Monday, October 9, 2017

லாரி டிரைவர்

“பெரியவனாகி என்ன செய்யப்போறே?” என்ற கேள்விக்கு “டிரைவர் ஆகப் போறேன்” என்று சொல்லாத சிறுவர்கள் இருந்திருக்கவே முடியாது என்பது என் நம்பிக்கை. டிரைவர் என்பவர் சிறுவர்களுக்கு அவ்வளவு பெரிய ஆதர்சமாக இருந்திருக்கிறார். பஸ்சில் பயணிக்கும்போது முன் வரிசையில் உட்காரத் துடிப்பதும், டிரைவர் அஸால்டாக ஸ்டியரிங்கைத் திருப்பி வண்டியை ஓட்டுவதும், கியர் மாற்றுவதும், பின்னால் திரும்பிப் பேசிக்கொண்டே ஓட்டுவதும், அவ்வப்போது ஹாரனை அமுக்குவதும்... கண்டு வியக்காத சிறுவர்கள் யார்தான் இருக்க முடியும்? ஊருக்குள் வரும் லாரிகளின் பின்னால் ஓடாதவர்கள், பின்பக்கப் பலகையைப் பிடித்துத் தொங்காதவர்கள் யார்?
Photo
அம்மா பொட்டுக்கடலை வாங்கி வரச் சொல்லும்போதும், பக்கத்து வீட்டு மாமா சிகரெட் வாங்கி வரச் சொல்லும்போதும் நான் லாரியை எடுத்துக்கொண்டுதான் புறப்படுவேன். சாவியைப் போட்டு டுர்ர்ர்ர்.... என்று கிளப்பி, நிறுத்தியிருக்கும் இடத்திலிருந்து ரிவர்ஸ் எடுத்து, சரசரவென ஸ்டியரிங்கைத் திருப்பி, வண்டியை கடைக்கு விடுவேன். சமயத்தில் மோட்டார் பைக்கில்கூடப் போவதுண்டு. திரும்பி வரும்போது என்னை அறியாமலே அது லாரியாக மாறியிருக்கும். மோட்டார் பைக்கின் ஹாண்டிலை திருப்புவதில் சுவாரசியம் அதிகம் கிடையாது. இடது பக்கமோ வலது பக்கமோ திருப்பியதும் இடுப்பில் முழங்கை இடிக்கும். ஆனால் லாரி அல்லது பஸ்சின் ஸ்டியரிக் அப்படியல்ல, இரண்டு கைகளாலும் சுழற்றுவதில், எவ்வளவு சுகம்! இடது பக்கமோ வலது பக்கமோ திரும்ப வேண்டுமானால், பவர் ஸ்டியரிங் என்றால் என்னவென்றே தெரிந்திராத அந்தக் காலத்திலேயே என்னுடைய ஸ்டியரிங் சொய்ங் என்று இரண்டு மூன்று சுற்றுச் சுற்றும். வழியில் ஆள் வந்தால் என் வண்டியின் வேகத்தைப் பார்த்து ஒதுங்க வேண்டும். ஒதுங்காதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது பாம்... பாம்... ரப்பர் ஹாரன். வழியில் ஆட்கள் இல்லாதபோது வண்டி டாப் கியரில் சத்தமில்லாமல் ஓடும். கடைக்குப் போய் காசு கொடுத்து பொருள் வாங்கும்போது வண்டியிலிருந்து இறங்காமலே வாங்குவதுண்டு. ஆனால் திரும்பி வந்து கொடுக்கும்போது வண்டியின் வலது பக்கத் கதவைத் திறந்து கீழே குதித்து, டமாரென்று கதவை அறைந்து சாத்திவிட்டுத்தான் கொடுப்பேன். யு போல வளைத்த கம்பியின் இடையில் சைக்கிள் ரிம்மை ஓட்டிக்கொண்டு போய் திரும்பும்போது அதே ரிம் ஸ்டியரிங்காக மாறிவிடுவதும் உண்டு.

முதல்முதலாக லாரியில் பயணித்தது மங்கலாக இப்போதும் நினைவில் உண்டு. வெள்ளகோவிலிலிருந்து மடத்துக்குளத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிய அப்பா, லாரியில்தான் சாமான்களையும் எங்களையும் ஏற்றிக்கொண்டு வந்தார். ஓர் அதிகாலையின் மங்கிய ஒளியில் தூக்கக் கலக்கத்துடன் லாரியின் பின்னாலிருந்து இறங்கி நின்றது அந்தக் காலையைப் போலவே மங்கலாக நினைவிருக்கிறது. உயர்நிலைப் பள்ளிப்பருவத்தை எட்டியபோது நிஜ லாரியில் – அதாவது, லாரியின் கேபினில் ஏறி உட்காரும் வாய்ப்புகள் கிடைத்தன.

எனக்கு சொந்த ஊர் தாராபுரம். அங்கே எங்களுக்கு நிறைய உறவினர்கள். ஆண்டு இறுதியில் கோடை விடுமுறைகள் பெரும்பாலும் தாராபுரத்தில் கழியும். சுல்தானியா பள்ளிவாசலின் வடக்கே, மாரியம்மன் கோவில் வீதியின் கிழக்கே, வாய்க்காலை அடுத்து பெரிய மைதானம் இருக்கும். அதுதான் லாரிகளின் ஷெட். நிறைய லாரிகள் நின்றிருக்கும்.

உறவினர்களில் ஒருவர் கலீம் - ஒன்று விட்ட சித்தப்பா. அவர் ஒரு லாரியின் டிரைவராக இருந்தார். விடுமுறையில் ஊருக்குப் போகும்போதெல்லாம் என் பொழுதுகள் பெரும்பாலும் லாரி ஷெட்டிலேயே கழியும். அல்லது அமராவதி ஆற்றில் கழியும். கலீமுக்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லை. நண்பனாக நடத்துவார், அதீத பாசத்துடன் பேசுவார். இப்போதும் கலீம் என்று பெயர் சொல்லித்தான் அழைக்கிறேன். அவருடைய சகோதரி – என் சின்னம்மாவும் அளவற்ற பாசத்தைப் பொழிவார். அவருடைய கணவர் டிங்கரிங் வேலை செய்பவர். அவருடைய தொழிலும் செவ்வாய்க் கிழமை வாரச் சந்தை நாள் தவிர இதர நாட்களில் லாரி ஷெட்டை நம்பித்தான் இருந்தது. இன்னொரு உறவினர் தின்பண்டங்களை ஒரு டின்னில் போட்டுக்கொண்டு லாரி ஷெட்டில் அலைந்து விற்றுக் கொண்டிருப்பார்.
Photo
மாமா தாராபுரத்தில் தாசில்தாராக இருந்தார். விடுமுறைக்குச் செல்வது அவர் வீட்டுக்குத்தான். ஆனால் பேருக்குத்தான் அங்கே போவது. இரவு உறங்கவும், காலை உணவுக்கும் மட்டும்தான் மாமா வீடு. மற்ற நேரமெல்லாம் சேக்காளிகளோடும் மற்ற உறவினர்களின் வீடுகளிலும்தான் இருப்பேன். (சின்னம்மா வீட்டில் பழைய சோறும், பெண்கள் கூடைக்குள் பாத்திரத்தை வைத்து விற்றுக் கொண்டு வந்த தாராபுரத்துத் தயிரும், கோடை காலத்துக்கென்றே வரம் வாங்கி வந்த மாம்பழமும் உணவாகக் கிடைக்கும்.) கலீம் தவிர, இன்னொரு தோழன் சிராஜ். என் வயதுக்காரன், உறவுமுறைச் சகோதரன். அவன் தன் அண்ணனின் லாரியில் கிளியாக இருந்தான். (கிளி என்பது கிளீனர் என்பதன் சுருக்கம்.) அவர்களுடைய லாரியின் பெயர் – நாம் இருவர் – தமிழ் அல்ல ஆங்கிலம் – WE TWO. அதாவது, அண்ணனும் தம்பியும் இணைந்து ஓட்டும் லாரியாம். சிறிது காலத்துக்குப் பிறகு சிராஜும் டிரைவராகி விட்டான்.

லாரியில் டிரைவர் ஆவதற்கு முதல் தகுதி, யாராவது ஒரு டிரைவரிடம் கிளீனராகச் சேர வேண்டும். சொல்லப்போனால் டிரைவரைவிட கிளிக்குத்தான் அதிக வேலை இருக்கும். வாடகைக்குப் போய்விட்டு வந்த டிரைவர் வண்டியை விட்டுவிட்டு ஹாயாகப் போய்விடலாம். பக்கத்து வாய்க்காலிலிருந்து பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வந்து கிளீனர்தான் வண்டியைக் கழுவ வேண்டும், தார்பாலினை முறையாக மடித்து வைக்க வேண்டும், கயிறைச் சுருட்டி வைக்க வேண்டும்.... ஓரிரண்டு ஆண்டுகள் கிளியாக இருந்து நம்பிக்கை வந்த பிறகுதான் லாரியை ஓட்ட அனுமதிப்பார். அதுவும் வாடகைக்குப் போகும்போது அல்ல. இதுபோல ஷெட்டில் நிற்கும்போது ரிவர்ஸ் எடுக்க, நகர்த்தி நிறுத்த, கழுவிய பிறகு லேசாக ஒரு டிரையல் பார்க்க அனுமதிப்பார் டிரைவர். அவ்வப்போது அடியும் கிடைக்கும். அடிக்குப் பயந்தவன் டிரைவர் ஆகவே முடியாது. ஒரு டிரைவரிடம் கிளியாகத் தாக்குப் பிடிக்காதவன் இன்னொரு டிரைவரிடம் அவ்வளவு சுலபமாக கிளியாகச் சேர்ந்து விட முடியாது. கிளிகள் எல்லாருமே தம் வாத்தியார்களிடம் எப்போதும் மரியாதையாகவே இருப்பார்கள் - அந்தக் கிளி இன்னும் பத்துக்கிளிகளை உருவாக்கி விட்ட பின்பும்கூட.

தாராபுரம் லாரி ஷெட்டில் இன்னொரு கவர்ச்சிகரமான விஷயமும் இருந்தது – கேரம் போர்டுகள். நான்கைந்து கடைகளில் கேரம் போர்டுகள் வைத்திருப்பார்கள். ஒரு ஆட்டத்துக்கு இவ்வளவு என்று காசு கொடுத்துவிட்டு விளையாடலாம். ஆடுபவர்கள் தமக்குள் பந்தயம் கட்டிக் கொள்வார்கள். மங்களூர் ஓடு வேய்ந்த கூரையிலிருந்து சில்க் வயரில் மஞ்சள் குண்டு பல்பு கேரம் போர்டுக்கு மேலாகத் தொங்கும். போரிக் பவுடர் பஞ்சமே இல்லாமல் கொட்டப்படும். முரடர்கள் என்று கருதப்படும் லாரிக்காரர்களின் விரல்கள் நளினமாக காய்களைத் தள்ளும். ஆடுபவர்கள் நான்கு பேர் என்றால், வேடிக்கை பார்க்கவும் உசுப்பிவிடவும் நாற்பது பேர் இருப்பார்கள். சமயத்தில் சண்டையும் வருவதுண்டு. நான் முதன்முதலாக கேரம் ஆடியது அங்கேதான்.
Photo
பொழுது போகாமல் லாரி ஷெட்டுக்குப் போனால் கலீம் கிடைப்பார், அல்லது சிராஜ் கிடைப்பான். சும்மா லாரியில் ஏறி ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து அரட்டை அடித்துவிட்டு வருவேன். அதிக நேரம் அப்படி உட்கார்ந்திருக்க முடியாது. எனக்கு வேலையில்லை, ஆனால் கலீமுக்கும் சிராஜுக்கும் வேலைகள் இருக்கும். இப்போது போல செல்போன் இருந்திருந்தால் செல்பி எடுத்து வைத்திருக்கலாம்! இரண்டு பேரும் வாடகைக்குப் போய்விட்டிருந்தால் சும்மா சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பேன். உறவுகளில் மேலும் சிலரும் லாரித் தொழிலில் இருந்தார்கள். அவர்களிடம் கலீம் எங்கே, சிராஜ் எங்கே என்று விசாரிப்பேன். அவர்கள் இல்லாத நேரங்கள் நரகவேதனையாக இருக்கும்.

மாமா தன் மகனுக்காக, வேறொருவருடன் கூட்டு சேர்ந்து சென்னாக்கல் பாளையம் அருகே செங்கல் சூளை வைத்திருந்தார். தாராபுரத்தில் முதல் மாடர்ன் பிரிக்ஸ் சூளை அதுதான். லக்ஷ்மி பிரிக் வொர்க்ஸ் – ஒவ்வொரு செங்கல்லிலும் LBW என்று அச்சுப் பதிந்திருக்கும். செங்கல் ஏற்றிச்செல்ல, மண் கொண்டுவர லாரி இருந்தது. மாமா மகனுக்கு சேக்காளியாக தூரத்து உறவைச் சேர்ந்த சையத் சான் இருந்தான்.. பெயரைக் கொஞ்சம் மாற்றினால் சைத்தான். அதற்கேற்ப சைத்தானாகவே இருந்தான். சொந்த லாரியிலேயே டீசல் கணக்கில் கமிஷன் அடித்தவர்கள் அவர்கள் சைத்தானுடன் நட்பு சேர்ந்த மாமா மகன் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி, கடைசியில் சூளை கையைவிட்டுப் போனது வேறு கதை. கலீமும் சிராஜும் இல்லாத சமயங்களில் அந்த லாரியில் ஏறி சூளைக்குப் போய் வருவதும் உண்டு.

கலீமும் சிராஜும் வாடகைக்குப் போய்வந்த பிறகு கதைகதையாக அளப்பார்கள். அவற்றில் சில கதைகள் மிகைப்படுத்திய பொய்கள் என்று இப்போது தெரிகிறது. ஆனால் அப்போது அவற்றை ஆவென்று வாய் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன். எனக்கும் லாரி டிரைவர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் கிளியின் வேலைப் பளுவைப் பார்த்தபிறகு ஆசையை அமராவதி ஆற்றில் விட்டுவிட்டேன். அது காவிரியில் கலந்து கடலில் மிதந்து கொண்டிருக்கிறது.

கலீமும் சிராஜும் சிராஜின் அண்ணனும் சொன்ன கதைகளில் லாரி டிரைவர்களின் வாழ்க்கை அறிமுகமாகியது. எவ்வளவு சிரம்மான வேலை என்று தெரிந்தது. வழிப்பறிக் கொள்ளை, இரவு தூங்குவதற்கு நிறுத்திய இடத்தில் திருட்டு, டீசல் திருட்டு, லாரி ஓடும்போதே பின்னாலிருந்து தொற்றி ஏறி, தார்பாலினைக் கிழித்து பொருட்களை எடுத்து கீழே வீசிவிட்டு, ஏதேனுமொரு மேட்டில் லாரி மெதுவாகச் செல்லும்போது கீழே இறங்கி ஓடிவிடுவது, போலீஸ்காரர்களின் தொல்லை... இப்படி பல கதைகளும் அறிமுகமாகியிருந்தன. ஏதேனுமொரு ஊருக்கு சரக்கு ஏற்றிச் சென்று இறக்கியபிறகு திரும்பி வரும்போது ரிடர்ன் லோடுக்காக காத்திருக்க நேரும். சரியாக அமையாத பட்சத்தில் கிடைத்ததை ஏற்றிக்கொண்டு வர வேண்டியிருக்கும். அதுவும் அவருடைய ஊராக இல்லாவிட்டாலும் பக்கத்து நகரமாக இருந்தாலும் போதும் என்று லோடுக்காக ஏங்க வேண்டியிருக்கும். அப்புறம் அந்த நகரத்திலிருந்து ஊருக்கு காலியாகத் திரும்ப வேண்டியிருக்கும்.
Photo
அப்போது மாவடங்களுக்கு இடையே செக் போஸ்ட் இருந்தது. ஒவ்வொரு செக் போஸ்டிலும் லாரிகள் வரிசையாக நிற்கும். தாலூகா அலுவலக ரெவின்யூ அலுவலர்களில் செக் போஸ்ட்டில் டியூட்டி கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏகப்பட்ட காசு கிடைக்கும். லாரி டிரைவர்கள் மனதுக்குள் திட்டிக்கொண்டுதான் காசைக் கொட்டியிருப்பார்கள். கலீமும் சிராஜும் பிற்காலத்தில் சேரன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் - சிடிசி - பஸ் டிரைவர்களாக ஆகி, இப்போது ஓய்வு பெற்று விட்டார்கள். தாராபுரம் லாரி ஷெட் இப்போது கலீமைப் போலவே மெலிந்து போய் விட்டது. கலீம் இப்போது ஆட்டோ ஓட்டுகிறார்.

நாம் நினைப்பதுபோல லாரி ஓட்டுவது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று அப்போதே எனக்குப் புரிந்திருந்தது. சரக்கை ஏற்றிக் கட்டுவதுகூட பெரிய கலைதான். கட்டு கொஞ்சம் இளகி விட்டால் சரக்கு ஒருபக்கமாகச் சாயும். ஏதேனுமொரு திருப்பத்தில் கவிழ்ந்துவிடக்கூடும். எங்கள் ஊருக்கு மூன்று மைல் மேற்கே சர்க்கரை ஆலை இருந்தது. சீசனில் கரும்பு லாரிகளும் வண்டிகளும் வரிசையாகப் போய்க் கொண்டே இருக்கும். ஊருக்கு மேற்கே யூனியன் ஆபீஸ் மேட்டில் லாரி முக்கி முனகி ஏறும்போது ஓடும் லாரியிலிருந்து கரும்பு உருவியதும் உண்டு. பாடிக்கு மேலே கரும்பை ஏற்றிக் கட்டிக்கொண்டு லாரிகள் போகும். சரியாகக் கட்டாத கரும்பு ஒரு பக்கமாகச் சாய்ந்திருக்கும். கிருஷ்ணாபுரம் கடந்து, நரசிங்காபுரத்தில் சர்க்கரை ஆலையை நோக்கி இடதுபக்கம் லாரி திரும்பும்போது அப்படியே படுத்து விடும்.

நரசிங்காபுரத்துக்கும் மேற்கே, மைவாடி பிரிவுக்கும் சற்று கிழக்கே சாலையோரம் ஒரு கிணறு உண்டு. ஒருகாலத்திலும் எவரும் பயன்படுத்தாத அந்தக் கிணற்றில் மட்டும் ஒருபோதும் தண்ணீர் வற்றியதே இல்லை. சாலை லேசாக வளைகிற இடத்தில் அந்தக் கிணறு இருக்கிறது. இரவில் மேற்கிலிருந்து வரும் லாரிகளில் மாதத்துக்கு ஒரு லாரியாவது கிணற்றுக்குள் விழுந்துவிடும். “லாரிக்குத் தாகம் போலிருக்கு... தண்ணி குடிக்கப் போயிருக்கும்டா...” என்று நாங்கள் கேலி பேசிக்கொள்வோம். ஆனால், வெகுதொலைவு ஓட்டிவந்த களைப்பில் இரவில் டிரைவரின் கணநேர உறக்கத்தில்தான் விபத்து நிகழ்ந்திருக்கும் என்பது பின்னர் புரிந்தது. மலைப்பகுதிகளிலிருந்து மரங்களை ஏற்றிவரும் லாரிக்கு தனியான சப்தம் உண்டு. அதன் உறுமல் வித்தியாசமாக இருக்கும். இறக்கத்தில் வரும்போது அதை பிரேக் போட்டு நிறுத்துவது சிரமம் என்பது அப்போதே எங்களுக்குத் தெரியும்.
Photo
இப்போதெல்லாம் 12 – 16 சக்கர லாரிகள் வந்து விட்டன. கன்டெய்னர் லாரிகள் வந்து விட்டன. அப்போது இருந்தவை பெரும்பாலும் 6 சக்கர லாரிகள் மட்டுமே. ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் லாரி டிரைவர்களின் வாழ்க்கையில் மட்டும் மாற்றமே இல்லை, முன்னேற்றமே இல்லை – அதே போலீஸ் தொல்லை, செக் போஸ்ட் தொல்லை, திருட்டுத் தொல்லை, வழிப்பறித் தொல்லை, எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது புதிதாக டோல் கேட் கொள்ளை. கலவரம் செய்பவர்களுக்கு எளிதான இலக்கு லாரிதான். கண்ணாடிகளை உடைக்கலாம், சக்கரங்களில் காற்றைப் பிடுங்கலாம், தீ வைக்கலாம். பாதசாரிகளை அல்லது ஸ்கூட்டர்-பைக் போன்ற வாகனத்தை லாரி இடித்தாலும் சரி, அல்லது அவர்கள் லாரியில் இடித்தாலும் சரி - தவறு எப்போதுமே லாரிக்காரன் மீதுதான்! பிரம்மாண்டமான இயந்திரத்தை இயக்குபவன்மீது மறைமுகமான பொறாமை நமக்குள் இருக்கிறதோ என்னவோ?! ஒன்றிரண்டு லாரி வைத்திருப்பவர்களின் வாழ்க்கை புலிவாலைப் பிடித்த கதை. வாங்கிய கடனுக்கு தவணை கட்ட முழி பிதுங்கும், விற்கலாம் என்றால் விலையும் கிடைக்காது. ஒரு விபத்து அல்லது ஒரு திருட்டு போதும் அவர்களின் வாழ்க்கையையே சிதறடிக்க. ஓனராக இருந்துவிட்டு டிரைவராகப் போவது மிகப்பெரிய அவமானம். நாற்கரச் சாலைகளில் லாரிகள் ஓடுவதைப் பார்த்து, ஆஹா... அவர்களுக்கு எவ்வளவு வசதியாகி விட்டது, எவ்வளவு விரைவான போக்குவரத்து வசதி வந்து விட்டது என்று நீங்கள் நினைத்தால், அது முழுக்கவும் மாயைதான்.

நம்ப முடியவில்லையா? இப்போது எதற்காக இதை எழுதுகிறேன் என்று நினைக்கிறீர்களா? லாரி டிரைவர்களின் உண்மையான வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினால் தவறாமல் வாசியுங்கள் – நெடுஞ்சாலை வாழ்க்கை. கா. பாலமுருகன் எழுதியது. விகடன் வெளியீடு. (ரூ. 175) மோட்டார் விகடனில் தொடராக வெளி வந்ததாம். லாரி டிரைவர்களுடன் பயணித்து அவர்களுடைய அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஞாநி இந்நூலைப்பற்றி பதிவு எழுதியிருந்தார். மதுரை புத்தகத் திருவிழாவில் தேடிப்போய் வாங்கி வந்தேன்.
Photo
தில்லி வந்ததிலிருந்தே லாரியிலேயே தமிழ்நாடு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளும் இருந்து கொண்டிருக்கிறது. லாரி டிரைவராக இந்தப் பக்கம் வந்து சென்று கொண்டிருக்கும் முத்துக்குமாரிடம் இதுபற்றிப் பேசியதாகவும் நினைவு. இதுவரை சாத்தியமாகவில்லை. தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சாமான்களை மூட்டை கட்டிக்கொண்டு ஊருக்குப் போகும்போதாவது லாரியில் போக வேண்டும் என்ற ஆசை. நிறைவேறுமா என்று தெரியாது. ஆனால் ஆசையையும் கற்பனையையும் எதற்காகக் கட்டுப்படுத்த வேண்டும். அதுபாட்டுக்கு ஒருபக்கம் இருந்து விட்டுப் போகட்டும். இப்போது இருப்பதுபோல பெட் ரெஸ்டில் இருக்கும்போது, எதையும் செய்யத் தோன்றாதபோது, மனதுக்குள் லாரியில் பயணம் செய்யலாம். கேபினில் சமைக்கலாம், பாட்டுக் கேட்கலாம், திறந்த வெளிகளில் உறங்கலாம், வாய்க்கால்களிலும் கால்வாய்களிலும் குளிக்கலாம், இருந்த இடத்திலிருந்தே நெடும் பயணங்களை மனதுக்குள் அனுபவிக்கலாம்.
Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)