Friday, October 15, 2010

சே.... என்ன வாழ்க்கை இது



அவசரமாய் விழித்து

அவசரமாய் எழுந்து

அவசரமாய்க் கிளம்பி

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் நுழைந்து

அவசரமாய் அமர்ந்து

  அவசரமாய்த் திட்டமிட்டு

அவசரமாய் வெளியிட்டு

அவசரமாய்த் திட்டுவாங்கி

அவசரமாய் மறந்து

அவசரமாய் மூடி

அவசரமாய் வெளியேறி

அவசரமாய் ஓடி

அவசரமாய் ஏறி

அவசரமாய் இறங்கி

அவசரமாய் ஓய்வெடுத்து

அவசரமாய் சொல்லிக் கொடுத்து

அவசரமாய் உணவெடுத்து

அவசரமாய்த் தூங்கவைத்து

அவசரமாய்ப் படுத்து

அவசரமாய்ப் படித்து

அவசரமாய் முடித்து

அவசரமாய்க் கண்மூடி சயனித்து

அவசரமாய்க் கனவில் பயணித்து



சே.... என்ன இது ?

என்னதான் வாழ்க்கை இது !

ஒரு நொடியில் உறைகிறேன்

மறு நொடியில் சரிகிறேன்

சன்னலைத் தாண்டி எங்கோ

சூனியத்தில் வெறிக்கிறேன்


அருகிருந்த கிளையில்

நிதானமாய்

நகர்ந்து கொண்டிருக்கிறது

நத்தை ஒன்று


Bookmark and Share

நெருங்கிப் பழகாதே நெஞ்சமே





நெருங்கிப் பழகாதே நெஞ்சமே - நீ

நெருங்கிட்டா துயரம்தான் மிஞ்சுமே

ஒட்டாமல் பழக நீயும் தெரிஞ்சிக்கோ- அது

ஓடிஞ்சிபுட்டா மனசு வலிக்கும் புரிஞ்சுக்கோ


தாமரைஇலைத் தண்ணீர் போல நட்புடா - அது

தடம் புரண்டு போனா அது தப்புடா

சிரிச்சிக்கிட்டே வருகின்ற நட்புடா - அது

சிதையும் போது மனசுக்குள்ளே கடபுடா


வெள்ளந்தியா இருக்கவேணும் மனசுடா - அது

கொள்ளை போகாம காத்துகிட்டா ஒரு தினுசுடா

நல்ல நட்பை தேடிதேடி அடைஞ்சிடு - அது

கிடைக்காட்டி தனியாளா வாழ்ந்துடு




Bookmark and Share

Tuesday, September 21, 2010

சித்தர் சிவவாக்கியர் பாடல்





*பேய்கள்கூடிப் பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே *
*நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா ! *
*தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால் *
*நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கிப்பாரும் உம்முளே.** **524*
* ** ** *
*உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ *
*அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா *
*தப்பிலிப்பொய் மானம் கெட்ட தடியனாகும் மனமேகேள்; *
*ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே.** **525*
* ** ** *
*பிறப்பதெல்லாம் இறப்பது உண்டு பேதைமக்கள் தெரிகிலாது *
*இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்தெனக் *
*குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ *
*நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே?** **526*
* ** ** *
*சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத் *
*திட்டநெட்டு எழுத்தறியாது ஏங்கிநோக்கு மதிவல¦ர் *
*பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ? *
*கட்டவிழ்த்துப் பிரமன் பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்.** **527*
* ** ** *
*வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே *
*காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ? *
*ஆதிநாதன் வெண்ணெயுண்ட அவனிருக்க நம்முளே *
*கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.** **528*
* ** ** *
*பரம்இலாதது எவ்விடம்? பரம் இருப்பது எவ்விடம்? *
*அறம் இலாத பாவிகட்குப் பரம்இலை அஃது உண்மையே; *
*கரம் இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது *
*பரம் இலாத சூன்யமாகும் பாழ் நரகம் ஆகுமே.** **529*
* ** ** *
*மாதர் தோள்சேராத தேவர் மானிலத்தில் இல்லையே ! *
*மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ் சிறக்குமே *
*மாதராகுஞ் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால் *
*மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே.** **530*
* ** ** *
*சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள் ! *
*சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர்** ** *
*சித்தர் இங்கு இருந்தும் என்னபித்தன் நாட்டிருப்பரே; *
*அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெ லாமொன்றே.** **531*
* ** ** *
*மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே *
*சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல் *
*வேந்தன் ஆகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம் *
*கூந்தலம்மை கோணல் ஒன்றும் குறிக்கொணாதுஇஃது *
* உண்மையே.** **532*
* ** ** *
*சருகருந்தி நீர் குடித்துச் சாரல்வாழ் தவசிகாள் ! *
*சருகருத்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே; *
*வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல் *
*வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே.** **533*
* ** ** *
*காடுமேடு குன்றுபள்ளம் கானின் ஆறகற்றியும் *
*நாடு தேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ? *
*கூடுவிட்டு அகன்றுஉன் ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால் *
*வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே.** **534*
* ** ** *
*கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும் *
*மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும் *
*சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும் *
*வெட்ட வெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.** **535*
* ** ** *
*தங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில் *
*பொங்கல் வைத்து ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட *
*நங்கச் சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் *
*உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே.** **536*
* ** ** *
*ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை *
*மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர் *
*பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர் *
*காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே.** **537*
* ** ** *
*நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம் *
*வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர் தம் இட்டுமே *
*மோசம் பொய்புனை சுருட்டு முற்றிலும்செய் மூடர்காள் ! *
*வேசரிக ளம்புரண்ட வெண்ணீறாகும் மேனியே.** **538*
*
*
*வாதம் செய்வேன் வௌ¢ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும் *
*போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தாவெனச் *
*சாதனை செய் தெத்திச் சொத்து தந்ததைக் கவர்ந்துமே *
*காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.** **539*
* ** ** *
*யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார் *
*வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார் *
*மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின் *
*பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.** **540*
* ** ** *
*காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட *
*மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர் *
*நேயமாக் கஞ்சா அடித்து நேர் அபினைத் தின்பதால் *
*நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.** **541*
* ** ** *
*நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று *
*ஊரினில் பறை அடித்து உதாரியாய்த் திரிபவர் *
*சீரினில் உனக்கு ஞான சித்திசெய்வேன் பாரென *
*நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார்.** **542*
* ** ** *
*காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் *
*தாவுருத்தி ராட்சம் யோகத் தண்டு கொண்ட மாடுகள் *
*தேவியை அலையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே *
*பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே.** **543*
* ** ** *
*முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனச் *
*சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர் *
*நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே *
*பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே.** **544*
* ** ** *
*செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர் *
*கொம்மையற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர் *
*நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல் *
*இம்மளமும் மும்மளமும் எம்மளமும் அல்லவே.** **545*
* ** ** *
*எத்திசை எங்கு எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில் *
*சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ?** ** *
*பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள் ! *
*முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே.** **546*
* ** ** *
*கல்லு வௌ¢ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில் *
*வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில் *
*தொல்லைஅற் றிடப்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர் *
*இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே.** **547*
* ** ** *
*இச்சகம் சனித்ததுவும் ஈசன்ஐந்து எழுத்திலே *
*மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்து எழுத்திலே *
*உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல் அஞ்செழுத்திலே *
*நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்தெழுத்திலே.** **548*
* ** ** *
*சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால் *
*நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்கள் ! *
*பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல் *
*சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே.** **549*
* ** ** *
*மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள் *
*சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத் *
*தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர் *
*இனமதில் பலர்கள் வையும்; இன்பம் அற்ற பாவிகள்.** **550*
* ** ** *
*சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம் *
*சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம் *
*சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம் *
*சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.** **551*
*
*
*சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் முற்று பெற்றன*
*அடுத்து வருவது பட்டினத்தார் பாடல்கள்Bookmark and Share

Wednesday, September 1, 2010

Beauty of Tamil



Bookmark and Share

பதினெண் சித்தர் யார் யார்?

சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண் சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?


1. திருமூலர்,
2. இராமதேவர்,
3. கும்பமுனி,
4. இடைக்காடர்,
5. தன்வந்திரி,
6. வான்மீகி,
7. கமலமுனி,
8. போகநாதர்,
9. குதம்பைச் சித்தர்,
10. மச்சமுனி,
11. கொங்கணர்,
12, பதஞ்சலி,
13. நந்திதேவர்,
14. போதகுரு,
15. பாம்பாட்டிச் சித்தர்.
16. சட்டைமுனி,
17. சுந்தரானந்த தேவர்,
18. கோரக்கர்.

Bookmark and Share

Saturday, July 3, 2010

இப்படிக்கு கொசு

சத்தமின்றி**
முத்தமிட்டேன்**
அன்றவளை**
என் சொல்வேன்**
என் இன்பமதை**

முத்தமதின் விளைவாய்**
ஏறியதே அவள் உட்லில்**
நடுக்கமுடன் உஷ்ணந் தான்**

இன்றவளை முத்த மிடுதே**
மருத்துவர் கை மருந்தூசி**

ஏசு கின்றார் என்னை யவர்**
காய்ச்சலுக்குக் காரணமே நான் என்றே**
ஒழித்திடல் வேண்டுமாம்**
உலகிலிருந்தே எங்களை**

இப்படிக்கு
கொசு.

Bookmark and Share

Sunday, April 18, 2010

தமிழ் வருடங்களின் பெய்ர்கள்

ஆங்கில வருடங்களுக்குப் பெயர் கிடையாது ஆனால், மொத்தம் 60 வருடங்களின்
காலக்குறிப்புடன் கொண்ட தமிழ் வருடம் ஒவ்வொன்றிற்கும் தனிப் பெயருண்டு. அந்த 60
வருடங்களின் பெய்ர்கள் கீழே கொடுக்கப் பட்டிருக்கின்றன;

1. பிரபவ,
2. விபவ,
3.சுக்கில,
4. பிரமோதூத,
5. பிரஜோற்பத்தி,
6. ஆங்கிரஸ,
7. ஸ்ரீமுக,
8. பவ,
9.யுவ,
10, தாது,
11. ஈஸ்வர,
12. வெகுதான்ய,
13. பிரமாதி,
14. விக்ரம,
15. விஷு,
16. சித்திரபானு,
17. க்பாலு,
18. தாரண,
19. பார்த்திப
20. விய,
21, சர்வஜித்,
22. சர்வதாரி,
23 விரோதி,
24, விக்ருதி,
25, கர,
26. நந்தன,
27. விஜய,
28. ஜய,
29. மன்மத,
30. துன்முகி,
31. ஹேவிளம்பி,
32. விளம்பி,
33.விகாரி,
34. சார்வரி,
35. பிலவ,
36, சுபகிருது,
37. சோபகிருது,
38. குரோதி,
39. விசுவாவசு,
40. பிராபவ,
41. பிலவங்க,
42, கீலக,
43, சௌமிய,
44. சாதாரண,
45. விரோதிகிருது,
46. பரிதாபி,
47. பிரமாதீச
48. ஆனந்த,
49. இராக்ஷஸ,
50. நள,
51. பிங்கள,
52. காளயுக்தி,
53. சித்தார்த்தி,
54 ரௌத்ரி,
55. துன்மதி,
56. துந்துபி,
57. ருத்ரோத்காரி,
58, ரக்தாக்ஷி,
59. குரோதன,
60. அக்ஷய.

இந்தக் கணக்கிலிருந்து நமக்குத் தெரியவருவது. பிறக்கப் போகும் விக்ருதி
மேற்கண்ட காலக் கணக்கின்படி 24ம் வருடமாகும்.


இந்த 60 வருட கால நிர்ணயம் ஜூபிடர் (ப்ரஹஸ்பதி, வியாழன், குரு) கிரகத்தை
மேற்கொண்டிருக்கிறது. ஜூபிடர் நம் பூமியைப் போல் சூரியனை ஒரு முழு சுற்று
வருவதற்கு 12 வருடங்கள் ஆகின்றன. அது போல் 5 சுற்றி வருவது வாணூலினின்
அடிப்படையில் ஒரு கணக்கு இருப்பது போல் தெரிகிறது


"Another indication for Indian influence on Chinese astronomy is the 60-year
century, known in Vedic literature (the Brhaspati cycle) and still commonly
used in the Chinese calendar. The 6th-century astronomer Aryabhatta reports
that he was 23 when the 60th cycle ended, implying that the system was set
rolling in 3102 BC. In China, the system was adopted a few centuries later:
according to Chinese tradition, it started with the enthronement of the
legendary Yellow Emperor in 2697 BC.
An interesting source of the age of the Vedic literature are the
quotations from the known mathematicians and astronomers of the first part
of 1st millennium CE. Aryabhata reports that the 60th 60 year cycle, known
as the Brhaspati cycle in the Vedic literature, ended when he was 23 years
old. This implies that the 60 year system was set rolling in 3102BC."





Bookmark and Share

Saturday, April 17, 2010

PriyasakiZ poemS







Bookmark and Share

Wednesday, April 14, 2010

நாமாய் பேசிய நாட்களை ...

உன் சில கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லை
இபோதெல்லாம் கேள்விகளே
வாழ்கையாய் போனதால்

என் நோக்கம் உனை
காயப்படுத்துவது அல்ல
என் காயத்தில் புதைந்த
உனை வெறுக்கவும் முடியவில்லை
உனை விரும்ப நீயும் அனுமதிப்பதில்லை
இப்போதும் காதலிக்கிறேன் நீயும்
நானும் நாமாய் பேசிய நாட்களை ..

உனை பிரிந்து விடு என்று சொல்
எனை மறந்து விடு என்று சொல்லாதே ...
உனை விடுத்து வேறொரு பெண்
நிச்சியமாக இல்லை என் வரலாற்றில் ...

உனை பிரிகிறேன்
பிறகெப்போதவது நீ
எனை சந்தித்தால்
சின்னதாய் ஒரு பொய் மட்டும் சொல்லடி
நான் நல்லா இருக்கிறேன் என்று...
காத்திருக்கிறேன் நாம் சந்திக்கபோகும்
அந்த நிமிடங்களை எண்ணி





Bookmark and Share

Monday, April 5, 2010

ஆசையிலும், பேராசையே.

ஆசையிலும், பேராசையே.

ஆசைகள் இல்லா மனமே ஏது?
பூமியை ஒரு நூலில் கட்டி
இழுக்க ஆசை.
மூவுலகமும் என்
ஆளுகையில் வரஆசை.
உச்சாணிக் கொம்பில் ஏறி
வானம் பிடிக்கஆசை.
பறவையாய் வானிலே
சிறகடித்து பறக்க ஆசை.
நட்சத்திரங்களை
வைரமாலையாக்கி அணிய ஆசை.
மழையென பொழிந்து பூமியை
நனைக்க ஆசை.
மறு ஜன்மத்திலும்
மீண்டும் இத்தமிழ்
மண்ணிலே பிறந்து ...
ஆசையிலும், பேராசையே...




Bookmark and Share

Sunday, April 4, 2010

இரண்டு

நிலவின்றி வானில்லை
நிஜமின்றி நிழலில்லை
நிகழ்கால நிஜக் கவியே
நீயின்றி நிஜ நட்பில்லை

இரண்டிரண்டாய் இயம்பிட்டாய்
இன்றைய வாழ்வின் செய்திதனை
இணைந்து இருவர் செயல்பட்டால்
இதோ வெற்றி தொட்டுவிடும் தூரம்தானே





Bookmark and Share

Friday, March 19, 2010

எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

எங்கேயும் நான் தமிழனாக இல்லை!
நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.

பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.

ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.

இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுழையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.

டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி

என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்

அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!

தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி

ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை

அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

நான்

பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

இன்று நான்

இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நான்

சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!

ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்

அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்

அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி

செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……




Bookmark and Share

ஆன்மீகப் புனிதம் காப்போம்

உண்மையான ஆன்மீகம்

இயற்கைக்கு மாறாக எது செய்தாலும்
இழிவு தான் கிடைக்கும் முடிவில் ...
துறவறம் இயற்கைக்கு மாறானது
பசி எடுக்கும் வயிற்றைப் பட்டிணி போடுவது
உடல் வருத்தி உயர்தவம் செய்வது
உண்மை நிலைதவறாத உத்தமராய் நடிப்பது
வேண்டாம் இந்த போலி வேஷம் ...

அவதாரப்புருஷன் மனிதனாய் அவதரித்தாலும்
இயற்கையோடுதான் வாழ்ந்தாகவேண்டும்
உண்பதும் காலைக்கடன் முடிப்பதும்
உலகில் வாழும் உயிர்களின் நியதி ...

வேண்டாம் இந்த போலி வேஷம் ...
வேண்டாம் இந்த நம்பிக்கை (மகான் - எதிர்பார்ப்பு)
சில பாதிரியார்களின் லீலைகள் பார்த்திருந்தபோதிலும்
பல போலிச்சாமியார்களின் சாயம் வெளுத்தபோதிலும்
காசாப்புக்காரனை நம்பும் நம் ஆட்டு ம(னிதர்) ந்தை கூட்டம்
என்றுமே மாறிவிடப்போவதில்லை ...

வழி தெரிந்தவர்கள் (குரு) வழிகாட்டலாம் - ஆனால்
அவரையே வழியென்று நினைப்பது நம் தவறு ...
மகான்கள் இயற்கைக்கு மாறாக இருக்கவேண்டும்
என்று நினைப்பது நம் தவறு ...
அவர்களும் மனிதர்கள்தான் என்று எண்ணும்போது
தவறாய்த் தெரியாது எதுவும் ...
சக மனிதர்களை மகான் என்று புகழவும் வேண்டாம் - பின்பு
மதிகெட்டவன் என்று இகழவும் வேண்டாம் ...
புரிந்துகொள்வோம் ... ஆன்மீகப் புனிதம் காப்போம் ...






Bookmark and Share

Saturday, March 13, 2010

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை

அத்தை மகனும் மாமன் மகளும், அல்லது அத்தை மகளும் மாமன் மகனும் ஒருவரை ஒருவர் காதலித்து அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் புரிந்து கொண்டு வாழும் வழக்கம் நமது நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. நெருங்கிய உறவினர்கள் இருவர் இவ்வாறு ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்துகையில் பிறக்கும் பிள்ளைகள் குறைபாட்டுடன் பிறக்கக்கூடும் எனும் ஒரு கருத்து மருத்துவர்களிடையே நிலவி வந்தாலும் இத்திருமண முறையைப் பெரும்பாலும் நமது சமூகத்திலுள்ள அனைவரும் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ஒருவரையொருவர் தம் மனதிற்குள்ளேயே காதலிக்கும் அத்தை மகனும் மாமன் மகளும் அவர்களின் திருமண நாள் குறிக்கும் நாளில் அத்தை மகன் விளையாட்டாகத் தான் வேறொரு பெண்ணை மணக்கக்கூடும் எனும் பொருள்பட மாமன் மகளிடம் புதிராகப் பேசிவிட்டு, இறுதியில் தான் அவளையே மணக்கப்போவதாக அவள் உணரவைத்து அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரவேண்டுமென விரும்பி, அதன்படியே அவள் குழம்பிய மன நிலையில் தவிக்கையில் தங்கள் திருமணத்திற்கென மாலைகள் மற்றும் திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்து காணும் காட்சி அவனை நிலைகுலையச் செய்கிறது. அவன் விளையாட்டாகப் பேசிய பேச்சு அப்பெண் மனதில் பெரும் சோகத்தையும் அதனால் ஏமாற்றத்தையும் ஏற்படுத்த, தன் மனம் உடைந்து போன அப்பெண் விஷமருந்தி உயிர்நீக்கிறாள்.

தன்னுடைய தவறினால் தன் காதலி மாண்டதாலும் அவளை விரும்பிய மனதில் வேறு ஏதும் விரும்பாத கொள்கையாலும் ஆட்கொள்ளப்பட்ட அவன் அவள் நினைவாகவே தனது வாழ்நாளைக் கழிக்கையில், மனம் போனபடி தன் ஊரை விட்டு எங்கோ சென்றவன் வேறொரு ஊரில் உள்ள ஆலயம் ஒன்றில் தண்ணீர் சுமந்து தருவது போன்ற பணிகளைச் செய்து கொண்டு அங்கேயே தனியாக வாழத் தலைபடுகையில் அவ்வூரில் வசிக்கும் வேறொரு இளம் விதவைப் பெண்ணின் பெயர் இவனது காதலியின் பெயராக அமைந்து விடுவதால், இவன் தனது காதலியின் பெயரை அவ்வூரிலுள்ள சில சுவர்களில் எழுதியதால் சிறு குழப்பம் ஏற்படுகிறது. பின்னர் அக்குழப்பம் தெளிந்து அவ்விதவைப் பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்வானோ எனும் ஒரு எதிர்பார்ப்பைப் பிறர் மனதில் ஏற்படுத்துவது போன்றதொரு நிலையில் அவனும் அவ்விதவைப் பெண்ணும் ஒன்று சேர்ந்து அவ்வூரிலிருக்கு வேறொரு இளம் காதல் ஜோடியை ஒன்று சேர்க்கப் பாடுபட்டு வெற்றியும் காண்கின்றனர். இம்முயற்சியில் நம் கதாநாயகன் தன் உயிரையே விட்ட பின்னரும் அவனது பிணத்தின் கையில் ஒரு அரிவாளைக் கொடுத்து அவன் உயிருடன் நிற்பது போன்றதொரு தோற்றத்தினை ஏற்படுத்தி அவ்விதவைப் பெண், அவ்விளம் ஜோடியின் திருமணத்திற்குத் தடையாக நிற்கும் ஒருவரை ஏமாற்றி, தங்களது முயற்சியான காதலர்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி காண்கிறாள்.

இக்கதை வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதையாகும்.

தன் தவறுதலால் மாண்ட தன் காதலியை மனதில் எண்ணீயபடி கதாநாயகன் பாடுவதாக அமைந்தது இவ்வினிய பாடல். ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது




Bookmark and Share

Friday, March 12, 2010

தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?




Bookmark and Share

Sunday, March 7, 2010

திருக்கண்ணபுரத்து திருவருள்

திருக்கண்ணபுரத்து திருமாலே - உந்தன்
திருவடி சரணமப்பா ...
திருமங்கள நாத இசைகேட்க - எந்தன்
இருகரம் குவித்து வணங்குகின்றேன்

தூய தமிழ்ச்சொல்லெடுத்து, துயர் துடைக்கும்
தூ(மா)யவனை துதிக்கின்றேன்... துணையிருப்பாய் ...
ஆயிரமாயிரம் பாடல்கள் நான் பாடினாலும்
ஆழ்வார்தம் திருப்பாவையில் அணுவும் ஆகாதெனினும்- என்
ஆழ்மனதிலிருந்து வரும் இத்துளிக்கவிதையை
துளசிமாலையாய்த் தொடுக்கின்றேன் .. துணையிருப்பாய் ...

பொன் பொருள் வேண்டி உந்தன் பொற்பாதம்
பிடித்திடுவார் பல கோடி ...
பெருஞ்செல்வம் வேண்டி உந்தன் பேரருளைப்
போற்றிடுவார் பல கோடி ...
நான் வந்த காரணம் நீ அறிவாய்
தேனினிய திருவடியில் இடம் தருவாய் ...

பாலும் பழமும் கொண்டுவந்து படைத்து
பரந்தாமன் அருள் பெறுவார் பலர் ..
பூவும் (துளசி) மாலையும் கொண்டுவந்து சூட்டி
புருஷோத்தமன் அருள் பெறுவார் பலர் ...
நானோ ...
வெறுங்கையோடு வந்திருக்கிறேன் ... திறந்த மனதோடு...
உன்னிடமிருந்து பிரிந்துவந்து மனிதனாய்ப் பிறக்கையிலும்
பின் வந்து உன்னிடத்தில் சேர்கையிலும் (வைகுண்டம்)
வெறுங்கையோடு வரும் நினைப்பில்
பரம்பொருளின் அருள்பெற வந்திருக்கிறேன் ..
தூ(மா)யவனே... துதிக்கின்றேன்.. துணையிருப்பாய் ...
ம்.
ம்.ம்..
ம்.ம்..ம்...
யாவருக்கும் கிடைத்திடாத பேரருளைப்பெற்றுக்கொண்டேன்
பெருமாலே ... பெருமாலே... போற்றி... போற்றி ..




Bookmark and Share

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)