Thursday, February 26, 2009

கருணை இல்லம்

கருணை இல்லத்தின் முகப்பு காட்டப்படுகிறது. பெயர்ப்பலகையில் "எய்ட்ஸ்
நோயால் கைவிடப்பட்டவர்களுக்கான கடைசி புகலிடம்"-என எழுதப்பட்டிருக்கிறது.
அந்த எழுத்துகோர்வைக்கு இடையே எட்டு வயது சிறுவன் ஒருவன் சிரிப்பது போன்ற
படம் வரையப்பட்டுள்ளது.

-cut-

காட்சி:1A கருணை இல்லத்தின்
விழா அரங்கம்/ பகல்/

பெருவாரியான மக்கள் கூட்டம் கைத்தட்டுவதிலிருந்து காட்சி துவங்குகிறது.
அவர்களை காட்டிக்கொண்டேவர- அவர்களின் மீது மேடையிலிருந்து பேசும்
ஒருவரின் உரை எதிரொலிக்கிறது.

குரல்: அன்பானவர்களே..நொடிந்துபோனவர்களை காக்கும் இந்த அரிய முயற்சியை
மேற்கொண்டிருக்கும் அருட்தந்தை.பால் ஆர்தர் அவர்களின் சேவையை பாராட்டி
நம் அமைப்பின் சார்பாக வசூலிக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்க்கான
காசோலையை,அருட்தந்தை அவர்கள் பெற்றுக்கொள்ள அவரை உங்கள் ஒவ்வொருவரின்
சார்பாக அன்போடு மேடைக்கு அழைக்கிறோம்.

கூட்டம் மீண்டும் கைத்தட்டுகிறது - தள்ளாடும் நடையோடு நடந்துவருகிறார்
பால் ஆர்தர்.
கூட்டத்தில் கூடியிருக்கும் குழந்தைகள் அவர் வருவதை பார்த்து மகிழ்வோடு
கைதட்டுகின்றனர்.
பால் ஆர்தர் அவர்களைப்பார்த்து கை அசைக்கிறார்.

மேடையில் தரப்படும் காசோலையை அவர் வாங்கிக்கொள்ள - மீண்டும் அரங்கத்தின்
உற்சாகம்.
பின்னணி குரல்: இப்போது அருட்தந்தை அவர்கள் நம்மிடம் சில வார்த்தைகள்
பேசுவார்கள்.

பால் ஆர்தர் போடியத்தில் நின்ற படி : உயிர்கொல்லி நோய் இந்த பிஞ்சுகளை
உண்ணுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஓடி விளயாட வேண்டிய வயதில் யாரோ செய்த
தவறுகளுக்காக தம் வாழ்வையே இழந்து தவிப்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத
இந்த பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றுவதை என் வாழ்வின் பணியாக செய்கிறேன்.
நீங்கள் தோள் தருகிறீர்கள். இதிலிருந்து வெளியேற இன்னும் அதிக
விழிப்பும்., வலியை துடைக்க இன்னும் பொருளும் தேவைப் படுகிறது. உதவிய
உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.

கலங்கிய கண்களோடு அவர் பேசுவது ஒலி இல்லாமல் தொடர்கிறது-
பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் பல்வேறு காட்சிகளைக்காட்டி
கொண்டேவந்து....

-cut-


காட்சி :2 வெளியிடம்/பூங்கா/ பகல்/

தெளிந்த நீலவானத்தைக் காட்டிகொண்டே வந்து..-மரங்கள் அட்ர்ந்த பூங்காவின்
பசுமையோடு அத்தனை அழகையும் காடியபடியே காமிரா வல்து புறமாய் திரும்ப -
பால் ஆர்தர் நடந்துவருகிறார்.
அங்கு ஏற்கனவே தயாராக நின்றிருக்கும் பெண் நிருபர் அவரை நெருங்கி..

நிருபர்: ஃபாதர் உங்கக்கிட்ட இன்னொரு கேள்வி...

பால் ஆர்தர் புன்னகைகிறார்.

நிருபர்: இப்படியொரு அமைப்பை துவங்க உங்களுக்கு தூண்டுகோலாக அமைந்த
நிகழ்ச்சி எது..? அதை எங்களோட பகிர்ந்துக்க முடியுமா..ஃபாதர்..?

பால் ஆர்தர் மீண்டும் சிரித்தபடியே - கையில் வைத்த்ருக்கும் பைபிள்
புத்தகத்தை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள - அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு.

தேவாலயமணி ஒலிக்க - கைகளை விரித்த ஏசுவின் விரித்த கைகளுடன் கூடிய சிலை.
தேவாலய கோபுரம் - சிறகடித்து பறக்கும் பறவைகள் - எரியும் மெழுகு வர்த்தி-
போன்றவைகள் அடுத்தடுத்து காட்டப்பட்டு- கருணை இல்லத்தின் முகப்பு பெயர்
பலகையும் -அதில் உள்ள சிறுவனின் முகம்.
காமரா அந்த சிறுவனின் முகத்தை நெருங்கி அவன் சிரிப்பை மிகவும்
அருகாமையில் காட்டுகிறது.

-cut-


காட்சி:3 flashback
வெளியிடம்/ மருதுவமனையின் முகப்பு/சாலை

அந்த சிறுவனின் முகத்திலிருந்தே காட்சி விரிகிறது- காட்சி பின்னோக்கிவர
அவன் நின்றிருக்கும் இடம் போக்குவரத்து மிகுந்த சாலையின் ஒரு பகுதி-
தாம்பரம் நெஞ்சகனோய் மருத்துவமனையின் முகப்பு எதிரில் தெரிகிறது. மக்கள்
போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறார்கள் - சாலையில் வாகனங்கள் சீறி
பாய்கின்றன.அவை எழுப்பும் ஹாரன் சத்தம் சிறுவனின் முகத்தில்
எதிரொலிக்கிறது.

பின்னணியில் பால் ஆர்தரின் குரல்:
பாபுவை முதன்முதலா நான் அங்கதான் சந்திச்சேன். அந்த சந்திப்புதான் என்
வாழ்க்கையையே மாத்துச்சி. எனக்கு திருமணம் முடிக்கறதுக்காக எனக்கு
பார்த்து நிச்சயமான மேரியோட வீடு அங்கதான் இருந்துச்சி. ஒவ்வொரு வாரமும்
ஞாயிற்று கிழமைகள்ல அவங்க வீட்டுக்கு போவேன்...அப்படியொரு நாள்
போனப்பதான்...

என்ற பால் ஆர்தரின் குரல் ஒலிக்கையில்-
அதன் காட்சி விரிவாய்- பாபு ஒரு புறம் திரும்பி பார்க்க- அங்கே ஒரு
ஓட்டலில் தோசைக்கல்லின் மேல் முட்டை உடைத்து ஊற்றப்படுகிறது. பாபு
பார்க்கிறான். சாலையோரம் ஒரு மாடு- வாழைப்பழத் தோலை சுவைக்கிறது -
பரோட்டா மாஸ்டர் ஆவி பறக்கும் பரோட்டாவை இரண்டு கைகளில் கொத்தாய் எடுத்து
தட்டுகிறான்.
ஓட்டலுக்கு வெளியே கிடக்கும் எச்சிலைகளை சுற்றி நாய்கள்
தின்றுகொண்டிருக்கின்றன. பாபு பார்த்தவண்ணம் அங்கிருந்து நகர்ந்து - ஒரு
பெட்டி கடையில் தனக்கு முதுகு காட்டி நின்றிருக்கும் ஒருவரை பின்பக்கமாய்
நெருங்கி- அவரது கீழ் முதுகில் தன் கைவிரல்களால் தொட்டு அழைக்கிறான்.

இருபத்தைந்து வயது உருவத்தில் பால் ஆர்தர் திரும்பி பார்க்கிறார்.
பாபுவைப் பார்த்து - விழிகளை உயர்த்தி "என்ன"- என்பது போல் கேட்கிறார்.
பாபு பெட்டி கடையின் திசையில் கையை காடுகிறான். அவன் காட்டிய திசையில் -
முறுக்குகளால் நிரம்பிய பாட்டில் தெரிகிறது.
பால் ஆர்தர் புன்னகைக்கிறார். அவரது புன்னகையை சட்டென
எதிர்கொள்ளத்தெரியாத பாபுவும் சற்று யோசித்து பின் சிரிக்கிறான்.

கடைக்காரன் நான்கு முறுக்குகளை எடுத்து தர - பால் ஆர்தர் வாங்கி
சிறுவனிடம் தர- பாபு அதை வாங்கிக் கொண்டு - குதிரையில் போகும் இளவரசனைப்
போல் -குதித்து ஓடுகிறான்.
பால் ஆர்தர் அவன் ஓடுவதை ரசிக்கிறார்.

-cut to-


காட்சி:3A
பூங்கா

ஃபாதர் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்க -அருகில் நிருபர்.

பால் ஆர்தர்: அவன் அன்னிக்கு ஓடின ஓட்டம் இன்னும் கண்ணுலியே இருக்கு.
அதுக்கு அடுத்த வாரமும் என் வருங்கால மனைவி மேரி வீட்டுக்கு
போயிருந்தேன்.

-cut to-

காட்சி:4 வெளியிடம்/ சாலை/ காட்சி 3 நடந்த அதே
இடம்/

சாலையோர மைல்கல்லின் மீது தன் கன்னங்களில் கைகளை முட்டுக் கொடுத்து பாபு
எங்கோ வெறித்து பார்த்து க்கொண்டிருக்கிறான். அவனது தலை
கலைந்திருக்கிறது. ஆடை முன்பைவிட அழுக்காகி இருக்கிறது.
வாகனங்கள் வலதும் இடதுமாய் செலவதற்கேற்ப அவனது முகமும் - ஒத்திசைந்து
-வலதிடதாய் அசைகிறது- ஒரு நிலையில் அவன் இடது புறம் முழுமையாய் திரும்ப -
பாபுவின் முகத்தில் மலர்ச்சி. அங்கே யாரோ ஒருவரோடு பேசிக்கொண்டு பால்
ஆர்தர் வந்துகொண்டிருக்கிறார்.

பாபு குதிரைபோல் ஓடிவந்து- அவரது கையை பற்றுகிறான் - புன்னகைக்கிறான்
-பால் ஆர்தரும் புன்னகிக்கிறார்.
கூட வந்திருப்பவ்ரின் முகத்தில் குழப்பம்.
மருத்துவமனை முகப்பு சாலையில் வாகனங்கள் இரைச்சலோடு சீறுகின்றன.
மீண்டும் பால் ஆர்தரின் புன்னகைத்த முகம்- அவரது point of view ல்
பாபுவின் குதிரைஓட்டம் கையில் முறுக்கு.

-cut to-

காட்சி: 4A
பூங்கா/ வெளியிடம்/

நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டத்தின் நடைபாதையில் - பால் ஆர்தரும்
நிருபரும் மௌனமாய் நடந்து வருகிறார்கள்.
அருகாமையில் புல்வெளியில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைளில் சிலர் -
"குட் மார்னிங்க் ஃபாதர்.."என்கிறார்கள்.
"வெரி குட்மார்னிங்க்..."என பதில் சொல்லும் பால் ஆர்தர்- நிருபரின்
பக்கம் திரும்பி-

பால் ஆர்தர்: இதே மாதிரி மூனு நாலு முறை தொடர்ந்து நாங்க
சந்திச்சிக்கிட்டோம். அத்த்னை முறையும் முறுக்குதான்...ஆனா ஒரு விஷயம்
பாபுவொட நிலையில் மாற்றம் திடீர்னு ஒரு நாள் சட்டை இல்லாம வெறும் உடம்போட
பார்த்தப்பதான் எனக்கு ஏதோ விபரீதம்னு தோணுச்சி. அவனை தெளிவா நிறுத்தி
வச்சி கேட்டேன்.

-cut to-

காட்சி:5 தனியிடம்

பாபு கடுக்கு முடுக்கென்று முறுக்கை கடித்து திங்கிறான்.
பால் ஆர்தர்: உன் பேர் என்ன..
பாபு: பாபு...
பால்: சரி உங்க வீடு எங்க இருக்கு..?
பாபு: ரொம்ப தூரத்துல இருக்கு..
பால்:தூரத்துலன்னா...
பாபு: மலைக்கு அந்த பக்கம்...
பால் ஆர்தரின் முகத்தில் குழப்பம்- பின்னாலிருந்து குரல் வருகிறது.

பரோட்டா மாஸ்டர்:சார்..யார் கேட்டாலும் இத்தையேதான்
சொல்றான்...ஆசுபத்திரிக்கு வந்த யாரோ விட்டுட்டு போயிட்டாங்க போல...
அந்த ஆள் தன் பணியில் மும்முரமாக- அவனையே பார்த்துக்கொண்டிருந்த பால்
ஆர்தர் பாபுவின் பக்கம் திரும்பி
பால் : உன் அப்பா அம்மா எங்க..?
பாபு : முறுக்கு வேணும்னு கேட்டேன்...இங்கியே இரு வாங்கியாரேன்னு
போனாங்க...இன்னும் வரல...
சொல்லி முறுக்கு வைத்திருந்த கைகளை உதறிக் கொள்கிறான்.
பால் ஆர்தர் சாலையை வெறிக்கிறார்- வாகனங்கள் விரைகின்றன- கடந்துபோகும்
ஒரு காரில் - ஒரு அழகான நாய் குட்டி தெரிகிறது.
பாபு அந்த நாயை பால் ஆர்தருக்கு காட்டி சிரிக்கிறான்.

-cut to -


காட்சி :5A
பூங்கா/ வெளியிடம்/ half-way opening

பால் ஆர்தர் : அதுக்கப்புறம் பாபுவை அங்கவிட என் மனசு கேக்கல..
நிருபர் : என்ன செய்தீங்க ஃபாதர்...போலிஸ்ஸ்டேஷன் கூட்டிட்டு போயிட்டீங்களா..?
பால் ஆர்தர் சிரிக்கிறார்.

-cut to -

காட்சி :6 பால் ஆர்தர் வீடு/ உள்ளே/ இரவு
half-way opening


சமையலறையில் -எரியும் அடுப்பின் மீது தொப்பென்று ஓசை எழும்ப பால்
ஆர்தரின் அம்மா -ஒரு பாத்திரத்தை வைக்கிறார்.
தனல்விட்டு எரியும் அடுப்பின் நெருப்பை -காட்சி நெருங்கி காட்டுகிறது
பின்னணியில் அம்மாவின் குரல் ; சின்ன வயசுல
ஸ்கூலுக்கு போயிட்டு திரும்பி வர்றப்ப ரோட்ல கிடந்த நாயை கொண்டுவந்தான்
வச்சுக்கிட்டோம். இப்ப இவனுக்கு கல்யாணம் பேசிமுடிவு
செஞ்சிருக்கோம்...இந்த நேரத்துல தெருவுல கிடந்த யாரோ ஒரு தருதலைய
வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்...நாயும் மனுஷனும் ஒன்னா...
எரியும் நெருப்பிலிருந்து காட்சி சற்று உயர்ந்து பாத்திரத்தின் மேல்
காட்ட- உலையில் ஏதோ ஒன்று தகதகவென கொதிக்கிறது.

-cut to-

காட்சி :6A
பூங்கா/ வெளியிடம்

நிருபர் : ஓ...பாபுவை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டீங்க....
பால் : யெஸ்...அவனை ஒரு அன்னியனா என்னால பார்க்க முடியல கர்த்தர் போட்ட
உத்தரவா நெனச்சி அதை செய்தேன்னு சொல்றதைவிட நான் நானா இருக்கணும்னு
ஆசைப்பட்டேன்...தொடர்ந்து நிறைய பிரச்சினைகள்..
நிருபர் : கல்யாணம் என்ன ஃபாதர் ஆச்சு..?

-cut to -

காட்சி ;7 பால் ஆர்தர் வீடு / மொட்டைமாடி /பகல்
half-way opening

பால் ஆர்தரின் அம்மா : ம்ம்...நின்னு போச்சு..இருபத்தஞ்சு பவுன் நகை,
மோட்டர் சைக்கிள்., எல்லாம் போச்சு.
வீட்டுக்கு வந்த கழிசடையால...மருமக வர்றது
நின்னுப்போச்சு...டேய்...மரியாதையா சொல்றேன் அந்த அனாதையை எங்கியாச்சும்
கொண்டு போயி விட்டுடு...
பால் ஆர்தர் : என்னால முடியாதும்மா..பாபுவையும் ஏத்துக்கிட்டு எனக்கு
பொண்ணு தர்ற்வங்க யாராச்சும் இருந்தா
பாரு..இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்....
கோபமாக சொல்லிவிட்டு பால் ஆர்தர் அங்கிருந்து கீழே போகிறான் -அம்மா
கத்துவது கேட்கிறது..
அம்மா : வயிறு எரிஞ்சி சொல்றேன்..நீயும் நல்லா இருக்க மாட்ட...நீ
கூட்டினு வந்திருக்கியே ஒரு சனியன்..அதுவும் நல்லா இருக்காது நாசமா
போயிடும்...
பால் ஆர்தர் பாபு இருக்கும் அறைக்குள் வருகிறான்- அதிர்ச்சி- பாபு வாயில்
ரத்தம் வழிய -துடித்துக்கொண்டிருக்கிறான்.

(silence) பால்- பாபுவை மடியில் ஏந்தி- அவனை உலுக்கி- துடிக்கிறான்.
முகத்தில் தண்ணீர் தெளிக்கிறான்- அணைத்துக்கொண்டு அழுகிறான்.
பின்னணியில் பால் ஆர்தரின் குரல் ; யாரோ எயிட்ஸ் வந்தவங்க இவனை வளர்க்க
முடியாம் விட்டுட்டுப் பொயிட்டாங்கன்னு நெனச்சது தப்புன்னு தோணுச்சு.
பாபுவுக்கே எதாவது இருக்குமோன்னு...ஆஸ்பிடலுக்கு தூக்கிட்டு ஓடினேன்....

-cut to-

காட்சி :7 மருத்துவமனை/உட்புறம்/பகல்
half-way opening


டாக்டர் : you are right mr.pal. பாபு ஒரு மாதத்துக்கு முன்னால இங்க வந்த
பேஷண்ட்தான். திடீர்னு காணோம்..
போலி முகவரிய குடுத்துட்டு parents ஓடி போயிட்டாங்க...பாபு இப்போ ரொம்ப
முத்தின நிலையில இருக்கான்..

-cut to-

காட்சி :8 பூங்கா/வெளியிடம்/பகல்

பால் ஆர்தர் : பாபு ரொம்ப நாள் எங்கூட இல்ல. மருந்து மாத்திரை எதுவும்
வேலை செய்யாம என் மடியிலயே..ஒரு நாள்...

-cut to-
காட்சி :9 பால் ஆர்தர் வீடு / மாலை

பால் ஆர்தரின் கைகளில் பாபு துடிதுடித்து அடங்குகிறான்.
அம்மா கோபமாய் -முகத்தை சுளித்துக்கொண்டு -உள்ளறைக்குள் போகிறாள்-
பாபுவை இரு கைகளிலும் ஏந்தியபடி- வீட்டு வாயில் படியிலிருந்து இறங்கி-
தெருவில் நடக்கிறான்.
சிவந்த வான பின்னணியில்- நிழல் உருவமாய்- பாபுவை பிணமாய் ஏந்தியபடி பால்
ஆர்தர் நடக்கிறான்.

-mix to-

காட்சி :10 பூங்கா/ வெளியிடம்

நிருபரை வணங்கி - ஃபாதர் பால் ஆர்தர்-எழுந்து செல்ல
சற்றுதூரம் நடந்ததும்- ஒரு மரத்தின் பின்னாலிருந்து பாபு ஓடி வருகிறான்-
ஃபாதரை நெருங்கி அவரது கையை பற்றுகிறான்.
ஃபாதர் தனது அங்கியின் சைட் பாக்கெட்டிலிருந்து முறுக்கை எடுத்து நீட்டுகிறார்.
வாங்கிக்கொள்வதுபோல் வந்து- பாபு சட்டென - stop block ல்- மறைகிறான்.

the end

1 comment:

  1. அன்பு வற்றாத சில மனித மனங்களால் இன்னும் இந்த பூமி நிலைக்கிறது.

    ReplyDelete

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)