அந்த வீட்டிற்குப்பல உதவிகளும் செய்து வந்தாள்:அவள் இருந்த அறையில்
இரண்டு ரஜாய்ப்பெட்டிகளும் ஒரு பீரோவும் இருந்தன .
ஒரு 15 நாள் பழக்கத்தில் நான் அவளை நன்குப்புரிந்துக்கொண்டேன்
,அவளைப்பற்றியத்தகவலும் எனக்குக்கிடைத்தன . அவள் உழைத்து நாணயமாக
சம்பாதித்து அதில் வரும் பணத்தில் பாதியைத்தானம்
செய்துவிடுவாள் அதுவும் அன்னதானம் தான் .தவிர ஆடிமாதம் கூழ் ..பின்
நவராத்திரி கார்த்திகை வைகுண்ட ஏகாதசி சிவராதிரி என்று அவள் இல்லாத
விரதம் இல்லை செய்யாத தானம் இல்லை ,ஆடிமாதம்
மிகப்பெரிதாக ஹோமம செய்து ஸ்ரீ சக்கிரபூஜையும் செய்து பின்
வருபவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போடும் பழக்கம் உண்டு அவள்
குணத்தைப்பார்த்து
சிலர் தானாகவே உதவ வருவார்கள் சிலர் பாட்டுக்கச்சேரி
பஜன் அமைத்துக்கொடுப்பார்கள் ,பெரிய யாகம் போது
பல ரிக்வித்துக்களை வரவழைத்து அவர்கள் மூலம் துர்காசப்தசதி
லலிதாசஹஸ்ர்நாமம் பின் துர்காசூக்தம் என்று பல
சொல்ல வைப்பாள் அவள் தனக்கென்று இரண்டு புடவைதான் வைத்துக்கொள்ளுவாள்
பலதடவைகள் இரத்த தானமும் செய்வாள் அவளைப்பற்றி இத்தனைக்கேட்டு ஒருதடவை
அவள் செய்யும் ஹோமத்திற்குப்போயிருந்தேன் ,அப்பப்பா அசந்துப்போனேன்.என்ன
நியம்ம் அவள் அடித்த அழைப்பிதழே மிக் அழகாக் இருந்தது கரோல் பாக்கில்
தில்லி தமிழ் எஜுகேஷன் அசோசியேஷன் என்ற பள்ளி
அவளுக்கு கீழ் இருக்கும் ஹாலை எப்போதும் கொடுக்கும் அவள் நல்ல
சுபாவத்தினால் பலர் அவளுக்கு
தன் இச்சையாகவே அம்பாளுக்கு பல பொருட்கள்
தானம் செய்தனர் ,கரோல்பாக் மொத்த வியாபரிகளும்
தங்கள் வீட்டு விழாபோல் நினைத்து அவளுக்கு உதவினர்,
யாகத்தில் ஒரு பெரிய அம்பாள் சிலை இருந்தது அதன் அழகே அழகு ,வில் போன்ற
புருவம் தாமரையொத்தக்கண்கள் ,,,,தீர்க்கமான மூக்கு மூக்கில் புல்லாக்கு
காதில் குடைச்சிமிக்கி கழுத்தில் காசுமாலை என்று
தங்கத்தில் ஜ்வலித்தாள் அம்பாள் .தவிர ரத்னம் அந்தத்
தேவிக்கு ஒன்பது கெஜம் மடிசார் புடவையும் மிக அழகாகக் கட்டியிருந்தாள்
.பழையகாலக்கோயிலில்
இருக்கும் அம்பாள்போல் அவள் அருள் புரிந்தாள் ஒரு காலை மடித்து மறுகாலின்
தொடையில் வைத்திருந்தாள்.
கருமாரி அம்மன் போலவும் மருவத்தூர் ஆதிபாராசக்திப்
போலவும் அவள் இருந்தாள் ,என்னால் அவள் அழகை
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
பின் ஹோமம் ஆரம்பித்தது அந்த இடத்தில் அளவுக்கடந்த சக்தியை உண்ர
முடிந்தது சாப்பாடு மாலை நான்கு மணிவரை நடந்தது பருப்பு பாயசத்திலிருந்து
முழு விருந்துதான் ,
"ரத்னம் எப்படி உங்களால் இத்தனை வேலைகள் செய்யமுடிகிறது "என்று கேட்டேன்
எல்லாம் அந்த அம்பாள் கொடுக்கும் சக்திதான் ,என்கனவில் வந்து என்னன்ன
செய்யவேண்டும் என்று சொல்லியும் விடுவாள் "என்றாள்
ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா,,,,,,
ImageGraphy.blogspot.com
REL="nofollow">ImagesEver.blogspot.com
REL="nofollow">GreatBible.blogspot.com
REL="nofollow">Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.