அழகில் மட்டுமன்றி காதல் இன்பத்தை அனுபவிப்பதிலும் மான் பிற விலங்குகளைக் காட்டிலும் மேம்பட்டு விளங்குகிறது.
மஹாபாரத காவியத்தில் பாண்டு மஹாராஜா காட்டில் வேட்டையாடுகையில் ஒரு ஆண் மானும் ஒரு பெண் மானும் உறவு கொள்ளும் நிலையில் சற்றும் சிந்தியாமல் ஆண் மானின் மேல் அம்பெய்துவிட்டான். உண்மையில் அந்த மான்கள் ஒரு ரிஷியும் அவரது பத்தினியுமாவர். உலகிலேயே காதலின்பத்தை அதிகம் பெறும் ஜீவன் எது எனத் தனது பத்தினி கேட்டதற்கு முனிவர் மான் என்று பதில் கூறவும், அவ்வாறாயின் மானின் வடிவம் கொண்டு இருவரும் புணர வேண்டும் என்று அவள் ஆசைப்படவே, முனிவர் தன் தவ வலிமையால் இருவரும் மான் உருவம் அடையச் செய்ய, அந்நிலையில் இருவரும் உறவு கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பாண்டுவின் அம்புக்கிரையாகிய முனிவர் மரணிக்கும் தருவாயில் பாண்டுவை நோக்கி, "நீசனே, மிருகங்கள் காதல் உறவு கொள்ளும் நிலையில் நீ சிறிதும் இரக்கமின்றி அவற்றின் மேல் அம்பு எய்தாய். நீ உன் மனைவியுடன் இணைந்தால் அக்கணமே மரணமடைவாய்" என்று சபித்து விட்டார். இதனால் மனம் வாடிய மன்னன் ஆட்சியைத் தனது அண்ணன் திருதராஷ்டிரனிடம் ஒப்படைத்து மனைவியருடன் வனவாசம் மேற்கொண்டான். இடையில் ஒரு நாள் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் இளைய மனைவி மாத்ரியுடன் உறவு கொண்டதால் முனிவரின் சாபப்படி மரணமடைந்தான்.
Follow me on Twitter
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.