Thursday, August 27, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு!

“பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறைஆ கமலங்கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.”


“உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளி யாவன்?
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த
உலகமுதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும்பஞ்செனமாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவு மருப்புக் கணபதிபொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.”

மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர்க்கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம்

TO CONTINUE READING...CLICK HERE




Bookmark and Share

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை

“மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன்நீர் இடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.”

நிலம் ஐந்து குணங்களை உடையது. நீர் நான்கு குணங்களை உடையது. தீ மூவகைப்படும்.
காற்று இரண்டு வகை. விண் ஒன்றே ஒன்று. இவை அத்தனையாகவும் கணபதி இருக்கின்றான்.
ஐந்து குணங்களை உள்ள பூமியின் தன்மையாகவும், நான்கு குணங்கள் உள்ள நீராகவும்,
மூன்று குணங்கள் உள்ள அக்னியாகவும், இரண்டு தன்மை கொண்ட காற்றாகவும்,
ஆகாயத்திலே இவை அனைத்தும் சேர்ந்த ஒன்றாகவும் பிரகாசிக்கின்றான் கணபதி. அத்தகைய
கணபதியின் அன்பான திருவடிகளைப் போற்றி வாழ்த்தி சரணம் அடைகின்றோம்.

“பாச அறிவில் பசு அறிவில்
பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.”

பந்த பாசங்களினாலும், ஞான அறிவினாலும் அறிய முடியாத பரம்பொருளான விநாயகன்
அத்தகைய பாசமாகிய அறிவையும், நமக்கு வேண்டிய பசுவாகிய அறிவையும் நம்மைப்
பயிலும்படிப் பணிக்கின்றான். அவனாலேயே இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைப்
புரிந்துகொண்டு ஞானத்தை நாம் நாட முடிகிறது. இத்தகைய பந்தபாசங்களையும் அகற்றி
நம் ஜீவனை ஞானத்தின்பால் செலுத்தி ஞான அருள் வழங்கும் தலைவனாக விளங்கும்
கணபதியை வாயார வாழ்த்திச் சரணம் அடைகின்றோம்.

“இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்றுதினம் மும்மைச்
சந்திகளில் தோத்திரஞ்செயினும்
சகல கரும சித்தி பெறும்
சிந்தை மகிழச் சுகம் பெறும் எண்
தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர் எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்”

TO CONTINUE READING...CLICK HERE




Bookmark and Share

அமரர்கள் தொழுதெழ அலைகடல்

அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2823) திருவாய்மொழி

திருக்குருகூர்தனிச் சிறப்புப் பெற்ற தலம். இதுவும் நெல்லை திருச்செந்தூர் சாலையில் தான்
உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்குக்கிழக்கே கிட்டத் தட்ட ஐந்து கிமீ தூரத்தில்
தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது. பெருமான் ஆதியில் இங்கே தான் ஆசை கொண்டு
இருந்தபடியால் அவர் பெயரும் ஆதிநாதர். நின்ற திருக்கோலத்தில் காட்சி
கொடுக்கிறார். கிழக்கே பார்த்துக் கொண்டு “பொலிந்து நின்ற பிரான்” என்ற பெயரைத்
தாங்கிக் கொண்டு கோவிந்த விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். தாயார்
ஆதிநாயகி, குருகூர் நாயகி. பிரம்மாவிற்குப் பிரத்யட்சம் எனச் சொல்லப் படும்
இந்த க்ஷேத்திரம் நம்மாழ்வாரின் திரு அவதாரத்தின் பின்னே ஆழ்வார்திருநகரி என்ற
பெயரிலேயே வழங்கப் படுகிறது. ஹரி க்ஷேத்திரங்களுள் ஸ்ரீமந்நாராயணன் இங்கேயே
முதன் முதல் அவதரித்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ நம்மாழ்வாரின் அவதார மகிமை
பற்றிப் பார்ப்போமா??

ஸ்ரீவைகுண்டம், அருகிலே இரு தேவியரும் இருக்க, கருடனும், ஆதிசேஷனும்
இருக்கையில் பெருமான் சொல்கின்றார். “நீங்கள் எல்லாரும் பூமியில்
போய்ப்பிறக்கவேண்டும். வேதங்களைத் தமிழாக்கி, திவ்யப்ப்ரபந்தங்கள் என்னும்
பெயரிலே அருளிச் செய்யவேண்டிய காரியம் இருக்கிறது. எங்கே நம் சேனை முதலியார்???
விஷ்வக்சேனர்? அவர் தான் இந்தக் காரியம் செய்ய வல்லவர். அவர் பூமியில் சடத்தை
வென்ற சடகோபனாய்ப் பிறக்கவேண்டும் . ஆதிசேஷா, நீ புளியமரமாகப் போய் இருப்பாய்!
கருடா, நீ மதுரகவி என்னும் பெயரிலே ஒரு ஆழ்வாராகப் பிறந்து, சடகோபனின் பெருமையை
உணர்ந்து, அவரின் சிஷ்யனாக மாறி, சடகோபரின் பெருமையை உலகு அறியச் செய்வாய்!
அத்தோடு அனைத்து ஆழ்வார்களின் பாடல்களும் அறியப் படவேண்டும்.” என்று சொன்னார்.

TO CONTINUE READING...CLICK HERE




Bookmark and Share

குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே

வாழ்க்கைப் போராட்டத்தில் ஓடியாடி வேலை செய்து களைத்த உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரவென்றே சிறந்த பல சுற்றுலாத் தலங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இத்த்தலத்தில் சித்தாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, தாமிரபரணி ஆகிய நதிகள் உற்பத்தியாகின்றன. இங்கே இருக்கும் அருவிகளில் குளிக்கையில் அருவி நீரில் கலந்துள்ள பலவிதமான மூலிகைகளின் சிறப்பால் உடலுக்கு ஏற்படும் மகிழ்வும் தெம்பும் அளவிடற்கரியவை என்று இங்கே வந்து அருவிக் குளியலை அனுபவித்தவர்கள் கூறுகின்றனர்.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்

TO CONTINUE READING...CLICK HERE




Bookmark and Share

ஒருநாள் நானாவேன்..

நீருக்கு ஏற்ப வளைந்துபின்
நிமிர்ந்து நிற்கும் நாணலே...

*உன்னைப்போல நானல்ல !*

வளைவதாலேயே நானிங்கு
வீழ்ந்து போகிறேன் நாணலே...

*உன்னைப்போல நானல்ல !*

விறைத்து நிற்பாய் நானென்றே
வில்லில் பூட்டிய நாணே...

*உன்னைப்போல நானல்ல !*

நிமிர்ந்து நின்றால் தானே - இன்று
உதிர்ந்து மறைவேன் நானே...

TO CONTINUE READING...CLICK HERE




Bookmark and Share

Wednesday, August 26, 2009

சன்னல் நடுவே உன் முகம்

இதோ சன்னல் வழியே உன் முகம் .
புன் சிரிப்புடன் எட்டிப்பார்க்கிறாய். .
கலகலவென்று சிரிக்கிறாய்.
அச்சிரிப்பில் நான் மயங்கிப்போகிறேன்.
வெளிவேலையும் மறக்கிறேன் .
இதயத்தில் ஒரு துடிதுடிப்பு
உன்னை அள்ளத் தவிக்கிறேன் .
உன் வீடு வரத்துடிக்கிறேன்


நடுவில் பாதி முகம் காட்டுவது ஏன் ?
சன்னல்திரையில் மறைவது ஏன் ?
ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பது ஏன் ?
தெருவில் போகும் கார்கள் மட்டும்
உன்னை மிகவும் கவர்வது ஏன் ?
திடீரென்று நிலவு போல்
முகம் மலர்ந்து கைக்கொட்டுவதேன்?
உன் தந்தை வருவதைப்பார்த்துத்தானோ......
இந்தக்குதி குதிப்பது ஏனோ?

TO CONTINUE READING...CLICK HERE




Bookmark and Share

விநாயகர் பிறந்தநாள்

“மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர்க்கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.”

விநாயகர் இல்லாத கோயில்களே இல்லை. விநாயகருக்கெனத் தனிக் கோயில்களும் உண்டு.
அப்படி தலங்கள் தோறும் பலவிதமான மூர்த்தவடிவில் கோயில் கொண்டிருப்பவரும்,
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நீர் கொண்ட தீர்த்தங்களாய்த்
திகழ்பவரும், நம்முடைய அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும் கருணையே
வடிவானவரும் ஆன கணபதியின் பாதங்களைப் புகழ்ந்து பாடிச் சரண் அடைகின்றோம்.

TO CONTINUE READING...CLICK HERE




Bookmark and Share

Tuesday, August 25, 2009

ஒரு குழந்தை ஆவணி மாதத்தில் மாதக்கடைசியில் பிறந்தால்

சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் இருப்பார் பின் வைகாசியில்
ரிஷபம் ,ஆனியில் மிதுனம் ஆடியில் கடகம்
ஆவணியில் சிம்மம் என்று போய் பங்குனி மாதத்தில் மீன ராசியில் வந்துவிடுவார்

ஒரு குழந்தை ஆவணி மாதத்தில் மாதக்கடைசியில் பிறந்தால்
அந்தக்குழந்தை சிம்ம லகன்மாக இருக்கும் பஞ்சாங்கத்தில் முழு
விவரம் எழுதப்பட்டிருக்கும் ஆகையால் எத்தனாவது பாகையில்
இருக்கிறது என்பதைக்கண்டுப்பிடித்தால் என்ன பாதம் என்றும் தெரிய வரும்
.அதாவது ஒரு இராசியை முப்பதாகப்பிரித்தால்
அதன் ஒவ்வொரு பாகமும் ஒரு பாகை என்கிறோம் அந்த ராசியை
ஒன்பதாகப்பகுத்தால் ஒவ்வொரு பகுதியும் ஒரு நட்சத்திர பாதம் என்கிறோம்
பஞ்சாங்கத்தில் இந்த table கொடுத்திருப்பதால் நாம் மிக எளிதாக இதை
எழுதிவிடலாம்

TO CONTINUE READING...CLICK HERE




Bookmark and Share

Saturday, August 22, 2009

என் சொத்து ,,,,,

என் தாயின் முந்தானை
இதோ இந்தப் பெட்டியில் ,
இதுதான் என் கோயில்
இதுவே என் தெய்வம்
குழந்தைப் பருவம்,
பல முறை கக்கல் .
அம்மாவின் புடவையில் .
முகம் சுளிக்காமல்
துடைத்தது அந்தக் கை

இரண்டு வயது பாலகன் ,
மழையில் நனைந்தேன்
வந்தன தும்மல்கள்,
மூக்கொழுகி நின்றேன்
கைக்கொடுத்தது
அம்மாவின் முந்தானை
அன்பாக துடைத்து .

கடும் சுரம் வந்தது ,
இடுப்பில் அள்ளிக்கொண்டாள்
ஓடினாள் டாக்டரிடம்
நடுவில் வாந்தி எடுத்தேன் ,
தன் தலைப்பில் ஏந்தினாள்
முகத்தில் சுளிப்பில்லை
அதில் ஒரு சலிப்புமில்லை

கிரிக்கெட் மேட்ச்சில்
செயித்து வந்தேன் ,
பெருமையுடன் பார்த்தாள்
வியர்வை ஒழுக நின்றேன் ,
ஒத்தி எடுத்தாள்,
தன் முந்தானையால் .
என் திருமணம் ஆனது
எனக்குச் செய்ததை அவள்,
தன் பேரனுக்குச் செய்தாள் ,,
அவள் முகம் சுளுக்காமல் .

இன்று அவள் இல்லை .
நைந்துப் போன் புடவையில்
அவளை நான் பார்க்கிறேன் .
என்ன தியாகம் ! என்ன அன்பு !
கோடிக்கோடி கொடுத்தாலும்
அம்மாவை வாங்க முடியுமா?
அவள் இடத்தை நிரப்ப முடியுமா ?



Bookmark and Share

பொங்கி வரும் பெரு நிலவு

"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்!
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!

என்று பாவேந்தர் பாரதிதாசன் வியந்து போற்றி மகிழ்ந்து பாடிய வெண்ணிலா விண்ணில் நிலவும் இரவுப் பொழுதினை ரசித்து மகிழாத கவிகளுமில்லை காதலர்களுமில்லை. குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் மனதுக்கினிய வஸ்து ஒன்றுண்டென்னில் அது வானத்தில் மிதந்து வரும் நிலவன்றி வேறில்லை.

குறிப்பாகக் காதல் வயப்பட்ட இளைஞன் ஒருவன் அக்குளிர் நிலவை விண்ணில் மட்டுமன்றி நேரில் தங்கள் காதலியின் முகத்திலும் கண்டு மகிழ்கிறான்.

"பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்"

என்று இக்கருத்தை ஏற்றிச் சொல்கிறார் மஹாகவி பாரதி.

வானிலே வரும் வெண்ணிலவு தன் காதலி வடிவில் வாழ்வில் தன்னுடன் வந்தால் ஒருவனுக்கு அதனை விடவும் வேறேது சொர்க்கம்?




Bookmark and Share

Wednesday, August 19, 2009

"வெஸ்டர்ன் கல்சர்"

"வெஸ்டர்ன் கல்சர்" எனப்படும் அயல் நாட்டு நாகரிகத்தின் மேல் நம் நாட்டவருக்குள்ள மோகம் என்பது இன்று புதிதாய் ஏற்பட்டதல்ல. இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் அடியெடுத்து வைத்த நாளிலேயே துவங்கி வளர்ந்து படிப்படியாக நமது நாட்டையே அவர்களது கையில் தூக்கிக் கொடுக்கும் அபாயகரமான நிலையை உருவாக்கியது இத்தகைய மோகமே என விவரமறிந்த மூத்தவர்கள் கூறுவர்.

ஆங்கிலேயர்கள் ஊற்றிக் கொடுத்த சீமைச் சாராயத்திற்கும், பிற உல்லாச, சால்லாப விளையாட்டுக்களுக்கும் அடிமையான அந்தக் கால இந்தியப் பகுதிகளின் குறுநில மன்னர்கள் பலர் இத்தகைய ஆடம்பர நடவடிக்கைகளால் வெள்ளையருக்குப் பெரும் பணம் கடன்பட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து மீளும் நோக்கில் தமது நாட்டின் சில பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயருக்கு அளித்தனர். இத்தகைய அபாயகரமான நடவடிக்கைகள் வளர்ந்து "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது போல" ஆங்கிலேயர்கள் நமது நாட்டிலிருந்த பல குறுநில மன்னர்களைத் தந்திரமாக ஒழித்துக் கட்டி சிறுகச் சிறுக நாட்டையே கைப்பற்றினர்.

நமது நாட்டிற்கு உலகளாவிய அளவில் மிகுந்த மரியாதை இன்றும் தொடர்ந்து கிடைப்பதற்கான முக்கியக் காரணம் நமது குடும்ப அமைப்பும், சமுதாயக் கட்டுப்பாடும், உயர்ந்த கலாச்சாரமுமே ஆகும். நமது நாட்டின் பாரம்பரியம் மிக்க தொன்மை வாய்ந்த கலைகள், குறிப்பாக, இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலாய கலைகள் உலக அளவில் மிகவும் மேன்மை பெற்று விளங்குவதற்குக் காரணமும் அவற்றின் அடிப்படையான நமது கலாச்சாரமே ஆகும்.



Bookmark and Share

Monday, August 17, 2009

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்
பித்தமனிதர் அவர்சொலுஞ்சாத்திரம்
பேயுரை யாமென்றிங்கூதேடாசங்கம்

என்றார் மஹாகவி பாரதி.

சொர்க்கம், நரகம் என்று தனியாக ஏதும் கிடையாது. இவ்வுலகே சொர்க்கமும் நரகமும் ஆகும் என்பது கண்கூடு. வெயிலில் வாடும் உயிர்களுக்கு நிழல் தந்து, காற்றில் மிகுந்திருக்கும் கரியமில வாயுவை உண்டு பிராண வாயுவை உமிழ்ந்து, உயிர்கள் அனைத்தும் வாழ வழி செய்து, வான் மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைத்து, பூமியைக் குளிரச் செய்து, பயிர்கள் வளர ஏதுவாகி உலகிலுள்ளோர்க்கெல்லாம் உணவளித்துக் காக்கும் மரங்களையும் மரங்கள் மிகுந்த வனங்களையும் அழித்து, கல்லும் மண்ணும் கலந்து கட்டடங்கள் எனும் பெயரில் தம்மைத் தாமே உயிரோடு சமாதி வைத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நரகமே.

மரங்களின் அழிவினால் அதிகமாகும் உஷ்ணத்தைக் குளிர்விக்கவென்று ரெஃப்ரிஜிரேடர், ஏர் கண்டிஷனர் எனும் பெயர்களில் கண்டறிந்து பயன்படுத்தும் குளிர் சாதனப் பெட்டிகளில் பயன்படும் ரெஃப்ரிஜிரண்ட் எனும் திரவம் ஆவியாகி மேலே சென்று ஆகாயத்தில் படர்ந்து நின்று உலகை சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் காத்து ரக்ஷிக்கும் ஓசோன் படலத்தை அழிப்பதனால் உலகின் வெப்பம் மேலும் அதிகரித்து, துருவப்பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் அதிகரித்து, ஜல சமாதியாகும் வழியையும் தேடிக்கொண்ட மனிதனுக்கு இவ்வுலகம் நரகமே.

ஆறுகளில் ஆலைக்கழிவுகளை அபரிமிதமாகக் கலப்பதால் ஆற்று நீரை மட்டுமின்றி நிலத்தடி நீரையும் கொடும் விஷமாக மாற்றுவதோடு, குடிநீர் வடிகால் வாரியங்களின் மூலம் பூமிக்கடியில் நிறுவப்படும் குழாய்கள் ஓட்டையாவதால் சாக்கடை நீர் குடி நீருடன் கலந்து வர எமனை வீட்டுக்கே வரவழைத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நரகமே.

மானுடா, உனக்கு இவ்வுலகமே சொர்க்கமாக அமைய வழி தேடு, இயற்கையை அழிக்காமல் காப்பாற்று, இயற்கை உன்னை என்றென்றும் காப்பாற்றும்.



Bookmark and Share

சுக முனிவர்

சுக முனிவர் ஒரு சமயம் "கடவுளே, கடவுளே யோ!" என்று கூவிக்கொண்டு போகையில் அங்கிருந்த மலை, சுனை, மேகம், நதி, ஓடை, மரம், செடி, கொடி, மலர், பறவை, விலங்கு அனைத்தும் "ஏன்? ஏன்?" என்று கேட்டனவாம். இதைத் தாயுமானவர், "அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் 'ஏன்? ஏன்?' என்றதென்னே பராபரமே" என்று சொல்கிறார்.

"சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே?
'சொல்'லென்று ஹரண்யன் தான் உறுமிக்கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் 'தூணி லுள்ளான்,
நாராயணன் துரும்பினுள்ளா' னென்றான்,
வல்லமை சேர் கடவுளிலா இடமொன்றில்லை,
மகா சக்தி யில்லாத வஸ்து இல்லை,
அல்ல லில்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை,
அனைத்துமே தெய்வ மென்றா லல்ல லுண்டோ ?"

என்று மஹாகவி பாரதியார் சொல்கிறார்.

பக்தர்களுக்குள் நான் பிரஹலாதன் எனக் கண்ணன் தனது கீதையில் உரைக்கிறான். பிரஹலாதன் அன்பு வடிவானவன் என்பதை இரண்யன் சரித்திரத்திலிருந்து அறிகிறோம். இறைவன் இல்லாத இடமில்லை. இறைவனைக் காண வேண்டின் அகக்கண்ணைத் திறந்து வைத்து அன்பு நெறியில் செல்ல வேண்டும். அப்பொழுது இயற்கையின் ரகசியம் புரியும். அனைத்து உயிரினங்களுடனும் உள்ளுணர்வால் தொடர்பு கொள்ள இயலும். இதனையே ஆத்ம சக்தி என்பர்.



Bookmark and Share

Friday, August 14, 2009

“யார் அந்த மஹாபெரிய ரிஷி?”

நந்தனின் தந்தைக்கு சிராத்தம் நடத்தி வைக்கவேண்டி கர்காசாரியார் மதுராவில்
இருந்து வந்திருந்தார். உண்மையான காரணம் இதுவல்ல என்றாலும், வெளிப்படையாகத்
தெரிவிக்க முடியாதே? தன்னுடன் மூன்று சீடர்களையும், மரியாதைக்கும்,
பெருமதிப்புக்கும் உரிய மற்றொரு குருவான சாந்தீபனி என்பவரையும் அழைத்து
வந்திருந்தார். சாந்தீபனியோடு அவரின் மகன்களும், மற்றும் இரு சீடர்களும்
வந்திருந்தனர். நீத்தார் கடன் நல்லபடியாக முடிந்தது. மறுநாள் நந்தன்
கர்கரோடும், சாந்தீபனியோடும் பேசிக் கொண்டிருந்துவிட்டு உடனேயே கிருஷ்ணனை அங்கே
அழைத்தான். கிருஷ்ணன் ஆசாரியர்களின் பாதம் பணிந்து நமஸ்கரித்துவிட்டுக் கூப்பிய
கரங்களோடு அங்கே நின்றான். கர்கர் கிருஷ்ணனை ஆசீர்வதித்துவிட்டுச் சொன்னார்:
“கண்ணா, ஆசாரியர் சாந்தீபனி இவர் தான். இவரை உனக்காகவே இங்கே வரவழைத்தேன். இனி
இவர் இங்கேயே தங்கி உனக்கு எழுதப் படிக்கவும், ஆயுதங்களில் தேர்ச்சி பெறவும்
சொல்லிக் கொடுப்பார். “

“என் தந்தைக்கு என்ன விருப்பமோ அதே என் விருப்பமும். ஆனால் குருதேவா, நான் என்ன
யுத்தம் செய்யப் போகின்றேனா என்ன?? எனக்கு எதற்கு ஆயுதப் பயிற்சி எல்லாம்?”
கிருஷ்ணன் கேட்டான்.

நந்தன் கர்காசாரியாரைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்துவிட்டுச் சொன்னான்.
“யாருக்குத் தெரியும்? ஒரு நாள் நீ அரசனாய்க் கூட ஆகலாம்.”
“இல்லை தந்தையே, நான் உங்களுடனே இருக்கவே ஆசைப்படுகிறேன். உங்களையும் யசோதை
அம்மாவையும், இந்த பிருந்தாவனத்தையும், கோபர்கள், கோபிகள், மற்றும் நம்முடைய
பசுக்கள், கன்றுகள் இவற்றைத் துறந்து எங்கேயும் செல்ல விருப்பமில்லை எனக்கு.”

கர்கர் கொஞ்சம் யோசனையுடனேயே கண்ணனைப் பார்த்து, “நந்தகுமாரா,
மஹரிஷிகளுக்கெல்லாம் தலைவர் ஆனவர், முனிவர்களில் எல்லாம் சிறப்பு வாய்ந்தவர்,
அவர் உன்னால் தான் தேசத்தில் அமைதியும், தர்மமும் கொண்டுவரப்படவேண்டும் என்றும்
நீ இருக்குமிடத்திலேயே அவை இருக்கும் என்றும் சொல்லுகின்றார்.” என்று சொன்னார்.

“யார் அந்த மஹாபெரிய ரிஷி?” கண்ணன் கேட்டான்.
“என்ன? நீ அவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லையா? மஹான் வியாசர் தான் அவர்.
வேதவியாசர் என்றும் சொல்லுவதுண்டே அவரை?’” சாந்தீபனி இப்போது பேசினார்.

“ஓ, அவரா, பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன் அவரைப் பற்றி. குரு
கர்காசாரியார் சொல்லியுள்ளார். ஒருநாள் குருக்ஷேத்திரம் சென்று அவரை
வணங்கவேண்டும்.” கண்ணன் சொல்லுகின்றான்.

அப்போது நந்தன் குறுக்கிட்டு, “ கண்ணா, என் அருமை மகனே, உன் வேண்டுகோளை இப்போது
குரு கர்காசாரியாரும் சாந்தீபனியும் இருக்கும்போது சொல்லிவிடு. இனி நீயாச்சு,
ஆசாரியர்களாச்சு. உன்னுடைய விசித்திரமான வேண்டுகோளால் என்னால் இனி
அவதிப்படமுடியாதப்பா!” என்று பாதி கேலியாகவும், மீதி உண்மையாகவும் சொன்னான்
நந்தன். கண்ணன் ஒன்று கேட்டான், நந்தன் அதை மறுத்தான் என்பது இன்று வரை
கிடையாது. இனியும் அப்படி நேராமலிருக்குமா???

“என்ன கேட்கின்றான் கிருஷ்ணன்?” கர்கர் கேட்டார்.
“அவன் விருஷபாநுவின் மகள் ராதையை மணக்க விரும்புகிறான். உங்களுக்கு அவனைத்
தெரியும். அந்தப் பெண்ணும் கண்ணனைவிட வயதில் மூத்தவள். மேலும் அவள் ஐயனுக்கென
நிச்சயம் செய்யப் பட்டாவள். அதோடு கூட ஆசாரியரே, கண்ணன் எப்படி இருந்தாலும்
ராதையை மணக்க முடியாது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.” நந்தன் நிறுத்தினான்.

“ஏன் குருதேவா, ஏன்?” கண்ணன் கேட்டான்.

“எனெனில் அது நடக்கமுடியாத ஒன்று” குருதேவர் பதில் சொன்னார்.

“தந்தைதான் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே? ஆனால் அவள்
என்னை மணக்க விரும்புவதையும், நானும் அவளை மணக்க விரும்புகிறேன் என்பதையும்
இங்கே சொல்லுகின்றேன். என்னை மன்னியுங்கள். “

“ம்ம்ம்ம்ம்ம்?? குழந்தாய், திருமணம் என்பது சாதாரணமான ஒரு காரியம் அல்ல.
வெறும் விருப்பத்தின் பேரில் அது நடக்கவும் முடியாது. அது மாதிரி நடப்பது
என்பது தர்மத்தின் பாதையில் செல்பவர்களால் முற்றிலும் ஏற்கமுடியாத ஒன்று.
திருமணத்தில் வெறும் விருப்பத்தை மட்டும் பார்க்கமுடியாது மகனே. குடும்ப
கெளரவம், குடிப்பிறப்பு, வயது, மனோபாவம், வளர்ப்பு, எதிர்காலம் என்று எத்தனையோ
பார்க்கவேண்டும். இது சும்மா ஒருத்தரோடு ஒருத்தர் சேர்ந்து இருக்கிறது மட்டும்
இல்லை. மிகவும் புனிதமான ஒன்று. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அறமும்,
தர்மமும் கடைப்பிடித்து அதன் வழி வாழவேண்டிய முக்கியமான நோக்கம் திருமணத்தில்
உள்ளது. இருவரும் ஒரு மனதோடு ஈருடல் ஓருயிராகிக் கடைப்பிடிக்க வேண்டிய
தர்மங்கள் திருமண பந்தத்தின் மூலம் ஏற்படுகிறது.”

“திருமணம் செய்து கொள்ளுபவர்கள் அனைவருமேயா தர்மத்தின் பாதையில் அறவழியில்
செல்லுகின்றனர்? நான் விருஷபாநுவின் மகளைத் திருமணம் முடித்தால் தர்மம் எங்கே
கெட்டுப் போகும்? இதில் அதர்மம் எங்கே வந்தது? நாங்கள் கோபர்கள் தானே?
எங்களுக்கு எதற்கு இதெல்லாம்?””
கர்காசாரியார் சற்றே கவலையுடனும், யோசனையுடனும் நந்தனைப் பார்த்தார்.
“கிருஷ்ணா, தர்மங்களுக்குள்ளே மிக உயர்ந்த தர்மத்தை உன்னால் தான் காக்க
முடியும். உனக்காக அது காத்திருக்கிறது.”

கிருஷ்ணன் வியப்போடு வயது முதிர்ந்த கர்காசாரியாரைப் பார்த்தான். குரு மேலும்
சொன்னார்:” குழந்தாய், நீ பிறந்ததில் இருந்தே நான் உன்னை ஒவ்வொரு கணமும்
அறிவேன். பார்த்தும் வருகிறேன். முனிவர்களில் சிறந்த வேதவியாசரே கூறியுள்ளார்,”
இந்தப் பிள்ளையால்தான் தர்மம் காக்கப்படவேண்டும். இவன் பிறந்திருக்கும் காரணமே
அதுதான். இது கடவுளரால் ஆணையிடப் பட்ட ஒன்று. என்று சொல்லியுள்ளார்.” இவ்விதம்
சொல்லிவிட்டு கர்காசாரியார் சாந்தீபனியைப் பார்த்தார். சாந்தீபனியும் அதை
ஆமோதிக்கும் வண்ணம் தலையை ஆட்டிவிட்டு, அதன் காரணமாகவே தான் இங்கே
வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய மனிதர்களோடு தன்னுடைய விதி
பிணைக்கப் பட்டிருப்பதைக் கண்ணன் எதிர்ப்பார்க்கவில்லை. சாந்தீபனியிடம், “நான்
என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டான். “உன்னுடைய
லட்சியத்தை அடைய நீ தயாராய் இரு!” என்றார் கர்காசாரியார். கண்ணன் புரியாமல்
குழம்ப, நந்தன் மீண்டும் கண்ணசைக்கிறான் குருவிடம். உடனேயே கர்கர் மேலும்
சொல்லுகின்றார். கண்ணனுக்கு இப்போது முழு உண்மையும் தெரியவேண்டிய தருணம்
வந்துவிட்டது. அவனைத் தயார் செய்யவேண்டும். கர்காசாரியார்
முடிவெடுத்துவிட்டார்.




Bookmark and Share

ஜயஸ்ரீ ராதே கிருஷணா

நாராயணீயத்தில் ஸ்ரீ நாராயண பட்டதிரி கிருஷ்ணாவதாரத்தைக்
கண்டு களிக்கிறார் அந்தப்பகுதி கீழே .......

ஆநந்த ரூபே பகவந்நயி தே{அ}வதேரே
ப்ராப்தே ப்ரதீப்த பவதங்க நிரீயமணை:
காந்திவிரஜைரிவ கநகநமண்டலைர்த்யா
மாவ்ருண்வதி விருருசெகில வர்ஷவேலா

ஆனந்தவடிவே பகவானே உன் அவதாரத்திற்கு உரிய காலம் நெருங்கியது பெரிய
மேகங்களின் கூட்டங்கள் உன் திரு மேனியினின்றும் வெளிக்கிளம்பிய
கதிர்களின் படலங்களைப்போலத் தோன்றின அவை வான வெளியைமறைத்துக்கொண்டிருந்தன

ஆசாஸூ சீதல தராசு பயோததோயை
ராசாஸிதாப்தி விவஷேஷுச ஸஜ்ஜனேஷு
நைசாகரோதயவிதௌநிசி மதய்மாயாம்
க்லேசாபஹஸ் த்ரிஜகதாம் த்வமிஹாவிராஸி

மேகங்களின் நீரினால் திசைகள் எல்லாம் நன்றாகக் குளிர்ச்சியை
அடைந்தன நல்லோர் விரும்பியது கைகூடியதால் பெரு மகிழ்ச்சியில் தம் வயம்
இழந்தனர் அப்போது நள்ளிரவில்
சந்திரன் தோன்றுவதற்கு உரிய வேளையில் மூவுலகத்தின்
துன்பங்களை அழைப்பவனாகிய நீ இவ்வுலகில் தோன்றினாய்

பால்யஸ்ப்ருசாபி வபுஷா ததுஷா விபூதி
ருத்யத் கிரீட கடகாங்கத ஹாரபாஸா
சங்காரி வாரிஜ கதா பரிபாஸிதேன
மேகாஸ்தேந பரிலேஸித ஸூதிகேஹே;;

இளம் பருவத்தின் நிலையை அடைந்திருந்தாலும் உன் திருமேனி மிகுந்த வல்லமை
வாய்ந்தது கிரீடம் கைவளை தோள்:வங்கி முத்துமாலை முதலியவற்றின் ஒளியோடு
திகழந்தது,
சங்கு சக்கரம் தாமரைமலர் கதாயுதம் ஆகியவற்றால் பெரிதும்
விளங்கியது கருமேகம் போல் நீல நிறத்தோடுதோன்றியது அத்தகைய அழகுடன் நீ
பிறந்தாய் ,,,,,,,,

கிருஷண ஜனனம் பாகத்தைப்படித்தால் அளவில்லாத பலன்கள் எழுதப்படிருக்கிறது

அவருடைய வர்ணனை

உன் கிரீடம் ஒளியில் சூரியனோடு போட்டியிடுகின்றது நெற்றிமேல் நோக்கி
இடப்பட்ட திலகத்தால் அழகு கூடுகிறது கண்கள் அருள் நிறைந்து நிற்கின்றன
வாயில் புன்னகை கனிந்து
தவிழ்கின்றது மூக்கு வெகு தீர்க்கமாக அழகாக உள்ளது மகர குண்டலங்கள்
காதுகளில் பிரகாசிக்கின்றன கௌஸ்துப,மணி கழுத்தில் ஒளி வீசுகிறது வனமாலை
முத்துமாலை ஸ்ரீவதஸம்
மார்பில் விளங்குகின்றன இவற்றுடன் கூடிய உன் உருவத்தை நான் தியானிக்கிறேன்
ஜயஸ்ரீ ராதே கிருஷணா ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்



Bookmark and Share

துகாராம் தான் என் வாழ்க்கை

மஹாராஷ்ட்ராவில் ஸ்வாமி துக்காராம் சிவாஜி மஹாராஜின்
சமகாலத்துவர் . ஸ்ந்த் துகாராமுக்கு சில சிஷ்யர்கள் இருந்தனர் அவர்களில்
முக்கிய சிஷ்யர்கள் துகாராமின் தம்பி கான்ஹோபா
சாந்தாஜி தேலி கங்காஜி மாவல் ஷிவ்ஜி .இவர்கள் துகாராமுடன் பஜன்
கீர்த்தனுக்கு அவருடனே இருந்து பாடுவர்கள்
ஷிவ்ஜி வீட்டிலேயே இருக்காமல் அவருடனேயே சுற்றிக்கொண்டு
இருப்பது கண்டு அவள் மனவி வருந்தினாள்.
" ஏன் இப்படி வீட்டை மறந்து விட்டு அவருடன் சுற்றுகிறீர்கள் ? நம்
குடும்பம் இருப்பது தெரியவில்லையா ?' என்று ஒரு நாள் குரலை
எழுப்பிக்கேட்டாள் .
அவர் அதைப் பொருட்படுத்தவில்லை "துகாராம் தான் என் வாழ்க்கை ?என்று
சொல்லியபடியே போய்விட்டார் ஷிவ்ஜியின்
இப்போது கோபமும் வந்தது இந்தத்துகாராம் தான் எல்லாவற்றுக்கும் காரணம்
அவருக்கு எதாவது செய்யவேண்டும் என்று தன் கணவர் மூலமாக ஸ்ந்த துகாராமை
விருந்துக்கு அழைத்தாள் , அவரைக்காலையிலேயே அழைத்து அவரை
ஸ்னானம் செய்யச்சொல்லி அதற்கு வென்னீர் தயாரித்தாள்
அந்த வென்னீர் கொதிக்கும் நிலையில் இருந்தது .அதைவிட்டுக்
குளித்தால் அவ்வளவுதான் உடம்பெல்லாம் வெந்துவிடும்
ஆனால் அந்த விட்டல் ஜகத்ரக்ஷ்கனாயிற்றே துகாராமிற்கு இந்தக்
கஷ்டம் கொடுப்பானா ?அந்த வென்னீரைக்குளிர வைத்து விட்டான்
பார்த்தாள் ஷிவஜியின் மனவி ,,,,,சரி அடுத்ததாகச் சாப்பாடு ,,,
அதில் விஷத்தைக்கலக்கலாம் என்று விஷத்தைக்கலந்து
வைத்தாள் விட்டல் விஷத்தை எல்லாம் முறியடித்து நல்ல அறுசுவை சமையல்
ஆக்கினார் துகாராம் விடைப்பெற்றுக்கொண்டு போனவுடன் அவளுக்குக்குஷ்ட நோய்
வந்து அவளை அழவைத்தது
தன் தவறை உணர்ந்து கதறினாள் பின் ராமேஸ்வர் பட் என்ற
சிஷ்யரை அழைத்து ஷிவ்ஜி தன் மனைவியின் இந்த வியாதியைக் குணப்படுத்த
முடியுமா என்று கேடக அவர் சொன்னார் "துகாராம் மிதித்த மண்ணை எடுத்து
வந்து அவள்
மீது தேய்த்துவிடு நோய் நீங்கிவிடும் என்றார்
அதே போல் துகாராம் மிதித்த மண்ணை எடுத்து வந்து தினமும் தேய்க்க அவளது
குஷ்ட நோய் நீங்கியது.



Bookmark and Share

சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம்

சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் என்று சொல்லியிருந்தேன் மூலத்திரிக்கோண்
வீடும் சிம்மம் தான் இந்த நிலைமையில் அதை ஆட்சி என்று வைத்துக்கொள்வதா
?அல்லது திரிக்கோணம் என்று வைத்துக்கொள்வதா ? இதைப்பற்றி இப்போது நாம்
பர்ர்ப்போம் .ஒவ்வொரு ராசியிலும் 30 டிகிரி இருக்கின்ற்ன சிம்மத்தில்
முதல் 20 டிகிரி சூரியனின் ஆட்சி பின் வரும் பத்து டிகிரி
மூலத்திரிக்கோணம

இதே போல் சந்திரனுக்கு ரிஷப ராசியில் முதல் மூன்று டிகிரி உச்சம் மற்ற
27 டிகிரி மூலத்திரிக்கோணம்

செவ்வாய்க்கு மேஷராசியில் முதல் 12 டிகிரிமூலத்திரிக்கோணம்
பின் வரும் 18 டிகிரி ஆட்சி

புதனுக்கு கன்னிராசியில் முதல் 10 டிகிரி ஆட்சி அடுத்து வரும் 5
டிகிரி மூலத்ரிக்கோணம் மீதி உள்ள 15 டிகிரி உச்சம்

குருவுக்கு தனுசு ராசியில் முதல் 10 டிகிரி மூலத்திரிக்கோணம்
பாக்கி இருக்கும் 20 டிகிரி ஆட்சி

சுக்கிரனுக்கு துலா ராசியில் முதல் 27 டிகிரி ஆட்சி கடைசி
3 டிகிரி மூலத்திரிக்கோணம்

சனிக்கு கும்பராசியில் முதல் 20 டிகிரி மூலத்திரிக்கோணம்
பாக்கி பத்து டிகிரி ஆட்சி

கிரஹங்கள் சில ராசிகளில் மிகுந்த நட்பாகவும் சில ராசிகளில் சம்மாகவும்
சில ராசிகளில் பகையாகும் இருப்பது போல்
கிரகங்களுக்குள்ளேயும் நட்பு சமம் பகை என்பது உண்டு

சூரியனுக்கு நட்பு கிரகங்கள் சந்திரன் செவ்வாய் குரு

ப்கை கிரகங்கள் சுக்கிரன் சனி இராகு கேது

சம கிரகங்கள்,,,,,,,,,,,புதன் மட்டும்தான்

சந்திரனுக்கு நட்பு கிரகங்கள் சூரியன் புதன்

பகை கிரகங்கள் இராகு கேது

சம கிரகங்கள் செவ்வாய் சுக்கிரன் குரு சனி

செவ்வாய்க்கு நட்பு கிரகங்கள் சூரியன் சந்திரன் குரு

பகை கிரகஙகள் புதன் இராகு கேது

சம கிரகங்கள் சுக்கிரன் சனி

புதனுக்கு நட்பு கிரகங்கள் சூரியன் சந்திரன்

பகை கிரகங்கள் சந்திரன் மட்டுமே

சம கிரகங்கள் செவ்வாய் குரு சனி ராகு கேது

குருவுக்கு நட்பு கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய்

பகை கிரகங்கள் புதன் சுக்கிரன்

சம கிரகங்கள் சனி ராகு கேது

சுக்கிரனுக்கு நட்பு கிரகங்கள் புதன் சனி ராகு கேது

பகை கிரகங்கள் சூரியன் சந்திரன்

சம கிரகங்கள் செவ்வாய் குரு

சனிக்கு நட்பு கிரகங்கள் புதன் சுக்கிரன் ராகு கேது

பகை கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய்

சம கிரகங்கள் குரு மட்டுமே

ராகு கேது நட்பு கிரகங்கள் சுக்கிரன் சனி

பகை கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய்

சம கிரகங்கள் புதன் குரு



Bookmark and Share

பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு

பொதுவான செயல்பாடுகளில் பொறுமையைக் கடைபிடிக்கும் ஆண்கள் காதல் விஷயத்தில் பெரும்பாலும் அவசரக்காரர்களாக இருக்கிறார்கள். தன் மனம் கவர்ந்த ஒரு பெண்ணைப் பார்த்துத் தன் காதலை வெளியிட்டதும் உடனே அவள் தானும் அவனைக் காதலிப்பதாகக் கூற வேண்டுமென எதிர்பார்ப்பது ஒரு ஆணின் இயல்பு. இதற்கு நேர்மாறாக, பொதுவான செயல்பாடுகளில் அவசரத்தைக் காட்டும் பெண்கள் காதல் விவகாரம் என வந்துவிட்டால் வாய்மூடி மௌனிகளாகவே இருப்பது அவர்களது இயல்பு. இதற்குக் காரணம் இயற்கையாகவே பெண்களிடமுள்ள நாணம், அவர்கள் உள்ளத்தில் உண்மையிலேயே காதல் உணர்வு எழுந்தாலும் அதனை வெளிப்படுத்தத் தயங்கும் தன்மையைத் தருவதாகும்.

இயல்பாக நாண உணர்வு அதிகம் இல்லாதிருந்தபோதிலும், தன்னிடம் காதலைச் சொன்ன ஆணின் மனதை அலைபாய வைத்து வாட்டுதல் சில பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு. எங்கே அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்று சொல்லிவிடுவாளோ என்று எண்ணி தன்மேல் காதல் கொண்ட ஆண்கள் தவிக்கும் தவிப்பைக் கண்டு அளவிலா சந்தோஷமடைவார்கள் இத்தகைய பெண்கள்.



Bookmark and Share

Wednesday, August 12, 2009

* அவர்கள் அறிவதில்லை..........!!!!!*

*அவர்கள் அறிவதில்லை.......**
*
*கழுத்தில் ஜம்பமாய்....புதிதாய்... பதவியேறிய..*
*பத்துப் பவுன் தாலிக்கொடி.....!!!*
*நெஞ்சமெல்லாம்...... தான்....*
* இன்னாரின் மனைவி என்ற*
*யௌவன கர்வம்....கனக்க...*
*கிடைத்த பதவிக்குப் சான்றாய் ....*
*பலவிதத்தில்.....சொர்ணம்......*
*அவளை அணிந்திருக்க....*
*கூடிய எடையோடு.....*
*இடை பிடித்து.... அவரின் தோளில்..*
*முகம் புதைத்து....எதையோ பேசி....*
*எதற்கோ சிரித்து....மகிழ்ச்சியை...பகிரங்கமாக்கி ....... *
*காற்றுக்கு ...கிண்கிணிகளை ,,,,வாரி இறைத்து....*
*கூத்தாடும் மனசோடு......பத்து மைல் தள்ளிப் போய்.....*
*பாடாவதி சினிமா பார்க்க...கருப்பில் நுழைவுச்சீட்டு வாங்கி......*
*உலக உருண்டையை எட்டி மிதித்து விளையாடும் ...*
*பாவனையில் அவர்கள்.....!!!*
*
*
*புது மணத்தம்பதிகளை......*
*திரைப்படத்திற்கு அனுப்பிவிட்டு...*
*அரற்றும் மனசுக்குள் ஆறுதலாய்.....*
*மீண்டும்......மீண்டும்......தலைக்கு மீதேறிப் போன*
*கடன் கணக்கை.....மாசத் தவணை கழுத்தை நெறிக்கும்..*
*கனாக் கண்டு......நெஞ்சம் கலங்கி....*
*அடகுக்குப் போன தன் வீட்டின் சுவரை வாஞ்சையோடு....*
*தடவித் தந்தவரின்......மனசின் தவிப்பை.......*
*'என் மகளை மணமகளாக்கி எனை மீட்டாய்...... நானும்...*
*உனை மீட்கும் காலம் என்று வருமோ...?".....*
*அவர்கள் அறிவதில்லை..........!!!!!*



Bookmark and Share

அப்படியே ஒரு ஷாக் ....

அந்த அம்மன் போன பிறகு வீடே வெறிச்சென்று இருந்தது
வீட்டுப்பெண்ணைப் புகுந்தவீட்டில் கொண்டுவிட்டது போல் என் மனம் இருந்தது
,கண்களை மூடிக்கொண்டால் அவள் உருவமே வந்தது . . ரத்னத்தின் புகழ் பரவியது
பலவியாபாரிகள் ஹிந்தி பேசுபவர்கள் அவளிடம் குறி கேட்க வந்து அமர்ந்து விட
அந்த மொட்டைமாடியே நிரம்பி
வழிய ஆரம்பித்தது ,அவள் சொல்வதும் நடந்ததால் நம்பிக்கை அதிகம் ஏற்பட்டு
பலர் அவளுக்கு உதவவும் ஆரம்பித்தனர் .ஒரு நாள் ஒரு காதலன் வந்தான்
அவனுடன்
காதிலியும் இருந்தாள் , "எங்கள் காதல் நிறைவேறுமா தேவி?' என்று அவன்
கேட்க அவளுக்கு வந்ததே கோபம் ,
'இன்னும் எத்தனைப்பேரை இப்படிக்காதலிப்பாய் ? இந்தப்பெண்ணிற்கும் மோசம்
செய்யப்போகிறாயே எழுந்து
போய்விடு "என்று கத்த அவன் எழுந்துபோய்விட்டான்
பின் அந்தப்பெண்ணிற்கு நல்ல புத்திமதி சொல்லி வேறு நல்ல இடத்தில்
கல்யாணம் ஆகிவிடும் "என்று நம்பிக்கையும் தெரிவித்தாள்,
ஒருமாதம் கழிந்தது ரத்னத்தைப்பார்த்து வரலாம் என்று கிளம்பிப்போனேன்
அவள் அறை பூட்டப்பட்டிருந்தது ,
கீழே வீட்டுக்காரர் அவள் ஸ்கூட்டரில் அடிப்பட்டு ஆஸ்பத்திரியில்
இருப்பதாகச்சொன்னார் .நான் மிக வேதனை அடைந்தேன் ,அவள் அறையில் விடாமல்
பூஜை நடக்க ஏற்பாடு செய்ய்யப்பட்டது ,அந்த விபத்தில் அவள் கால்
சரியில்லாமல் போய் முன்பளவு அதிகமாக அவளுக்குச் செய்யமுடியவில்லை ஆனால்
கரோல்பாக்கில் இருக்கும் அத்தனை வியாபாரிகளும் அவளுக்கு உதவி செய்து அவள்
பூஜையை மிகவிமரிசையாக நடத்தி வந்தனர் அன்பு என்பதை நான் அங்குக்கண்டேன்
பதிலுக்கு ஒன்றும் எதிர்ப்பாராமல் அன்பை எல்லோரும் வழங்கினர் ஜனமாஷ்டமி
மிகப்பிரமாதமாக நடக்கும்
கிருஷ்ணருக்கு ஊஞ்சல் கட்டி அதில் பூக்களால அலங்காரம் செய்து பலர்
ஹிந்தியில் பாலகனையாவின் பாடல்களைப் பாடுவார்கள் ,சிலர் அதற்கு நடனமும்
ஆடுவார்கள் , ரத்னத்தின் ஆஸ்பத்திரி சிலவு மருந்து சிலவு என்று பலர்
.அவளுக்கு பணம் கட்டினர் .அவளும் நன்கு தேறி வீடு வந்தாள் . பரீடசை நேரம்
,,,,,,,பல
மாணவர்கள் தங்கள் பேனாக்களை அவளிடம் கொடுத்து ஆசிகள் பெற்றுச்சென்றனர்
அதன் பின் அவள் தன் குலதெய்வத்தைப்பார்க்கச் சென்றாள்.
நானும் தில்லி விட்டு வந்து விட்டேன் ,
மறு வருடம் நான் தில்லிப்போனபோது அவள் கறிகாய் விற்கும் இடம் காலியாக
இருந்தது நேராக ரத்னம் வீட்டிற்க்குச் சென்றேன் ஆனால்அவள் அறையில் அவள்
கோயில் அவள் பராசக்தி எல்லாம் இருந்தன ஆனால் அவள் இல்லை அவள் எங்கே
போயிருக்கிறாள் இன்னும் வரவில்லையா ? என்று கேட்டேன் அந்த விட்டுக்காரர்
என்னை உள்ளே கூப்பிட்டார் அங்கு ரத்னத்தின் போட்டொ மாட்டப்பட்டு
அதற்குச்சந்தனமாலை போடப்பட்டிருந்தது
அப்படியே ஒரு ஷாக் ....என் கண்களில் நீர் நிறைந்தது
அவரும் கண்ணீரைதுடைத்துக்கொண்டார் ,
ஒரு திருமங்கை தெய்வத்தின் இடத்தையே நிரப்பி இருக்கிறாள் என்பதைப்பார்க்க
என் மனம் பெருமை அடைகிறது ,



Bookmark and Share

*விதை தராத விருட்சம் .*

*விருட்சம் ஒன்று....*
*விறகுக்காக...வெட்டப்பட்டு..*
*அடுப்பில் எரிந்து சாம்பலானது..!*
*விதை ஒன்று...*
*சிதையில் விழுந்து...*
*விருட்சமாகாமலேயே...*
*சாம்பலானது...!*
*பயனாகி மடிந்தது ஒன்று....*
*பயனின்றி முடிந்தது ஒன்று......*
*இருப்பினும்....*
*சாம்பலின் பயன் ஒன்று தான்.....*




Bookmark and Share

*கிணற்று மனசு......*

*யாருமேஇல்லாத இதயவீடுக்குள்ளே.....*
*இறைவன் இருக்கக் கண்டேன்.....*
*இறைவனை இருத்திய இதயத்துள்ளே....*
*யாதொரு நினைவும் நழுவக் கண்டேன்.....*
*நித்தம் நித்தம் நான் மட்டும் நுழைந்து....*
*நுழைந்ததும் தொலையும் என்னை நானே...*
*அங்கே...... அடிக்கடி..... தேடக் கண்டேன்......*
*ஜென்ம ஜென்மமாய்.....ஒட்டடை படிந்த ஆன்மா....*
*தேடுதலில்......நிர்மலமாய்..........விஸ்தாரமாய்....*
*நான்முகனிடம் நான் வாங்கிய வரம்....*
*நான்கும்.......அருள்....பொருள்....இன்பம்...வீடென.....*
*இறைவனே...உன்னோடு வாழும் போது தான் தெரிகிறது...*
*வெளியுகம்...எத்தனை சிறிதென்று....!!!!*
*பொதி சுமக்கும் கழுதை மனசை.......*
*கழட்டி வைக்கத் தெரியாத மனிதனுக்கு.....*
*கண்டுகொள்ளக் கற்றுக்கொடு.......*
*அவர் தமக்குள் ஊறும்...*
*கிணற்று மனசை......!!!!*



Bookmark and Share

Tuesday, August 11, 2009

கிரகங்களின் உச்ச வீடுகள்

நமக்கு சிலர் "ஹலோ" என்று மட்டும் சொல்லி ஒரு புன்னகைப்புரிந்து
விட்டுப்போவார்கள் அவர்களிடம் பகையும் இல்லை அத்ற்காக மிகவும்
ஒட்டிப்பழுகும் நட்பும் இல்லை
இது போல் தான் நம் கிரகங்களுக்கும் நட்பும் இல்லாமல்
பகையுமில்லாமல் ஒரு நிலைமை ஏற்படுகிறது இவைகளுக்கு
"சமவீடுகள் "என்று பெயர்
சூரியனுக்கு புதனின் வீடுகள் அதாவது மிதுனம் கன்னி சம்வீடுகள்

சந்திரனுக்கு பல கிரஹங்கள் சமநிலையாகிறது
அவைகள் மேஷ்ம் துலாம் தனுசு மகரம் கும்பம் மீனம்

புதனுக்கு சம்வீடுகள் மேஷம் விருச்சிகம் தனுசு மகரம் குமபம் ,

குருவுக்கு சம்வீடு குமபம் ஒன்றுதான்

சுக்கிரனுக்கு சம்வீடுகள் மேஷம் விருச்சிகம் , தனுசு

சனிக்கு சம வீடுகள் தனுசு மீனம்

இராகுவுக்கும் கேதுவிற்கும் சம்வீடு என்று ஒன்றும் கிடையாத் அது
எந்தகிரஹத்துடன் எந்த இடத்தில் சேருகிற்தோ அதன்
படி பலனைக்கொடுக்கும்

மூலத்திரிகோண வீடுகள்

எல்லாவற்றைவிட அதிக பலம் கொடுப்பது மூலத்திருகோணவிடுகள் தான்

இதை வரிசைப்படித்தினால் முதலில் ப்கைவீடு ,பின் வருவது
சமவீடு அங்கு பலம் பகைவிட்டைவிட சற்று அதிகம் அதன் பின்
வருவது நட்பு வீடு .இங்கு பலம் கூடுகிறது
அதன் பின் வருவது ஆட்சி வீடு அதாவது சொந்த வீடு
அந்தவிட்டில் அதிக அளவு பலம் தான் அதையும் விட அதிக
பலம் மூலத்திரிகோண வீட்டில் ஏற்படுகிறது
இப்போது எந்தந்த் கிரகத்திற்கு எந்த இடம் மூலத்திரிகோண்மாகிறது
என்பதைப்பார்க்கலாம்

சூரியனுக்கு அதிக பலம் தரும் மூலத்திரிகோண வீடு சிம்மம்

சந்திரனுக்கு மூலத்திரிகோணவீடு ரிஷபம்

செவ்வாய்க்கு மூலத்திரிகோணவீடு மேஷம்

புதனுக்கு மூலத்திரிகோண வீடு கன்னி

குருவுக்கு மூலத்திரிகோண வீடு தனுசு

சுக்கிரனுக்கு மூலத்திரிகோணவீடு துலாம்

சனிக்கு மூலத்திரிகோண வீடு கும்பம்

அடுத்து வருவது உச்ச வீடுகள்
இந்த உச்சவீடுகளுக்கு பவர் அல்லது சக்தி அதிகம்
இந்த உச்ச வீடுகள் மூலத்திரிகோண்ததைக்காட்டிலும் அதிக சக்தியை அல்லது
பலனை அளிக்க வல்லது

இனி கிரகங்களின் உச்ச வீடுகள் என்னென்ன என்பதைப்
பார்க்கலாம்

சூரியனுக்கு உச்சவீடு மேஷம்
சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷபம்
செவ்வாய்க்கு உச்சவீடு மகரம்
புதனுக்கு உச்ச வீடு கன்னி
குருவுக்கு உச்சவீடு கடகம்
சுக்கிரனுக்கு உச்சவீடு மீனம்
சனிக்கு உச்ச வீடு துலாம்
இராகுவுக்கு உச்ச வீடு விருச்சிகம்
கேஎதுவுக்கும் உச்சவீடு விருச்சிகம்

பகைவிட்டைக்காட்டிலும் பலம் குறையும் வீடுகளை நீச வீடு
என்பார்கள் இந்த நீச வீடு உச்ச வீட்டிற்கு ஏழாவது இடத்தில் இருக்கும்
சூரியன் மேஷத்தில் உச்சவீடானதால் அதனின் ஏழாவது ஸ்தானம்
துலாம் ஆகையால் துலாம் சூரியனுக்கு நீச வீடு

இதே போல் சந்திரனுக்கு நீச வீடு விருச்சிகம்
செவ்வாய்க்கு நீச வீடு கடகம்
புதனுக்கு நீச வீடு மீனம்
குருவுக்கு நீச வீடு மீனம்
சுக்கிரனுக்கு நீச வீடு கன்னி
சனிக்கு நீச வீடு மேஷம்
இராகுவுக்கு நீச வீடு ரிஷபம்
கேதுவுக்கு நீசவீடு ரிஷபம்



Bookmark and Share

நீ ராதையை மணக்கவே முடியாது

கண்ணனுக்குத் திருமணம்! என் மகன்! விருஷபாநுவின் மகளைத் திருமணம் செய்யப் போகின்றானா?? நடக்காது, நடக்கவே நடக்காது! மேலும் அவள் உன்னைவிடப் பெரியவள் வேறே! “ யசோதை கிட்டத் தட்டக் கத்தினாள். ஒருவேளை, ஒருவேளை, இந்தப் பையன் தன் வழக்கமான பாணியில் நம்மை ஏதாவது ஏமாற்றி விளையாட இப்படிச் சொல்லுகிறானோ?? ஆம் அப்படித் தான் இருக்கணும். கண்ணன்
இந்தத் திருமணத்தில் நாட்டத்துடனும், ஆவலுடனும் இருக்கிறான் என்பதை யசோதை
உணரவில்லை. ஆனால் கண்ணனோ, “ அம்மா, ஏன் விருஷபாநுவின் மகளை நான் மணந்தால் என்ன ஆகும்? பிரளயமா ஏற்படும்? பல ஆண்கள் தங்களைவிட வயது அதிகமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுவதை நீ அறிய மாட்டாயா?” என்று கேட்டான். “இல்லை, மகனே, இல்லை, உன்னைவிட வயதில் பெரிய ஒரு மறுமகளை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
என்னால் அப்படி நினைக்கக் கூட முடியவில்லை. அதை நான் வெறுக்கிறேன்.” யசோதை
கண்கள் குளமாகக் கண்ணனைக் கெஞ்ச ஆரம்பித்தாள்.

“இல்லை, அம்மா, ராதை உன்னை அருமையாகக் கவனித்துக் கொள்வாள். “

“கண்ணா, நீ எப்போதுமே இப்படித் தான் ஏதாவது பிடிவாதம் பிடிக்கிறாய். இவ்வளவு
நாட்களாய் நீ குழந்தையாய் இருந்ததால் நான் உன்னுடைய பிடிவாதங்களுக்கு இடம்
கொடுத்து வந்தேன். ஆனால் இந்த விஷயத்தில் நான் சற்றும் வளைந்து கொடுக்க
மாட்டேன். மேலும் நீ இந்த ஆயர்பாடியின் தலைவனின் மகன். ராதை நம்மிடம் வேலை
செய்யும் ஒருவனின் பெண். உனக்கு ஏற்ற ஒரு தலைவனின் மகளை நான் உனக்குத்
தேர்ந்தெடுக்கிறேன். நீ ராதையை மணக்கவே முடியாது.” யசோதை முடித்துவிட்டாள்.
கோபமும், துக்கமும் அவள் நெஞ்சை அடைத்தது.

அம்மா, ஒரு அருமையான மறுமகளை நீ இழந்துவிடுவாயே?” கண்ணன் கண்களில் குறும்பு
கூத்தாடியது.

“அப்பா, கண்ணா, வேண்டாம், இந்த ராதையின் முற்போக்கான நடவடிக்கைகள் எதுவுமே
எனக்குப் பிடிக்கவில்லை. அவள் எதற்கும், யாருக்கும், கவலைப்படுவதும் இல்லை. எதை
நினைத்தும் யாரையும் நினைத்தும் பயப்படுவதும் இல்லை. எனக்கு வேண்டாம் அப்பா,
இத்தகைய முற்போக்கான குணமும் நடத்தையும் கொண்ட மறுமகள். இந்த விருந்தாவனமே
அவளின் இந்த நடவடிக்கை பற்றித் தான் பேசிப் பேசி அலுத்துப் போய்விட்டது. அவள்
ஒரு நல்ல மறுமகளாய் இருக்கத் தகுதி வாய்ந்தவளாய் எனக்குத் தெரியவில்லை.”

“ம்ம்ம்??? அம்மா?? அப்போது நீ உன் மகனை இழக்க நேரிடுமே?” கூடியவரையிலும்
கண்ணன் இதை ஒரு புதிர்போலவே அம்மாவுக்குச் சொல்ல நினைத்தாலும் அவனையும்
அறியாமல் உள் மனது இதை ஒரு மிரட்டலாகவே காட்டியதோ? யசோதையின் முகம் அப்படித்
தான் காட்டியது.

யோசனையுடனும், அதிர்ச்சியுடனும் மகனைப் பார்த்தாள் யசோதை. இதை அவள்
எதிர்பார்க்கவில்லைதான். என்றாலும் கண்ணனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்,
“கண்ணா, கண்ணா, என்னை ஏனப்பா தொந்திரவு செய்கிறாய்?? நீ இப்படியெல்லாம் திடீரென
நடக்கக் காரணம் என்ன?? போய் உன் தந்தையிடம் இது பற்றிப் பேசு! எனக்கு
அலுத்துவிட்டது உனக்குப் புரியவைக்க என்னால் முடியவில்லை.”

“அம்மா, யசோதா அம்மா, என்ன இது?? என்னிடம் உனக்கு அலுப்போ, களைப்போ, ஏற்படாதே?
அதேபோல் எனக்கு வரப் போகும் மனைவியிடமும் ஏற்படக் கூடாது. விருஷபாநுவின் மகள்
ராதை தினமும் காலையும், மாலையும் உன்னிடம் ஆசி வேண்டி உன் பாதம் தொட்டு
வணங்குவாள். இது உறுதி!”

“அதிகப் பிரசங்கி!” தன்னையுமறியாமல் யசோதை சிரித்தாள். கண்ணன் சொல்வது
உண்மைதான். ரொம்ப நேரம் அவனிடம் கோபத்தைக் காட்ட முடியவில்லையே? கண்ணனை
நந்தனிடம் போய்ப் பேசச் சொல்லி அனுப்பினாள் யசோதை. கண்ணனும் நந்தனிடம் சென்று
தன் விருப்பத்தைச் சொன்னான். நந்தனோ மொத்த விஷயத்தையும் கேட்டுவிட்டு ஏதோ பெரிய
நகைச்சுவைக் காட்சியைப் பற்றிக் கேட்டாற்போல் ரசித்துச் சிரித்தான் . சிரிப்பை
அடக்காமலேயே, “நீ என்ன இன்னிக்குப் புதுசாய் பெண்கள் பின்னால் போகிறாயா கண்ணா?
எனக்கு ஒண்ணும் அதிசயமோ ஆச்சரியமோ ஏற்படலை இந்தப் பெண்களில் ஒருத்தியை நீ
மனைவியாக்கிக் கொள்ள ஆசைப் படுவாய் என்று நினைத்தேன்.”

“அப்பா, அப்போது உங்களுக்குச் சம்மதமா? அம்மாவைப் போய் ராதையைப் பெண் கேட்கச்
சொல்லலாமா?”

“இல்லை, குழந்தாய்! உன் தகுதிக்கு நீ ஒரு இளவரசியை அன்றோ மணக்கவேண்டும்.”
புன்னகை மாறாமலேயே நந்தன் சொன்னான்.

“ராதையின் அறிவுக்கும் அழகுக்கும் ஈடு சொல்லும்படியான இளவரசி யார்
இருக்கிறார்கள்”

நீ எத்தனை இளவரசிகளைப் பார்த்திருக்கிறாய் கண்ணா?”

‘கோபியர் அனைவருமே இளவரசிகள் தானே! சொல்லப் போனால் இளவரசிகளை விடவும் இவர்களே
தேவலை. மேலும் நாமெல்லாருமே இடையர்கள் தானே? இடைக்குலத்துப் பெண்ணை நான்
மணந்தால் என்ன? என் தகுதிக்கு அதுதானே சரி?”

நந்தன் பேச்சை மாற்ற விரும்பினான். இன்னும் காலம் கனியவில்லை. கண்ணனைப் பற்றிய
உண்மையான தகவலை இப்போது சொல்லலாமா தெரியவில்லை. ஆகவே கண்ணனிடம் நந்தன்
சொல்கின்றான். “ ஐயனைப் பற்றி என்ன நினைத்தாய்? அவன் வேறொரு பெண்ணைத் திருமணம்
செய்து கொள்வான் என்றா?”

“அவனுக்கு இந்த விரஜபூமியில் உள்ள அனைத்து இளம்பெண்களும் இன்னும் மதுராவிலும்
இளம்பெண்கள் உள்ளனர். அதை விடுங்கள் தந்தையே. அம்மாவைப் போய் விருஷபாநுவிடம்
ராதையைப் பெண்கேட்கச் சொல்லி அனுப்புங்கள்.”

நந்தன் இப்போது கொஞ்சம் கலவரம் அடைந்தான். “என்னால் முடியாது, முடியவே
முடியாது.” திட்டவட்டமாய் நந்தன் சொல்லக் கண்ணன் ஆச்சரியம் அடைந்தாலும்
பணிவாகவே, “ஏன் தந்தையே?” என்று கேட்டான். கண்ணனுக்கும் இதில் ஏதோ இருக்கிறது
என்ற சம்சயம் வந்துவிட்டதோ? ஆனால் நந்தன் அசரவில்லை. “நான் உன்னை ராதையை
மட்டுமல்ல மற்ற எந்த கோபியர் பெண்ணையும் மணக்கவிட மாட்டேன். நீ கேட்பது எதையும்
நான் மறுக்க மாட்டேன் என்பது தெரிந்து நீ உன் திருமணத்திற்கு என்னிடம் சம்மதம்
கேட்கின்றாய். இந்த விஷயத்தில் நீ என்னிடம் சம்மதம் கேட்பதை விட குரு
கர்காசாரியார் வரும்போது அவரிடம் கேட்டுக் கொள்.” நந்தன் பதில் முடிவாக
இருந்தது.

“அவர் சரி என்று சொல்லிவிட்டால்”

“நிச்சயம் மாட்டார்.” நந்தன் இதில் மிகவும் திடமாக இருந்தான்.

ஒருவேளை சம்மதித்துவிட்டாரெனில்?”

“அப்போ நான் என் எதிர்ப்பைக் காட்டவில்லை. ஆனால் கர்காசாரியார் ஒத்துக்
கொள்ளமாட்டார் என்பது நிச்சயம்.”

“சரி, நானே குருவிடம் பேசுகிறேன்.” கண்ணன் குரு வரும் நாளை எதிர்பார்த்துக்
காத்திருந்தான். குருவும் வந்தார், கூடவே இன்னொருத்தரும் வந்தார். அவர் பெயர்
சாந்தீபனியாம்.



Bookmark and Share

Friday, August 7, 2009

மாடக் கொடி மதில் தென்குளந்தை

பெரிய குளத்தைச் சுற்றிக் கொண்டுதான் போகணும், திருக்குளந்தைக்கு. வழி நெடுக
வாழைத் தோப்புகள். விதவிதமாய் வாழை பயிரிடப் பட்டுள்ளது. நல்ல பசுமை!
குளிர்ச்சியாகவும் இருந்தது கண்ணுக்கும், மனதுக்கும். நாம் போய் தரிசிக்கப்
போவதும் அந்தப் பச்சை மாமலைபோல் மேனியானைத் தானே! இந்தக் கோயிலின் மூர்த்திக்கு
மாயக் கூத்தன் என்ற பெயர். இவரைப் பற்றி நம்மாழ்வார் பாடி இருப்பதாவது:
“கூடச் சென்றேன், இனி என் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்கமெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல்
பல்வளையார் முன் பரிசளித்தேன்
மாடக் கொடி மதில் தென்குளந்தை
வண்குட பால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்ந்த வெல் போர்
ஆழி வலவலை ஆதரித்தே!” (2ம் திருவாய்மொழி, 8-ம் பத்து, பாடல் எண் 4)
தோழி, மாடங்களோடும், கொடிகளோடும் கூடிய மதில்களை உடைய திருக்குளந்தை எனச்
சொல்லுகின்றார் நம்மாழ்வார் இங்கே. இந்தத் திருக்குளந்தையின் மேற்கில் நிற்கும்
மாயக் கூத்தனைக் கூடுவதற்குச் சென்றேன் எனத் தன்னை ஒரு பெண்ணாக உருவகம் செய்து
கொண்டு சொல்கின்றார். கருடக் கொடியை உடைய அவனின் கைகளில் திருச்சக்கரம்
இருக்கும். அவனை விரும்பி நாடிச் சென்ற நான் அவன் பால் என் கை வளையல்களை
இழந்தேன், என் நெஞ்சை இழந்தேன், இழக்கவே முடியாத என் நாணத்தையும் இழந்தேன், இனி
என்ன இருக்கிறது? “ என்று தன்னை மையல் கொண்ட ஒரு பெண்ணாய் உருவகப் படுத்திக்
கொண்டு சொல்லுகின்றார். மற்ற ஓர் பாடலில்

“மாயக் கூத்தா வாமனா வினையோன் கண்ணா கண்கை கால்
தூய செய்ய மலர்களா? சோதிச் செவ்வாய் முகிழ்தா?
சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா? தாமரை நீள்
வாசத்தடம்போல் வருவானே ஒருநாள் காண வாராயே!”

மாயக் கூத்தன் என அழைக்கின்றார் கண்ணனை. மாயக் கூத்தனான அந்தக் கண்ணனைக்
காணவேண்டும், அவன் வடிவழகை இரு கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல் மீதூற அவனை
அழைக்கின்றார். மாயக் கூத்தா, வாமனா, உன் கண்களும் கைகளும், கால்களும்
மலர்களால் ஆனவையோ, உன் திருவாய் ஆம்பல் மலரின் அரும்போ? உன் கரிய திருமேனியைப்
பார்த்தால் பச்சை இலை போல் உள்ளதே? இவைகள் அனைத்தையும் உன்னிடத்தில்
வைத்திருக்கும் நீ நான் தாகம் தீர்த்துக் கொள்ள அமைந்த திருக்குளம்போல்
உள்ளாய்! உன்னை நான் என் கண்ணாரக் காண நீ ஒரு நாள் நேரில் வரமாட்டாயா?” என்றும்
பாடுகின்றார். அத்தகைய மாயக் கூத்தன் தான் இங்கே மூலஸ்தானத்தில் கிழக்கே
பார்த்து நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். தாயார் பெயர் அலமேலு மங்கை
என்றும், திருக்குளந்தை வல்லி என்றும் அழைக்கப் படுகின்றது. தேவகுருவான
பிரஹஸ்பதிக்குப் பிரத்யட்சமாய்க் காக்ஷி கொடுத்தார் எனவும் சொல்லப் படுகின்றது.
பெருங்குளமே இந்தக் கோயிலின் தீர்த்தமும் ஆகும். இந்தக் கோயிலின் தல வரலாறு
பின்வரும்படி அமைந்துள்ளது.

விப்ர குலத்தைச் சேர்ந்த அந்தணர் வேதசாரன் என்பவர் அல்லும் பகலும் வேங்கடவாணனை
வழிபட்டு அவன் பாதாரவிந்தமே கதியென இருந்து வந்தார். பேரழகு வாய்ந்த குமுதவதி
என்னும் பெண்ணை மனைவியாகப் பெற்றிருந்த அவருக்கு, குமுதவதி கமலாவதி என்னும்
அழகிய பெண்ணைப் பெற்றுக் கொடுத்தாள். இந்தக் கமலாவதி இவர்கள் இருவரும் செய்த
மாதவத்தால், அலர்மேல் மங்கைத் தாயாரே இவர்கள் பெண்ணாக விரும்பி வந்து தோன்றி
வளர்ந்து வந்தாள். இவள் ஆண்டாளைப் போல் அரங்கன் ஒருவனையே தன் மணாளனாக ஏற்றாள்.
அதற்கெனவே வழிபட்டும் வந்தாள்.

அந்தக் காலகட்டட்தில் சிலவசாரன் என்னும் அரக்கன் ஒருவன் இமயமலையில் வாழ்ந்து
வந்தான். பெண்களிடம் அதீத ஆசை கொண்ட இவன் பேரழகு வாய்ந்த ஆயிரம் பெண்களை ஒரே
சமயம் மணக்கவேண்டும் என்ற ஆசையில் உலகிலுள்ள அழகான பெண்களை எல்லாம் கவர்ந்து
சென்று இமயமலையில் சிறை வைத்திருந்தான். இவ்விதம் 998 அழகிகளைச் சிறை
வைத்திருந்த இவன் இன்னும் இரண்டு பெண்கள் வேண்டும் என்று அவர்களைத் தேடி
அலைந்து திரிந்து விண்ணில் வந்து கொண்டிருந்தான். இவன் கண்களில் வேதசாரன் மனைவி
குமுதவதி கண்ணில் பட அவளைக் கவர்ந்து சென்று சிறை வைத்துவிட்டு ஆயிரமாவது
பெண்ணைத் தேடிக் கிளம்பிச் சென்றான்.

மனைவியைப் பிரிந்த வேதசாரன் துன்பத்துடன் வந்து பெருமாளைத் தான் எங்கனம்
வழிபடுவது என எண்ணிக் கொண்டு இறைவனையே மனைவியை மீட்டுத் தரவேண்டி வழிபட்டான்.
விடாமுயற்சியுடன் பக்தி செலுத்திய அவன் பக்திக்கு இரங்கிய பரந்தாமனும்
பக்கத்தில் இருந்த கருடாழ்வாரைப் பார்க்க, அப்போது பார்த்து கருடனுக்குத் தான்
பெருமாளுக்குத் துணையாகச் செல்வது குறித்து மமதை உண்டாயிற்று. கருடனின்
மமதையைப் புரிந்து கொண்ட பரந்தாமன் கருடனைத் தன் கால் இடுக்கில் வைத்துக்
கொண்டு மனோவேகத்தில் இமயத்தை அடைந்தார். சிறைப்பட்டிருந்த குமுதவதியை மீட்டுக்
கொண்டு வந்து திருக்குளந்தை வந்தடைந்தார்.

சிலவசாரன் இதை அறிந்து திருக்குளந்தை வந்து வேங்கடவாணனைப் போருக்கு அழைக்க
இருவருக்கும் கடும் யுத்தம் மூள்கிறது. தண்பொருநை நதிக்கரையில் அரக்கனைக்
கொன்று வீழ்த்திய பரந்தாமன் அரக்கன் தலையின் மேலேறி, ஆனந்தக் கூத்தாட,
அன்றிலிருந்து சோரநாட்டியன், மாயக் கூத்தன் என்ற பெயரையும் பெற்றான்.
அரக்கனுக்குத் தன் தலையில் பரம்பொருளின் திருவடி பெற்றதும் உண்மை உணர,
சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனாகி இறைவனை வணங்கி விடைபெற்றான். கமலாவதியின்
பக்திக்கும், தவத்திற்கும் இரங்கிய பரம்பொருள் அவளை தை மாதம் சுக்லபக்ஷ
துவாதசியில் பூச நக்ஷத்திரத்தில் மணந்து கொண்டு கல்யாணக் கோலமும் காட்டி
அருளினார்.

ஆணவன் நீங்கிய கருடனுக்குத் தனக்குச் சமமான இடம் தந்து தன் அருகிலேயே
எழுந்தருளச் செய்தார். கருடன் இங்கே பறக்கும் கோலத்தில் சிறகுகளை உயரே தூக்கிய
வண்ணம் ஆடல் பறவையாகக் காக்ஷி அளிக்கின்றார். இந்தத் திருக்கோயிலின் மதிலின்
ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய
பூச்சட்டையை மறுநாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக
விநியோகம் செய்யப் படும். நம்மாழ்வாரின் திரு அவதாரப் பெருவிழாவின் ஐந்தாம்
நாளில் நவதிருப்பதிப் பெருமாள்களில் ஒருவராக ஆழ்வார் திருநகரிக்கு இந்த மாயக்
கூத்தர் எழுந்தருளும் சமயம் நம்மாழ்வாரின், “மாயக் கூத்தா வாமனா!” என்ற பாசுரம்
பாடி வரவேற்பதும், மறுநாள் “கூடச் சென்றேன்” என்ற பாசுரத்தைப் பாடி
வழியனுப்புவதும் நடந்து வருகிறது.

பெருங்குளம் என்னும் பெயருக்கேற்ற இந்த ஊர்க்குளத்திலிருந்து பார்த்தால் ஒரே
சமயம் சூரியன், பராசக்தி, திருமால், விநாயகர், சிவன் ஆகியோரைத் தரிசிக்க
முடியும். இந்த மாயக் கூத்தருக்குத் திருமஞ்சனம் கிடையாது. திருப்பதி
ஸ்ரீநிவாசப் பெருமாளின் மேனியைப் போன்ற இவரின் திருமேனியில் பூச்சட்டை
சாற்றும்போது காணவேண்டும் என்றும், அப்போது இவரின் மேனி அழகு கண்ணையும்
கருத்தையும் கவர்ந்துவிடும் என்றும் சொல்கின்றனர். இந்த மாயக் கூத்தர் மேல்
பிள்ளைத் தமிழ், ஊஞ்சல், நலுங்கு, கலித்துறை போன்ற பாடல்களை ஜெகன்வாத கவிராயர்
என்பவர் பாடியுள்ளார். மாயக் கூத்தரின் பிரதம அடியாராகக் கழுநீர்த் தொட்டியான்
என்பவர் கருதப் படுகின்றார். இவரே யக்ஞ நாராயணன் என்ற பெயரிலும் உற்சவருக்கும்,
மூலவருக்கும் நடுவில் உள்ள கூடத்தில் வழிபடப் பெறுகின்றார்.
கழுநீர்த்தொட்டியான் சந்நிதியில் மடப்பள்ளிச் சாம்பலே பிரசாதமாகவும், யக்ஞ
நாராயணன் சந்நிதியின் பிரம்பும், பாதுகையும் காணக் கிடைப்பது ஓர் சிறப்பாகவும்
சொல்லப் படுகிறது. ஸ்ரீயக்ஞநாராயணனுக்கு மாயக் கூத்தருக்குச் சாற்றிய
நிர்மால்யம் மட்டுமே சாத்தப் படுகிறது என்பதும் இங்கே விசேஷமாய்ச்
சொல்கின்றனர். மேலும் குமுதவதியை மீட்டுவர எழுந்து சென்ற பெருமாள் அதன் பின்னர்
அமராமல் பக்தர்களைக் காக்கவேண்டி உடனே செல்ல வசதியாக நின்ற திருக்கோலத்தில்
சேவை சாதிப்பதாகவும் ஐதீகம்.
அடுத்து இரட்டைத் திருப்பதி தரிசனம்.




Bookmark and Share

மாடக் கொடி மதில் தென்குளந்தை

பெரிய குளத்தைச் சுற்றிக் கொண்டுதான் போகணும், திருக்குளந்தைக்கு. வழி நெடுக
வாழைத் தோப்புகள். விதவிதமாய் வாழை பயிரிடப் பட்டுள்ளது. நல்ல பசுமை!
குளிர்ச்சியாகவும் இருந்தது கண்ணுக்கும், மனதுக்கும். நாம் போய் தரிசிக்கப்
போவதும் அந்தப் பச்சை மாமலைபோல் மேனியானைத் தானே! இந்தக் கோயிலின் மூர்த்திக்கு
மாயக் கூத்தன் என்ற பெயர். இவரைப் பற்றி நம்மாழ்வார் பாடி இருப்பதாவது:
“கூடச் சென்றேன், இனி என் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்கமெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல்
பல்வளையார் முன் பரிசளித்தேன்
மாடக் கொடி மதில் தென்குளந்தை
வண்குட பால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்ந்த வெல் போர்
ஆழி வலவலை ஆதரித்தே!” (2ம் திருவாய்மொழி, 8-ம் பத்து, பாடல் எண் 4)
தோழி, மாடங்களோடும், கொடிகளோடும் கூடிய மதில்களை உடைய திருக்குளந்தை எனச்
சொல்லுகின்றார் நம்மாழ்வார் இங்கே. இந்தத் திருக்குளந்தையின் மேற்கில் நிற்கும்
மாயக் கூத்தனைக் கூடுவதற்குச் சென்றேன் எனத் தன்னை ஒரு பெண்ணாக உருவகம் செய்து
கொண்டு சொல்கின்றார். கருடக் கொடியை உடைய அவனின் கைகளில் திருச்சக்கரம்
இருக்கும். அவனை விரும்பி நாடிச் சென்ற நான் அவன் பால் என் கை வளையல்களை
இழந்தேன், என் நெஞ்சை இழந்தேன், இழக்கவே முடியாத என் நாணத்தையும் இழந்தேன், இனி
என்ன இருக்கிறது? “ என்று தன்னை மையல் கொண்ட ஒரு பெண்ணாய் உருவகப் படுத்திக்
கொண்டு சொல்லுகின்றார். மற்ற ஓர் பாடலில்

“மாயக் கூத்தா வாமனா வினையோன் கண்ணா கண்கை கால்
தூய செய்ய மலர்களா? சோதிச் செவ்வாய் முகிழ்தா?
சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா? தாமரை நீள்
வாசத்தடம்போல் வருவானே ஒருநாள் காண வாராயே!”

மாயக் கூத்தன் என அழைக்கின்றார் கண்ணனை. மாயக் கூத்தனான அந்தக் கண்ணனைக்
காணவேண்டும், அவன் வடிவழகை இரு கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல் மீதூற அவனை
அழைக்கின்றார். மாயக் கூத்தா, வாமனா, உன் கண்களும் கைகளும், கால்களும்
மலர்களால் ஆனவையோ, உன் திருவாய் ஆம்பல் மலரின் அரும்போ? உன் கரிய திருமேனியைப்
பார்த்தால் பச்சை இலை போல் உள்ளதே? இவைகள் அனைத்தையும் உன்னிடத்தில்
வைத்திருக்கும் நீ நான் தாகம் தீர்த்துக் கொள்ள அமைந்த திருக்குளம்போல்
உள்ளாய்! உன்னை நான் என் கண்ணாரக் காண நீ ஒரு நாள் நேரில் வரமாட்டாயா?” என்றும்
பாடுகின்றார். அத்தகைய மாயக் கூத்தன் தான் இங்கே மூலஸ்தானத்தில் கிழக்கே
பார்த்து நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். தாயார் பெயர் அலமேலு மங்கை
என்றும், திருக்குளந்தை வல்லி என்றும் அழைக்கப் படுகின்றது. தேவகுருவான
பிரஹஸ்பதிக்குப் பிரத்யட்சமாய்க் காக்ஷி கொடுத்தார் எனவும் சொல்லப் படுகின்றது.
பெருங்குளமே இந்தக் கோயிலின் தீர்த்தமும் ஆகும். இந்தக் கோயிலின் தல வரலாறு
பின்வரும்படி அமைந்துள்ளது.

விப்ர குலத்தைச் சேர்ந்த அந்தணர் வேதசாரன் என்பவர் அல்லும் பகலும் வேங்கடவாணனை
வழிபட்டு அவன் பாதாரவிந்தமே கதியென இருந்து வந்தார். பேரழகு வாய்ந்த குமுதவதி
என்னும் பெண்ணை மனைவியாகப் பெற்றிருந்த அவருக்கு, குமுதவதி கமலாவதி என்னும்
அழகிய பெண்ணைப் பெற்றுக் கொடுத்தாள். இந்தக் கமலாவதி இவர்கள் இருவரும் செய்த
மாதவத்தால், அலர்மேல் மங்கைத் தாயாரே இவர்கள் பெண்ணாக விரும்பி வந்து தோன்றி
வளர்ந்து வந்தாள். இவள் ஆண்டாளைப் போல் அரங்கன் ஒருவனையே தன் மணாளனாக ஏற்றாள்.
அதற்கெனவே வழிபட்டும் வந்தாள்.

அந்தக் காலகட்டட்தில் சிலவசாரன் என்னும் அரக்கன் ஒருவன் இமயமலையில் வாழ்ந்து
வந்தான். பெண்களிடம் அதீத ஆசை கொண்ட இவன் பேரழகு வாய்ந்த ஆயிரம் பெண்களை ஒரே
சமயம் மணக்கவேண்டும் என்ற ஆசையில் உலகிலுள்ள அழகான பெண்களை எல்லாம் கவர்ந்து
சென்று இமயமலையில் சிறை வைத்திருந்தான். இவ்விதம் 998 அழகிகளைச் சிறை
வைத்திருந்த இவன் இன்னும் இரண்டு பெண்கள் வேண்டும் என்று அவர்களைத் தேடி
அலைந்து திரிந்து விண்ணில் வந்து கொண்டிருந்தான். இவன் கண்களில் வேதசாரன் மனைவி
குமுதவதி கண்ணில் பட அவளைக் கவர்ந்து சென்று சிறை வைத்துவிட்டு ஆயிரமாவது
பெண்ணைத் தேடிக் கிளம்பிச் சென்றான்.

மனைவியைப் பிரிந்த வேதசாரன் துன்பத்துடன் வந்து பெருமாளைத் தான் எங்கனம்
வழிபடுவது என எண்ணிக் கொண்டு இறைவனையே மனைவியை மீட்டுத் தரவேண்டி வழிபட்டான்.
விடாமுயற்சியுடன் பக்தி செலுத்திய அவன் பக்திக்கு இரங்கிய பரந்தாமனும்
பக்கத்தில் இருந்த கருடாழ்வாரைப் பார்க்க, அப்போது பார்த்து கருடனுக்குத் தான்
பெருமாளுக்குத் துணையாகச் செல்வது குறித்து மமதை உண்டாயிற்று. கருடனின்
மமதையைப் புரிந்து கொண்ட பரந்தாமன் கருடனைத் தன் கால் இடுக்கில் வைத்துக்
கொண்டு மனோவேகத்தில் இமயத்தை அடைந்தார். சிறைப்பட்டிருந்த குமுதவதியை மீட்டுக்
கொண்டு வந்து திருக்குளந்தை வந்தடைந்தார்.

சிலவசாரன் இதை அறிந்து திருக்குளந்தை வந்து வேங்கடவாணனைப் போருக்கு அழைக்க
இருவருக்கும் கடும் யுத்தம் மூள்கிறது. தண்பொருநை நதிக்கரையில் அரக்கனைக்
கொன்று வீழ்த்திய பரந்தாமன் அரக்கன் தலையின் மேலேறி, ஆனந்தக் கூத்தாட,
அன்றிலிருந்து சோரநாட்டியன், மாயக் கூத்தன் என்ற பெயரையும் பெற்றான்.
அரக்கனுக்குத் தன் தலையில் பரம்பொருளின் திருவடி பெற்றதும் உண்மை உணர,
சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனாகி இறைவனை வணங்கி விடைபெற்றான். கமலாவதியின்
பக்திக்கும், தவத்திற்கும் இரங்கிய பரம்பொருள் அவளை தை மாதம் சுக்லபக்ஷ
துவாதசியில் பூச நக்ஷத்திரத்தில் மணந்து கொண்டு கல்யாணக் கோலமும் காட்டி
அருளினார்.

ஆணவன் நீங்கிய கருடனுக்குத் தனக்குச் சமமான இடம் தந்து தன் அருகிலேயே
எழுந்தருளச் செய்தார். கருடன் இங்கே பறக்கும் கோலத்தில் சிறகுகளை உயரே தூக்கிய
வண்ணம் ஆடல் பறவையாகக் காக்ஷி அளிக்கின்றார். இந்தத் திருக்கோயிலின் மதிலின்
ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய
பூச்சட்டையை மறுநாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக
விநியோகம் செய்யப் படும். நம்மாழ்வாரின் திரு அவதாரப் பெருவிழாவின் ஐந்தாம்
நாளில் நவதிருப்பதிப் பெருமாள்களில் ஒருவராக ஆழ்வார் திருநகரிக்கு இந்த மாயக்
கூத்தர் எழுந்தருளும் சமயம் நம்மாழ்வாரின், “மாயக் கூத்தா வாமனா!” என்ற பாசுரம்
பாடி வரவேற்பதும், மறுநாள் “கூடச் சென்றேன்” என்ற பாசுரத்தைப் பாடி
வழியனுப்புவதும் நடந்து வருகிறது.

பெருங்குளம் என்னும் பெயருக்கேற்ற இந்த ஊர்க்குளத்திலிருந்து பார்த்தால் ஒரே
சமயம் சூரியன், பராசக்தி, திருமால், விநாயகர், சிவன் ஆகியோரைத் தரிசிக்க
முடியும். இந்த மாயக் கூத்தருக்குத் திருமஞ்சனம் கிடையாது. திருப்பதி
ஸ்ரீநிவாசப் பெருமாளின் மேனியைப் போன்ற இவரின் திருமேனியில் பூச்சட்டை
சாற்றும்போது காணவேண்டும் என்றும், அப்போது இவரின் மேனி அழகு கண்ணையும்
கருத்தையும் கவர்ந்துவிடும் என்றும் சொல்கின்றனர். இந்த மாயக் கூத்தர் மேல்
பிள்ளைத் தமிழ், ஊஞ்சல், நலுங்கு, கலித்துறை போன்ற பாடல்களை ஜெகன்வாத கவிராயர்
என்பவர் பாடியுள்ளார். மாயக் கூத்தரின் பிரதம அடியாராகக் கழுநீர்த் தொட்டியான்
என்பவர் கருதப் படுகின்றார். இவரே யக்ஞ நாராயணன் என்ற பெயரிலும் உற்சவருக்கும்,
மூலவருக்கும் நடுவில் உள்ள கூடத்தில் வழிபடப் பெறுகின்றார்.
கழுநீர்த்தொட்டியான் சந்நிதியில் மடப்பள்ளிச் சாம்பலே பிரசாதமாகவும், யக்ஞ
நாராயணன் சந்நிதியின் பிரம்பும், பாதுகையும் காணக் கிடைப்பது ஓர் சிறப்பாகவும்
சொல்லப் படுகிறது. ஸ்ரீயக்ஞநாராயணனுக்கு மாயக் கூத்தருக்குச் சாற்றிய
நிர்மால்யம் மட்டுமே சாத்தப் படுகிறது என்பதும் இங்கே விசேஷமாய்ச்
சொல்கின்றனர். மேலும் குமுதவதியை மீட்டுவர எழுந்து சென்ற பெருமாள் அதன் பின்னர்
அமராமல் பக்தர்களைக் காக்கவேண்டி உடனே செல்ல வசதியாக நின்ற திருக்கோலத்தில்
சேவை சாதிப்பதாகவும் ஐதீகம்.
அடுத்து இரட்டைத் திருப்பதி தரிசனம்.




Bookmark and Share

பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12

அதே *பிச்சுப் பிள்ளை தெரு! நெம்பர் 12
*பிச்சுப்பிள்ளை தெரு கோடை வெயிலில் சூடேறிக் கிடந்தது. பைக்கை நிறுத்தியதும்
தெருவோரத்தில் படுத்திருந்த கறுப்பு நாய் தலை உயர்த்திப் பார்த்தது. விநோத்
ஹெல்மெட்டைக் கழற்றினான். பின்சீட்டிலிருந்து இறங்கிய முத்து கணேஷ் தயக்கமாகப்
பார்த்தார்.
“என்ன ஸார், கண்டிப்பா விசாரிக்கணுமா?”
“ஆமாங்க, என் ப்ராஜக்டுக்கு இது ரொம்ப முக்கியம். அவர் வீட்டை ஒரு ஃபோட்டோவாவது
எடுக்கணும். அப்போதான் பி.எச்.டி. வைவாவுலே அக்ஸெப்ட் பண்ணுவாங்க.”

முத்துகணேஷ் பத்திரிகைக்காரர். மயிலாப்பூர்வாசி. அதன் இண்டு இடுக்கெல்லாம்
அறிந்தவர். அதனால்தான் அவரைக் கூட்டி வந்திருந்தான் விநோத். அவர்கள் நின்ற
இடத்துக்கு நேர் எதிரே ஓர் ஓட்டு வீடு. அதன் சுவர்கள் எப்போது விழுமோ என்கிற
நிலையில் ஓடுகளைத் தாங்கிப்பிடித்தபடி பலகீனமாக நின்றிருந்தது. வாசலில்
சட்டையில்லாமல், கைலியோடு உட்கார்ந்திருந்தார் ஒருவர்.
“ஸார், இங்க சுப்ரமணியசிவா வீடு எங்கருக்கு?” முத்து கணேஷ் கேட்டார்.
“சிவாவா? யாரு?>>>>> ப்ளம்பர் சிவாவா?”
இல்லைங்க, *தியாகி, சுப்ரமணியசிவா!”
*“தியாகியா? தெரியலைங்களே! அந்தா….. அங்க அயர்ன் கடை இருக்கு பாருங்க. அங்க
கேளுங்க, அவருக்கு கரெக்டா தெரியும்.”
விநோத் பைக்கை உருட்டிக் கொண்டு அயர்ன் கடைக்குப் போனான். பீடி பிடித்துக்
கொண்டிருந்த கடைக்காரர், யோசித்துவிட்டு, “ரொம்பப் பழைய ஆளுங்கன்னா, அந்தா….
அந்த எதுத்த வீட்டுக்காரருக்குத் தான் தெரியும்… அவரு ரொம்ப வயசானவரு.
அவர்கிட்டே கேளுங்க!” ஒரு வீட்டைக் காட்டினார், அயர்ன் கடைக்காரர்.

கதவைத் தட்டியதும் ஒரு எழுபது வயதுப் பெரியவர் வந்தார். விசாரித்ததும் ரொம்ப
யோசனைக்குப் பிறகு பக்கத்து வீட்டைக் காட்டினார். ‘இங்கதான் சுப்ரமணிய சிவா
இருந்தாரு” பதிலை எதிர்பாராமல் கதவை மூடிக் கொண்டு போனார் அவர்.
அவர் காட்டிய வீடு ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடு. வெள்ளையாகச் சுண்ணாம்பு
அடித்திருந்தது. பக்க்த்திலேயே ஒரு காரை நிறுத்தும்படியான கேரேஜ். அதன் கதவு
மூடிக் கிடந்தது. வீட்டுக்குள் இருந்து ஒரு பெரியவர் பக்கெட் நிறைய துணிகளை
எடுத்து வந்து, கொடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தார்.
“என்ன சார்! அவர்கிட்டே பேசலாமா?” முத்து கணேஷ் கேட்டார்.
“வேணாங்க, இதுதான் அவர் இருந்த வீடான்னு கன்ஃப்ர்மா தெரியலை. பேசுறது வேஸ்ட்.”
“ஆமா ஸார், *இந்தக் காலத்துலே தியாகின்னா யாருக்குத் தெரியும்? நடிகை வீடுன்னா
தம்மாத்தூண்டு குழந்தை கூட அடையாளம் காட்டும்*” என்றார் முத்து கணேஷ்.
இருவரும் அந்த இடத்தை விட்டு நகர, பிச்சுப் பிள்ளை தெரு மெளனத்தில்...




Bookmark and Share

ஏன் உன் முகம் வாடியிருக்கு

மீனாக்ஷி அம்மாள் வாசலைப் பார்த்தாள். அவர் வருகிற அறிகுறியே தெரியவில்லை. காலை
பத்தரைக்கெல்லாம் தெருவே தகித்துக் கிடக்கிறது. வெளியே காய்ந்த வெயில்
வீட்டுக்குள் புழுக்கமாக உருவெடுக்கிறது. ஞானா அசந்து தூங்குகிறாள். பாவம்
கர்ப்பவதி! அதற்காக விசிறியை எவ்வளவு நேரம் தான் வீசிக் கொண்டிருக்க முடியும்??
கைக்கு ஓய்வு கொடுத்த மாதிரியும் இருக்கும், அவர் வருகிறாரா என்று பார்த்த
மாதிரியும் இருக்கும் என்றுதான் வெளியே வந்திருந்தாள்.

“நான் வாசப்படிலே நிக்கறேங்கறதுக்காக வந்துடப் போறாரா என்ன?? அவருக்கு ஆயிரம்
காரியங்கள்!தெருமண் புழுதியைக் கிளப்புகிற மாதிரி ஒரு காற்றடித்தது. மீனாக்ஷி
அம்மாள் கண்களை மூடிக் கொண்டாள். ஒரு நாய் இரைக்க இரைக்க வேகமாய் ஓடியது.
அடுத்த வீட்டிலிருந்து விசாலாக்ஷி எட்டிப் பார்த்தாள்.

“என்ன மீனாஷி, வாசல்லே நின்னுண்டு இருக்கே?” என்றபடி அருகில் வந்தாள். “அவர்
வர்றாரானு பார்த்துண்டுருக்கேன்.” பளீரென்ற புன்னகையை வரவழைத்துக் கொண்டு
சொன்னாள் மீனாக்ஷி அம்மாள். “உள்ளே வாங்கோ!”

வேண்டாண்டியம்மா! ரொம்பப் புழுங்கறது. காத்தாட வாசப்படிலேயே உக்காந்துக்கலாம்.
நோக்கு வேற ஜோலி ஒண்ணும் இல்லையே?”
இல்லை என்று தலையசைத்தபடி விசாலாக்ஷிக்கு எதிரே அமர்ந்தாள் மீனாக்ஷி அம்மாள்.
விசாலாக்ஷி வாயைப் பிடுங்குவதற்கு வந்திருக்கிறாள் என்று அவளுக்குத் தெரிந்து
தான் இருந்தது. அதற்காக அவளை வெறுத்து, ஒதுக்கிவிட முடிகிறதா என்ன?
மீனாக்ஷியம்மாளால் யாரையும் வெறுக்கவும் முடியாது. மனிதர்களை வெறுப்பது
“அவருக்கு”ப் பிடிக்காது. “மனுஷாள்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான்
இருப்பா மீனாக்ஷி! கையிலே இருக்கற எல்லா விரலும் ஒரே மாதிரியா இருக்கு? அப்படி
இருந்தா நாம சாப்பிட முடியுமோ, சொல்லு!” என்பார்.
விசாலாக்ஷி கேட்டாள்:”*ஞானபாநு *அச்சுக்குப் போயிடுத்தா?”
இன்னும் இல்லே, மாமி!”
“ஈஸ்வரா, நோக்கு ரொம்பக் கஷ்ட காலம்டியம்மா. போனதரம் பத்திரிகை
அச்சடிக்கறதுக்கும், ஸ்டாம்ப் வாங்கறதுக்கும் பணம் இல்லாமத் தானே உன்னோட ரெட்டை
வடம் சங்கிலியை வித்தே?”
“ஆமாம், மாமி”-விசாலாக்ஷியின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து
கொண்டாள் மீனாக்ஷியம்மாள்.

“பகவானே! இவ்வளவு கஷ்டத்துலே பத்திரிகை நடத்தணுமாங்கறேன்?”
“அதெல்லாம் புருஷா காரியம் மாமி! நாம ஒண்ணும் சொல்லப்படாது!”
“வாஸ்தவம், பத்திரிகை இருக்கட்டும். உன்னோட ஆத்துக்காரரோட தங்கை ஞானம்
பிரசவத்துக்கு வந்திருக்காளே, அவளுக்கு வேணுங்கறதை செய்யறதுக்காச்சும் பணம்
வேணுமோல்லியோ?”

மீனாக்ஷியம்மாள் பதில் பேசாமல் தெருவைப் பார்த்தாள். இந்த சம்பாஷணை
அவளுக்குப்பிடிக்கவில்லை என்பது விசாலாக்ஷிக்குப் புரிந்தது. பேச்சை
மாற்றினாள். “மீனாக்ஷி! நானே கேக்கணும்னு இருந்தேன். போன ஞானபாநுவிலே ஒரு
கட்டுரை வந்ததே….. யாரோ நித்யதீரர்னு எழுதிருந்தாளே! ரொம்ப நன்னாருந்தது. என்
புள்ளையாண்டான் கூடச் சொன்னான். கட்டுரைன்னா இப்பிடி இருக்கோணும்னு. யாராம்
அது?”

“நம்ம *பாரதியார்*தான் மாமி!”
“யாரூ? சுப்ரமண்ய பாரதியா?”
“ஆமாம், அவரே தான். *சரஸ்வதி, ஓர் உத்தம தேசாபிமானி, சாவித்திரி
என்ற*நிருபநேயர்இந்தப் பேர்ல எல்லாம் வேடிக்கைக் கதைகள், கவிதைகள்
எழுதறதும் அவர்தான்.
“அதானே பார்த்தேன். இவ்வளவு அழுத்தமா பாரதியை விட்டா வேற யாரால எழுதமுடியும்?
அதுசரி, உன் ஆத்துக்காரரோட லேகிய வியாபாரமெல்லாம் எப்படிப் போயிண்டிருக்கு?”
“நன்னா போயிண்டிருக்கு. ஆனா அதுலே வர்ற காசையும் பத்திரிகைல போட்டுடறார்.
அவருக்கு லோகத்துலே இருக்கற எல்லாத்தையும் விட தேசாபிமானம் முக்கியம்.” இதைச்
சொல்லும்போது மீனாக்ஷியம்மாளின் குரல் கம்மி இருந்தது.

“நெஜம்தான். பின்னே??? நாலு வருஷமும் நாலு மாசமும் ஜெயில் தண்டனைன்னா சும்மாவா?
பிரிட்டிஷ்காரன் புழிஞ்சுட மாட்டான்? அதோட அவருக்குப் பெருநோய்ங்கற குஷ்டம்
வேறே வந்துடுத்து. திருச்சி, சேலம்னு ரெண்டு ஜெயில்லேயும் அவர் பட்ட கஷ்டம்
அந்தக் கபாலீஸ்வரனுக்குத் தான் தெரியும். இவ்வளவு நடந்தும் மனுஷர் வீட்ல
தங்கறாரா? கால்ல விஷ்ணு சக்கரத்தைக் கட்டிண்ட்டாப்ல ஊர் ஊராகப் போறார்.
கடற்கரையில கூட்டம் போடற எடத்துக்குத் *திலகர் கட்டம்* னு பேர் வைக்கறார்.”……….

"கபாலீஸ்வரரை விடுங்கோ மாமி! அவர் வார்த்தைக்கு வார்த்தை அன்னை பராசக்தி, அன்னை
பராசக்தின்னு சொல்லிண்டிருக்காரே!... அவ கடைக்கண்ணைக் காட்டப் படாதா?”
மீனாக்ஷியம்மாளின் முகம் காய்ந்து போன மல்லிகையைப் போல் வாடியது.
வம்பளப்பவர்களிடம் கூட தன் மன ஆற்றாமையை வெளிப்படுத்த முடியும் என்கிற உணர்வு
அவளைக் கொஞ்சம் வெட்கப் படச் செய்திருந்தது. சரியாக அதே நேரம் அவர் வந்தார்.
விசாலாக்ஷி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். “நான் வரேண்டி மீனாக்ஷி!”
ஓட்டமும் நடையுமாக, வாசலில் இருந்து இறங்கி தன் வீட்டுக்குப் போனாள்
விசாலாக்ஷி!.

அவர் தலையில் அங்கவஸ்திரத்தை முண்டாசுபோலக் கட்டியிருந்தார். கையில் இருந்த
ஊன்றுகோலைச் சுவரில் சாற்றி வைத்தார். நடையில் கம்பீரம் கொஞ்சம் கூடக்
குறையாமல் இருந்தது. மீனாக்ஷி அம்மாளை நேருக்கு நேர் பார்த்தார்.
“ஏன் உன் முகம் வாடியிருக்கு?”
“வீட்ல மணி அரிசியில்லே! ஞானம் கார்த்தால பழைய சாதம் சாபிட்டுட்டு சுருண்டு
படுத்திருக்கா! ஆத்துலே தம்பிடி இல்லே! என்ன பண்ணலாம் சொல்லுங்கோ?”

அவர் மனம்விட்டுச் சிரித்தார். “இதுதானா உன் பிரச்னை? அன்னை பராசக்தி,
லோகத்தையே ரக்ஷிப்பவள்…… அவள் இருக்கும்போது நமக்கேன் கவலை? அதைரியப் படாதே!”
வாசலில் போஸ்ட்மேனின் குரல் கேட்டது. “ ஐயா, மணிஆர்டர்!” அவர் வாசலுக்கு
விரைந்தார். “என்ன?”
“ஞானபாநு மேனேஜர் பேருக்கு மணியார்டர் வந்திருக்குங்கய்யா!”
“மீனாக்ஷி! பராசக்தி வாசலில் நிக்கறா பாரு!”அவர் குரல் கொடுத்தார்.
மீனாக்ஷியம்மாள் கையெழுத்துப் போட்டுப் பணத்தை வாங்கினாள். அவள்தான் ஞானபாநு
பத்திரிகையின் மேனேஜர், காரியதரிசி, குமாஸ்தா எல்லாம். போஸ்ட்மேன் போனதும் அவர்
கேட்டார்:” எவ்வளவு வந்திருக்கிறது மீனாக்ஷி?
“ஒண்ணே முக்கால் ரூபாய்!”
“அப்பா….. இன்றைய பாடு கழிந்தது!”



Bookmark and Share

நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில்

ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள்,ஆபிரிக்கா
ஆய்வின் பிரகாரம் பெருமளவான ஐரோப்பிய நகரங்கள் கீழ்நோக்கிய இறக்கங்களை
காட்டுகின்றன.லண்டன் நகரம் 2008ல் 3ம் இடமும்,ஒஸ்லோ நகரம் 2008ல் 4ம் இடமும்
தரப்படுத்தலில் வகித்தன.ஆனால் இவை 2009ல் முறையே 16ம்,14ம் இடங்களை வகிக்கின்றன
.

ஜெனிவா,சூரிச் முறையே 4ம்,6ம் இடங்களை வகிக்கின்றன.கொபென்ஹகென் மாற்றமின்றி 7ம்
இடத்திலும்,மிலான் மற்றும் பாரிஸ் ஒரு இடம் வீழ்ந்து 11ம்,13ம்இடங்களை
வகிக்கின்றன.

ஜேர்மனி ,ஸ்பெய்ன் நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் வீழ்ச்சி கண்டுள்ளன.
அதேபோல் சுவீடன், உக்ரேன், செக் குடியரசு,ரொமேனியா மற்றும் ஹங்கேரி ஆகிய
நாடுகளின் நகரங்களும் தரப்படுத்தலில் வீழ்ச்சி கண்டுள்ளன.

Warsaw plummeting 35இல் இருந்து 113க்கும், Glasgow (129ம் இடம்) , Birmingham
(125tம் இடம்) ஆகிய UK நகர்கள் முறையே 60 மற்றும் 59 இடங்கள் வீழ்ந்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளின் நகரங்களில் துபாய் நகரம் 2008ல் 52ம் இடமும், அபுதாபி
நகரம் 2008ல் 65ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன. ஆனால் இவை 2009ல் முறையே 20
ம்,26ம் இடங்களை வகிக்கின்றன.டெல் அவிவ் நகரம் மாத்திரமே மத்திய கிழக்கு
நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் இறக்கம் பெற்றுள்ளது.(14ம் இடத்திலிருந்து17
ம் இடம்)

அதிகமான ஆபிரிக்க நகரங்கள் தரப்படுத்தலில் மேல் நோக்கி உயர்வு பெற்றுள்ளதுடன்,
அவற்றின் சுட்டெண்களும் குறைவடைந்துள்ளது. கெய்ரோ 44ம் இடத்திலிருந்து 57ம்
இடத்துக்கும், ஜொகனஸ்பேர்க் நகரம் அடிமட்டத்துக்கும் சரிவடைந்துள்ளது.

அமெரிக்கா (America's)
அமெரிக்க நகரங்களில் நியூயோர்க் நகரம் 2008ல் 22ம் இடமும்,லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம்2008
ல் 55ம் இடமும் , வாசிங்டன் நகரம் 2008ல் 107ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன.
ஆனால் இவை 2009ல் முறையே 8ம்,23ம்,66ம் இடங்களை வகிக்கின்றன.

கனடிய நகரங்களில் டொரண்டோ நகரம் 2008ல் 54ம் இடமும்,ஒட்டாவா நகரம் 2008ல் 85ம்
இடமும் , மொன்றியல் நகரம் 2008ல் 72ம் இடமும் தரப்படுத்தலில் வகித்தன.ஆனால் இவை2009
ல் முறையே 85ம்,121ம்,103ம் இடங்களை வகிக்கின்றன.

தென் அமெரிக்க நகரங்களில் வெனிசுவேலாவின் கரகஸ் நகரம் தரப்படுத்தலில் முதன்மை
இடம் வகிக்கின்றது.

Sao Paolo 25ம் இடத்திலிருந்து 72ம் இடத்துக்கும் மற்றும் Rio de Janeiro 31ம்
இடத்திலிருந்து 73ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.
Bogota 87ம் இடத்திலிருந்து 120ம் இடத்துக்கும், Buenos Aires 26 இடங்கள்
முன்னேறி 112ம் இடத்தினையும் வகிக்கின்றன.


ஆசியா
ஆசியாவினைப் பொறுத்தவரை டோக்கியோ நகரம் உலகளாவிய ரீதியில் 1ம் இடத்தையும்,ஒசாகா
நகரம் 2ம் இடத்தையும் வகிக்கின்றன.கொங்கொங் 5ம் இடத்தையும், சிங்கப்பூர் கடந்த
வருடத்திலிருந்து 3இடங்கள் முன்னேறி 10ம் இடத்தையும் வகிக்கின்றன.இந்த
பிராந்தியத்தில் தொடந்து கராச்சி(140ம் இடம்) செலவு குறைந்த நகரமாகும் , ஆனால்
கடந்த வருடத்தை விட ஒரு இடம் முன்னேறியுள்ளது.

இந்திய நகரங்கள் எல்லாம் தரவரிசையில் இறக்கங்களை காட்டியுள்ளன.புது டில்லி 55ம்
இடத்திலிருந்து 65ம் இடத்துக்கும், மும்பாய் 48ம் இடத்திலிருந்து 66ம்
இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.

சீன நகரங்களில் பீஜிங் 11இடங்கள் முன்னேறி 9ம் இடத்துக்கு வந்துள்ளது.
Shanghai, Shenzhen , Guangzhou முறையே 12ம்,22ம்,23ம் இடங்களை வகிக்கின்றன,

அவுஸ்ரேலியா,நியூசிலாந்து
அவுஸ்ரேலிய நகரங்களில் சிட்னி 15ம் இடத்திலிருந்து 66ம் இடத்துக்கும்,
மெல்பேர்ன் 36ம் இடத்திலிருந்து 92ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.

நியூசிலாந்து நகரங்களில் ஒக்லண்ட் 78ம் இடத்திலிருந்து 138ம் இடத்துக்கும்,
வெலிங்டன் 93ம் இடத்திலிருந்து 139ம் இடத்துக்கும் இறக்கம் கண்டுள்ளன.


வாழ்க்கைச்செலவுமிக்க முதல் 10 நகரங்கள் - 2009
1ம் இடம் டோக்கியோ நகரம் - ஜப்பான் (2008ல் 2ம் இடம்)
2ம் இடம் ஒசாகா நகரம் - ஜப்பான் (2008ல் 11ம் இடம்)
3ம் இடம் மொஸ்கோ நகரம் - ரஷ்யா (2008ல் 1ம் இடம்)
4ம் இடம் ஜெனிவா நகரம்-சுவிட்சர்லாந்து(2008ல் 8ம் இடம்)
5ம் இடம் கொங்கொங் நகரம்-கொங்கொங்(2008ல் 6ம் இடம்)
6ம் இடம் சூரிச் நகரம் - சுவிட்சர்லாந்து (2008ல் 9ம் இடம்)
7ம் இடம் கொபென்ஹகென் நகரம்-டென்மார்க் (2008ல் 7ம் இடம்)
8ம் இடம் நியூயோர்க் நகரம்-அமெரிக்கா(2008ல் 22ம் இடம்)
9ம் இடம் பீஜிங் நகரம் - சீனா (2008ல் 20ம் இடம்)
10ம் இடம் சிங்கப்பூர் நகரம் - சிங்கப்பூர் (2008ல் 13ம் இடம்)



Bookmark and Share

கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்...

"கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்."

பொருளாதரத்தில் நலிவுற்றவனை உற்றார் உறவினர் யாரும் மதிக்க மாட்டார்கள், அவனை ஒரு சுமையாகவே கருதுவது உலக இயல்பு. பெற்ற மகனைத் தனக்குப்பின் பேணிக்காக்கத் தக்கதொரு உற்ற துணைவியைத் தேடித்தரும் கடமையுள்ள தாயே வரும் மருமகள் தன் மகனிடமும் தன்னிடமும் பிற குடும்ப உறுப்பினரிடமும் அன்புடன் பழகும் பாங்குள்ளவளா? கடமையைச் செய்யும் பொறுப்பு மிக்கவளா? என்று ஆராய்ந்தறிவதைக் காட்டிலும் அவள் எவ்வளவு நகைகள் அணிந்து வருகிறாள்? எத்தனை பணம் சீதனமாகக் கொண்டு வருகிறாள்? என்றறிவதிலேயே அதிக அக்கரை காட்டுவதும் உலக இயல்பு.

ஒருவன் வாழ்க்கைத் துன்பங்களால் துயருற்று வருந்துகையில் அவன் எத்தகைய இழிநிலையை அடைந்தாலும், அது பொருளாதாரப் பிரச்சினையாயினும், உடல் ஊனம், நோய் முதலான பிரச்சினையாயினும் அதிலிருந்து அவனை மீட்க முன்வந்து தன்னலம் கருதாது அவனைக் கைதூக்கிக் கரையேற்றி உண்மையான அன்பு செலுத்தும் உன்னத உறவு இவ்வுலகில் நட்பு ஒன்றேயாகும். இத்தகைய நட்பு பெரும்பலும் மலர்வது ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகக் கல்வி கற்று வாழ்வில் உயர வழி தேடும் மாணவப் பருவத்திலேயே ஆகும்.

கல்லூரியில் சில பல ஆண்டுகள் ஒன்றாகக் கல்வி பயின்ற நண்பர்கள் தம் கல்வி பயிலும் காலம் முடிந்து ஒருவரையொருவர் பிரிய வேண்டிய சூழ்நிலை அனைவர் மனதிலும் வினோதமான உணர்வுகளை விதைப்பதாகும். இதுநாள் வரை நம்முடன் மனமொப்பி, ஆடிப் பாடி ஒன்றுகூடி மகிழ்ந்து, கல்வியில் ஒருவருக்கொருவர் உதவியிருந்த நண்பர்களைப் பிரிகிறோம் எனும் உணர்வு நண்பர்கள் ஒவ்வொருவரது மனதிலும் நீங்காததொரு ஏக்கத்தை உண்டாக்க வல்லது.

அவ்வாறு கல்வியில் தேர்ச்சிபெற்று வாழ்க்கைப் போராட்டத்தில் குதிக்க வேண்டிப் பிரியும் நண்பர்களில் பலர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாய்க் கூடி மகிழும் வாய்ப்புக் கிட்டினால் அதனை விட ஒருவர்க்கு சொர்க்கம் வேறில்லை.




Bookmark and Share

Thursday, August 6, 2009

மறுமைக்கு பயனேதும் இல்லை

நம்முடைய வாழ்க்கை என்பது நாம் அனுபவித்து சந்தோஷமாக வாழ்வதற்கு
இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள கொடை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
எனவே நமக்காகவே நாம் வாழ்வதில் தவறேதும் இல்லை என்றே கருதுகிறேன்.
ஆனால் நமது வாழ்க்கையால் யாருக்கும் பயனில்லாமல் போனால், அந்த
வாழ்க்கையால் மறுமையில் மேன்மை ஏதும் இல்லை.

நம் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகள் நாட்டின் நலனுக்காக
தங்களை தியாகமாக தந்தனர், அவர்கள் தியாகத்தால் இன்று நாம் சுதந்திரமாக
வாழ்கிறோம் அப்படி இன்னொருவரின் உதவியால்தான் நாம் நன்றாக வாழும் போது,
நாமும் முடிந்த அளவு பிறர் வாழ்வுக்காக பிறர் நன்மைக்காக எதையாவது
நிச்சயம் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

சுய நலனே கருத்தில் கொண்டு வாழ்ந்து முடித்த சுதந்திரத்துக்காக
படுபடாதவர்களை உலகம் சபிப்பது இல்லை. ஆனால் தியாகிகள் அடையும் மேன்மை
அவர்களுக்கு நிச்சயம் இல்லை! .

ஓட்டபந்தயத்தில் ஓடுபவர்கள் எல்லோரும் ஓடுவார்கள் ஆனால் பதக்கம்
பெற்றவனே மேன்மையானவன் நான்காவது ஐந்தாவது வந்தவனை யாரும் பிடித்து
தண்டிக்கபோவது இல்லை அனால் அவனுக்கு மேன்மை இல்லை. கடைசியில் வந்தவனுக்கு
அது ஒரு அவமானமாக கூட இருக்கும் அதுபோல் நாளை இறைவன் முன் நியாய
தீர்ப்புக்கு நிற்கும்போது சுயநலத்தோடு வாழ்ந்தவர்கள் அவமானத்தால்
தலைகுனிய நேரிடும்.

உலகில் என்றும் மேன்மயானதேயே நாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன்
ஏனெனில் நற்செயல்களுக்கும் ஏற்ற பிரதிபலன் யாருக்கும் கிடைக்காமல்
போவது இல்லை. "ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தவன் கூட அதற்கான பலனை
அனுபவிக்காமல் போவதில்லை"

பொது நலனுக்காக வாழ வேண்டுமென்றால் நமது தாய் தகப்பனை தவிக்கவிட்ட்விட்டு
ஊருக்கு உதவி செய்வது நிச்சயம் ஏற்றதல்ல! நம்மை வளர்த்து
ஆளாக்கியவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை. ஆகினும்
அவர்களின் விருப்பத்தின் நிலை ஏற்ப்புடயதாக இருக்கிறதா என்று ஆராய
வேண்டும். வாழ்க்கைக்கு வழியில்லாமல் இருக்கும் தாய் தகப்பனுக்கு உணவு/
உடை/இருப்பிடம் போன்ற அடிப்படை தேவையானவைகளை நிச்சயம் ஏற்படுத்தி
கொடுக்கவேண்டும். அனால் அதற்க்கு மீறி ஆசையினால் ஏற்ப்படும் தேவைகளை
நிச்சயம் பூர்த்தி செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இங்கு நாம் நம்முடைய செய்கையால் பயனடைபவர்களின் எண்ணிக்கையை மனதில்
கொண்டு செயல்களை செய்வது மிக்க நல்லது.

நாம் வாழும் வாழ்க்கை என்பது கீழ்க்கண்ட இரண்டு நிலைகளில் ஏதேனும்
ஒன்றில் அடங்கலாம்

இந்த உலகில் உள்ளவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யவே நாம்
இறைவனால் படைக்கப்பட்டேன் எனவே யாருக்காவது உதவி செய்யும் சந்தர்ப்பம்
கிடைத்தால் அதை தவற விடாமல் உதவுவது என்பது முதல் மேன்மையான நிலை

அது முடியவில்லையா

நீங்கள் பிறகுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உங்கள் செய்கையால்
பிறருக்கு எவ்விதத்திலாவது தீங்கு நேராமலாவது பார்த்துக்கொளுங்கள்
என்பது இரண்டாம் நிலை.

இந்த இரண்டாம் நிலைக்கு தண்டனை எதுவும் கிடையாது! என்றாலும் அதற்க்கு
மேன்மையில்லை. அதாவது எப்படி சாரமற்ற உப்பு பிறருக்கு பயன்படாதோ
அதுபோல் சுயநலமே கருத்தாக கொண்டு வாழும் வாழ்க்கை அற்பகாலம்
வாழப்போகும் இந்த உலகோடு முடிந்துவிடும் அதனால் நித்யமாக இருக்கபோகும்
மறுமைக்கு பயனேதும் இல்லை!



Bookmark and Share

களைத்திருந்தாள் ராதை

காலியனைக் கண்ணன் அடக்கியபோது ராதை மயங்கியதில் இருந்தும், அதன் பின்னர் அவளை
அவள் வீட்டில் அடைத்து வைத்ததையும் எண்ணி எண்ணிக் கண்ணன் ஒரு முடிவுக்கு
வந்தான். ராதையை எவ்வாறேனும் ஐயனின் பிடியில் இருந்து விடுவித்துத் தான் மணந்து
கொள்ளவேண்டும் என்பதே அது. ராதை தான் தன் ஜீவன் என்று கண்ணன் உணர்ந்தான். அவள்
பார்வை, சுவாசம், பேச்சு, அனைத்துமே தனக்கு ஒரு சக்தியைத் தருவதையும், அந்த
சக்தி இல்லாமல் தான் இல்லை என்பதையும், தன்னில் ராதை நிறைந்துள்ளாள்
என்பதையும், ராதை இல்லாமல் தான் வெறும் கூடு எனவும் உணர்ந்திருந்தான் கண்ணன்.
ஆகவே இப்போது இன்றைக்கு இந்தப்பெளர்ணமி அன்று நடைபெறப் போகும் இந்த “ராஸ்”
உற்சவத்திற்கு ராதை வரமுடியாதே என மனம் தளராமல் எவ்வாறேனும் அவளையும் இதில்
ஆடவைக்கவேண்டும் என உறுதியும் பூண்டான் கண்ணன். புல்லாங்குழலை எடுத்து
இசைத்தான். கட்டாயம் ராதைக்கு இந்த இசை கேட்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இசையைக் கண்ணன் நிறுத்தினான். அப்போது தான் ராதைக்கு உலகமே இருண்டது.

களைத்திருந்தாள் ராதை. மிக மிகக் களைத்திருந்தாள். கண்களை அவளால் திறக்கவே
முடியவில்லை. எப்படித் தூங்கப் போனாள், தூக்கம் எவ்வாறு வந்தது என்பதே
தெரியாவண்ணம், எத்தனை நேரம் தூங்கினோம் என்பதும் தெரியாவண்ணம் தூங்கிவிட்டாள்.
ஆனால், ஆனால் அவள் உடல் மேல் ஒரு மூச்சுக் காற்று பட்டது. இல்லை இல்லை இது
அவளின் மூச்சுக் காற்றே
தான். அவளே இன்னொரு மனுஷியாகி, ம்ஹும், அதுவும் இல்லையே, கானாவாகி விடும் மூச்சைப்
போல் அல்லவோ உள்ளது? “கானா, என் கானா!” அரற்றினாள் ராதை தூக்கத்திலேயே. அவள்
மேல் இதமாக வருடிச் சென்றது ஒர் ஸ்பரிசம். தூக்கிவாரிப் போட்டு எழுந்தாள் ராதை.
சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரோ, இன்னும் யாரோ அந்த அறையில் இருப்பதாய் ஓர்
உணர்வு அவளுக்கு. அவள் கத்தப் போவதை உணர்ந்தாப் போல் மெல்ல மெதுவாய் ஓர்
இனிமையான, இதமான குரல் அவளருகே வந்து மெல்லச் சொன்னது, “ராதை, பேசாமல் இரு,
கத்தாதே, மாற்றுடை அணிந்து “ராஸ்’ ஆடத் தயாராய் இரு.” என்றது அந்தக் குரல்.
ராதையின் கண்கள் விரிந்தன. அவள் கனவேதும் காணவில்லையே? இது கனவா, நனவா? ஆஹா,
இது கானா! என் கானா! ராதை குரல் வந்த திசையை நோக்கிச் சென்று தன்னிரு
கரங்களாலும் கானாவைக் கட்டிக் கொண்டாள். மேலே
நிமிர்ந்த அவள் கண்களில் கூரையில் இருந்து யாரோ தொங்குவதும் தெரிந்தது. உடனேயே
கண்ணன் ராதையிடம், “ சத்தம் போடாமல், உடை மாற்றிக் கொண்டு என்னோடு வா ராதை!
உனக்காகவே இந்த ராஸ் காத்துக் கொண்டிருக்கிறது.” என்று சொன்னான். அந்தக்
குரலில் இருந்த ஏதோ ஓர் இனம் புரியாத ஈர்ப்பு அவணையும் ஈர்த்ததோடல்லாமல் அவள்
உடலே லேசாகிக் காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள்.

அந்த இருட்டிலேயே எவ்வாறோ தன் ராஸ் உடையைக் கண்டுபிடித்து அணிந்து கொண்ட
ராதையிடம் கண்ணன், “ என் தோள்களில் ஏறிக் கொள் ராதை, நான் உன்னை மேலே
அனுப்புவேன். அங்கே ஸ்ரீதாமா உன்னைப் பிடித்துக் கூரையின் மேல் இழுத்துக்
கொள்வான். கூரையில் பலராமன் காத்திருக்கான். அவன் ஸ்ரீதாமாவின் கைகளைப்
பிடித்து உன்னையும், ஸ்ரீதாமாவையும் இழுத்துக் கொள்ளுவான். பின்னர் நான் ஏறி
வந்துவிடுவேன். “ என்று சொல்ல, இந்த அன்பைப் பார்த்த ராதைக்குப் பேச்சே
வரவில்லை. கூரை ஏறத் தயாரானாள். “ராதை, பாதியிலேயே பயப்படமாட்டாயே?” கண்ணன்
கேட்க ராதை ,”கானா, நீ இருக்கையில் எனக்கு என்ன பயம்?” என்று சொல்லிவிட்டுக்
கண்ணன் சொற்படியே நடந்தாள். ஸ்ரீதாமா அவளைக்கூரையின் மேலே ஏற்ற, பலராமன் ராதையை
இழுத்துக் கூரையில் விட்டுவிட்டு ஸ்ரீதாமாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஏற
முயலும் கண்ணனையும், ஸ்ரீதாமாவையும் ஒரே நேரத்தில் கூரையில் இழுத்துப்
போடுகிறான். அப்பா! வலிமையுள்ளவனாய் இருப்பதில் எத்தனை நன்மை! பலராமன் எண்ணிக்
கொள்கிறான். சற்று நேரம் கூரையின் மேலேயே நடந்த அனைவரும் ஓர் இடத்திற்கு
வந்ததும், முதலில் பலராமன் குதிக்க, அவன் தோளில் ஸ்ரீதாமா நிற்க, கிருஷ்ணன்,
ராதையையும் தூக்கிக் கொண்டு ஸ்ரீதாமாவின் தோளில் இறங்கிப் பின்னர் கீழே
குதிக்க, மறுபடியும் இருவரும் பூமிக்கு வந்தார்கள். அனைவரும் யமுனைக்கரையை
நோக்கி நடக்க அங்கே காத்திருந்த இளைஞர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது அனைவரையும்
பார்த்து. ராஸ் ஆட்டம் விறுவிறுப்பாய் ஆடப்
படுகிறது. காலையில் ராதையின் மாற்றாந்தாய் கபிலா கதவைத் திறந்து பார்க்க ராதை அசந்து
தூங்குகின்றாள். தன்னை மறந்து தூங்கும் அவள் முகத்தில் ஓர் அலாதியான ஒளியும்,
நிம்மதியும். செக்கச் சிவந்த இதழ்களில் ஒரு புன்சிரிப்பு. கபிலாவுக்கு
அதிசயமாய் இருக்கிறது. ஆனாலும் பெண் வெளியே செல்லவில்லை அல்லவா? அமைதி
அடைகிறாள்.

இங்கே கண்ணனோ, அமைதி இல்லாமல் யோசிக்கிறான். பலராமனுக்குக் கூடக் கொஞ்சம்
வருத்தம் தான், ராதையை அவள் வீட்டில் அடைத்துப் போடுவது குறித்து. இதற்கு
ஏதானும் செய்யவேண்டும், எனக் கண்ணனிடம் சொன்னதுக்குக் கண்ணனோ அதைத் தான்
பார்த்துக் கொள்வதாய்ச் சொல்லிவிடுகிறான். வீட்டுக்கு வந்தான் கண்ணன். தன் தாய்
யசோதையைப் பார்த்துப் புன்னகையுடன், “அம்மா, விருஷபானுவுக்கும், அவன்
மனைவிக்கும் ஒரு செய்தி அனுப்பவேண்டுமே!” என்று சொல்கின்றான். “என்னப்பா” என
யசோதை கேட்க, “ராதைக்கு மணமகன் தயார் எனச் சொல்லவேண்டும்” என்கிறான் கண்ணன்.
யசோதை சிரித்தாள்:” கண்ணா, என் கண்ணா, அவளுக்குத் தான் ஏற்கெனவே நிச்சயம் ஆகி
விட்டதே, ஐயனும் போரிலிருந்து திரும்பிவிட்டானாமே? சீக்கிரமே பிருந்தாவனமும்
வரப் போகிறானாமே? ராதைக்குக் கல்யாணம் ஆகிவிடும்.” என்று தன் மகனைத் தேற்றுவது
போல் கூறினாள். “ராதை ஐயனை மணம் புரிந்து கொள்ளக் கூடாது!” கண்ணன் சொன்னான்.
யசோதை, சரிதான், இந்தப் பையன் தன் வம்புத்தனம் ஏதோ ஆரம்பிக்கிறான் போல.
எப்போவும், எதிலும் இவனுக்கு விளையாட்டுத் தான். “சரிப்பா, பெரியவங்க நீங்க
பார்த்திருக்கிற மாப்பிள்ளை யாரு சொல்ல முடியுமா?” யசோதை கேட்டாள்.

“வேறே யாருமே இல்லை, நான் தான் அந்த மாப்பிள்ளை!” கண்ணன் சொல்கின்றான்.

“என்ன??” யசோதை கத்தினாள். சற்று நேரம் பேச்சே வரவில்லை அவளுக்கு.




Bookmark and Share

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)