்க்காமல் உன்னை
வணங்குகிறேன் என்று சொல்லும் நம் நாட்டின் தேசீய கீதத்திற்கே நம் மக்கள்
மதிப்பளிப்பதில்லையே. கடுமையாக உழைக்க வேண்டும் என்பதற்கா
மதிப்பளிப்பார்கள்?

துர்வாச முனிவர் நடு இரவில்

தில்லை நகருக்கு "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்னும் காரணப்
பெயர் உண்டு. எப்போது வந்தாலும் அன்னபூரணியின் அருள் நிறைந்து உணவு கிடைக்கும்
என்பதை இது குறிக்கிறது. அந்தப் பழமொழியைச் சோதனை செய்யவோ என்னமோ, ஒருமுறை
துர்வாச முனிவர் நடு இரவில், தன் சிஷ்யர்களுடன் தில்லைச் சிற்றம்பலம்
வந்தடைகிறார். வரும்போதே நல்ல பசி முனிவருக்கு. கோவிலின் அர்த்தஜாம பூஜையும்
அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. ஆகவே துர்வாசரின் பசியைப் போக்க யாருமே
முன்வராததால் கோபம் அடைகிறார் முனிவர். அப்போது அன்னை தானே முன் வந்து அவர்
பசிப்பிணி தீர்க்க வரவும், துர்வாசர் நடராஜரின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தைக்
கண்ணும் ஆசையைத் தெரிவிக்கிறார்.

ஆனால் தந்தைக்குப் பதில் அங்கே தனயன் தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு
ஆனந்தத் தாண்டவம் ஆடவே தன்னை மறந்து கோபமும், பசியும் தீர்ந்து சமாதானம்
அடைகின்றார் துர்வாசர்."

உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப் பட்ட "கற்பக கணேச பஞ்சரத்ன ஸ்தவம்" என்னும்
ச்லோகத்தில் இதைப் பற்றியக் குறிப்பு இருப்பதாய்க் கூறுகிறார்கள். இந்தக்
கோவிலில் இந்த மூர்த்தங்களைத் தவிர ஒரு நந்தியெம்பருமானும், வில்வ மரமும்,
மிகப் புராதனமானது என்று சொல்லப் படுகிறது உள்ளன. இந்திரன் வல்காலி என்னும்
அசுர வதம் செய்யும் முன்னர் நந்தி ரூபத்தில் இந்த விநாயகரை வழிபாட்டுச்
சென்றதாயும், இங்கே உள்ள வில்வ மரம் சிவனின் ரூபம் என்றும் சொல்கின்றனர்.

விநாயகரை நடுவே தான் போட்டேன். சரியா வரலை. போகட்டும், அடுத்துக் காண இருப்பது
குமரகோட்டம் அல்லது பாலசுப்ரமணிய சன்னதி ஆகும். நவ வீரர்களுடனும் இங்கே சூர
சம்ஹாரத்துக்கு முன் சுப்ரமணியர் இருந்ததாய்க் கூறுகின்றனர். மேலக் கோபுரச்
சுவர்களுக்கு உள்பக்கமாய் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த ஆறுமுகன்,
தன் ஆறுமுகங்களோடும் காணப் படுவதோடு அல்லாமல், தன் இரு மனைவியருடனும்
இருக்கிறான். சிங்கத்தின் மேலே அண்ணனான விநாயகர் காவல் செய்ய, அருணகிரிநாதர்
தொழ அற்புதக் காட்சி அளிக்கிறான். கந்த சஷ்டியில் "சூர சம்ஹார"ப் பெருவிழா
விமரிசையாக இங்கே நடக்கும். அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியும், காணப்
படுகிறது. மாணிக்க வாசகர் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அன்னையை மணந்த
திருக்கோலத்திலே இங்கே சொக்கநாதர் வந்ததாய்ச் சொல்லப் படுகின்றது.

Monday, February 23, 2009

எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால்

தொலைக்காட்சிகளீன் ஆதிக்கம் துவங்கியபிறகு,,திரை
அரங்குகளுக்கான..வருகையாளர்கள்..அறுகிவிட்டர்கள்..அல்லது..இளைஞ்ர்களும்..யுவதிகளும்
மட்டுமே என்றான நிலையில்..வரும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்து
வேண்டிய சூழ்னிலையை..ஒரு தவிர்க்க முடியாத மாயையாக உருவாக்கி
வைத்திருக்கிறார்கள் என்றும் தோணுகிறது.
ஊடகங்களின் கலாபூர்வ பார்வையை மக்கள் அங்கிீகரித்தாலும்..சினிமாத்துறை
வியாபாரிகள் அனுமதிப்பதில்லை.
உதாரணத்திற்கு.."முள்ளும் மலரும்.."-படம் வெளிவந்த சமகாலத்தில்..மக்களின்
ரசனையை மாற்றவந்த வியாபாரப் படம்"சகலகலாவல்லவன்"-அதில்தான் முதன் முதலாக
முக்கல் முனகல்களோடு பாடல் வந்தது.
"அழகி'என்கிற ஒரு படம் வந்த சம காலத்தில்தான்.."ஜெமினி" என்கிற
படமும்.."ஓ..போடு.."என்கிற பாடலும்..வந்தது.
ஆக..நல்லதை மக்கள் ரசிக்காமலில்லை..அந்த தன்மையை ஒரு கூட்டம்
தொடர்ச்சியாய் கொண்டுசெல்ல பயப்படுகிறது..என்பதே உண்மை.
இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதனால்..திருடன் தன்னை
நியாயப்படுத்திக்கொள்ள..திருட்டுதனம்..உலகில் இருக்க வேண்டும் என
விரும்புவது போல..
ஒரே நாளில்..எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால்..என்கிற பயமும் இந்த
வியாபாரிகளுக்கு உண்டு.
அதுவரை..இம்மாதிர்யான காதலர்தின கொண்டாட்டங்களை..யாராலும் தடுக்க
முடியாது.

காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை

பார் மகளே பார் படத்தில்
மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் என்ற பாடல்,,,சுமைத் தாங்கியில்
"எந்தன் பார்வையின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி ராதா,,,,
என்ற பாடல் ,,,,,,,

"பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்னம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன் " ................................சூப்பர் பாடல் படம் பாசம்

இதைப்போன்ற பாடலகள் காதல்ன் காதலியின் உணர்வுகளைக்
கொச்சைப்படுத்தாமல் மிக அழகாக் விளக்கப்பட்டிருக்கிறது காதலின் புனிதம்
வெளிப்படுகிறது ,இப்போது இருக்கும் பாடல்களில் உணர்வுகள் புனிதம்
மறைந்து காமமே வெளிப்படுகிறது ,உம் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு
ஓடிப்போலாமா
,கட்டை கட்டை நாட்டுக்கட்டை ,,,,, போன்ற பாடல்கள்
என்ன செய்வது காலத்திற்கேறப் கோலங்கள் ,,,,,,இவைகளையே இந்தக்காலத்தில்
விரும்பப்படுவதாலும் இந்த மாதிரி பாடல்கள்
வருகிறது போலும்
இப்போது காதலர் தினத்திற்கு வரலாம்
அந்தந்த வயதில் அது அது தேவை , அது என்ன அது அது ?
ஆம நம் உடலில் ஜீவ காந்தச்சக்தி அதிகமாக பெருக்கெடுப்பது
இந்த வயதில் தான் ,இதைத் தவிர்க்க முடியாது ஆனால் அதை தியானம்
நல்லொழுக்கங்கள் மூலம் நம் கட்டுப்பாட்டுக்குக்
கொண்டுவரமுடியும் ,பாரதீய கலாச்சாரத்தின் வழியே வந்தவர்கள்
அதை விரும்புவர்கள் இதைத் தேவை என எடுத்துக் கொள்வார்கள் ,
எனக்கு காதல் என்பது பல் வகைகளாகத் தெரிகிறது அன்பே காத்ல் தாயின்
மேல் இருக்கும்
அன்பும் காதல் தான் தந்தை மேல் இருக்கும் அன்பும் காதல்தான்
அதே போல் நண்பன் மேல் , இருப்பதும் காதல் கடவுள் மேல் வைக்கும்
அன்பும் காதல் தான் மீரா கண்ணனிடம் ஆண்டாள் அந்த ரங்கநாதனிடம்
அளவில்லாத காதல் கொண்டதைப்பார்க்கிறோம் இவைகள் எல்லாம் மனதின்
ஆழத்திலிருந்து வந்து மற்றோரு மனதைச் சங்கமிக்கும் ,இது எப்போதும்
மனதிலேயே இருப்பதால் இதற்கு என்று ஒரு தனி நாள் வேண்டுமா என நினைக்கத்
தோன்றுகிறது ,காதலர் தினம் என்பதில் பலர் தவறாகப் பொருள்
கொண்டு வரம்பு மீறி நட்க்கின்றனர் , சிலர் உண்மையாக இல்லாமல் இந்த
வாய்ப்பை நழுவ விடாமல் சுயநலவாதியாக ஆகின்றனர் உண்மையான காதலர்கள் உடல்
ஈர்ப்புக்காக கண்ட இடத்தில் ஆபாசமுறையில் இருக்க மட்டார்கள் அவர்கள் இரு
மனம் ஒன்றாகிவிட்ட நிலையில் பொறுமையுடன்
காத்திருப்பார்கள் ,காதலர் தினம் இருந்து அதை வரம்பு மீறாமல்
அந்தக் காதல் என்றச்சொல்லுக்கு மரியாதைக் கொடுத்தால் அந்த்த் தினம்
வரவேற்கலாம் மேனாட்டுக் கலாச்சாரம் கொண்டு வந்தால் அது தேவையில்லை
தான் இதற்கு என்று ஒரு மாதமாக அல்லோலப்படுவது
சரியென்று படவில்லை , தந்தை நாள் வருவதும் தெரிவதில்லை போவதும்
தெரிவதில்லை அதே போல் தாயின் நாளும் இதே போல் தான் ,ஒரு வரியில் ஒரு
மடல் வந்து கடைமை முடிந்து விடுகிறது ,,

தேவியின் பொன் மேனி தள்ளாட

"தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு
தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட நல
மானிக்க மாலைகள் கவிபாட ,,,,,,

பெண் ,,,,செவின நீரின் கண்திறந்து ,,செம்
மாதுளையின் மணி வாய்திறந்து
முளைவிடும் சென்நெல் கோலமிட்டு
மூவர் உலாவந்த காலங்கள் போல் ...

ஆண் மாங்கனிக் கன்னத்தில் தேனூர ,சிறு
மைவிழிக்கிண்ணத்தில் மீனாட
தேன் வரும் வாழைகள் போராட
தேவியின் பொன் மேனி தள்ளாட ,,,,{தங்க ரதம் }

சௌரம் என்றால் நான்கு

நம் பண்பாட்டு கருவூலத்தில் இன்னமும் இதுதான் என அறுதியிட முடியாத
விந்தைகள் அநேகம்.
ஆறுசமய கோட்பாட்டின் படி..
ஒருமை நிலை சிவன்..
உமையவளுக்கு பாகம் கொடுத்தது இருநிலை.
சங்கு சக்கரதாரியாய் மூன்றாம் நிலையில் விஷ்ணு.,அதாவது வைணவம்.
நான்முகனாய் பிரம்மனை வழிபடும் சௌரம்.
இங்கு சௌரம் என்றால் நான்கு என ஒரு பொருள் உண்டு.
ஐங்கரன் வழிபாட்டுக்குரிய காணபத்தியம்-(கணபதி)
முருக வழிபாட்டுக்குரிய முருகன். ஆறுமுகத்தோன்.(கௌமாரம்-குமரன்)
இன்னொரு வகையில் ஓரறிவு நிலையிலிருந்து மனித பரிணாமம் ஆறறிவு நிலைக்கு
உயர்ந்ததையும் இது குறிப்பதாய் கொள்ள இடமுண்டு.
வள்ளுவனின் வாக்குப்படி கடவுள் என்பவன் தூய அறிவு நிரம்பியவன். அதாவது
வாலறிவன்.

தங்க ரதம் வந்தது வீதியிலே

அன்பே காதல் அந்தக்காதல் புனிதமாக இருத்தல் அவசியம் ஏன் என்றால் அன்பே
>> > கடவுள் ,,,,,,,
>> >
>> > அந்தக்கால சினிமா காதலும் கூட உணர்ச்சிகள் வெளிப்பட்டாலும்
>> > மிகவும் வரம்பு மீறாமல் இருந்தது ,அந்த வகைப் பாடல்கள் இன்றும்
>> > எல்லோராலும் வரவேற்கப்படுகின்றன ,ஒருவர்க்கொருவர் மரத்தைச் சுற்றினாலும்
>> > கைகள் மட்டும் பின்னிக்கொண்டாலும் அதில் அவர்கள் உணர்வுகளையும் புனிதக்
>> > காதலையும் நாம் தெரிந்து கொண்டு விடுவோம் என்னைக் கவர்ந்த சில பாடல்கள் பாலமுரளிகிருஷ்ணா ...
>> > டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா பாடியது ஆபோகி ராகம் சினிமா கலைக்கோயில்
>> >
>> >
>> > "தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு
>> > தளிர்மேனி வந்தது தேரினிலே
>> > மரகதத் தோரணம் அசைந்தாட நல
>> > மானிக்க மாலைகள் கவிபாட ,,,,,,
>> >
>> > பெண் ,,,,செவின நீரின் கண்திறந்து ,,செம்
>> > மாதுளையின் மணி வாய்திறந்து
>> > முளைவிடும் சென்நெல் கோலமிட்டு
>> > மூவர் உலாவந்த காலங்கள் போல் ...
>> >
>> > ஆண் மாங்கனிக் கன்னத்தில் தேனூர ,சிறு
>> > மைவிழிக்கிண்ணத்தில் மீனாட
>> > தேன் வரும் வாழைகள் போராட
>> > தேவியின் பொன் மேனி தள்ளாட ,,,,{தங்க ரதம் }
>> >
>> >
>> > இதே போல் இன்னொரு பாடல் பார் மகளே பார் படத்தில்
>> > மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் என்ற பாடல்,,,சுமைத் தாங்கியில்
>> > "எந்தன் பார்வையின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி ராதா,,,,
>> > என்ற பாடல் ,,,,,,, 
>> >
>> > "பால் வண்ணம் பருவம் கண்டு
>> > வேல் வண்னம் விழிகள் கண்டு
>> > மான் வண்ணம் நான் கண்டு
>> > வாடுகிறேன் " ................................சூப்பர் பாடல் படம் பாசம்
>> >
>> > இதைப்போன்ற பாடலகள் காதல்ன் காதலியின் உணர்வுகளைக்
>> > கொச்சைப்படுத்தாமல் மிக அழகாக் விளக்கப்பட்டிருக்கிறது காதலின் புனிதம்
>> > வெளிப்படுகிறது ,இப்போது இருக்கும் பாடல்களில் உணர்வுகள் புனிதம்
>> > மறைந்து காமமே வெளிப்படுகிறது ,உம் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு
>> > ஓடிப்போலாமா 
>> > ,கட்டை கட்டை நாட்டுக்கட்டை ,,,,, போன்ற பாடல்கள்
>> > என்ன செய்வது காலத்திற்கேறப் கோலங்கள் ,,,,,,இவைகளையே இந்தக்காலத்தில்
>> > விரும்பப்படுவதாலும் இந்த மாதிரி பாடல்கள்
>> > வருகிறது போலும்
>> > இப்போது காதலர் தினத்திற்கு வரலாம்
>> > அந்தந்த வயதில் அது அது தேவை , அது என்ன அது அது ?
>> > ஆம நம் உடலில் ஜீவ காந்தச்சக்தி அதிகமாக பெருக்கெடுப்பது
>> > இந்த வயதில் தான் ,இதைத் தவிர்க்க முடியாது ஆனால் அதை தியானம்
>> > நல்லொழுக்கங்கள் மூலம் நம் கட்டுப்பாட்டுக்குக்
>> > கொண்டுவரமுடியும் ,பாரதீய கலாச்சாரத்தின் வழியே வந்தவர்கள்
>> > அதை விரும்புவர்கள் இதைத் தேவை என எடுத்துக் கொள்வார்கள் ,
>> > எனக்கு காதல் என்பது பல் வகைகளாகத் தெரிகிறது அன்பே காத்ல் தாயின்
>> > மேல் இருக்கும்
>> > அன்பும் காதல் தான் தந்தை மேல் இருக்கும் அன்பும் காதல்தான்
>> > அதே போல் நண்பன் மேல் , இருப்பதும் காதல் கடவுள் மேல் வைக்கும்
>> > அன்பும் காதல் தான் மீரா கண்ணனிடம் ஆண்டாள் அந்த ரங்கநாதனிடம்
>> > அளவில்லாத காதல் கொண்டதைப்பார்க்கிறோம் இவைகள் எல்லாம் மனதின்
>> > ஆழத்திலிருந்து வந்து மற்றோரு மனதைச் சங்கமிக்கும் ,இது எப்போதும்
>> > மனதிலேயே இருப்பதால் இதற்கு என்று ஒரு தனி நாள் வேண்டுமா என நினைக்கத்
>> > தோன்றுகிறது,  காதலர் தினம் என்பதில் பலர் தவறாகப் பொருள்
>> > கொண்டு வரம்பு மீறி நட்க்கின்றனர் , சிலர் உண்மையாக இல்லாமல் இந்த
>> > வாய்ப்பை நழுவ விடாமல் சுயநலவாதியாக ஆகின்றனர் உண்மையான காதலர்கள் உடல்
>> > ஈர்ப்புக்காக கண்ட இடத்தில் ஆபாசமுறையில் இருக்க மட்டார்கள் அவர்கள் இரு
>> > மனம் ஒன்றாகிவிட்ட நிலையில் பொறுமையுடன்
>> > காத்திருப்பார்கள் ,காதலர் தினம் இருந்து அதை வரம்பு மீறாமல்
>> > அந்தக் காதல் என்றச்சொல்லுக்கு மரியாதைக் கொடுத்தால் அந்த்த் தினம்
>> > வரவேற்கலாம் மேனாட்டுக் கலாச்சாரம் கொண்டு வந்தால் அது தேவையில்லை 
>> > தான் இதற்கு என்று ஒரு மாதமாக அல்லோலப்படுவது
>> > சரியென்று படவில்லை , தந்தை நாள் வருவதும் தெரிவதில்லை போவதும்
>> > தெரிவதில்லை அதே போல் தாயின் நாளும் இதே போல் தான் ,ஒரு வரியில் ஒரு
>> > மடல் வந்து கடைமை முடிந்து விடுகிறது ,, அவர்களுக்கு அல்லவா ஒரு
>> > மாதம் முன்பே மனதாலும் உடலாலும் சேவை செய்ய வேண்டும்
>> > என்று எனக்குத் தோன்றுகிறது

இளைஞ்ர்களும்..யுவதிகளும்

தொலைக்காட்சிகளீன் ஆதிக்கம் துவங்கியபிறகு,,திரை
>> அரங்குகளுக்கான..வருகையாளர்கள்..அறுகிவிட்டர்கள்..அல்லது..இளைஞ்ர்களும்..யுவதிகளும்
>> மட்டுமே என்றான நிலையில்..வரும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்து
>> வேண்டிய சூழ்னிலையை..ஒரு தவிர்க்க முடியாத மாயையாக உருவாக்கி
>> வைத்திருக்கிறார்கள் என்றும் தோணுகிறது.
>> ஊடகங்களின் கலாபூர்வ பார்வையை மக்கள் அங்கிீகரித்தாலும்..சினிமாத்துறை
>> வியாபாரிகள் அனுமதிப்பதில்லை.
>> உதாரணத்திற்கு.."முள்ளும் மலரும்.."-படம் வெளிவந்த சமகாலத்தில்..மக்களின்
>> ரசனையை மாற்றவந்த வியாபாரப் படம்"சகலகலாவல்லவன்"-அதில்தான் முதன் முதலாக
>> முக்கல் முனகல்களோடு பாடல் வந்தது.
>> "அழகி'என்கிற ஒரு படம் வந்த சம காலத்தில்தான்.."ஜெமினி" என்கிற
>> படமும்.."ஓ..போடு.."என்கிற பாடலும்..வந்தது.
>> ஆக..நல்லதை மக்கள் ரசிக்காமலில்லை..அந்த தன்மையை ஒரு கூட்டம்
>> தொடர்ச்சியாய் கொண்டுசெல்ல பயப்படுகிறது..என்பதே உண்மை.
>> இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதனால்..திருடன் தன்னை
>> நியாயப்படுத்திக்கொள்ள..திருட்டுதனம்..உலகில் இருக்க வேண்டும் என
>> விரும்புவது போல..
>> ஒரே நாளில்..எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால்..என்கிற பயமும் இந்த
>> வியாபாரிகளுக்கு உண்டு.
>> அதுவரை..இம்மாதிர்யான காதலர்தின கொண்டாட்டங்களை..யாராலும் தடுக்க
>> முடியாது. முச்சந்தியில் நின்று முத்தமிட்டுக்கொள்ளும் அளவுக்கு போகாமல்
>> இருக்கிறார்ர்களே என்று அமைதியாய் இருக்க வேண்டியதுதான்.

நிழல் கிரகங்கள் இரண்டு

இந்திய
ஆன்மீக தேற்றத்தில் எண்ணற்ற கட்வுளர்கள். மனித உருவில், ஆண்- பெண்
தெய்வங்களாக மட்டுமல்லாமல், அந்த ஒவ்வொரு கடவுளுக்கும் தனிதனியே வாகனங்கள் என்ற
பெயரில் விலங்குகள் என ஒரு வித்தியாசமான காட்சியை பார்க்க முடிகிறது.
உலக மதங்களில் எந்த கண்டத்திலும் இல்லாத் அளவுக்கு நம் ஆன்மீகத்தில்
விலங்குகளுக்கான முக்கியத்துவம் அளவிடற்கரியது.
பசு முதற்கொண்டு பல்லி, தவளைவரை அனைத்துக்குமே ஆன்மீக முக்கியத்துவம்
தந்திருப்பது நாம் மட்டுமே என்றால் மிகை இல்லை.வாகனங்கள் என்ற அளவில்
வித்தியாசம் இருந்தாலும், இன்று நம் கட்டுரைக்கு நாம் எடுத்திருக்கும் விஷம்
மன்னிக்கவும் விஷயம் பாம்பு.
படையையே நடுங்கவைக்க கூடிய, கொடிய விஷமுள்ள பாம்பு, கடவுளர்களிடம்
'பச்சக்கென்று'ஒட்டிக்கொண்டது எப்படி..?ஆய்வு செய்ய வேண்டிய விஷயமாக
எனக்குபட்டது.
சிவனின் கழுத்தை சுற்றி இருந்துகொண்டு அவரது தலையிலேயே சர்வகாலமும் இருக்கிற
பாம்பு பற்றியும்,
கண்ணன்
ஏறி நின்று நடம் புரிந்த ஐந்து தலை நாகமும், மகாவிஷ்ணுவுக்கு பார்கடலில்
மெத்தையாய் விளங்கும் ஆதிஷேஷன் பற்றியும்,அம்மனின் கைகளில்
இருப்பதும்,வினாயகனின் இடுப்பில் கட்டபட்டு இருப்பதும், கந்தவேலனின்
அரும்பெரும் வாகனமான் மயிலின் காலில் மிதிபட்டிருப்பதுமான ஒரே பாம்பினத்தின்
வெவ்வேறு மதிப்பீடுகளை உற்றுனோக்க வேண்டியிருக்கிறது.
மிக சாதாரணமாக ஒரு கருத்தை எல்லோரும் கூறுவதுண்டு.
இந்திய ஆன்மிக பண்பாடு என்பது "மரம்,செடி,கொடி.மண்,மலை,பறவை, விலங்கு,உயிருள்ள
பொருள்,உயிரற்ற பொருள் என அனைத்தையுமே தெய்வாம்சம் பொருந்தியதாக பார்ககூடியது"
என்று.

எல்லா
உயிர்களையும் மதிக்க வேண்டும் என்கிற கருத்தியலுக்கு இது
பொருந்தகூடியதுதான் என்றாலும், அதற்குரிய சரியான காரணத்தை காண வேண்டி உள்ளது.
உலக உயிர்கள் அத்தனைக்குமே-நேர்மறையான சக்தியும், எதிர்மறையான சக்தியும்
உண்டு.மனிதன் உள்ளீடாக.
நம் முன்னோர்கள் ஒவ்வொன்றையுமே காரணகாரியத்தோடுதான் வைத்திருக்கிறார்கள்
என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
ஒவ்வொரு விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து,.மிக அக்கறையோடு குறியீடு ஆக்கி
இருக்கிறார்கள்.

பாம்புகள் இன்னமும் பல சந்தேகங்களுக்கு விடை சொல்லமுடியாத ஒரு உயிரினம். பாம்பு
மகுடி வாசித்தால் படம் எடுத்து ஆடுவதை நாம் கூட பார்த்திருக்கிறோம்.ஆனாம்
பாம்புக்கு காதுக்ள் கிடையாது. பூமியின் மீது பதியப்படும் அதிர்சியை தன் உடல்
வழியே உள்வாங்கி உணரக்கூடியது எனும் கருத்தும் உண்டு.

பாம்பு மனிதனுக்கு கட்டுப்படாத (சினிமா பாம்புகள் தவிர்த்து) ஒரு உயிரினம். அதை
பழக்கப்படுத்த முடியாது என்பதில் ஆதி மனிதன் எப்படியோ முடிவெடுத்துவிட்டான்.அது
இன்று வரை தொடர்கிறது. ஆயினும் ஆன்மீகத்தில் பாம்புக்கு அப்படியென்ன
முக்கியத்துவம் தரவேண்டியிருக்கிறது என்பதே நம் கேள்வி.
நம் கலாச்சாரத்தில் பக்தி என்பது ஞானம் பெறுவதற்கான் பயிற்சி களம்.எல்லைஅற்ற
அன்பை பெற பக்தி நிலையில் நாம் கவனம் செலுத்தி நாம் செய்யும் அன்பு பயிற்சிதான்
ஞானம் அடைவதற்கான படி.

பெருவெடிப்புக்கான (big-bang) தொடர்ச்சியில் உருவான எண்ணற்ற கோள்களில் நாம்
கணக்கில் வைத்திருப்பது ஒன்பது. அதில் முழு கிரகங்கள் ஏழு, சாயா எனும் நிழல்
கிரகங்கள் இரண்டு. அந்த இரு நிழல் கிரங்கங்களுக்கும் நாம் தந்திருக்கும் வடிவம்
பாம்பு.(ராகு,கேது). அவ்வப்போது வந்துபோகும் கிரகணங்கள் இரண்டு. அதில்
சந்திரகிரகணம் என்பது நிலவை பாம்பு விழுங்குவதானது.
ஜோதிட உலகின் கூற்றுப்படி- சந்திரன் என்பது மனதின் அம்சம். இங்கிருந்து நம்
ஆய்வை கொண்டுசெலுத்தினால் ஓரளவுக்கு இலக்கை அடைய முடியும் என தோணுகிறது.
பாம்பானது நிலவை விழுங்கும் நிகழ்வை நாம் எப்படி பார்க்கிறோம்,,?
கிரகணம் முடிந்ததும் வீட்டை மெழுகி,அனைவரும் குளித்து,குளிக்கும் வரை
சாப்பிடாமல் இருந்து-இப்படி பலபல கருத்தியல்கள்.ஆக நிலவை பாம்பு விழுங்குவது
மங்களகரமான விஷயமில்லை.
பாம்பின் அம்சம்- மனதை குறிக்கும் நிலவை விழுங்குதல் கூடாது.
நம் மனதை எந்த பாம்பும் வந்து விழுகிவிடப் போவதில்லை..ஆனால் பாம்பின் அம்சம்
விழுங்க வாய்ப்புள்ளது.
பாம்பின் அம்சமென்ன..?
எதிர்மறை அம்சம்- பாம்பு மிகவும் கோபப்படக்கூடியது. அதன் சீற்றமே இதற்கு
சாட்சி. பாம்பு தன் எதிரியை வஞ்சம் வைத்து கொல்லகூடியது.அது படமெடுத்தாடும்
வேகமானது "நான்"என நிமிர்ந்து நிற்கும் ஆணவத்தின்,தனிமனித ஆளுமையின்
குறியீடு.தீண்டியதும் மரணம் தரும் விஷத்தை தன்வசம் கொண்டது.
நம் ஒவ்வொரு கோயில்களிலும் தென் திசைபார்த்து சின்முத்திரை காட்டி
அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை பார்க்கிறோம். அவரது சின் முத்திரை நமக்கு
சொல்ல்க்கூடிய செய்தி என்ன..?
"நான் என்கிற ஆள்காட்டிவிரலை, சினம் என்கிற நடுவிரல்,செருக்கு என்கிற
மோதிரவிரல்,சிற்றின்பம் எனும் சுண்டுவிரல் இவற்றிலிருந்து விலக்கி, பரம்பொருள்
எனும் கட்டைவிரலோடு சேர்த்துகொள்வதே.
"நான்"எனும் சுயம் இருக்கவேண்டிய நிலைப்பாட்டைகுறித்து சிந்தித்த முன்னோர்கள்
பாம்பை கையில் எடுத்துள்ளார்கள் எனும் முடிவுக்குவர ஏதுவாய் இருக்கிறது.

பாம்பின் நேர்மறை அம்சம்- தன்னிடம் உள்ள விஷத்தை பிரயோகிக்காமல் அப்படியே
வைத்திருக்கும் பாம்பு அதை குறிப்பிட்ட நாளுக்கு பின் மாணிக்க கல்லாக
மாற்றுகிறது. மாணிக்கம் ஒளி வீசிக்கூடியது.
மதி, மந்திரம்,மருந்து,மாணிக்கம் என்றொரு வரிசை சொல்லப்படுவதுண்டு.
ஒவ்வொரு மனிதனும் தம்மிடமுள்ள தீயதை பிரயோகிக்காமல் அதை தவமாக மாற்றி
ஒளிரூபத்துக்கு மாறவேண்டும்.

இக்கருத்து எனக்கு மிகவும் உடன்பாடாய் உள்ளது.
பார்கடலில் துயிலும் விஷ்ணு வெறுமனே தூங்கவில்லை. அவர் அறிதுயிலில்
இருக்கிறார்.அனைத்தையும் அறிந்துகொண்டே தூங்கியும் தூங்காத நிலையில்
படுத்திருக்கிறார்.அவரை மீறி ஆதிஷேஷன் விளையாடுவானேயானால் அதை கருடன்
பார்த்துகொள்வார்.
மூலாதார கடவுளான கணபதி நாகத்தை தன் இடுப்பில் கட்டி இருக்கிறார்.ஆணவத்தையும்,
சினத்தையும்,வஞ்சகத்தையும், தலை எடுக்க விடாமல் இறுக்கி கட்டி
வைத்திருக்கிறார்,
முருகனின் வாகனம் மயில் சாதாரண பறவை அல்ல. அது வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய
ஞானப்பறவை.மயில் தன் இனப்பெருக்கத்தை எப்படி நிகழ்த்துகிறது என்பது இன்னும்
யாரும் அறியாத சங்கதியாகவே உள்ளது. ஆறறிவு கடவுளுக்கு அதனால்தான் மயில்
வாகனமானது. அந்த அறிவின் கால்களில் அடங்கி ஒடுங்கி சுருண்டுகிடக்கிறது பாம்பு.
அந்த பாம்பை இப்படியெல்லாம் பழக்கிவிட்டால் அப்புறம் சிவனை போல அதை
கையில்,கழுத்தில்,தலையில்,எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
அகந்தையையும்,ஆணவமும்,நான் என்கிற செருக்கும் நம் கட்டுக்குள் இருக்கும்.




யோகவியல் ரீதியில் பார்க்கும் பார்வைதான் பாம்பிற்கு நாம் த்ரும் உச்ச மரியாதை.
சுயமனித சக்தியை உசுப்பி எழுப்பும் குண்டலினி எனும் மாயசக்தி நம் மூலாதாரத்தில்
ஒரு பாம்பு வடிவில் தூங்குவதாகத்தான் முன்னோர்கள் கணித்துள்ளார்கள்
அந்த பாம்பு நமக்குள் எப்படி வந்தது..?எப்போது வந்தது,..?
பாம்புகள் வசிக்கும் புற்றை உற்று நோக்குங்கள். அதன் உச்சி வழியாக-தலையை
முதலில் உள் நுழைத்து- வால் இறுதியாய் மறைய உள்ளிறங்கும்.
வெளியே வரும்போது தலை முதலில் தெரிய வெளிப்படும்.
நமக்கும் அப்படித்தான் உச்சி தலை வழியேதான் உயிராற்றல் இறங்கி வருகிறது. அதை
மீண்டும் உயர்த்த வேண்டும்.
குண்டலினி பாம்பு தன் விஷத்தை பிரயோகிக்காமல் -உச்சிக்கு வநது மாணிக்கத்தை கக்க
வேண்டும்.
நாம் ஒளிரூப மனிதர்களாய் மாறவேண்டும்.
நமக்குள் இருக்கும் பாம்பை ஆட்டுவிக்க இன்றே மகுடியை எடுப்போமா..?

பிறவியை அறுப்போம்

வாழ்வின்
ஒப்புமையற்ற தன்மைக்கு
உவமானம் வேண்டுமா..?

வாழாததில் வாழும்
கனவு அது.

இருப்பதாய் காட்டும்
இல்லாமையின்
இருப்பு அது.

ஓடும் பெரு நதியில்
எங்கோ ஓரிடத்தில்
சட்டென குமிழ்ந்து
பட்டென வெடிக்கும்
நீர் குமிழ் அது.

உடனிருப்பதாய் காட்டி
உபயோகப்படாத
நிழல் அது

சூரிய சூட்டில்
சலவையாகும்
பனி துளி அது.

காரிருள் வானில்
பளிச்சென தோன்றி
நொடியில் மறையும்
மின்னல் அது.

நிழலாய் தொடரும்
பிறவியை அறுப்போம்
விழலெனப்போகும்
வாழ்வின் கணங்களை
முழுமையில் மூழ்கி
மூச்சடக்கி
பிறவா நிலையின்
முத்தெடுத்து
புறப்பட்ட இடத்தின்
முகவரி தேடி
திரும்பும் வீட்டுக்குள்
பத்திரமாய்
ஒளித்துவ்வைப்போம்.

theAdagathdukku

Sunday, February 22, 2009

பார் மகளே பார்

அன்பே காதல் அந்தக்காதல் புனிதமாக இருத்தல் அவசியம் ஏன் என்றால் அன்பே
>> > கடவுள் ,,,,,,,
>> >
>> > அந்தக்கால சினிமா காதலும் கூட உணர்ச்சிகள் வெளிப்பட்டாலும்
>> > மிகவும் வரம்பு மீறாமல் இருந்தது ,அந்த வகைப் பாடல்கள் இன்றும்
>> > எல்லோராலும் வரவேற்கப்படுகின்றன ,ஒருவர்க்கொருவர் மரத்தைச் சுற்றினாலும்
>> > கைகள் மட்டும் பின்னிக்கொண்டாலும் அதில் அவர்கள் உணர்வுகளையும் புனிதக்
>> > காதலையும் நாம் தெரிந்து கொண்டு விடுவோம் என்னைக் கவர்ந்த சில பாடல்கள்
>> > டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா பாடியது ஆபோகி ராகம் சினிமா கலைக்கோயில்
>> >
>> >
>> > "தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு
>> > தளிர்மேனி வந்தது தேரினிலே
>> > மரகதத் தோரணம் அசைந்தாட நல
>> > மானிக்க மாலைகள் கவிபாட ,,,,,,
>> >
>> > பெண் ,,,,செவின நீரின் கண்திறந்து ,,செம்
>> > மாதுளையின் மணி வாய்திறந்து
>> > முளைவிடும் சென்நெல் கோலமிட்டு
>> > மூவர் உலாவந்த காலங்கள் போல் ...
>> >
>> > ஆண் மாங்கனிக் கன்னத்தில் தேனூர ,சிறு
>> > மைவிழிக்கிண்ணத்தில் மீனாட
>> > தேன் வரும் வாழைகள் போராட
>> > தேவியின் பொன் மேனி தள்ளாட ,,,,{தங்க ரதம் }
>> >
>> >
>> > இதே போல் இன்னொரு பாடல் பார் மகளே பார் படத்தில்
>> > மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் என்ற பாடல்,,,சுமைத் தாங்கியில்
>> > "எந்தன் பார்வையின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி ராதா,,,,
>> > என்ற பாடல் ,,,,,,,
>> >
>> > "பால் வண்ணம் பருவம் கண்டு
>> > வேல் வண்னம் விழிகள் கண்டு
>> > மான் வண்ணம் நான் கண்டு
>> > வாடுகிறேன் " ................................சூப்பர் பாடல் படம் பாசம்
>> >
>> > இதைப்போன்ற பாடலகள் காதல்ன் காதலியின் உணர்வுகளைக்
>> > கொச்சைப்படுத்தாமல் மிக அழகாக் விளக்கப்பட்டிருக்கிறது காதலின் புனிதம்
>> > வெளிப்படுகிறது ,இப்போது இருக்கும் பாடல்களில் உணர்வுகள் புனிதம்
>> > மறைந்து காமமே வெளிப்படுகிறது ,உம் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு
>> > ஓடிப்போலாமா
>> > ,கட்டை கட்டை நாட்டுக்கட்டை ,,,,, போன்ற பாடல்கள்
>> > என்ன செய்வது காலத்திற்கேறப் கோலங்கள் ,,,,,,இவைகளையே இந்தக்காலத்தில்
>> > விரும்பப்படுவதாலும் இந்த மாதிரி பாடல்கள்
>> > வருகிறது போலும்
>> > இப்போது காதலர் தினத்திற்கு வரலாம்
>> > அந்தந்த வயதில் அது அது தேவை , அது என்ன அது அது ?
>> > ஆம நம் உடலில் ஜீவ காந்தச்சக்தி அதிகமாக பெருக்கெடுப்பது
>> > இந்த வயதில் தான் ,இதைத் தவிர்க்க முடியாது ஆனால் அதை தியானம்
>> > நல்லொழுக்கங்கள் மூலம் நம் கட்டுப்பாட்டுக்குக்
>> > கொண்டுவரமுடியும் ,பாரதீய கலாச்சாரத்தின் வழியே வந்தவர்கள்
>> > அதை விரும்புவர்கள் இதைத் தேவை என எடுத்துக் கொள்வார்கள் ,
>> > எனக்கு காதல் என்பது பல் வகைகளாகத் தெரிகிறது அன்பே காத்ல் தாயின்
>> > மேல் இருக்கும்
>> > அன்பும் காதல் தான் தந்தை மேல் இருக்கும் அன்பும் காதல்தான்
>> > அதே போல் நண்பன் மேல் , இருப்பதும் காதல் கடவுள் மேல் வைக்கும்
>> > அன்பும் காதல் தான் மீரா கண்ணனிடம் ஆண்டாள் அந்த ரங்கநாதனிடம்
>> > அளவில்லாத காதல் கொண்டதைப்பார்க்கிறோம் இவைகள் எல்லாம் மனதின்
>> > ஆழத்திலிருந்து வந்து மற்றோரு மனதைச் சங்கமிக்கும் ,இது எப்போதும்
>> > மனதிலேயே இருப்பதால் இதற்கு என்று ஒரு தனி நாள் வேண்டுமா என நினைக்கத்
>> > தோன்றுகிறது ,காதலர் தினம் என்பதில் பலர் தவறாகப் பொருள்
>> > கொண்டு வரம்பு மீறி நட்க்கின்றனர் , சிலர் உண்மையாக இல்லாமல் இந்த
>> > வாய்ப்பை நழுவ விடாமல் சுயநலவாதியாக ஆகின்றனர் உண்மையான காதலர்கள் உடல்
>> > ஈர்ப்புக்காக கண்ட இடத்தில் ஆபாசமுறையில் இருக்க மட்டார்கள் அவர்கள் இரு
>> > மனம் ஒன்றாகிவிட்ட நிலையில் பொறுமையுடன்
>> > காத்திருப்பார்கள் ,காதலர் தினம் இருந்து அதை வரம்பு மீறாமல்
>> > அந்தக் காதல் என்றச்சொல்லுக்கு மரியாதைக் கொடுத்தால் அந்த்த் தினம்
>> > வரவேற்கலாம் மேனாட்டுக் கலாச்சாரம் கொண்டு வந்தால் அது தேவையில்லை
>> > தான் இதற்கு என்று ஒரு மாதமாக அல்லோலப்படுவது
>> > சரியென்று படவில்லை , தந்தை நாள் வருவதும் தெரிவதில்லை போவதும்
>> > தெரிவதில்லை அதே போல் தாயின் நாளும் இதே போல் தான் ,ஒரு வரியில் ஒரு
>> > மடல் வந்து கடைமை முடிந்து விடுகிறது ,, அவர்களுக்கு அல்லவா ஒரு
>> > மாதம் முன்பே மனதாலும் உடலாலும் சேவை செய்ய வேண்டும்
>> > என்று எனக்குத் தோன்றுகிறது
>> > அன்புடன் விசாலம்
>> >
>> > >
>> >

சிவானந்த பரமஹம்சர்

எந்த புராணங்களும்..இதிகாசங்களும் கடவுள் உருவங்களும் அவற்றிற்கு
தொடர்புடைய சின்னங்களும் மனித உடல் மனம் உயிர் இவற்றோடு தொடர்புடையவையே
என்பார் சிவானந்த பரமஹம்சர். 
வெறுமனே தெய்வங்களை தொழுவதோடு நின்றுவிடாமல் அனைத்தையும் ஒரு
மறுஆய்வுக்கு உட்படுத்தி மெய்பொருள் காண வேண்டி இருக்கிறது.
"அன்பே சிவம்"
அன்பு என்பது ஓர் உணர்வு.உயிர்கள் மட்டுமே உணர்வை அனுபவிக்ககூடியவை.
அன்பெனும் உணர்வு அகத்தில் பொங்க உடல் அதை செயல்படுத்துகிறது.
வெளிப்படுத்தப்பட்ட அன்பின் விளைவை ஆன்மா அனுபவிக்கிறது.
ஆக அன்போ அல்லது அதற்கு மாறான கோபமோ எதுவாகினும் அது உணர்வாக மனதில்
தோன்றி உடல் வழியாக செயல்பட் வேண்டிய்கட்டாயம் . இவை அனைத்துக்கும்
சாட்சியாக உயிர் தேமே என்று இருக்கிறது.
அறிவியல் பூர்வமாக ஒரு உயிருக்குள் உணர்வு பயணிக்கும் தொனியை நிறுவமுடியுமா..? 
சிவனையும் பார்வதியையும் விட்டு விட்டு சிவன் சதா சர்வ காலமும் தூக்கி
பிடித்த திரிசூலத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உண்மை விளங்கும்.
சூலத்தை ஆயுதமாக பயன்படுத்தி தன்னை எதிரிகளிடமிருந்து
காத்துக்கொள்ளவேண்டும் என்கிற அவசியம் சிவபெருமானுக்கு இல்லை. அதே போல்
தன் சூலத்தால் சிவன் யாரையும் கொன்றதாக எந்த கதைகளும் இருப்பதாக
தெரியவில்லை.
அப்படி என்றால் சூலத்தை பற்றிய மெய்பொருளை நாம் காணவேண்டி உள்ளது.
மனிதனின் ஆற்றறிவும் உடலில் ஒவ்வொரு புலனை ஊடகமாக கொண்டு செயல்படுகிறது.
நிலம்-தொடு உணர்வு-உடல்(நிலத்தில் செடி உடலில் முடி)
நீர் _சுவைத்தல்-நாக்கு( நீர் ஊறும் புலன்)
நெருப்பு-ஒளி-கண்(உள்ளொளி கொண்டு அகவொளி காணல்)
காற்று-வாசம்-மூக்கு (சுவாசித்தல்)
ஆகாயம்-ஒலி-செவி (ஆகாசவாணியாய் ஓசையை கேட்டல்)
ஐம்புலன்களுக்கு ஐந்து பூதங்களென ஐந்து அறிவு வரை சூத்திரம் சரியே.
ஆறாவது அறிவு எது- பகுத்தறிவு என நம் பிள்ளைகளுக்கு சொல்லி தந்தோமே தவிர
அதற்கு மேல் இம்மி அளவு கூட நாம் ஆறாவது அறிவு பற்றிய அறிதலில்
செயல்படவில்லை.
இத்தனைக்கும் பலாயிரம் ஆண்டுக்கு முன்பே ஆறாவது அறிவுக்கு ஒரு
பெருந்தகையாளன் பெயர் வைத்தும் இன்னும் நாம் அதை பயன்படுத்துவதில்லை.

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆற்றறிவதுவே அவற்றொடு மனனே..
நேரிதை உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

இது தொல்காப்பிய சூத்திரம். ஆறாம் அறிவுக்கு பெயர் மனம்.
மற்ற ஐந்து அறிவுக்கும் உள்ளது போலவே மனதுக்கும் தான் செயல்பட ஒரு ஊடகம் தேவை.
மனதின் ஊடகம் மூளை. மனதின் செயல் ஆணைகளை மூளை மூன்று வெவேறான
மேடைகளிலிருந்து செயல்படுத்துகிறது.
வலது மூளை-இடது மூளை-நடு மூளை(முகுளம்)
இப்படிகூட சொல்லாம்
வடகலை-பிங்கலை-சுழுமுனை
இந்த மூன்று முனைகளை குறிக்கும் அடையாளமே திரிசூலத்தின் தலைப்பகுதி.
இரண்டு முனைகள் வலதிடதாய் நடுமுனை வானம் பார்த்து இருக்கும்.
தெருவிளக்கு கம்பத்தில் உள்ள மின்சாரத்தை வீட்டிற்குள் கொண்டுவரும்போது
என்ன செய்கிறோம்..? 
phase -nutral- என பிரித்து முறையாக wiring செய்கிறோம் அல்லவா..?
இதே அமைப்புதான் சமச்சீராய் பிரிந்திருக்கும் மனித உடலிலும். இடது
பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் உயிராற்றல் என்கிற மின்சாரத்தை
எடுத்து செல்ல wiring செய்யப்பட்டிருக்கும் பாதையே முதுகு தண்டுவடம்.
திரிசூலத்தின் தலை பகுதியோடு இப்பொழுது தண்டுவடத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்
எண்ணங்க்ள்தாம் செயல்கள். செயல்களால் விளைவு. அதற்கு பின் அனுபவம் இன்பம்
அல்லது துன்பம். இப்படி நிகழ்வது ஒரு சக்கரம்.
எண்ணங்கள் செயலாய் பரிணமிக்க மனம் நினைத்து-மூளை அதை வாங்கி-உடல்
உறுப்புகளுக்கு ஆணையாய் சொல்ல- அங்கங்கள் அதை செய்ய்யும்.
இந்த நிகழ்விற்கு ஆதாரமாய் இருப்பது மூன்று மூளையையும் உடலின் அனைத்து
உறுப்புகளோடும் இணைத்து வைத்திருக்கும் நரம்பு மண்டலம்.
அந்த நரம்பு மண்டலம்தான் முறையாக நம் தண்டுவடத்தில் wiring செய்யப்பட்டிருக்கிறது.
தண்டுவடத்தை எந்த அளவிற்கு நிமிர்த்தி வைக்கிறோமோ..அந்த அளவுக்கு மினசார
பகிர்மாணம் தடை இல்லாமல் இருக்கும்.
அன்பை காட்டுவதால் சிவனாகிப்போன நம் ஒவ்வொருவரும் நம் சூலத்தை எப்படி
நிமிர்த்தி வைத்திருக்க வேண்டுமென இப்போது புரியும்.

சூலம் சரி அது என்ன நடுவில் ஒரு உடுக்கை..? 
இதுவும் உடல் தத்துவமே.
உடுக்கையை பிரித்து பாருங்கள். ஓசை எழுப்புக்கூடிய இரண்டு பக்கங்கள்.
தோலை வைத்து இறுக்க கட்டப்பட்டிருக்கும்விதம், இவையெலாம் சாதாரண சங்கதிகள் அல்ல.
வலது புறம் இறுக வேண்டுமெனில் அதற்க்கான இறுக்கத்தை இடது பக்கத்திலும்,
இடது பக்கத்தை வலது புறமாய் இறுக்க வேண்டும். அதாவது நம் உடலில் வலது
பக்கம் முழுவதையும் இடது மூளை கட்டுப்படுத்துகிறது.
இடது பக்கம் முழுதையும் வலது மூளை கட்டுப்படுத்துகிறது.

உடுக்கையின் மையத்தில் உள்ள ஓசை எழுப்பும் மணியானது உடுக்கையை வலதிடதாய்
அசைக்கும்போது வலது பறையில் இடது மணியும்..இடது பறையில் வலது மணியும் ஓசை
எழுப்ப்ம் வண்ணம் ஏற்பாடு.
அதனால்தான் வலது கையோ காலோ இயங்காமல் போனால் சிகிச்சை இடது மூளைக்கு
நடக்கும். இயக்கம் இடதில் தடைப் பட்டால் சிகிச்சை வலதுமூளைக்கு நடக்கும். 
நம் ஒவொருவரின் உணர்வுகளும் உடலுக்குள் செயல்வடிவம் பெறுவதற்கான blueprint இதுதான்.
நமக்குள் இருக்கும் நம்க்கு சொந்தமான திரிசூலத்தை இன்று முதல் நாம் பூஜிக்கலாமா..?
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்.
தேடுவோம்..அனைத்தையும் உள்முகமாய் தேடுவோம்
அறிவியல் ஆன்மீகம் அனைவர்க்கும் நலம் தரும்..
.

வேர்களைத் தேடி

பல நேரங்களில் சொந்த மண்ணையும், உறவுகளையும் விட்டு மனிதன் வேறு
இடங்களுக்குப் போகின்றான்.அங்கேயே தங்கி விட நேர்ந்தாலும் மனம் மட்டும்
உறவுகளையும் சொந்த ம்ண்ணையும் தேடி அலைந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த
ஏக்கத்தின் வெளிப்பாடே வேர்களைத் தேடி!
வேர்களைத் தேடி!
திரைகடலோடியும் திரவியம் தேடிச் சென்றோம்.
தள்ளியே சென்றுவிட்டது சொந்தமும் பந்தமும்!
அன்றோ வருடத்திற்கு ஓர் முறை வெளியூர் அதிசயம்.
இன்றோ வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவதே அதிசயம்!
காலாற எங்களுடன் நடந்த குட்டைவால்குருவி நாரை இவற்றை
கண்காட்சியிலும், புகைப்படத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் ஊர் குளக்கரையில் மட்டுமா பாசி படிந்து கிடக்கிறது?
எங்கள் ஏக்கமும்தான் பாசிபடிந்த பிம்பங்களாகிவிட்டன.
ஊருக்கு வருகின்றவர்களை அதிசயமாக பார்த்தோம் அன்று.
ஊரைத்தேடி வருகின்ற நாங்களே காட்சிப்பொருளானோம் இன்று!
அள்ளிச்செருகிய கொண்டையும் , இறுகக் கட்டிய தூண்டும்
இன்று கண்ணில் படுமா என்று பார்வை தேடுகிறது தினம்!
கருப்பட்டியும், கடுங்காப்பியும் தந்த சுவை மனதில் தங்கும்.
காணாத தேசத்து உணவோ வயிற்றில் மட்டுமே தங்கும்.
மலர்களைத் தேடி வெகு தூரம் வந்ததில் மாறி விட்டோம் பாதை.
வந்த வழி போக எண்ணி திரும்பி பார்த்தால், வழியே புரியவில்லை.
விண் முட்ட நிற்கிறது அடுக்கான அழகு மாடிக்கட்டிடம்.
கண் முன்னே நின்றது கண்ணீரும், காதோர நரையும்!
நரை விழுந்ததால், பயணத்தின் வேகம் குறையலாம். ஆனால்
திரை விழுமுன் தொட்டு விடுவோம் எம் தாய் மண்ணை!
பாகம்பிரியாள்.

அருட்பெரும் ஜோதியே

அருள் மிகு ஆண்டவனே, அருட்பெரும் ஜோதியே

உன்னுடய பாதங்களில் எங்களை சமர்ப்பிக்கிறோம்

ரவிஷங்கர் குடும்பதினர் படும் கஷ்டங்களிலிருந்து

முக்தியடய நாங்கள் எல்லோரும் ஒருமித்து உன்னை

வணங்கி கேட்டுகொள்கிறோம்.

நீ நினைத்தால் ஒரு நிமிடத்தில் ரவிஷங்கருடய

குடும்பத்தினருக்கு நிம்மதியையும் உன்னுடய

ஆசிகளையும் கொடுத்து அருள் பாலிக்க முடியும்

என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் நாங்கள்

எல்லோரும் ஒருமித்து வணக்கிகிறோம்.

கஷ்டத்தை கொடுத்த நீ, அதிலிருந்து மீள்வதற்கான

வழிமுறையையும் நீயே கொடுத்து அருளவெண்டும்.

நீயின்றி ஒரு அணுவும் அசையாது. இல்லம் நண்பர்கள்

எல்லோரும் ஒருமித்து வணங்கி உன்னை திரும்பவும்

கேட்டுக்கொள்கிறோம். உன் பாதரவிந்தங்களில் எங்களுடய

வேண்டுதலை சமர்ப்பிக்கிறோம்.

பாரத நாட்டிற்கு இது அவசியமா?

அண்டை நாடுகளின் கலாசார படையெடுப்பே இந்த வாலண்டைன் தினம். இதற்கு முன்னர் நாம்
காதலித்ததுஇல்லையா? அன்புடன் செயல்படும் ஒவ்வொரு நாளும் காதலர் தினமே. இந்த
உண்மை புரியாத அந்நியசக்திகளின் விஷக்கலாசாரம் இன்று நம் இளம் சமுதாயத்தினரை
வெகுவாக பாதித்துள்ளது.

இந்தியர்களுக்கு வெளியில் எங்கும் எதிரிகள் இல்லை. அவர்கள் இங்கே நமக்குள்ளேயே
போலி கலாசாரபோர்வையில் ஒளிந்திருக்கிறார்கள். காதலுக்கு புது இலக்கணம்
வகுத்தவர்கள் நாம். நமக்கு எவரும் அதைகற்ப்பிக்க வேண்டியது இல்லை.

ஆண்கள் மது அருந்துவதே தவறு என்று சொல்லி கொண்டிருக்கும் வேளையில், பெண்கள் மது
அருந்தி விட்டுஆபாச நடனம் ஆடுவதை நவீன கலாசாரம் என்று தவறாக புரிந்து கொள்ள
பட்டிருக்கிறது. இந்த இழி செயலைஆதரித்து நாடெங்கும் மதவாதம் என்று கூக்குரல்கள்
வேறு.

தாய்மையின் புனிதத்தை அழிக்கும் மேலை நாட்டு கலாசாரம் நமக்கு தேவையா?

நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் அதை இரு கரம் கூப்பி நம் நாடு வரவேற்கும்.
திரைப்படங்களும், பத்திரிகைகளும் தம் பங்கிற்கு கலாசார நாசம் செய்து
கொண்டிருக்கும் வேளையில், காதலர் தினம்கொண்டாடுவது எரியும் நெருப்பில் எண்ணை
இடுவதற்கு சமம்.

அந்நியர்களின் கலாசார படையெடுப்பால் நம்
~ இசை இரைச்சலாகி விட்டது
~ எதிர்காலம் ஏமாற்றமாகி விட்டது
~ மனிதாபிமானம் மட்கிப்போய் விட்டது
~ பாரம்பரியம் பகல் கனவாகி விட்டது
~ காதல் காமமாகி விட்டது
~ கலாசாரம் கண்றாவி ஆகி விட்டது

புறக்கணிப்போம் ! காதலர் தினத்தை புறக்கணிப்போம் !

இந்தியர்களே, யோசித்து பாருங்கள். நம் குழந்தைகள் அவர்கள் படிக்கும் படிப்பை
விடுத்து முன் பின் தெரியாதஒருவருடன் காமக்களியாட்டம் செய்ய முன்னோட்டம்
பார்ப்பதை காதலர் தினம் என்ற பெயரிட்டுஅனுமதிப்பீர்களா?

உங்கள் குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்க போகிறவர்கள்.
அவர்களை பாரம்பரிய கரு கொண்டு உருவாக்க வேண்டியது உங்கள் கடமை.

ஜெய்ஹிந்த்

காதலர் தினமா? கலாசார சீரழிவா?

எனது மனிவியும் நானும் 2006ல் ஒரு ஆறு மாதம் பீனிக்ஸ், அரிசோனாவில்
எங்களது ஒரு மகளின் குடும்பத்துடன் கழித்தோம். எங்களது பேரன்களில்
ஒருவன், பன்னிரெண்டாவது படிக்கும் மாணவன், அதிக நண்பர்களுட்ன் பழகாமல்
ஒரு சன்யாசி போல் இருப்பதைப் பார்த்து அவன் இப்படி இருக்கிறானே என்று
சற்று வருத்தப் பட்டோம். அவனிடம் இது பற்றிக் கேட்ட போது, "நான் அவர்களை
முற்றிலும் வெறுக்கிறேன். காரணம் அவர்கள் எப்போதும் சத்தற்ற விஷயங்களைப்
பேசி போதைக் கழிக்கிறார்கள். அதிலும் பெண்கள் பேசும் வெட்டிப்
பேச்சிற்கு அளவே இல்லை", என்றான்.

தினமும் காலையிலும் மாலையிலும் நாங்கள் காலார ஒரு சுற்று நடந்து விட்டு
வருவது வழக்கம்.
என்று நாங்கள் பேரன் குறித்து வருத்தப் பட்டோமோ அன்று மாலை நடந்து விட்டு
வீடு திரும்புகையில் ஒரு பலத்தின் அடியில் ஒரு பள்ளி மாணவனும் மாணவியும்
செய்து கொண்டிருந்தவையை வாயால் சொல்ல முடியாது. அருகில் இருந்த
மைதானத்தில் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அவர்களை
அங்கிருந்து விரட்டி விட்டனர்.

மறு நாள் மாலை நாங்கள் வீட்டை நெருங்கும் போது எதோ சத்தம் வரவே
அண்ணார்ந்து பார்த்தோம். மரத்தின் மீது அதே இருவர். எங்கள் பேரனுக்கு
மேல் நாட்டு மோகம் வரவில்லையே
என்று சந்தோஷப் பட்டோம்.



On Feb 13, 3:00 pm, Jagadish Radhakrishnan
wrote:
> பாரத நாட்டிற்கு இது அவசியமா?
>
> அண்டை நாடுகளின் கலாசார படையெடுப்பே இந்த வாலண்டைன் தினம். இதற்கு முன்னர் நாம்
> காதலித்ததுஇல்லையா? அன்புடன் செயல்படும் ஒவ்வொரு நாளும் காதலர் தினமே. இந்த
> உண்மை புரியாத அந்நியசக்திகளின் விஷக்கலாசாரம் இன்று நம் இளம் சமுதாயத்தினரை
> வெகுவாக பாதித்துள்ளது.
>
> இந்தியர்களுக்கு வெளியில் எங்கும் எதிரிகள் இல்லை. அவர்கள் இங்கே நமக்குள்ளேயே
> போலி கலாசாரபோர்வையில் ஒளிந்திருக்கிறார்கள். காதலுக்கு புது இலக்கணம்
> வகுத்தவர்கள் நாம். நமக்கு எவரும் அதைகற்ப்பிக்க வேண்டியது இல்லை.
>
> ஆண்கள் மது அருந்துவதே தவறு என்று சொல்லி கொண்டிருக்கும் வேளையில், பெண்கள் மது
> அருந்தி விட்டுஆபாச நடனம் ஆடுவதை நவீன கலாசாரம் என்று தவறாக புரிந்து கொள்ள
> பட்டிருக்கிறது. இந்த இழி செயலைஆதரித்து நாடெங்கும் மதவாதம் என்று கூக்குரல்கள்
> வேறு.
>
> தாய்மையின் புனிதத்தை அழிக்கும் மேலை நாட்டு கலாசாரம் நமக்கு தேவையா?
>
> நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் அதை இரு கரம் கூப்பி நம் நாடு வரவேற்கும்.
> திரைப்படங்களும், பத்திரிகைகளும் தம் பங்கிற்கு கலாசார நாசம் செய்து
> கொண்டிருக்கும் வேளையில், காதலர் தினம்கொண்டாடுவது எரியும் நெருப்பில் எண்ணை
> இடுவதற்கு சமம்.
>
> அந்நியர்களின் கலாசார படையெடுப்பால் நம்
> ~ இசை இரைச்சலாகி விட்டது
> ~ எதிர்காலம் ஏமாற்றமாகி விட்டது
> ~ மனிதாபிமானம் மட்கிப்போய் விட்டது
> ~ பாரம்பரியம் பகல் கனவாகி விட்டது
> ~ காதல் காமமாகி விட்டது
> ~ கலாசாரம் கண்றாவி ஆகி விட்டது
>
> புறக்கணிப்போம் ! காதலர் தினத்தை புறக்கணிப்போம் !
>
> இந்தியர்களே, யோசித்து பாருங்கள். நம் குழந்தைகள் அவர்கள் படிக்கும் படிப்பை
> விடுத்து முன் பின் தெரியாதஒருவருடன் காமக்களியாட்டம் செய்ய முன்னோட்டம்
> பார்ப்பதை காதலர் தினம் என்ற பெயரிட்டுஅனுமதிப்பீர்களா?
>
> உங்கள் குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்க போகிறவர்கள்.
> அவர்களை பாரம்பரிய கரு கொண்டு உருவாக்க வேண்டியது உங்கள் கடமை.
>
> ஜெய்ஹிந்த்

மேலை நாட்டு கலாசாரம்

பாரத நாட்டிற்கு இது அவசியமா?
>
> அண்டை நாடுகளின் கலாசார படையெடுப்பே இந்த வாலண்டைன் தினம். இதற்கு முன்னர் நாம்
> காதலித்ததுஇல்லையா? அன்புடன் செயல்படும் ஒவ்வொரு நாளும் காதலர் தினமே. இந்த
> உண்மை புரியாத அந்நியசக்திகளின் விஷக்கலாசாரம் இன்று நம் இளம் சமுதாயத்தினரை
> வெகுவாக பாதித்துள்ளது.
>
> இந்தியர்களுக்கு வெளியில் எங்கும் எதிரிகள் இல்லை. அவர்கள் இங்கே நமக்குள்ளேயே
> போலி கலாசாரபோர்வையில் ஒளிந்திருக்கிறார்கள். காதலுக்கு புது இலக்கணம்
> வகுத்தவர்கள் நாம். நமக்கு எவரும் அதைகற்ப்பிக்க வேண்டியது இல்லை.
>
> ஆண்கள் மது அருந்துவதே தவறு என்று சொல்லி கொண்டிருக்கும் வேளையில், பெண்கள் மது
> அருந்தி விட்டுஆபாச நடனம் ஆடுவதை நவீன கலாசாரம் என்று தவறாக புரிந்து கொள்ள
> பட்டிருக்கிறது. இந்த இழி செயலைஆதரித்து நாடெங்கும் மதவாதம் என்று கூக்குரல்கள்
> வேறு.
>
> தாய்மையின் புனிதத்தை அழிக்கும் மேலை நாட்டு கலாசாரம் நமக்கு தேவையா?
>
> நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் அதை இரு கரம் கூப்பி நம் நாடு வரவேற்கும்.
> திரைப்படங்களும், பத்திரிகைகளும் தம் பங்கிற்கு கலாசார நாசம் செய்து
> கொண்டிருக்கும் வேளையில், காதலர் தினம்கொண்டாடுவது எரியும் நெருப்பில் எண்ணை
> இடுவதற்கு சமம்.
>
> அந்நியர்களின் கலாசார படையெடுப்பால் நம்
> ~ இசை இரைச்சலாகி விட்டது
> ~ எதிர்காலம் ஏமாற்றமாகி விட்டது
> ~ மனிதாபிமானம் மட்கிப்போய் விட்டது
> ~ பாரம்பரியம் பகல் கனவாகி விட்டது
> ~ காதல் காமமாகி விட்டது
> ~ கலாசாரம் கண்றாவி ஆகி விட்டது
>
> புறக்கணிப்போம் ! காதலர் தினத்தை புறக்கணிப்போம் !
>
> இந்தியர்களே, யோசித்து பாருங்கள். நம் குழந்தைகள் அவர்கள் படிக்கும் படிப்பை
> விடுத்து முன் பின் தெரியாதஒருவருடன் காமக்களியாட்டம் செய்ய முன்னோட்டம்
> பார்ப்பதை காதலர் தினம் என்ற பெயரிட்டுஅனுமதிப்பீர்களா?
>
> உங்கள் குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்க போகிறவர்கள்.
> அவர்களை பாரம்பரிய கரு கொண்டு உருவாக்க வேண்டியது உங்கள் கடமை.
>
> ஜெய்ஹிந்த்

தொல்காப்பிய சூத்திரம்

எந்த புராணங்களும்..இதிகாசங்களும் கடவுள் உருவங்களும் அவற்றிற்கு
> தொடர்புடைய சின்னங்களும் மனித உடல் மனம் உயிர் இவற்றோடு தொடர்புடையவையே
> என்பார் சிவானந்த பரமஹம்சர்.
> வெறுமனே தெய்வங்களை தொழுவதோடு நின்றுவிடாமல் அனைத்தையும் ஒரு
> மறுஆய்வுக்கு உட்படுத்தி மெய்பொருள் காண வேண்டி இருக்கிறது.
> "அன்பே சிவம்"
> அன்பு என்பது ஓர் உணர்வு.உயிர்கள் மட்டுமே உணர்வை அனுபவிக்ககூடியவை.
> அன்பெனும் உணர்வு அகத்தில் பொங்க உடல் அதை செயல்படுத்துகிறது.
> வெளிப்படுத்தப்பட்ட அன்பின் விளைவை ஆன்மா அனுபவிக்கிறது.
> ஆக அன்போ அல்லது அதற்கு மாறான கோபமோ எதுவாகினும் அது உணர்வாக மனதில்
> தோன்றி உடல் வழியாக செயல்பட் வேண்டிய்கட்டாயம் . இவை அனைத்துக்கும்
> சாட்சியாக உயிர் தேமே என்று இருக்கிறது.
> அறிவியல் பூர்வமாக ஒரு உயிருக்குள் உணர்வு பயணிக்கும் தொனியை நிறுவமுடியுமா..?
> சிவனையும் பார்வதியையும் விட்டு விட்டு சிவன் சதா சர்வ காலமும் தூக்கி
> பிடித்த திரிசூலத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உண்மை விளங்கும்.
> சூலத்தை ஆயுதமாக பயன்படுத்தி தன்னை எதிரிகளிடமிருந்து
> காத்துக்கொள்ளவேண்டும் என்கிற அவசியம் சிவபெருமானுக்கு இல்லை. அதே போல்
> தன் சூலத்தால் சிவன் யாரையும் கொன்றதாக எந்த கதைகளும் இருப்பதாக
> தெரியவில்லை.
> அப்படி என்றால் சூலத்தை பற்றிய மெய்பொருளை நாம் காணவேண்டி உள்ளது.
> மனிதனின் ஆற்றறிவும் உடலில் ஒவ்வொரு புலனை ஊடகமாக கொண்டு செயல்படுகிறது.
> நிலம்-தொடு உணர்வு-உடல்(நிலத்தில் செடி உடலில் முடி)
> நீர் _சுவைத்தல்-நாக்கு( நீர் ஊறும் புலன்)
> நெருப்பு-ஒளி-கண்(உள்ளொளி கொண்டு அகவொளி காணல்)
> காற்று-வாசம்-மூக்கு (சுவாசித்தல்)
> ஆகாயம்-ஒலி-செவி (ஆகாசவாணியாய் ஓசையை கேட்டல்)
> ஐம்புலன்களுக்கு ஐந்து பூதங்களென ஐந்து அறிவு வரை சூத்திரம் சரியே.
> ஆறாவது அறிவு எது- பகுத்தறிவு என நம் பிள்ளைகளுக்கு சொல்லி தந்தோமே தவிர
> அதற்கு மேல் இம்மி அளவு கூட நாம் ஆறாவது அறிவு பற்றிய அறிதலில்
> செயல்படவில்லை.
> இத்தனைக்கும் பலாயிரம் ஆண்டுக்கு முன்பே ஆறாவது அறிவுக்கு ஒரு
> பெருந்தகையாளன் பெயர் வைத்தும் இன்னும் நாம் அதை பயன்படுத்துவதில்லை.
>
> ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
> இரண்டறிவதுவே அவற்றொடு நாவே
> மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
> நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
> ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
> ஆற்றறிவதுவே அவற்றொடு மனனே..
> நேரிதை உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
>
> இது தொல்காப்பிய சூத்திரம். ஆறாம் அறிவுக்கு பெயர் மனம்.
> மற்ற ஐந்து அறிவுக்கும் உள்ளது போலவே மனதுக்கும் தான் செயல்பட ஒரு ஊடகம் தேவை.
> மனதின் ஊடகம் மூளை. மனதின் செயல் ஆணைகளை மூளை மூன்று வெவேறான
> மேடைகளிலிருந்து செயல்படுத்துகிறது.
> வலது மூளை-இடது மூளை-நடு மூளை(முகுளம்)
> இப்படிகூட சொல்லாம்
> வடகலை-பிங்கலை-சுழுமுனை
> இந்த மூன்று முனைகளை குறிக்கும் அடையாளமே திரிசூலத்தின் தலைப்பகுதி.
> இரண்டு முனைகள் வலதிடதாய் நடுமுனை வானம் பார்த்து இருக்கும்.
> தெருவிளக்கு கம்பத்தில் உள்ள மின்சாரத்தை வீட்டிற்குள் கொண்டுவரும்போது
> என்ன செய்கிறோம்..?
> phase -nutral- என பிரித்து முறையாக wiring செய்கிறோம் அல்லவா..?
> இதே அமைப்புதான் சமச்சீராய் பிரிந்திருக்கும் மனித உடலிலும். இடது
> பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் உயிராற்றல் என்கிற மின்சாரத்தை
> எடுத்து செல்ல wiring செய்யப்பட்டிருக்கும் பாதையே முதுகு தண்டுவடம்.
> திரிசூலத்தின் தலை பகுதியோடு இப்பொழுது தண்டுவடத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்
> எண்ணங்க்ள்தாம் செயல்கள். செயல்களால் விளைவு. அதற்கு பின் அனுபவம் இன்பம்
> அல்லது துன்பம். இப்படி நிகழ்வது ஒரு சக்கரம்.
> எண்ணங்கள் செயலாய் பரிணமிக்க மனம் நினைத்து-மூளை அதை வாங்கி-உடல்
> உறுப்புகளுக்கு ஆணையாய் சொல்ல- அங்கங்கள் அதை செய்ய்யும்.
> இந்த நிகழ்விற்கு ஆதாரமாய் இருப்பது மூன்று மூளையையும் உடலின் அனைத்து
> உறுப்புகளோடும் இணைத்து வைத்திருக்கும் நரம்பு மண்டலம்.
> அந்த நரம்பு மண்டலம்தான் முறையாக நம் தண்டுவடத்தில் wiring செய்யப்பட்டிருக்கிறது.
> தண்டுவடத்தை எந்த அளவிற்கு நிமிர்த்தி வைக்கிறோமோ..அந்த அளவுக்கு மினசார
> பகிர்மாணம் தடை இல்லாமல் இருக்கும்.
> அன்பை காட்டுவதால் சிவனாகிப்போன நம் ஒவ்வொருவரும் நம் சூலத்தை எப்படி
> நிமிர்த்தி வைத்திருக்க வேண்டுமென இப்போது புரியும்.
>
> சூலம் சரி அது என்ன நடுவில் ஒரு உடுக்கை..?
> இதுவும் உடல் தத்துவமே.
> உடுக்கையை பிரித்து பாருங்கள். ஓசை எழுப்புக்கூடிய இரண்டு பக்கங்கள்.
> தோலை வைத்து இறுக்க கட்டப்பட்டிருக்கும்விதம், இவையெலாம் சாதாரண சங்கதிகள் அல்ல.
> வலது புறம் இறுக வேண்டுமெனில் அதற்க்கான இறுக்கத்தை இடது பக்கத்திலும்,
> இடது பக்கத்தை வலது புறமாய் இறுக்க வேண்டும். அதாவது நம் உடலில் வலது
> பக்கம் முழுவதையும் இடது மூளை கட்டுப்படுத்துகிறது.
> இடது பக்கம் முழுதையும் வலது மூளை கட்டுப்படுத்துகிறது.
>
> உடுக்கையின் மையத்தில் உள்ள ஓசை எழுப்பும் மணியானது உடுக்கையை வலதிடதாய்
> அசைக்கும்போது வலது பறையில் இடது மணியும்..இடது பறையில் வலது மணியும் ஓசை
> எழுப்ப்ம் வண்ணம் ஏற்பாடு.
> அதனால்தான் வலது கையோ காலோ இயங்காமல் போனால் சிகிச்சை இடது மூளைக்கு
> நடக்கும். இயக்கம் இடதில் தடைப் பட்டால் சிகிச்சை வலதுமூளைக்கு நடக்கும்.
> நம் ஒவொருவரின் உணர்வுகளும் உடலுக்குள் செயல்வடிவம் பெறுவதற்கான blueprint இதுதான்.
> நமக்குள் இருக்கும் நம்க்கு சொந்தமான திரிசூலத்தை இன்று முதல் நாம் பூஜிக்கலாமா..?
> உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
> வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்.
> தேடுவோம்..அனைத்தையும் உள்முகமாய் தேடுவோம்
> அறிவியல் ஆன்மீகம் அனைவர்க்கும் நலம் தரும்..
> .

மனித உடல் மனம் உயிர்

எந்த புராணங்களும்..இதிகாசங்களும் கடவுள் உருவங்களும் அவற்றிற்கு
>> தொடர்புடைய சின்னங்களும் மனித உடல் மனம் உயிர் இவற்றோடு தொடர்புடையவையே
>> என்பார் சிவானந்த பரமஹம்சர்.
>> வெறுமனே தெய்வங்களை தொழுவதோடு நின்றுவிடாமல் அனைத்தையும் ஒரு
>> மறுஆய்வுக்கு உட்படுத்தி மெய்பொருள் காண வேண்டி இருக்கிறது.
>> "அன்பே சிவம்"
>> அன்பு என்பது ஓர் உணர்வு.உயிர்கள் மட்டுமே உணர்வை அனுபவிக்ககூடியவை.
>> அன்பெனும் உணர்வு அகத்தில் பொங்க உடல் அதை செயல்படுத்துகிறது.
>> வெளிப்படுத்தப்பட்ட அன்பின் விளைவை ஆன்மா அனுபவிக்கிறது.
>> ஆக அன்போ அல்லது அதற்கு மாறான கோபமோ எதுவாகினும் அது உணர்வாக மனதில்
>> தோன்றி உடல் வழியாக செயல்பட் வேண்டிய்கட்டாயம் . இவை அனைத்துக்கும்
>> சாட்சியாக உயிர் தேமே என்று இருக்கிறது.
>> அறிவியல் பூர்வமாக ஒரு உயிருக்குள் உணர்வு பயணிக்கும் தொனியை
>> நிறுவமுடியுமா..?
>> சிவனையும் பார்வதியையும் விட்டு விட்டு சிவன் சதா சர்வ காலமும் தூக்கி
>> பிடித்த திரிசூலத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உண்மை விளங்கும்.
>> சூலத்தை ஆயுதமாக பயன்படுத்தி தன்னை எதிரிகளிடமிருந்து
>> காத்துக்கொள்ளவேண்டும் என்கிற அவசியம் சிவபெருமானுக்கு இல்லை. அதே போல்
>> தன் சூலத்தால் சிவன் யாரையும் கொன்றதாக எந்த கதைகளும் இருப்பதாக
>> தெரியவில்லை.
>> அப்படி என்றால் சூலத்தை பற்றிய மெய்பொருளை நாம் காணவேண்டி உள்ளது.
>> மனிதனின் ஆற்றறிவும் உடலில் ஒவ்வொரு புலனை ஊடகமாக கொண்டு செயல்படுகிறது.
>> நிலம்-தொடு உணர்வு-உடல்(நிலத்தில் செடி உடலில் முடி)
>> நீர் _சுவைத்தல்-நாக்கு( நீர் ஊறும் புலன்)
>> நெருப்பு-ஒளி-கண்(உள்ளொளி கொண்டு அகவொளி காணல்)
>> காற்று-வாசம்-மூக்கு (சுவாசித்தல்)
>> ஆகாயம்-ஒலி-செவி (ஆகாசவாணியாய் ஓசையை கேட்டல்)
>> ஐம்புலன்களுக்கு ஐந்து பூதங்களென ஐந்து அறிவு வரை சூத்திரம் சரியே.
>> ஆறாவது அறிவு எது- பகுத்தறிவு என நம் பிள்ளைகளுக்கு சொல்லி தந்தோமே தவிர
>> அதற்கு மேல் இம்மி அளவு கூட நாம் ஆறாவது அறிவு பற்றிய அறிதலில்
>> செயல்படவில்லை.
>> இத்தனைக்கும் பலாயிரம் ஆண்டுக்கு முன்பே ஆறாவது அறிவுக்கு ஒரு
>> பெருந்தகையாளன் பெயர் வைத்தும் இன்னும் நாம் அதை பயன்படுத்துவதில்லை.
>>
>> ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
>> இரண்டறிவதுவே அவற்றொடு நாவே
>> மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
>> நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
>> ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
>> ஆற்றறிவதுவே அவற்றொடு மனனே..
>> நேரிதை உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
>>
>> இது தொல்காப்பிய சூத்திரம். ஆறாம் அறிவுக்கு பெயர் மனம்.
>> மற்ற ஐந்து அறிவுக்கும் உள்ளது போலவே மனதுக்கும் தான் செயல்பட ஒரு ஊடகம்
>> தேவை.
>> மனதின் ஊடகம் மூளை. மனதின் செயல் ஆணைகளை மூளை மூன்று வெவேறான
>> மேடைகளிலிருந்து செயல்படுத்துகிறது.
>> வலது மூளை-இடது மூளை-நடு மூளை(முகுளம்)
>> இப்படிகூட சொல்லாம்
>> வடகலை-பிங்கலை-சுழுமுனை
>> இந்த மூன்று முனைகளை குறிக்கும் அடையாளமே திரிசூலத்தின் தலைப்பகுதி.
>> இரண்டு முனைகள் வலதிடதாய் நடுமுனை வானம் பார்த்து இருக்கும்.
>> தெருவிளக்கு கம்பத்தில் உள்ள மின்சாரத்தை வீட்டிற்குள் கொண்டுவரும்போது
>> என்ன செய்கிறோம்..?
>> phase -nutral- என பிரித்து முறையாக wiring செய்கிறோம் அல்லவா..?
>> இதே அமைப்புதான் சமச்சீராய் பிரிந்திருக்கும் மனித உடலிலும். இடது
>> பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் உயிராற்றல் என்கிற மின்சாரத்தை
>> எடுத்து செல்ல wiring செய்யப்பட்டிருக்கும் பாதையே முதுகு தண்டுவடம்.
>> திரிசூலத்தின் தலை பகுதியோடு இப்பொழுது தண்டுவடத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்
>> எண்ணங்க்ள்தாம் செயல்கள். செயல்களால் விளைவு. அதற்கு பின் அனுபவம் இன்பம்
>> அல்லது துன்பம். இப்படி நிகழ்வது ஒரு சக்கரம்.
>> எண்ணங்கள் செயலாய் பரிணமிக்க மனம் நினைத்து-மூளை அதை வாங்கி-உடல்
>> உறுப்புகளுக்கு ஆணையாய் சொல்ல- அங்கங்கள் அதை செய்ய்யும்.
>> இந்த நிகழ்விற்கு ஆதாரமாய் இருப்பது மூன்று மூளையையும் உடலின் அனைத்து
>> உறுப்புகளோடும் இணைத்து வைத்திருக்கும் நரம்பு மண்டலம்.
>> அந்த நரம்பு மண்டலம்தான் முறையாக நம் தண்டுவடத்தில் wiring
>> செய்யப்பட்டிருக்கிறது.
>> தண்டுவடத்தை எந்த அளவிற்கு நிமிர்த்தி வைக்கிறோமோ..அந்த அளவுக்கு மினசார
>> பகிர்மாணம் தடை இல்லாமல் இருக்கும்.
>> அன்பை காட்டுவதால் சிவனாகிப்போன நம் ஒவ்வொருவரும் நம் சூலத்தை எப்படி
>> நிமிர்த்தி வைத்திருக்க வேண்டுமென இப்போது புரியும்.
>>
>> சூலம் சரி அது என்ன நடுவில் ஒரு உடுக்கை..?
>> இதுவும் உடல் தத்துவமே.
>> உடுக்கையை பிரித்து பாருங்கள். ஓசை எழுப்புக்கூடிய இரண்டு பக்கங்கள்.
>> தோலை வைத்து இறுக்க கட்டப்பட்டிருக்கும்விதம், இவையெலாம் சாதாரண சங்கதிகள்
>> அல்ல.
>> வலது புறம் இறுக வேண்டுமெனில் அதற்க்கான இறுக்கத்தை இடது பக்கத்திலும்,
>> இடது பக்கத்தை வலது புறமாய் இறுக்க வேண்டும். அதாவது நம் உடலில் வலது
>> பக்கம் முழுவதையும் இடது மூளை கட்டுப்படுத்துகிறது.
>> இடது பக்கம் முழுதையும் வலது மூளை கட்டுப்படுத்துகிறது.
>>
>> உடுக்கையின் மையத்தில் உள்ள ஓசை எழுப்பும் மணியானது உடுக்கையை வலதிடதாய்
>> அசைக்கும்போது வலது பறையில் இடது மணியும்..இடது பறையில் வலது மணியும் ஓசை
>> எழுப்ப்ம் வண்ணம் ஏற்பாடு.
>> அதனால்தான் வலது கையோ காலோ இயங்காமல் போனால் சிகிச்சை இடது மூளைக்கு
>> நடக்கும். இயக்கம் இடதில் தடைப் பட்டால் சிகிச்சை வலதுமூளைக்கு நடக்கும்.
>> நம் ஒவொருவரின் உணர்வுகளும் உடலுக்குள் செயல்வடிவம் பெறுவதற்கான blueprint
>> இதுதான்.
>> நமக்குள் இருக்கும் நம்க்கு சொந்தமான திரிசூலத்தை இன்று முதல் நாம்
>> பூஜிக்கலாமா..?
>> உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
>> வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்.
>> தேடுவோம்..அனைத்தையும் உள்முகமாய் தேடுவோம்
>> அறிவியல் ஆன்மீகம் அனைவர்க்கும் நலம் தரும்..

பெரியாரை பிழையாமை

தந்தை பெரியார் அடிக்கடி ஒரு கதை சொல்லுவாராம்."ஏம்பா நீங்க வணங்கும்
பிள்ளையார் அவ்ளோ பெரிய உருவமா இருக்காரே அவ்ருக்கு போயி அவ்ளோ சின்ன எலியை
வாகனமா வச்சிருக்கிங்களே இது ஞாயமா" அப்படின்னு கேட்டுட்டு,"ஒரு பிள்ளையார்
சிலையை கொண்டு போயி ஆத்துல போடுவோம்..ஒரு தெரு நாயையும் அது கூடவே ஆத்துல
போடுவோம் எது கரைக்கு திரும்பி வருதுன்னு பார்ப்போம்.கல்லு மூழ்கிடும் நாய்
கரைக்கு திரும்பிடும்.ஆக கரைக்கு திரும்ப ஒரு நாய் அளவுக்கு கூட முயற்சி செய்ய
முடியாத சிலையத்தான் நீங்க உங்களை காப்பாத்தும்னு நம்பி கும்பிட்றீங்க. இது
பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயமா உங்களுக்கு தோணலியா"-கேப்பாராம். கேக்கறவங்க ஆகா
எப்படிப்பட்ட ஒரு கேள்வின்னு உடனே கறுப்பு சட்டையை மாட்டிக்கிட்டு,சிலையை
உடைக்க ஆரம்பிச்சிடுவாங்க.
இதுக்கு நம்மாளு ஒருத்தர் பதில் சொன்னாரு.
"சிலையையும் நாயையும் ஆத்துல போட்றது இருக்கட்டும். முதல்ல நாயை தூக்கி சிலை
மேல போடுவோம் அதுக்கப்புறம் சிலையை தூகி நாய் மேல போடுவோம். என்ன ஆவுதுன்னு
பாக்கலாம்" அப்ப்டின்னு.
எனக்கு ரெண்டுமே தப்புன்னு தோணுது. பெரியார் எதையோ எதிர்க்க வேண்டி சாமியை
எதிர்க்க வேண்டிய கட்டாயம். இல்லன்னா அவரே பின்னாளில் புத்த மதத்துக்கு
சிபாரிசு செஞ்சிருக்க மாட்டார்.
சிலைகள் வெறுமனே வணங்குவதற்கு உருவாக்கப்பட்ட உருவங்களா அல்லது
அதற்கும் மேல் மனிதன் இப்படித்தான் வாழ வாழவேண்டும் என்பதற்கான சூத்திரங்களை
கருத்துக்களாக மறைத்து வைக்கப்பட்ட அடையாள பொதிவுகளா என யோசிக்க
வேண்டியிருக்கிறது.
பெரியார் சொல்லிவிடார் என்பதற்காக எல்லாமே சரியாகிவிடுமா என்ன?
வள்ளுவனை துணைக்கு அழைப்போமே
'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு-
என நடு நிலையோடு சொன்னவன் அவன் மட்டும்தானே.
வாருங்கள் தேடுவோம். தேடினால்தானே கிடைக்கும். அப்படி நான் தேடியதில் எனக்கு
கிடைத்ததைத்தான் உங்களோடு பங்கிடுகிறேன்.

மேலே தந்திருக்கும் இரண்டு பிள்ளையார் படங்களில் எது சரி எது தவறு எனும் முடிவை
நாம் எட்டக்கூடுமானால் ஓரளுவுக்கு அடுத்த கட்டத்திற்குள் போய்விடலாம்.
பக்தி நிலையில்மட்டுமே கடவுளர்களை வெளியே வைத்து பார்க்கவேண்டும்.ஞானனிலைக்கு
ஏறிவிட்டால் அனைத்துமே உள்ளே. இது எனது பார்வை. நம் இயங்கு நிலைக்கு ஆதாரமான
ஆறு சக்கரங்களுக்கும் அவற்றிற்கு தொடர்புடைய பகுதிகளுக்கும் கடவுளர்களை ஆதாரமாக
கொண்டால் தீர்வு மிக எளிமை.
பிள்ளையார் மூலாதாரக்கடவுள். முழுமுதல் கடவுள்.
மூலாதாரம்தான் மனித சக்திக்கான ஆதாரம்.நம் எண்ணங்கள் எழுச்சியோடு செயல்களாய்
பரிணமிக்கும் வேதி வினை இந்த மையத்தில்தான் நிகழ்கிறது.
மூலாதாரத்தின் இயல்பு எந்த எண்ணத்தையுமே இன்பத்தை நோக்கிய ஆசைகளாகத்தான்
பார்க்கும்.
காந்தி அடிகள் தம் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உள்ளறையில்
உறங்கிக்கொண்டிருக்க வெளியே தம் மனைவியோடு உறவுகொள்ள நினைத்ததும், அடிமை
இந்தியாவை சுதந்திரத்தின் திசையில் இட்டு செல்ல வேண்டும் என நினைத்ததும் அவரது
மூலாதாரத்தில் இருந்துதான்.
ஆக ஆசைக்கும் மேல் இலட்சியம் எனும் உறுபொருள் உள்ளதை மறுப்பதற்கில்லை என்பது
தெளிவு.
அந்த காந்தியையே சுட்டுக்கொல்ல ஒருவரின் மனதில் எழுந்த எண்ணமும் மூலாதாரத்தின்
செயல்பாடேயன்றி வேறில்லை.
மூலாதாரம் ஆசை அற்று இருக்க வேண்டும். அதாவது மனிதன் ஆசை அற்று இருக்க
வேண்டும். இது சாத்தியமாவெனில் இல்லை.
ஆனால் மனிதன் தன் ஆசையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு தேவை
பயிற்சி. பயிற்சியை யார் தருவார்கள்?
பள்ளிகூடமா..? பல்கலைகழகமா..?
கடவுளர் திரு உருவங்கள்தான் இப்பயிற்சியை தரும். அந்த வகையில்தான் இந்த திரு
உருவங்கள் வார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
மூலாதார வினாயகனுக்க வாகனம் எலி. ஏன் எலி ஒரு புலியை வைத்திருக்க கூடாதா.?
காரணத்தோடுதான் எலி.
உலக விலங்குகளிலேயே பேராசைப்பிடித்த ஒரே உயிரினம் எலிதான்.
தனக்கு தேவையான உணவை தேவைக்கும் மேல் அதிகமாய் வலைக்குள் கொண்டு போய் சேர்த்து
விட்டு சேர்த்ததையே மறந்துபோகும் ஒரு ஜீவன்.

மனிதா உனக்குள் எலியை போல் ஒளிந்திருக்கும் எலித்தனத்தை உன்னிடமிருந்து எட்ட
வை.
பிள்ளையாரிடமிருந்து எலி எவ்வளவு எட்டத்தில் இருக்கிறது பாருங்கள்.
ஆசைகளற்றும் வாழ முடியாது.ஆகவே எலியின் கையில் ஏதாவதொன்றை தரவேண்டும். படத்தின்
படி சிறு கொழுக்கட்டை.
அதை எலி தின்றுவிடலாமா..? கூடாது . நம் மனம் நமக்கு தெரியாமல் எதையும்
ஆசைப்பட்டுவிடக்கூடாது.
எலி தன் எஜமானனின் ஆணைக்கு ஏங்கி அல்லது எதிர்பார்த்து அவரின் முகத்தை
பார்க்கவேண்டும்.
முதலாளியின் அனுமதிக்கு பிறகே ஆசைப்படுவதும் அனுபவிப்பதும்.
முதலாளியோ ஆசையின் திசையில் பார்க்கவே மாட்டார்.
இப்போது சொல்லுங்கள் மேற்கண்ட இரண்டு படங்களில் எது சரி..?எது தவ்று..?

மூலாதார சக்கரத்தை த்ம்முள் வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் அங்கு
சுமந்துகொண்டிருப்பது கணபதியை. அம்மூலாதாரம் ஒவ்வொரு ம்னிதனின் ஆசைகளையும்
மேலாண்மை செய்யவேண்டுமென்பதே எலி தத்துவம்.

நாமும் நம் பேராசை எனும் எலியை நம் கட்டுக்குள் வைக்கலாமா..?
ஆன்மிக உருவங்களுக்கு பின்புலனாய் பொதிந்திருக்கும் உண்மைகளை
அறிவியலாக்பிள்ளையார் நம் கடவுளல்ல..நம் பாடத்திட்டம். பயின்றால் தேர்ச்சி
இல்லயேல் வீழ்ச்சி.
தமிழன்புடன்.
வெங்கட்.தாயுமானவன்.

www.kvthaayumaanavan.blogspot.com
www.tamilliterature.net
இந்த தளத்திற்கு படைப்புகளை
meymmai@gmail.com முகவரிக்கு அனுப்பவும்.




== 2 of 2 ==
Date: Sat, Feb 14 2009 10:21 pm
From: thaayumaanavan venkat




தந்தை பெரியார் அடிக்கடி ஒரு கதை சொல்லுவாராம்."ஏம்பா நீங்க வணங்கும்
பிள்ளையார் அவ்ளோ பெரிய உருவமா இருக்காரே அவ்ருக்கு போயி அவ்ளோ சின்ன எலியை
வாகனமா வச்சிருக்கிங்களே இது ஞாயமா" அப்படின்னு கேட்டுட்டு,"ஒரு பிள்ளையார்
சிலையை கொண்டு போயி ஆத்துல போடுவோம்..ஒரு தெரு நாயையும் அது கூடவே ஆத்துல
போடுவோம் எது கரைக்கு திரும்பி வருதுன்னு பார்ப்போம்.கல்லு மூழ்கிடும் நாய்
கரைக்கு திரும்பிடும்.ஆக கரைக்கு திரும்ப ஒரு நாய் அளவுக்கு கூட முயற்சி செய்ய
முடியாத சிலையத்தான் நீங்க உங்களை காப்பாத்தும்னு நம்பி கும்பிட்றீங்க. இது
பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயமா உங்களுக்கு தோணலியா"-கேப்பாராம். கேக்கறவங்க ஆகா
எப்படிப்பட்ட ஒரு கேள்வின்னு உடனே கறுப்பு சட்டையை மாட்டிக்கிட்டு,சிலையை
உடைக்க ஆரம்பிச்சிடுவாங்க.
இதுக்கு நம்மாளு ஒருத்தர் பதில் சொன்னாரு.
"சிலையையும் நாயையும் ஆத்துல போட்றது இருக்கட்டும். முதல்ல நாயை தூக்கி சிலை
மேல போடுவோம் அதுக்கப்புறம் சிலையை தூகி நாய் மேல போடுவோம். என்ன ஆவுதுன்னு
பாக்கலாம்" அப்ப்டின்னு.
எனக்கு ரெண்டுமே தப்புன்னு தோணுது. பெரியார் எதையோ எதிர்க்க வேண்டி சாமியை
எதிர்க்க வேண்டிய கட்டாயம். இல்லன்னா அவரே பின்னாளில் புத்த மதத்துக்கு
சிபாரிசு செஞ்சிருக்க மாட்டார்.
சிலைகள் வெறுமனே வணங்குவதற்கு உருவாக்கப்பட்ட உருவங்களா அல்லது
அதற்கும் மேல் மனிதன் இப்படித்தான் வாழ வாழவேண்டும் என்பதற்கான சூத்திரங்களை
கருத்துக்களாக மறைத்து வைக்கப்பட்ட அடையாள பொதிவுகளா என யோசிக்க
வேண்டியிருக்கிறது.
பெரியார் சொல்லிவிடார் என்பதற்காக எல்லாமே சரியாகிவிடுமா என்ன?
வள்ளுவனை துணைக்கு அழைப்போமே
'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு-
என நடு நிலையோடு சொன்னவன் அவன் மட்டும்தானே.
வாருங்கள் தேடுவோம். தேடினால்தானே கிடைக்கும். அப்படி நான் தேடியதில் எனக்கு
கிடைத்ததைத்தான் உங்களோடு பங்கிடுகிறேன்.

மேலே தந்திருக்கும் இரண்டு பிள்ளையார் படங்களில் எது சரி எது தவறு எனும் முடிவை
நாம் எட்டக்கூடுமானால் ஓரளுவுக்கு அடுத்த கட்டத்திற்குள் போய்விடலாம்.
பக்தி நிலையில்மட்டுமே கடவுளர்களை வெளியே வைத்து பார்க்கவேண்டும்.ஞானனிலைக்கு
ஏறிவிட்டால் அனைத்துமே உள்ளே. இது எனது பார்வை. நம் இயங்கு நிலைக்கு ஆதாரமான
ஆறு சக்கரங்களுக்கும் அவற்றிற்கு தொடர்புடைய பகுதிகளுக்கும் கடவுளர்களை ஆதாரமாக
கொண்டால் தீர்வு மிக எளிமை.
பிள்ளையார் மூலாதாரக்கடவுள். முழுமுதல் கடவுள்.
மூலாதாரம்தான் மனித சக்திக்கான ஆதாரம்.நம் எண்ணங்கள் எழுச்சியோடு செயல்களாய்
பரிணமிக்கும் வேதி வினை இந்த மையத்தில்தான் நிகழ்கிறது.
மூலாதாரத்தின் இயல்பு எந்த எண்ணத்தையுமே இன்பத்தை நோக்கிய ஆசைகளாகத்தான்
பார்க்கும்.
காந்தி அடிகள் தம் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உள்ளறையில்
உறங்கிக்கொண்டிருக்க வெளியே தம் மனைவியோடு உறவுகொள்ள நினைத்ததும், அடிமை
இந்தியாவை சுதந்திரத்தின் திசையில் இட்டு செல்ல வேண்டும் என நினைத்ததும் அவரது
மூலாதாரத்தில் இருந்துதான்.
ஆக ஆசைக்கும் மேல் இலட்சியம் எனும் உறுபொருள் உள்ளதை மறுப்பதற்கில்லை என்பது
தெளிவு.
அந்த காந்தியையே சுட்டுக்கொல்ல ஒருவரின் மனதில் எழுந்த எண்ணமும் மூலாதாரத்தின்
செயல்பாடேயன்றி வேறில்லை.
மூலாதாரம் ஆசை அற்று இருக்க வேண்டும். அதாவது மனிதன் ஆசை அற்று இருக்க
வேண்டும். இது சாத்தியமாவெனில் இல்லை.
ஆனால் மனிதன் தன் ஆசையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு தேவை
பயிற்சி. பயிற்சியை யார் தருவார்கள்?
பள்ளிகூடமா..? பல்கலைகழகமா..?
கடவுளர் திரு உருவங்கள்தான் இப்பயிற்சியை தரும். அந்த வகையில்தான் இந்த திரு
உருவங்கள் வார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
மூலாதார வினாயகனுக்க வாகனம் எலி. ஏன் எலி ஒரு புலியை வைத்திருக்க கூடாதா.?
காரணத்தோடுதான் எலி.
உலக விலங்குகளிலேயே பேராசைப்பிடித்த ஒரே உயிரினம் எலிதான்.
தனக்கு தேவையான உணவை தேவைக்கும் மேல் அதிகமாய் வலைக்குள் கொண்டு போய் சேர்த்து
விட்டு சேர்த்ததையே மறந்துபோகும் ஒரு ஜீவன்.

மனிதா உனக்குள் எலியை போல் ஒளிந்திருக்கும் எலித்தனத்தை உன்னிடமிருந்து எட்ட
வை.
பிள்ளையாரிடமிருந்து எலி எவ்வளவு எட்டத்தில் இருக்கிறது பாருங்கள்.
ஆசைகளற்றும் வாழ முடியாது.ஆகவே எலியின் கையில் ஏதாவதொன்றை தரவேண்டும். படத்தின்
படி சிறு கொழுக்கட்டை.
அதை எலி தின்றுவிடலாமா..? கூடாது . நம் மனம் நமக்கு தெரியாமல் எதையும்
ஆசைப்பட்டுவிடக்கூடாது.
எலி தன் எஜமானனின் ஆணைக்கு ஏங்கி அல்லது எதிர்பார்த்து அவரின் முகத்தை
பார்க்கவேண்டும்.
முதலாளியின் அனுமதிக்கு பிறகே ஆசைப்படுவதும் அனுபவிப்பதும்.
முதலாளியோ ஆசையின் திசையில் பார்க்கவே மாட்டார்.
இப்போது சொல்லுங்கள் மேற்கண்ட இரண்டு படங்களில் எது சரி..?எது தவ்று..?

மூலாதார சக்கரத்தை த்ம்முள் வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் அங்கு
சுமந்துகொண்டிருப்பது கணபதியை. அம்மூலாதாரம் ஒவ்வொரு ம்னிதனின் ஆசைகளையும்
மேலாண்மை செய்யவேண்டுமென்பதே எலி தத்துவம்.

நாமும் நம் பேராசை எனும் எலியை நம் கட்டுக்குள் வைக்கலாமா..?
ஆன்மிக உருவங்களுக்கு பின்புலனாய் பொதிந்திருக்கும் உண்மைகளை அறிவியலாக்குவோம்.
பிள்ளையார் நம் கடவுளல்ல..நம் பாடத்திட்டம். பயின்றால் தேர்ச்சி இல்லயேல்
வீழ்ச்சி.

மேல் நாட்டு மோகம்

எனது மனிவியும் நானும் 2006ல் ஒரு ஆறு மாதம் பீனிக்ஸ், அரிசோனாவில்
எங்களது ஒரு மகளின் குடும்பத்துடன் கழித்தோம். எங்களது பேரன்களில்
ஒருவன், பன்னிரெண்டாவது படிக்கும் மாணவன், அதிக நண்பர்களுட்ன் பழகாமல்
ஒரு சன்யாசி போல் இருப்பதைப் பார்த்து அவன் இப்படி இருக்கிறானே என்று
சற்று வருத்தப் பட்டோம். அவனிடம் இது பற்றிக் கேட்ட போது, "நான் அவர்களை
முற்றிலும் வெறுக்கிறேன். காரணம் அவர்கள் எப்போதும் சத்தற்ற விஷயங்களைப்
பேசி போதைக் கழிக்கிறார்கள். அதிலும் பெண்கள் பேசும் வெட்டிப்
பேச்சிற்கு அளவே இல்லை", என்றான்.

தினமும் காலையிலும் மாலையிலும் நாங்கள் காலார ஒரு சுற்று நடந்து விட்டு
வருவது வழக்கம்.
என்று நாங்கள் பேரன் குறித்து வருத்தப் பட்டோமோ அன்று மாலை நடந்து விட்டு
வீடு திரும்புகையில் ஒரு பலத்தின் அடியில் ஒரு பள்ளி மாணவனும் மாணவியும்
செய்து கொண்டிருந்தவையை வாயால் சொல்ல முடியாது. அருகில் இருந்த
மைதானத்தில் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அவர்களை
அங்கிருந்து விரட்டி விட்டனர்.

மறு நாள் மாலை நாங்கள் வீட்டை நெருங்கும் போது எதோ சத்தம் வரவே
அண்ணார்ந்து பார்த்தோம். மரத்தின் மீது அதே இருவர். எங்கள் பேரனுக்கு
மேல் நாட்டு மோகம் வரவில்லையே
என்று சந்தோஷப் பட்டோம்.

கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும்

கலிகாலத்தில் நமக்கெல்லாம் ஆலயபிரவேசமென்பது
புத்தாண்டுக்கு,பொங்கலுக்கு,இன்னும் பிற விஷேச வைபவ நாளில் என்று மட்டுமே
சுருங்கிப்போய்விட்டது.
அதுவும் இன்றைய வளரும் தலைமுறையினருக்கு கோவில்கள் என்றாலே எதுவோ போகக்கூடாத
இடத்துக்கு போகிற மாதிரி அப்படி ஒரு வேதனை. மனித அறிவுக்கு அப்பாற்பட்டு
பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்றை செய்வதுபோல் ஒரு பாவனை.
இவையெல்லாம் ஏன் என வினாவை எழுப்பி பார்த்தால் தவறு உண்மையில் நம்மிடம்தான்
உள்ளது.ஆம்..விவரங்களை மிக சரியாக நாம் தர தவறியதுதான் இளைய தலைமுறையினருக்கு
நம் கலாச்சாரத்தின் மேலும் பண்பாட்டின்மேலும் நம்பிக்கை வராமல் போனதற்கான்
காரணம்.

கடந்த சில ஆண்டுகளாக பள்ளிமாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சியை தரும் பயிலரங்கை
நடத்தி வருகிறேன். அந்த சமயங்களில் நான் மாணர்களை பார்த்து
கேட்பதுண்டு.."புத்தருக்கு ஞானத்தை தந்த மரம் எது..?"
உடனே மாணவர்கள் சொல்லிவிடுவார்கள் "போதி மரம்"என்று.
அடுத்து நான் கேட்பேன்"இந்தியாவில் போதி மரங்கள் உள்ளனவா..தமிழ்னாட்டில்
போதி மரங்கள் உள்ளனவா..? நீங்கள் போதி மரத்தை பார்த்ததுண்டா.." என்று
யாரிடமிருந்தும் பதிலே வராது.
அவர்களைப் பொறுத்தவரை போதி மரம் என்பது ஏதோ சொர்கத்தில் மட்டுமே இருக்கும் ஒரு
மரம் எனும் எண்ணம்.
உண்மையில் நாம் அன்றாடம் பார்க்கும் அரசமரம்தான் போதி மரம் என்பது பல
ஆசிரியர்களுக்கே தெரியாத நிலையை நான் கண்டிருகிறேன்.
மரங்களில் அது அரசன் என்பதால் அரசமரம் ஆயிற்று. அந்த மரமே அரச நிலையிலிருந்து
வந்த புத்தருக்கு ஞானம் போதிததால் போதி மரம் ஆயிற்று.
அது ஏன் மரங்களில் அரசன்?
photosynthesis என்கிற ஒளிசேர்க்கையை 24 மணிநேரத்துக்கும் நிகழ்த்தக்கூடிய ஒரே
மரம் அரசமரம். அதாவது மனிதனுக்கு தேவையான் பிராண வாயுவை தொடர்ந்து உற்பத்தி
செய்யும் மரம் அரசமரம்.
மற்றவையெல்லாம் சூரியன் மறைந்ததும் ஒளி சேர்க்கையை நிறுத்திவிடும்.
அதனால்தான் ஸ்தல விருட்சங்கள் என்கிற பெயரில் ஆலய்ங்களில் அரசமரத்தையும் அதன்
குணம் ஒத்த மற்ற மரங்க்ளையும் நம் முன்னோர்கள் நட்டு வைத்தார்கள்.
அரசமரத்தின் கதையே தெரியாவிட்டால் அதன் கிழே வைக்கப்பட்டிருக்கும் நாகலின் கதை
என்னவென்று தெரியும்.
அந்த கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்று வேறு சொல்லி வைத்தாயிற்று. இளம்
சமூகம் எப்படி நம்பும்..?
மேலே அந்த நாகலின் படத்தை தந்திருக்கிறேன்,
இரண்டு பாம்புகள் ஒன்றை ஒன்று பின்னிய நிலையில் உச்சியில் ஒரு சிவலிங்கத்தை
கவ்வி பிடித்திருக்கிறது.
இதை நாம் ஏன் வணங்கவேண்டும்? இதை வணங்கினால் மகப்ப்பேறு எப்படி உருவாகும்..?
முன்னுக்கு பின் முரணாக இருப்பது போல் தோன்றும். உண்மை அதுவல்ல.
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல்ர்.
நவீன அறிவியல் மிக சமீபமாய் கண்டு சொன்ன (genetics) மரபியலை அன்றே சொல்லி
வைத்ததற்கான சாட்சி இந்த நாகல்.
இந்த நாகல்லின் படத்தை வேறு மாதிரி சாய்த்து வைத்த நிலையில் நம் பிள்ளைகள்
டி,என்.ஏ. என்று அறிவியல் பாடத்தில் படிக்கிறார்கள்.
நேர்மறை மற்றும் எதிர்மறையாக செயல்படும் மரபணுகூறின் வடிவத்தை இப்படி கல்லில்
செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
அந்த கல்லை வெளியில் சுற்றினால் பிள்ளை பிறக்கும் என்று தப்பிதமாக நாம் செய்து
வருகிறோம். நாம் உணர வேண்டியது உள்ளுக்குள் டி.என்.ஏ. சுழலுவதில் மாற்றம்
வேண்டும் என்பதே .
உடற்கூறியல் கோளாறுகளுக்கும் சுவாசத்துக்கும் மிகுந்த தொடர்பு உண்டு.
அதனால்தான் அந்த கல்லை அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்து வலம் செய்ய
வைத்தார்கள்.
தூய்மையான ஆக்ஸிஜன் உள்ள வெளியை கொஞ்ச நேரம் சுற்றி வந்தாலே
மனமும் உடலும் தெளிவாகிவிடும்.
கோவிலுக்கு போனதும் மனம் தெளிகிற மாயை,பிரச்சினைகளுக்கு தீர்வு
கிடைத்துவிட்டதாய் தோணுதல் போன்றவை எல்லாம்..இந்த தூய காற்று டி.என்.ஏ.
அணுக்களீல் செய்யும் அதிரடி மாற்றங்களே.
அணுத்தொகுதிகள்தான் நம் உயிர் வாழ்வுக்கான ஆதாரம். அவ்வுயிரணு தொகுதிகள் நம்
உடலில் இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்த வடிவத்தில் வலது இடதாய் நம் உச்சி
தலையை நோக்கி பயணப்படுகிறது. அங்கேதான் நம் ஜீவன் என்கிற சிவ லிங்கம் உள்ளது.
பாம்புகள் பின்னியிருக்கும் சந்திப்பு புள்ளிகளே நம் ஆதார சக்கரங்கள்
செயல்படும் புள்ளி.
இடதும் வலதும் சமனிலைப்பட வேண்டும். மாறானால் இயல்பு நிலையில் மாற்றம்.
வெளியே இருக்கும் நாகலை பாருங்கள். அது நம் உள்ளேயும் இருக்கிறது. சுவாசத்தால்
அந்த பாம்புகளை சுகமாய் வைத்திருக்க நம் ஜீவனுக்கும் சுகமே.
ஆயிரம் ஐன்ஸ்டின்கள் ஒன்று சேர்ந்தாலும் நம் கலாச்சாரத்தை பறைசாற்றும்
அறிவியல் தன்மைகளோடு மனித சமூகத்தை வழிநடத்தும் நம் ஒரு கோவிலை உருவாக்க
முடியாது.
முறையாக் சொல்லி தந்தால் நம் ஆன்மிகத்தின் மகத்துவத்தையோ..பெருமையையோ நம்
இளையசமுகம் ஒருபோதும் மறுதலிக்காது.
இது என் கருதுகோல் மட்டுமல்ல திடமான முடிவும் கூட.
வாருங்கள் கூச்சப்படாமல் நம்முள் இருக்கும் நாகல்லை ஒரு சுற்று சுற்றி வருவோம்.

வள்ளுவனை துணைக்கு அழைப்போமே

தந்தை பெரியார் அடிக்கடி ஒரு கதை சொல்லுவாராம்."ஏம்பா நீங்க வணங்கும்
பிள்ளையார் அவ்ளோ பெரிய உருவமா இருக்காரே அவ்ருக்கு போயி அவ்ளோ சின்ன எலியை
வாகனமா வச்சிருக்கிங்களே இது ஞாயமா" அப்படின்னு கேட்டுட்டு,"ஒரு பிள்ளையார்
சிலையை கொண்டு போயி ஆத்துல போடுவோம்..ஒரு தெரு நாயையும் அது கூடவே ஆத்துல
போடுவோம் எது கரைக்கு திரும்பி வருதுன்னு பார்ப்போம்.கல்லு மூழ்கிடும் நாய்
கரைக்கு திரும்பிடும்.ஆக கரைக்கு திரும்ப ஒரு நாய் அளவுக்கு கூட முயற்சி செய்ய
முடியாத சிலையத்தான் நீங்க உங்களை காப்பாத்தும்னு நம்பி கும்பிட்றீங்க. இது
பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயமா உங்களுக்கு தோணலியா"-கேப்பாராம். கேக்கறவங்க ஆகா
எப்படிப்பட்ட ஒரு கேள்வின்னு உடனே கறுப்பு சட்டையை மாட்டிக்கிட்டு,சிலையை
உடைக்க ஆரம்பிச்சிடுவாங்க.
இதுக்கு நம்மாளு ஒருத்தர் பதில் சொன்னாரு.
"சிலையையும் நாயையும் ஆத்துல போட்றது இருக்கட்டும். முதல்ல நாயை தூக்கி சிலை
மேல போடுவோம் அதுக்கப்புறம் சிலையை தூகி நாய் மேல போடுவோம். என்ன ஆவுதுன்னு
பாக்கலாம்" அப்ப்டின்னு.
எனக்கு ரெண்டுமே தப்புன்னு தோணுது. பெரியார் எதையோ எதிர்க்க வேண்டி சாமியை
எதிர்க்க வேண்டிய கட்டாயம். இல்லன்னா அவரே பின்னாளில் புத்த மதத்துக்கு
சிபாரிசு செஞ்சிருக்க மாட்டார்.
சிலைகள் வெறுமனே வணங்குவதற்கு உருவாக்கப்பட்ட உருவங்களா அல்லது
அதற்கும் மேல் மனிதன் இப்படித்தான் வாழ வாழவேண்டும் என்பதற்கான சூத்திரங்களை
கருத்துக்களாக மறைத்து வைக்கப்பட்ட அடையாள பொதிவுகளா என யோசிக்க
வேண்டியிருக்கிறது.
பெரியார் சொல்லிவிடார் என்பதற்காக எல்லாமே சரியாகிவிடுமா என்ன?
வள்ளுவனை துணைக்கு அழைப்போமே
'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு-
என நடு நிலையோடு சொன்னவன் அவன் மட்டும்தானே.
வாருங்கள் தேடுவோம். தேடினால்தானே கிடைக்கும். அப்படி நான் தேடியதில் எனக்கு
கிடைத்ததைத்தான் உங்களோடு பங்கிடுகிறேன்.

மேலே தந்திருக்கும் இரண்டு பிள்ளையார் படங்களில் எது சரி எது தவறு எனும் முடிவை
நாம் எட்டக்கூடுமானால் ஓரளுவுக்கு அடுத்த கட்டத்திற்குள் போய்விடலாம்.
பக்தி நிலையில்மட்டுமே கடவுளர்களை வெளியே வைத்து பார்க்கவேண்டும்.ஞானனிலைக்கு
ஏறிவிட்டால் அனைத்துமே உள்ளே. இது எனது பார்வை. நம் இயங்கு நிலைக்கு ஆதாரமான
ஆறு சக்கரங்களுக்கும் அவற்றிற்கு தொடர்புடைய பகுதிகளுக்கும் கடவுளர்களை ஆதாரமாக
கொண்டால் தீர்வு மிக எளிமை.
பிள்ளையார் மூலாதாரக்கடவுள். முழுமுதல் கடவுள்.
மூலாதாரம்தான் மனித சக்திக்கான ஆதாரம்.நம் எண்ணங்கள் எழுச்சியோடு செயல்களாய்
பரிணமிக்கும் வேதி வினை இந்த மையத்தில்தான் நிகழ்கிறது.
மூலாதாரத்தின் இயல்பு எந்த எண்ணத்தையுமே இன்பத்தை நோக்கிய ஆசைகளாகத்தான்
பார்க்கும்.
காந்தி அடிகள் தம் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உள்ளறையில்
உறங்கிக்கொண்டிருக்க வெளியே தம் மனைவியோடு உறவுகொள்ள நினைத்ததும், அடிமை
இந்தியாவை சுதந்திரத்தின் திசையில் இட்டு செல்ல வேண்டும் என நினைத்ததும் அவரது
மூலாதாரத்தில் இருந்துதான்.
ஆக ஆசைக்கும் மேல் இலட்சியம் எனும் உறுபொருள் உள்ளதை மறுப்பதற்கில்லை என்பது
தெளிவு.
அந்த காந்தியையே சுட்டுக்கொல்ல ஒருவரின் மனதில் எழுந்த எண்ணமும் மூலாதாரத்தின்
செயல்பாடேயன்றி வேறில்லை.
மூலாதாரம் ஆசை அற்று இருக்க வேண்டும். அதாவது மனிதன் ஆசை அற்று இருக்க
வேண்டும். இது சாத்தியமாவெனில் இல்லை.
ஆனால் மனிதன் தன் ஆசையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு தேவை
பயிற்சி. பயிற்சியை யார் தருவார்கள்?
பள்ளிகூடமா..? பல்கலைகழகமா..?
கடவுளர் திரு உருவங்கள்தான் இப்பயிற்சியை தரும். அந்த வகையில்தான் இந்த திரு
உருவங்கள் வார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
மூலாதார வினாயகனுக்க வாகனம் எலி. ஏன் எலி ஒரு புலியை வைத்திருக்க கூடாதா.?
காரணத்தோடுதான் எலி.
உலக விலங்குகளிலேயே பேராசைப்பிடித்த ஒரே உயிரினம் எலிதான்.
தனக்கு தேவையான உணவை தேவைக்கும் மேல் அதிகமாய் வலைக்குள் கொண்டு போய் சேர்த்து
விட்டு சேர்த்ததையே மறந்துபோகும் ஒரு ஜீவன்.

மனிதா உனக்குள் எலியை போல் ஒளிந்திருக்கும் எலித்தனத்தை உன்னிடமிருந்து எட்ட
வை.
பிள்ளையாரிடமிருந்து எலி எவ்வளவு எட்டத்தில் இருக்கிறது பாருங்கள்.
ஆசைகளற்றும் வாழ முடியாது.ஆகவே எலியின் கையில் ஏதாவதொன்றை தரவேண்டும். படத்தின்
படி சிறு கொழுக்கட்டை.
அதை எலி தின்றுவிடலாமா..? கூடாது . நம் மனம் நமக்கு தெரியாமல் எதையும்
ஆசைப்பட்டுவிடக்கூடாது.
எலி தன் எஜமானனின் ஆணைக்கு ஏங்கி அல்லது எதிர்பார்த்து அவரின் முகத்தை
பார்க்கவேண்டும்.
முதலாளியின் அனுமதிக்கு பிறகே ஆசைப்படுவதும் அனுபவிப்பதும்.
முதலாளியோ ஆசையின் திசையில் பார்க்கவே மாட்டார்.
இப்போது சொல்லுங்கள் மேற்கண்ட இரண்டு படங்களில் எது சரி..?எது தவ்று..?

மூலாதார சக்கரத்தை த்ம்முள் வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் அங்கு
சுமந்துகொண்டிருப்பது கணபதியை. அம்மூலாதாரம் ஒவ்வொரு ம்னிதனின் ஆசைகளையும்
மேலாண்மை செய்யவேண்டுமென்பதே எலி தத்துவம்.

நாமும் நம் பேராசை எனும் எலியை நம் கட்டுக்குள் வைக்கலாமா..?
ஆன்மிக உருவங்களுக்கு பின்புலனாய் பொதிந்திருக்கும் உண்மைகளை அறிவியலாக்குவோம்.
பிள்ளையார் நம் கடவுளல்ல..நம் பாடத்திட்டம். பயின்றால் தேர்ச்சி இல்லயேல்
வீழ்ச்சி.

நட்புக்கு கூட கற்ப்பு உண்டு

*இருட்டில் கண்விழித்து*

*இருட்டில் கண்விழித்து*
> *உறக்கமின்றி படுத்திருந்தேன்*
> *நேற்றிரவு இரவல்ல*
> *பகலின் தொடர்ச்சியுமல்ல...*
> **
> *கண் மூடினால் இருளின் இருட்டு*
> *கண் திறந்ததும் இருளின் வெளிச்சம்*
> *கண்களுக்கு அதிசயம்...*
> **
> *தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமும்*
> *தொல்லைக் காட்சிகள் இரவிலும்...*
> **
> *விளம்பரங்கள் ஏன் தான் பொழிகிறதோ*
> *இரவுநேர வானொலியில்...*
> **
> *இரவில் யாரிடம் பேச*
> *யாருக்கு மடல் அனுப்ப*
> *ஞானியின் கேள்விகளோடு*
> *கணினியும் தொலைபேசிகளும்...*
> **
> *எனது *
> *மனக்கதவு திறக்கப்பட்டன...*
> *மனதில் தான் எத்தனை காட்சிகள்...*
> *கடந்தகாலமும் வருங்காலமும் வந்துபோக*
> *நிகழ்காலம் என்னிலிருந்து மறைந்திட*
> *கண்ணீர் வந்து போனது மட்டுமே*
> *தெரிந்தது எனது இன்றைய விடியலுக்கு!*
> **
> *அந்நேரம்*
> *தூரத்தில் *
> *காரணம் அறியாமல் *
> *அழுதுகொண்டிருந்தது*
> *ஒரு பிஞ்சு குழந்தை...*
>

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)