>
>
> கருவறை வாசம் முடிந்து
>
> கண் திறந்ததும்
>
> நுழைந்தது இது .
>
>
> என் இமைக்கூட்டில
>
> இருப்பது தெரியாமல்
>
> கனவுலகப் புள்ளிகளில்
>
> பால் மணம் மாறாமல்
>
> புன்னகை புரிந்தேன் .
>
> கடவுள் பேசுகிறார்
>
>
> என்றார் சிலர்
>
> தத்தி தத்தி
>
> முற்றம் நடந்த நான்
>
> இலை நழுவும்
>
> ஒளிக்கற்றையை
>
> கையில் பற்ற
>
> எத்தனித்தேன்
>
> அகிலத்தின் அணுக்கள்
>
> குழைந்தோடும்
>
> ஓலைக்கீற்றின் ஓட்டைவழி
>
> இறுகப் பற்றியும்
>
> பிடிக்க இயலாத
>
> ஒளிவட்டம் தேடி
>
> அரும்பும் இளமையில்
>
> எதிர்படுபவர் கண்களில்
>
> தேடினேன் அதை .
>
> அறிமுகம் இல்லாத
>
> முகத்தின் கண்களில்
>
> மிளிர்ந்தது அது
>
> அதுவே எனதென்று
>
> பற்றி இழுத்து
>
> எனதாக்க முயற்சித்தேன்
>
> வண்ண வண்ண கன்வுலகம் காட்டி
>
> எம்பி குதித்த போது
>
> உடைந்து நிறமிழந்து
>
> காற்றுக்குமிழ் போலே
>
> என் கனவின் மேல்அதிருப்தியுற்று
>
> இழைந்தோடும் அதை
>
> வால்முளைத்து
>
> நீந்தக் கண்டேன்
>
> வேடிக்கை பார்த்த
>
> நீள்வட்ட நீர் பரப்பில
>
> நீ வேண்டாம் என
>
> போக்கு காட்டி
>
> என் சாயலை ஒத்த
>
> கண்கள் விழிப்படிமமானது,
>
> புதிய கனவொன்றின்
>
> ஒளிபற்றி.
>
> இனி அது நமதல்ல என
>
> பெருமூச்செய்திய தருணத்தில்
>
> வழக்கத்தின் காரணமாய்
>
> அருவமாய் இமைக்குள்
>
> சிறகுகள் மடித்து
>
> மணலாய் நெருடிற்று
>
> கண்ணின் கருவட்டம்
>
> நீரின் நிழலில்
>
> அதன் பின்னே அலைந்தது .
>
> பேச மொழியின்றி
>
> பசிய நீரின் ஆழம் துளைத்து
>
> ஒளித்தூண்டிலின்
>
> கரைவந்து
>
> அது எனதல்லவென
>
> மெய்யுணர்ந்தபோது
>
> நானே நட்சத்திர ஒளியானேன்
>
> உடம்பொடு மெய் நீங்கி.
>
>
ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.