Tuesday, September 21, 2010

சித்தர் சிவவாக்கியர் பாடல்





*பேய்கள்கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே *
*நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா ! *
*தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால் *
*நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப்பாரும் உம்முளே.** **524*
* ** ** *
*உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ *
*அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா *
*தப்பிலிப்பொய் மானம் கெட்ட தடியனாகும் மனமேகேள்; *
*ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே.** **525*
* ** ** *
*பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதைமக்கள் தெரிகிலாது *
*இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக் *
*குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ *
*நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே?** **526*
* ** ** *
*சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத் *
*திட்டநெட்டு எழுத்தறியாது ஏங்கிநோக்கு மதிவல¦ர் *
*பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ? *
*கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்.** **527*
* ** ** *
*வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே *
*காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ? *
*ஆதிநாதன் வெண்ணெயுண்ட அவனிருக்க நம்முளே *
*கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.** **528*
* ** ** *
*பரம்இலாதது எவ்விடம்? பரம் இருப்பது எவ்விடம்? *
*அறம் இலாத பாவிகட்குப் பரம்இலை அஃது உண்மையே; *
*கரம் இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது *
*பரம் இலாத சூன்யமாகும் பாழ் நரகம் ஆகுமே.** **529*
* ** ** *
*மாதர் தோள்சேராத தேவர் மானிலத்தில் இல்லையே ! *
*மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ் சிறக்குமே *
*மாதராகுஞ் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால் *
*மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே.** **530*
* ** ** *
*சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள் ! *
*சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர்** ** *
*சித்தர் இங்கு இருந்தும் என்னபித்தன் நாட்டிருப்பரே; *
*அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெ லாமொன்றே.** **531*
* ** ** *
*மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே *
*சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல் *
*வேந்தன் ஆகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம் *
*கூந்தலம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாதுஇஃது *
* உண்மையே.** **532*
* ** ** *
*சருகருந்தி நீர் குடித்துச் சாரல்வாழ் தவசிகாள் ! *
*சருகருத்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே; *
*வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல் *
*வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.** **533*
* ** ** *
*காடுமேடு குன்றுபள்ளம் கானின் ஆறகற்றியும் *
*நாடு தேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ? *
*கூடுவிட்டு அகன்றுஉன் ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால் *
*வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே.** **534*
* ** ** *
*கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும் *
*மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும் *
*சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும் *
*வெட்ட வெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.** **535*
* ** ** *
*தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் *
*பொங்கல் வைத்து ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட *
*நங்கச் சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் *
*உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே.** **536*
* ** ** *
*ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை *
*மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர் *
*பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர் *
*காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே.** **537*
* ** ** *
*நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம் *
*வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர் தம் இட்டுமே *
*மோசம் பொய்புனை சுருட்டு முற்றிலும்செய் மூடர்காள் ! *
*வேசரிக ளம்புரண்ட வெண்ணீறாகும் மேனியே.** **538*
*
*
*வாதம் செய்வேன் வௌ¢ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும் *
*போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தாவெனச் *
*சாதனை செய் தெத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே *
*காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.** **539*
* ** ** *
*யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார் *
*வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார் *
*மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின் *
*பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.** **540*
* ** ** *
*காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட *
*மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர் *
*நேயமாக் கஞ்சா அடித்து நேர் அபினைத் தின்பதால் *
*நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.** **541*
* ** ** *
*நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று *
*ஊரினில் பறை அடித்து உதாரியாய்த் திரிபவர் *
*சீரினில் உனக்கு ஞான சித்திசெய்வேன் பாரென *
*நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார்.** **542*
* ** ** *
*காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் *
*தாவுருத்தி ராட்சம் யோகத் தண்டு கொண்ட மாடுகள் *
*தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே *
*பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே.** **543*
* ** ** *
*முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனச் *
*சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர் *
*நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே *
*பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே.** **544*
* ** ** *
*செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர் *
*கொம்மையற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர் *
*நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல் *
*இம்மளமும் மும்மளமும் எம்மளமும் அல்லவே.** **545*
* ** ** *
*எத்திசை எங்கு எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில் *
*சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ?** ** *
*பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள் ! *
*முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே.** **546*
* ** ** *
*கல்லு வௌ¢ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில் *
*வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில் *
*தொல்லைஅற் றிடப்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர் *
*இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே.** **547*
* ** ** *
*இச்சகம் சனித்ததுவும் ஈசன்ஐந்து எழுத்திலே *
*மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்து எழுத்திலே *
*உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல் அஞ்செழுத்திலே *
*நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்தெழுத்திலே.** **548*
* ** ** *
*சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால் *
*நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்கள் ! *
*பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல் *
*சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே.** **549*
* ** ** *
*மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள் *
*சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத் *
*தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர் *
*இனமதில் பலர்கள் வையும்; இன்பம் அற்ற பாவிகள்.** **550*
* ** ** *
*சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம் *
*சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம் *
*சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம் *
*சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.** **551*
*
*
*சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் முற்று பெற்றன*
*அடுத்து வருவது பட்டினத்தார் பாடல்கள்Bookmark and Share

Wednesday, September 1, 2010

Beauty of Tamil



Bookmark and Share

பதினெண் சித்தர் யார் யார்?

சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண் சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?


1. திருமூலர்,
2. இராமதேவர்,
3. கும்பமுனி,
4. இடைக்காடர்,
5. தன்வந்திரி,
6. வான்மீகி,
7. கமலமுனி,
8. போகநாதர்,
9. குதம்பைச் சித்தர்,
10. மச்சமுனி,
11. கொங்கணர்,
12, பதஞ்சலி,
13. நந்திதேவர்,
14. போதகுரு,
15. பாம்பாட்டிச் சித்தர்.
16. சட்டைமுனி,
17. சுந்தரானந்த தேவர்,
18. கோரக்கர்.

Bookmark and Share

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)